சமூகவியலாளர்கள்

சங்கங்களால் - நல்ல
சங்கங்களால் - மக்கள்
சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்

சிங்கங்கள்போல் - இளஞ்
சிங்கங்கள்போல் - பலம்
சேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலே

பொங்கும் நிலா - ஒளி
பொங்கும் நிலா - எனப்
பூரிக்கும் நெஞ்சிற் புதுப்புதுக் கோரிக்கை

மங்கிடுமோ? - உள்ளம்
மங்கிடுமோ? - என்றும்
மங்காது நல்லறி வும்தௌி வும்வரும்

சங்கங்களை - நல்ல
சங்கங்களை - அந்தச்
சட்டதிட் டங்களை மூச்சென வேகாக்க

அங்கம் கொள்க! - அதில்
அங்கம் கொள்க! - எனில்
அன்பினை மேற்கொண்டு முன்னின் றுழைத்திட

எங்கும் சொல்க! - கொள்கை
எங்கும் சொல்க! - இதில்
ஏதுத டைவந்த போதிலும் அஞ்சற்க!

தங்கத்தைப் போல் - கட்டித்
தங்கத்தைப் போல் - மக்கள்
தங்களை எண்ணுக! சங்கங்க ளிற்சேர்க்க!
தங்கத்தைப் போல்...

கொள்கை இல்லார் - ஒரு
கொள்கை இல்லார் - மக்கள்
கூட்டத்தில் இல்லை!சங் கங்களின் சார்பினைத்

தள்ளூவதோ? - மக்கள்
தள்ளூவதோ? - சங்கத்
தாய்வந்து தாவும் தளிர்க்கையைத் தீதென்று

விள்ளுவதோ? - மக்கள்
விள்ளுவதோ? - மக்கள்
வெற்றியெல் லாம்சங்க மேன்மையி லேஉண்டு

கொள்ளுகவே - வெறி
கொள்ளுகவே -சங்கம்
கூட்டிட வும்கொள்கை நாட்டிட வும்வெறி
கொள்ளுகவே...

சாதி மதம் - பல
சாதி மதம் - தீய
சச்சர வுக்குள்ளே பேத வுணர்ச்சிகள்

போதத்தையே - மக்கள்
போதத்தையே - அறப்
போக்கிடும் மூடவ ழக்கங்கள் யாவும்இல்

லாத இடம் - தீதி
லாத இடம் - நோக்கி
யேகிடு தேஇந்த வைய இலக்கியம்!

ஆதலினால் - உண்மை
ஆதலினால் - சங்கம்
அத்தனை யும்அதை ஒத்து நடத்துக!

உள்ளத்திலே - நல்ல
உள்ளத்திலே - எழுந்
தூறி வரும்கொள்கை யாகிய பைம்புனல்

வெள்ளத்திலே - இன்ப
வெள்ளத்திலே - இந்த
மேதினி மக்கள் நலம்பெறு வாரென்று

தள்ளத் தகாப் - பல
தள்ளத் தகா - நல்ல
சங்கங்கள் எங்கணும் நிறுவுவர் சான்றவர்!

பள்ளத்திலே - இருட்
பள்ளத்திலே - வீழ்ந்த
பஞ்சைகட் கும்சங்கம் நெஞ்சிற் சுடர்கூட்டும்
சங்கங்களால்...

தாய் தந்தையர் - நல்ல
தாய் தந்தையர் - மண்ணில்
தாம்பெற்ற பிள்ளைகள் சங்கத்திற்கே என்ற

நேயத்தினால் - மிக்க
நேயத்தினால் - நித்தம்
நித்தம் வளர்க்க! நற்புத்தி புகட்டுக!

ஆய பொருள் - உண்
டாய பொருள் - முற்றும்
அங்கங் கிருந்திடும் சங்கங்களுக் கென்றே

தூய எண்ணம் - மிகு
தூய எண்ணம் - இங்குத்
தோன்றிடில் இன்பங்கள் தோன்றிடும் ஞாலத்தில்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt258

குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,
குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்
கொல்வித்த தமிழர் நெஞ்சும்,
படியேறு சமண்கொள்கை மாற்றிடச் சம்பந்தப்
பார்ப்பனன் சூழ்ச்சி செய்து
படுகொலை புரிந்திட்ட பல்லாயி ரங்கொண்ட
பண்புசேர் தமிழர் நெஞ்சும்,
கொடிதான தம்வயிற் றுக்குகை நிரப்பிடும்
கொள்கையால் வேத நூலின்
கொடுவலையி லேசிக்கி விடுகின்ற போதெலாம்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,
துடிதுடித் துச்சிந்தும் எண்ணங்கள் யாவுமே
தூயசுய மரியா தையாய்ச்
சுடர்கொண் டெழுந்ததே சமத்துவம் வழங்கிடத்
தூயஎன் அன்னை நிலமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt257

நிலம்ஆளும் மனிதரே! நிலமாளு முன்எனது
நேரான சொற்கள் கேட்பீர்!
நீர்மொள் ளவும்,தீ வளர்க்கவும் காற்றுதனை
நெடுவௌியை அடைவ தற்கும்
பலருக்கும் உரிமைஏன்? பறிபோக லாகுமோ
பணக்காரர் நன்மை யெல்லாம்?
பறித்திட்ட நிலம்ஒன்று! பாக்கியோ நான்குண்டு!
பறித்துத் தொலைத்து விட்டால்
நலமுண்டு! பணக்காரர் வயிறுண்டு! தொழிலாளர்
நஞ்சுண்டு சாகட் டுமே!
நற்காற்று, வானம்,நீர், அனல்பொது வடைந்ததால்
நன்செயும் பொதுவே எனத்
தலையற்ற முண்டங்கள் சொன்னாற் பெரும்பெரும்
தலையெலாம் உம்மில் உண்டு!
தாழ்ந்தவர்க் கேதுண்டு; காற்செருப் பேஉண்டு
தகைகொண்ட அன்னை நிலமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt256

கப்பல்உடை பட்டதால் நாயகன் இறந்ததாய்க்
கருதியே கைம்மை கொண்ட
கண்ணம்மை எதிரிலே ஓர்நாள்தன் கணவனும்
கணவனின் வைப்பாட் டியும்
ஒப்பியே வந்தார்கள். கண்ணம்மை நோக்கினாள்

`உடன்இப்பெண் யார்?'என் றனள்.
`உன்சக்க ளத்திதான்' என்றனன். கண்ணம்மை
உணவுக்கு வழிகேட் டனள்.
`இப்பத்து மாதமாய்க் கற்புநீ தவறாமல்
இன்னபடி வாழ்ந்து வந்தாய்
என்பதனை எண்பிக்க எங்களிரு வர்க்கும்நீ
ஈந்துவா உணவெ'ன் றனன்.
அப்படியும் ஒப்பினாள் கண்ணம்மை. ஆயினும்
அடிமையாம் பலிபீ டமேல்
அவள்உயிர் நிலைக்குமோ? அறிவியக் கங்கண்ட
அழகுசேர் அன்னை நாடே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt255

பெரும்பணக் காரனிடம் ஏழையண் ணாசாமி

`பெண்வேண்டும் மகனுக்' கெனப்
`பெற்றபெண் ணைக்கொடேன்; வளர்க்கின்ற பெண்ணுண்டு
பேச்செல்லாம் கீச்'சென் றனன்.
`இருந்தால் அதற்கென்ன' என்னவே, எனதுபெண்

`இரட்டைவால் அல்ல' என்றான்.
ஏழையண் ணாசாமி `மகிழ்ச்சிதான்' என்றனன்.

`என்றன்பெண் கால்வ ரைக்கும்
கருங்கூந்தல் உண்'டென்ன, ஏழையண் ணாசாமி
கடிதுமண நாள்கு றித்தான்.
கண்ணுள்ள மகனுக்குத் தந்தைநிய மித்தபெண்
கழுதையா? அல்ல, அதுதான்
பெரும்பணக் காரன் வளர்த்திட்ட ஒற்றைவால்
பெட்டைக் கருங் குரங்கு!
பீடுசுய மரியாதை கண்டுநல முண்டிடும்
பெரியஎன் அன்னை நாடே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt254

மற்ற கட்டுரைகள் …

Load More