ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கிய இயக்க அதிகாரங்களையும், பாசிசமயமாக்கலையும் கேள்விக்குள்ளாக்கியது – 1986 இல் நடந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம். இந்தப் போராட்டங்கள் தன்னெழுச்சியானவையல்ல. திடீரென ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்திய அற்புதங்கள் எதுவும், இனவாதம் பேசிய யாழ் வெள்ளாளிய வலதுசாரிய தமிழ் சமூகத்தில் சாத்தியமற்றது. தன்னெழுச்சியாக போராட இடதுசாரியத்தை முன்வைத்து போராடும் பாரம்பரிய சமூகமாக – யாழ் சமூகம் இருந்ததில்லை.