அறிவுக் களஞ்சியம்

அஜினோமோட்டோ எனும் ஒரு சுவை சேர்க்கும் பொருள் இப்போதெல்லாம், எல்லாவகை சைனீஸ், இந்திய உணவு வகைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஒரு நச்சுப்பொருள் என்பது தெரியாமலேயே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் தீமைகள் தெரிந்தால் அதை யாரும் பயன்படுத்தவோ, சாப்பிடவோ மாட்டார்கள் என்பது உறுதி.

இதில் பென்லிலானைன் எனும் ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கப்படக்கூடிய தன்மை கொண்டது. மேலும் இதைப்பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான கோபம், மன அழுத்தம் ஆகியவை தேவையில்லாமல் ஏற்படும்.மேலும் இது வன்முறை எண்ணங்களையும் தூண்டும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அஜினோமோட்டோவில் 10% மெத்தனால் கலந்துள்ளது. அது ஒரு நேரடி விஷம். கள்ளச்சாராயங்களில் காணப்படும் மெத்தனால்தான் இது. இதன் மூலம் கண் எரிச்சல், நரம்புத்தளர்ச்சி போன்றவை நாளடைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதைவிட பயங்கரமாக இது மரபுக்கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

அடுத்ததாக அஸ்பார்டிக் ஆஸிட் எனப்படும் அமிலம் அஜினோமோட்டோவில் கலந்துள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கக்கூடியது. குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஊடுருவி, ஞாபக மறதி, வலிப்பு நோய், மனநோய் போன்றவற்றில் கொண்டுவிட்டுவிடும். இதுவும் அஜினோமோட்டோ கலந்த நூடுல்ஸ் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

அதைவிட ஆபத்தைவிளைவிக்கக்கூடியது, MSG எனப்படும் மோனோ சோடியம் க்ளூட்டாமேட் எனும் வேதிப்பொருள்! இது ஒரு நச்சு உணவு! இது கலந்த உணவை உண்டவர்கள் அதிகம் தூங்க ஆரம்பிப்பார்கள். மேலும் வயிற்றில் புண் மற்றும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் அல்சர் ஆகியவை ஏற்படும். மேலும் எப்போதும் ஒரு சோர்வான உடல்நிலையை இது ஏற்படுத்தும். இவ்வளவு கெடுதல்களையும் கொண்ட ஒரு உணவை காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உணவகங்கள் அவர்களை பலவீனப்படுத்தவேண்டாம். மேலும் ஹோட்டல்களுக்கு உணவு உண்ணச்செல்லும்போது, அஜினோமோட்டோ கலக்காமல் நூடுல்ஸ் கேட்டு வாங்கி உடல் நலத்தைப்பேணுங்கள் !
அஜினோமோட்டோ எனும் அரக்கனைப்புறக்கணித்து, பணம்
செலவழித்து வியாதி வாங்குவதை தவிர்ப்போம்.

http://surekaa.blogspot.com/2009/06/blog-post_29.html

இப்போதெல்லாம் பெரும்பாலான தமிழ்ப் பதிவர்களின் பிளாக்குகளில் malware காணப்படுவது சாதாரணமாகிவிட்டது. அத்துடன் தமது பிளாக்குகள் காணாமல்ப் போய்விட்டது என்ற புலம்பல்களும் தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாகி விட்டது. தமிழ் பிளாக்குகளில் malware பெரும்பாலும் NTamil திரட்டியின் Vote Button காரணமாகவே வருகின்றது. அது அல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் வேறு Java script நிரல்கள் மூலமும் வரலாம். இதனை எனக்குத் தெரிந்து லோசன் அண்ணாதான் முதன்முதல் அறிவித்தார். ஆனால் அதன்பின்னும் பலரது பிளாக்குகளில் இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.


Google Chrome இல் உலவுபவர்களுக்கு இந்த எச்சரிக்கை தெரியும். ஏனய உலவிகள் தாமாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிடுவதால் அவற்றில் உலவுபவர்கள் இதனை உணர்வதில்லை. 
Malware என்றால் என்ன? இது malicious Software இலிருந்து பிறந்த பதமாகும். இது ஒரு மென்பொருள். இந்த மென்பொருள் கணினி உரிமையாளரின் அனுமதியின்றி, அவருக்குத் தெரியாமலேயே கணினிக்குள் புகுந்து அதனை நாசம் செய்துவிடும். Malware ஆனது கணினி வைரஸ், Worms, trojan horses, Spyware போன்ற அனைத்துத் தீய சக்திகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு மென்பொருள். இது மின்னஞ்சலினூடும், இணையப்பக்கங்களில் ஒளிந்திருந்தும் உங்கள் கணினிக்குள் புகுந்துவிடும். பிறகு அதனுடன் தையா தக்கா ஆடி அதனை அகற்ற பெரும்பாடு படவேண்டும்.

இவ்வாறு Malware காணப்படும் பிளாக்குகளை கூகுல் முடக்கி வருகின்றது. உங்கள் பிளாக் முடக்கப்பட்டால் அதனை மீளப் பெற இயலாது. உங்கள் பதிவுகள், கஸ்டப்பட்டுச் சேர்த்த Followers எல்லாம் வீணாகிவிடும். உங்கள் பிளாக்கில் NTamil vote button நிறுவியிருந்தால் கண்ணை மூடிக்கொண்டு அதனை அகற்றிவிடுங்கள். நீங்கள் நிறுவியிருக்கும் Gadgets கள் வேறு ஏதாவதும் Malware கொண்டிருக்கலாம். எதற்கும் கீழே உள்ள பெட்டியில் உங்கள் பிளாக்கின் URL இனை இட்டு பட்டனை தட்டிப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். 





Malware இருப்பதாக தெரிந்தால் உங்கள் பிளாக்கிலுள்ள வேறு தளங்களிலிருந்து பெறப்பட்ட Gadgets ஒவ்வொன்றாக கழற்றி பரிசோதியுங்கள். உங்கள் பிளாக்கைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.


http://sashiga.blogspot.com/2009/05/blog-post.html


தே.பொருட்கள்:

முழு வெ.உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க
தேங்காய்ப் பல் - 1/4 கப்

செய்முறை:

*உளுந்தை 1/2 மணிநேரம் ஊறவைத்து,லேசாக ஐஸ்வாட்டர் தெளித்து பொங்க பொங்க அரைக்கவும்.

*அதில் உப்பு+மிளகு+தேங்காய்ப்பல் செர்த்து நன்கு கலக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு மாவை 
உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

*சட்னி,சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.


 

http://sashiga.blogspot.com/2009/05/blog-post_02.html


தே.பொருட்கள்:

பீன்ஸ் - 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தப்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

*பீன்ஸ்+வெங்காயம் பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் பீன்ஸ்+ உப்பு+11/2 கப் தண்ணீர்+பாசிப்பருப்பு செர்த்து வேகவிடவும்.

*காய் வெந்ததும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.



தே.பொருட்கள்:

உருண்டைக்கு:

குட்டி இறால் - 100 கிராம்
பொட்டுக்கட்லை மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
முட்டை - 2
தேங்காய் - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க


க்ரேவிக்கு:

வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 சிறிய டின்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
சோம்பு - 1டீஸ்பூன்

செய்முறை:

* இறாலை சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம்,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி,வதக்கி ஆறவிடவும்.

* இறால் மற்றும் தேங்காயை அரைக்கவும்.

*அரைத்த இறால்,தேங்காய் விழுது+பொட்டுக்கடலைமாவு+உப்பு+சோம்புத்தூள்+முட்டை+வதக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக கெட்டியாக கலக்கவும்.

*மாவு தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொட்டுக்கடலைமாவு சேர்க்கலாம்.

*பிசைந்தவைகளை உருண்டைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.



*க்ரேவிக்கு வெங்காயத்தை நீளவாக்கிலும்,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

*வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+தூள் வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

*வதங்கியதும் தேங்காய்ப்பால்,உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

*நன்கு கொதித்ததும் உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு,எலுமிச்சை சாறு சேர்த்து 2 ந்மிடம் கொதித்தபின் இறக்கவும்.
http://sashiga.blogspot.com/2009/05/blog-post_04.html

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More