இன்று பல்தேசிய இன நாட்டு தேசிய இன முரண்பாடு, தேசிய விடுதலை யுத்தம் சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டும் பண்புகளில் இருந்தே எழுகின்றது. மாறாகப் பாட்டாளி வர்க்கம் இதைக் கோருவதில்லை. ஏன் எனின் நாடு பிரிப்பதால் பாட்டாளி வர்க்கம் எந்த விதமான அனுகூலத்தையும் பெற்று விடுவதில்லை. அதாவது சுரண்டும் வர்க்கத்திற்கு இடையில் நடைபெறும் இழுபறியான போராட்டத்தையே மொத்த மக்கள் முன் தேசிய விடுதலைப் போராக நகர்த்துகின்றனர்.