பி.இரயாகரன் - சமர்

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கிய இயக்க அதிகாரங்களையும், பாசிசமயமாக்கலையும் கேள்விக்குள்ளாக்கியது – 1986 இல் நடந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம். இந்தப் போராட்டங்கள் தன்னெழுச்சியானவையல்ல. திடீரென ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்திய அற்புதங்கள் எதுவும், இனவாதம் பேசிய யாழ் வெள்ளாளிய வலதுசாரிய தமிழ் சமூகத்தில் சாத்தியமற்றது. தன்னெழுச்சியாக போராட இடதுசாரியத்தை முன்வைத்து போராடும் பாரம்பரிய சமூகமாக – யாழ் சமூகம் இருந்ததில்லை.

 

மேலும் படிக்க: 1986 இல் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய போராட்டம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 06

கடந்த இயக்க வரலாற்றில் என்.எல்.எப்.ரி என்ற தமிழ் தேசியவாத இடதுசாரிய இயக்கத்துக்கு வெளியில், வலதுசாரிய தமிழ் இயக்கங்களில் இருந்து பெருமளவில் தமிழ் தேசியவாத இடதுசாரியத்துக்கு வந்தவர்கள் புளட்டிலிருந்தே. பிற வலதுசாரிய இயக்கங்களில் இருந்து மிகச் சிறியளவிலேயே, அதுவும் விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழ் தேசியவாத இடதுசாரிகளையே வரலாற்றில் காணமுடியும்.

மேலும் படிக்க: ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கத்திலிருந்து விதையானவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 05

தீப்பொறியின் பிளவுக்கு முன்பே புளட்டின் மாணவ அமைப்பான ரெசோ, புளட்டின் வலதுசாரிய அரசியலை ஆட்டி அசைத்தது. புளட்டின் வலதுசாரிய அரசியலை வெளிப்படையாகவே எதிர்த்தது. உதாரணமாக சுழிபுரத்தில் புலி ஆதரவாளர்கள் ஆறு பேரை படுகொலை செய்ததை புளட்டின் போலி இடதுசாரிய அணி மறுத்து அறிக்கை விட்ட போது, புளட்டே கொலை செய்தது என்று புளட்டில் தமிழ் இடதுசாரியக் கூறுகள் வெளிப்படையாக கூறத்தொடங்கின. முரண்பாடுகளும், ஒதுங்குவதும் கூர்மையாகி, அவர்கள் சமூகத்தில் விதையாகினர்.

மேலும் படிக்க: பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04

யாழ் பல்கலைக்கழகமானது இலங்கையின் பிற பல்கலைக்கழகங்கள் போல், இனவாத அரசுக்கு எதிரான, இடதுசாரிய போராட்ட மரபைக் கொண்டதல்ல. பிற பல்கலைக்கழகத்தில் இருந்து தன்னைத்தான் தனிமைப்படுத்திக் கொண்டு, வலதுசாரிய வெள்ளாளிய சிந்தனையிலான தமிழ் இனவாத கிணற்றுக்குள் வீழ்ந்தே கிடந்தது, கிடக்கின்றது.


மேலும் படிக்க: 1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03

பிறர் உழைப்பைச் சுரண்டி வாழும் உரிமை மனித உரிமையாக, ஜனநாயகமாக, சுதந்திரமாக இருக்கும் வரை, மனித விடுதலை என்பது போலியானது, கற்பனையானது. எத்தகைய  விடுதலைக் கோட்பாடுகளும் சுரண்டி வாழும் உரிமையை அங்கீகரிக்கும் வரை, அவை அடிப்படையில் போலியானவை. அது தன்னளவில் ஏதோ ஒருவகையில் ஒடுக்கும் தன்மை கொண்டவையே.

மேலும் படிக்க: மார்க்ஸின் கால் தடங்களிலிருந்து ஏங்கெல்ஸை பிரிக்க முடியாது

மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு, சமவுரிமையற்ற மொழிச் சட்டங்களும் - மதச்சட்டங்களும், இனரீதியான கல்வித் தரப்படுத்தல், ஒரு இனத்திற்கு எதிரான திட்டமிட்ட "இனக் கலவரங்கள்", திட்டமிட்ட இனவழிப்பிலான குடியேற்றங்கள், மத ரீதியாக பிரதேசங்களை ஆக்கிரமித்தல், படைத்தளங்களைக் கொண்டு பிரதேசங்களை இன-மத ரீதியாக ஆக்கிரமித்தல் தொல்பொருள் (புராதன) எச்சங்களின் (புனித பிரதேசங்கள்) பெயரில் பிரதேசங்கள் மீதான இன-மத ஆக்கிரமிப்புகள், நூலக எரிப்புகள், கூட்டு ஒப்பந்தங்களை கிழித்தல், மனித உயிர்களுக்கு என்ன நடந்தது என்பதை பொறுப்பெடுக்க மறுத்தல், இன-மத ரீதியான வாக்களிப்பை தூண்டுதல், சட்டம் ஒழுங்கில் இனரீதியான பாகுபாடுகள், வேலைவாய்ப்பில் இன ரீதியான சலுகைகள், இன-மத ரீதியான அதிகார துஸ்பிரயோகங்கள் … இப்படி எங்குமான இன-மத ஓடுக்குமுறைக்குப் பின்னால், காரணகாரியங்கள் இருப்பதை காணமுடியும்.

மேலும் படிக்க: காரண காரியங்கள் இன-மத ஒடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (இறுதிப் பகுதி 06)

1980 களில் தமிழ் சமூகத்தின் அக முரண்பாடுகள் சார்ந்த சிந்தனைமுறை வளர்ச்சியுற்றதுடன், தனக்கான தத்துவ மற்றும் கோட்பாட்டு அடிப்படைகளையும் -நடைமுறைகளையும் முன்வைக்கத் தொடங்கியது

மேலும் படிக்க: தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02

1980 களில் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதில், முன்னோடியாக யாழ் பல்கலைக்கழகம் மாறியது. இனவாதம் பேசி வாக்குகள் பெற்ற தேர்தல் கட்சிகளின் போலித்தனமும், அதன் கையாலாகாத்தனமும், 1970, 1977 தேர்தலின் பின் படிப்படியாக அம்பலமாகி வந்த சூழலில், அது யாழ் பல்கலைக்கழகத்தில் பிரதிபலித்தது. தேர்தல் அரசியலையும் அதன் பிழைப்புவாதத்தையும் அம்பலப்படுத்திய அதேநேரம் - இதற்கு சமாந்தரமாக உருவாகி வந்த இயக்கங்களையும் ஆதரித்தது. அதேநேரம் அரசியல்ரீதியாக, எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் இடமாகவும் யாழ் பல்கலைக்கழகம் இருந்தது.

மேலும் படிக்க: மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

மனிதவிரோதத்துடன் கூடிய இனவாத யுத்தமானது, மனித அவலத்தை விதைத்து விட்டுச் சென்றுள்ளது. இந்த வாழ்வுடன் மல்லுக்கட்டி வாழ்கின்ற மக்கள், தங்கள் உறவுகளை நினைத்துக் கண்ணீர் விட்டு புலம்பும் நினைவுகள் வாழ்வாகி, அதுவே மனித அவலமாகி நிற்க – அதை வியாபாரமாக்குகின்றது இனவாதக் கூட்டம்.

மேலும் படிக்க: மாவீரர் தினம் : புலிகளுக்கும் - அரசுக்கும் எதிராக, மரணித்தவர்களுக்கு அஞ்சலி செய்

இனவாதச் சிந்தனைமுறை உள்ளடக்க ரீதியாகவும், சாராம்சமாகவும் இனவொடுக்குமுறையை மறுதளிக்கின்றது. இதனால் இனவாதச் சிந்தனைமுறை ஒருநாளும் இனவொடுக்குமுறையை காணவும் - காட்டவும் முடியாது. இதுவே இன்றைய எதார்த்தம்.

மேலும் படிக்க: இனவாதச் சிந்தனைமுறை! - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 04)


2009 யுத்தத்தின் பின் தமிழரின் புட்டுக்கு பதில் "பீட்சாவை" உணவாக அறிமுகமாக்கி இருக்கின்றோம் என்று, "மாவீரர் தினம்" குறித்த பேரினவாதக் கண்ணோட்டத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தபோது பொலிசார் கூறினர்.

மேலும் படிக்க: புட்டும் - வெள்ளாளிய இனவாதமும்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More