பி.இரயாகரன் - சமர்

என் உணர்வுகள்

எங்கே செல்கின்றன

அன்னிய நாட்டில்

நடைப் பிணமாக நாம்

உணர்வுகளை இழந்து

இயந்திரமாக நாம்

சிந்திக்கும் எம் உணர்வுகள்

மீண்டும் எம் மண்ணை நோக்கி

சிந்திக்கும் என் உணர்வை அழிக்க

அலையும் ஒரு கூட்டம்

மண்ணில் சிந்திக்க முயன்றவர்கள் மீது

இறுக்கப்பட்ட கட்டைகள்

மிஞ்சியது எது

மனிதப் பிணவாடையே

மண்ணில் சொல்ல முடியாததை

சொல்ல நினைத்தேன்

இங்குமா மிரட்டல்

இது தான் வாழ்வா

ஒரு கணம் சிந்தித்தேன்

ஒரே ஒரு கணமே

மரணம் பயமுறுத்தக் கண்டேன்

மௌனத்தின் முடிவும் மரணமே

செயல் ஆற்ற புறப்பட்டேன்

எனது மரணம் வரை

அதுவே எனது சுதந்திரம்

அதுவே மக்கள் விடுதலை

பி.றயா

சமர், தூண்டில், உயிர்ப்பு, மனிதம் இதழ்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய சக்திகள் தொடர்பான விவாதத்தைத் தொடர்ந்து, கனடாவிலிருந்து வெளிவரும் தேடல் இதழில் தேசிய சக்திகள் தொடர்பாக கட்டுரை வெளிவந்துள்ளது. தேடல் இதழ் 10இல் சி.சிவசேகரம் எழுதிய கட்டுரையை நாம் விமர்சனத்துக்கு முன்னெடுக்கும் அதேநேரம் தேடல் இதழ் 10 க்கு முந்திய இதழ்கள் எமக்கு கிடைக்காமையால். அதில் இது தொடர்பான விவாதம் நடந்ததாவென தெரியாமல் உள்ளது.

 

1970 களிலும் 1980 களிலும் உலகநிலைமைகள் இளைஞர் மத்தியில் மார்க்சிச, சோசலிச சிந்தனைகள் பற்றிய அக்கறையை ஓரளவு தூண்டின. பழைய அரசியல் தலைமைகள் வெற்றிகரமாகத் தமிழரின் பாராளுமன்ற அரசியலிருந்து ஒதுங்கிய இடதுசாரி சிந்தனைகள் 1970 களுக்குப் பின் இனைஞர்களைக் கவர்ந்த காரணங்கள் நாட்டின் உள்ளேயும் இருந்தன. தமிழ் தேசியவாதத் தலைமையின் வலதுசாரி அரசியலின் இயலாமையும் 1971 ஏப்ரல் கிளர்ச்சியும் 1970 களுக்கூடாக படிப்படியாக விரிவடைந்து 1977க்குப் பின் உக்கிரமடைந்த அரசு ஒடுக்குமுறையும் வலதுசாரி அரசாங்கத்தின் கீழ் தமிழர் முன்னெப்போதும் கண்டிராத இனவாத வன்முறைக்கு முகம் கொடுக்க நேர்ந்தமையும் இடதுசாரி முனைப்புக்கட்கு ஆதாரமாக இருந்தன என்ற வாதத்தில் 1970 களில் வளர்ச்சியடைந்த ஜே-வி-பி மார்க்சியத்தை சொல்லிக்கொண்டாலும், அவர்கள் எப்போதும் அடிப்படையில் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியும், 1970 களில் எழுந்த உலகப் பொருளாதார நெருக்கடியும், இளைஞர்களை புரட்சியின் பக்கத்திற்கு தள்ளியது. புரட்சியை விரும்பிய இளைஞர்களை ஜே-வி-பி-யும், அதே நேரம் சிறிமாவோ தலைமையிலிருந்த இடதுசாரிக் கருத்துக்களை உச்சரித்தபடி சுரண்டும் வர்க்கங்களைப் பாதுகாக்க முயன்றனர். மற்றும் பழைய அரசியலிலிருந்து ஒதுங்கிய இடதுசாரிச் சிந்தனைகள் என்ற வாதம் அடிப்படையில் தவறானது. 1970க்கு பின் தமிழ்த் தலைமைகள் தீவிரமாக முன்பை விட ஒன்றிணைந்து பலம் பெற்றனர். 1977களில் தேர்தல் வெற்றி இதை தீர்மானகரமாக பறைசாற்றுகிறது. 1980 களில் பாராளுமன்ற அரசியல் தலைமையை இடதுசாரிகள் ஒதுக்கவில்லை, மாறாக 1977 தேர்தலில் எந்த கோசத்தை முன் வைத்து வென்றார்களோ அதே கோசத்தைக(வலதுசாரிகள்) முன்னெடுத்த ஆயுதம் ஏந்தியோரே அவர்களை ஒதுக்கினர். 1977 களின் பின் தீவிரமடைந்த வன்முறைக்கு மூலகாரணமாக (சுரண்டல் பேர்வழிகள்) 1970 களில் ஆட்சிக்கு வந்த சிறிமாவோவுடன் இருந்த இடதுசாரிகளே பிரதானமாகவும் இருந்தனர். இடதுசாரிகள் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தலை அமுலுக்குக்கொண்டு வந்ததுடன் தமிழ் மக்களின் பிரச்சனையை இனவாத வன்முறைக்கூடாக அடக்கினர்.

 

1970 களில் வலதுசாரிகளின் இயலாமையெனக் குறிப்பிடும் கடடுரையாளர் 1970 இன் பின் வந்த இடதுசாரிகள் மக்களின் பிரச்சனையைத் தீர்த்ததாகப் பறைசாற்றுகின்றார். இடதுகள் கூட இயலாமையால் தான் தேசியப் பிரச்சனையை முன்தள்ளி தமது இயலாமையை வெளிக்காட்டினர். அத்துடன் 1977இல் இடதுசாரிகளின் இயலாமை மீண்டும் வலதுசாரிகளை ஆட்சியில் ஏற்றினர். எனவே கட்டுரையாளர் 1970 க்கும் 1977 க்கும் இடையிலான அரசை(சுரண்டும் வர்க்கத்தை) நியாயப்படுத்துகின்றார்கள்.

 

இன்று புலிகள் அரசாங்ககத்தின் இன ஒடுக்கல் யுத்தத்திற்கு முகம் கொடுக்கும் போராட்ட சக்தியாக உள்ளனர். ஆயினும் நிலைமை மாறக்கூடியது. என்ற வாதத்திலோ, தொடர்ச்சியான விவாதத்திலோ முக்கியமான ஒன்றைப்பற்றி ஆராயத் தவறியுள்ளார். வர்க்க நோக்குப் பற்றி சொல்லும் கட்டுரையாளர் தேசியத்தையும், பாசிசத்தையும், வர்க்கத்துடன் ஒப்பிடத் தவறுவது ஏன்?. வர்க்கத் தன்மையுடன் ஒடுக்குமுறை மாறுபாட்டுத் தன்மையை..... பார்க்காமல்; விடுவதன் ஊடாக இக்கட்டுரை தவறானதாகவுள்ளது. இது வர்க்கத்தன்மையுடன் சம்மந்தப்பட்டது. அதைக் கட்டுரையாளர் சொல்லத் தவறி, தனது அரசியல் பார்வையை தெளிவாக வாசகர்களுக்கு இனம் காட்ட தவறுகின்றார்.

 

இவ்வாறான பிறழ்வுகள் ஒரு விடுதலை இயக்கத்தின் முற்போக்கான தன்மையின் மறுதலிப்பாகும். இவற்றினூடு அந்த இயக்கத்தின் போராட்டம் தடம் புரளலாம். ஆயினும் இவை ஒரு இயக்கத்தின் தேசிய தன்மையை மாற்றி விடுவதில்லை. தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒன்று எவ்வாறு மாறுபடும் தேசிய, சர்வதேசிய நிலவரங்கட்கேற்ப ஏகாதிபத்தியத்துடன் தனது நாட்டின் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் தனது உறவை மாற்றிக் கொள்ளுகிறதோ அவ்வாறே பாட்டாளி வர்க்கத் தலைமையற்ற ஒவ்வொரு தேசிய விடுதலை இயக்கமும் ஊசலாட்டத்துக்குள்ளாகின்றது. இதில் தேசிய முதலாளிவர்க்கம் ஒன்று எனச் சொல்லி அதைப் பொதுப்படையாக அரசு, மற்றும் விடுதலை இயக்கங்களுக்கு பொதுவாகப் பொருத்த முயன்றுள்ளனர். இவ்விவாதம் புலிகளை தேசிய முதலாளிகள் எனச் சொன்னதாகவும் வாதிடலாம். சொல்லவில்லை எனவும் வாதிடலாம். அது அல்லது இது எனக் தேவைக்கு வசதியாக வாதிடும் வகையில் அமைந்ததே. ஏகாதிபத்தியத்தின் உறவுடன் எப்போது அரசோ, விடுதலை இயக்கங்களோ, ஊசலாட்டத்திற்கும், ஒடுக்கும் வர்க்கத்துடன் உறவை மாற்றுகின்றதோ அன்றே குறித்த சக்தி தேசிய முதலாளித்துவம் என்ற நிலையிலிருந்து தரகு முதலாளிகளாக மாறிவிடுகின்றனர். இச் செயற்பாடு பற்றி ஒரு புரட்சியில் எதிரி பற்றிய விடயத்தை தெளிவாக சுட்டிக்காட்டப்படாவிடின் பாரிய தவறு இழைக்கப்படும். குறித்த இச்சக்திகள் போராட்டத்தில் எதிரி நிலைக்கு மாறிவிடுகின்றனர். இவர்கள் கூட தேசியத்தை முன்னெடுக்கமுடியும். கிட்லர், காந்தி, அமிர்தலிங்கம்...... என நீண்ட வரலாற்றில் அனைவரும் தேசியத்தை உயர்த்திப் பிடித்தனர். ஆனால் அவர்கள் ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றச் சேவை செய்ய முயன்றனர். இவர்கள் எப்போதும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கு எதிரியே. தேசியத்தை முன்னெடுக்கின்றார்கள் என்ற ஒரு வரையறையை மடடும் கொண்டு இவர்களைத் தேசிய சக்தியாகப் பார்க்கக் கூடாது. இவர்களின் வர்க்கமூலம் அதிலிருந்து அவர்களின் நோக்குகளை ஆராய்வதின் மூலம், ஆரம்பம் முதலே அம்பலப்படுத்தியழிக்க வேண்டும்.

 

திராவிடப் பிரிவினை தமிழ் நாட்டின் சுயாட்சி போன்ற கொள்கைகளைக் கைவிட்டதால் தி-மு-க போன்ற சக்திகள் தேசிய சக்திகளாக இல்லாமல் போய் விடவில்லை. என்ற விவாதத்தில் மேற்குறிப்பிட்து போல் சுயாட்சி கோரினார் என்ற காரணம் தேசிய சக்தியாக பார்க்க போதுமானதில்லை. அக் கட்சியின் வர்க்க மூலத்திலிருந்தே தேசிய சக்தியா என ஆராய முடியும். சுயாட்சியைக் கைவிட்ட பின்பும் தி-மு-க இன்று தேசிய சக்தியாகக் காட்ட முனையும் சிவசேகரம் வர்க்க அடிப்படையிலிருந்து விலகிய நிலையில் வெளிவந்த கருத்துக்களே. தி-மு-க- ஆட்சி ஏறிய காலத்தில் கூட அவர்கள் தேசிய நோக்கில் சமுதாயத்தை மாற்றவில்லை. இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டில் ஆட்சி ஆட்சியதிகாரத்திலுள்ள வர்க்கமான தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவத்திற்குச் சேவை செய்வதில் சிறந்த பிரதிநிதிகளாகவே இருந்தனர். அவர்கள் கூட பெரும் நிலப்பிரபுக்களாகவும், தரகு முதலாளிகளாகவுமே உள்ளனர். அவர்களைத் தேசியவாதிகள் எனச் சொல்ல வரும் சிவசேகரம் எதையோ நியாயப்படுத்த முயல்கின்றார்.

 

இன்று விடுதலைப் புலிகளின் வர்க்கச் சார்பு பற்றிய கேள்வியே நமக்கு முக்கியமானது. அவர்களது நேச சக்தி யார் எதிரிகள் யார் என்பதை வர்க்க நலன்களே தீர்மானிப்பன. புலிகளின் வர்க்கத்தைப் பற்றி குறிப்பிட்டு கேள்வி கேட்டதுடன் விட்டு விடுவதால் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒன்று என்ற சிவசேகரம் சொன்ன வரையறை புலிக்குப் பொருந்தாது எனக் கொள்ளளாம். புலிகளின் வர்க்கத்தைச் சுட்டிகாட்டாமல் புலிகளின் தேசியத்தன்மை தொடர்பாக, தேசிய சக்திகளாக இனம் காணப் புறப்பட்ட சிவசேகரம் வர்க்க நோக்கிலிருந்து தேசிய சக்தியெனச் சொல்லாமை புலப்படுகின்றது. இதன் பின் அவர்களின் நேசசக்திகள் எதிரிகள் பற்றி கதைக்க முற்படும் சிவசேகரம் புலிகளின் தத்துவவாதியாக நின்று ஆராய முற்படுகின்றார்.

 

அவர்களை(புலிகளை) ஆதரிப்பதற்கோ, எதிர்ப்பதற்க்கோ அவர்கள் தேசிய சக்தியா, இல்லையா என்ற கேள்வியை மட்டும் நாம் பயன்படுத்த முடியாது. இதில் முடியாதெனின் எதை வைத்துத் தீர்மானிப்பது. இதை சொல்லாமல் நழுவி விடும் சிவசேகரம் முடியாது எனச் சொல்லும் முறை விமர்சகர்களுக்கோ, எழுத்தாளர்களுக்கோ உரிய பாணியல்ல. புலிகளின் வர்க்கத்தில் இருந்தே தேசிய சக்தியா என முடிவுக்கு வரவேண்டும். இராணுவத்திற்கு எதிராகப் போராடுகின்றார்கள் என்ற ஒரு எடுகோளிலிருந்து முடிவுக்கு வரமுடியாது. ஆனால் வர்க்க மூலத்திலிருந்து ஒரு சக்தியை தேசிய சக்தியென அறிந்து கொண்டால் அவர்கள் போராட்டத்தை ஆதரிக்கவேண்டும்.

 

விடுதலைப்புலிகள் தேசிய சக்திகளல்ல என்போர் அவர்களைப் பாசிச சக்திகள் என்று அழைப்பதைக் கேட்டிருக்கிறோம். பாசிசம் என்பது தேசியவாதத்தின் மிகவும் கொடூருமான வடிவமாக இருக்கையில் தேசிய சக்திகள் இல்லாதொரு இயக்கம் பாசிச சக்தியாக எவ்வாறு விருத்தியடைய முடியும்? இவ் விவாதம் தேசிய சக்திகளை நிறுவும் நோக்கில் பாசிசம் தேசிய சக்திகளுக்கு மட்டும் உரிய பண்பென வாதிட முயல்கின்றனர். பாசிசம் என்பது தேசியத்தை முன்னெடுப்பவர்களும், தேசியத்தை முன்னெடுக்காதவர்களும் கூட பயன்படுத்தமுடியும். தேசியத்தை முன்னெடுக்கும் சக்திகளுக்கெதிராக செயற்படும் அரசுகளும் பாசிசத்தையே பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறுது. இதை வியட்நாம், இலங்கை, சீனா.... என்று அனைத்து அரசுகளும் நாட்டில் எழும் தேசிய எழுச்சியைப் பாசிசத்தைக் கொண்டு அடக்குகின்றது. எனவே தேசியத்தின் குணம் குறி பாசிசமல்ல. பாசிசத்தை எந்தச்சக்தியும் கையாளும.; எனவே பாசிசம் என்ற சொல்லை சிவசேகரமே ஆழமான அறிவில் நின்று சொன்னதாக தெரியவில்லை. தேச விடுதலைப் போராட்டம் தீவிரமடையும் நாடுகளில் அவ்வரசுக்கள் பாசிச அடக்குமுறையை மக்கள் மீது ஏவுகின்றனர்.

 

பாசிசவாதி என்பது வகைச் சொல்லாக பயன்படுத்துவதாகச் சொல்லும் சிவசேகரம் அடாவடித்தனமும், எதேச்சதிகாரமும் மட்டுமே பாசிசத்தின் அடையாளங்களாயின் என்று கேட்பதனூடாக இதற்கப்பால் பாசிசத்தை இனங்காண என்ன வரையறையை முன்வைக்க முனைகின்றார். அது பற்றி விட்டுவிடும் சிவசேகரம் தம்முன்னுள்ள சக இயக்கங்களின் மோதலை காட்ட முயல்கின்றார். இயக்கங்களுக்கிடையிலான மோதல் என்பது ஒரு வர்க்க நலன் சார்ந்ததே. பாசிசம் தொடர்பானதல்ல. பாசிசம் என்பது ஒரு இயக்கத்தின், அரசின் பண்பாகவே இருக்கும். பாசிசவாதி என்பது வகைச் சொல்லல்ல. அதுவொரு சக்தியின் செயற்பாட்டை வகைப்படுத்தும் வகையில் அமைந்ததே.

 

ஸ்டாலின் வாதி, ரொஸ்க்கியவாதி, குட்டிபூர்சுவா போன்ற பதங்கள் எவ்வாறு எதிரிகளை மட்டும் தட்டும் நோக்குடன் மடடுமே பயன்படுகின்றனவோ என்ற வாதத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது எனின் சரியாகப் பயன்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றார். அப்படியிருக்க பொதுப்படையாக எதிரியை மட்டம் தட்டப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லி குட்டிப்பூர்சுவா கருத்துக்களை வெளியிடுபவர்களை பாதுகாக்க முனைகின்றார். ஸ்டாலினியவாதி என்ற கருத்துக்களை எடுப்பின் அவர்கள் ஒவ்வொருவரும் தனியான தத்துவத்தை கொண்டிருந்தவரென அழைக்கப்படலாம். ஸ்டாலின் அப்படித் தனியான தத்துவத்தை மார்க்சிசத்திலிருந்து வேறுபட்டுக் கொண்டிருக்கவில்லை என நாம் கருதுகின்றோம். அந்த வகையில் ஸ்டாலின் வாதி என்ற பதம் அர்த்தமற்றது.

 

பாசிசத்தின் பிரதான தன்மை வலதுசாரி, தேசியவாத சர்வாதிகார அரசியலாகும். பாசிச நடைமுறையில் சில கொடும் செயல்களை சில விடுதலை இயக்கங்கள் வரித்துக் கொண்டுள்ளன. அத்தகைய பாசிசப் பண்புகளையும் இப்படியான பண்புகளைக் கொண்டுள்ள இயக்கங்களும் பாசிச வாதிகளே. இவர்களை பாசிசவாதிகளெனச் சொல்ல முடியாதெனச் சொல்லி பாசிசவாதி என்ற சொல் வெறும் வகையாகப் பயன்படுகின்றது என்பது கற்பனையானது. பாசிசப் பண்பை ஏற்றுக்கொள்ளும் சிவசேகரம் அதைப் பாசிசமில்லை எனச் சொல்லி வகைச் சொல்லாக சொல்லுவது தவறானது. பாசிசப் பண்பு தேசியவாதம் இல்லாத பிரிவுகளிடத்தில் ஏற்படினும் அவைகளை பாசிச சக்திகளாக இனம் காணமுடியும்.

சமர், தூண்டில், உயிர்ப்பு, மனிதம் மற்றும் தனிநபர்களின் கடந்தகால விவாதங்களில் புலிகள் தமிழ் மக்களின் தேசவிடுதலைப்போராட்டத்தை தமது நோக்கில் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இவர்கள் புலிகளைப் பாசிச சக்தியெனக் கூறுகின்றனர். ஆனால் சிவசேகரத்தின் விவாதம் தேசியசக்தியெனச் சொல்லாதவர்கள் (தேசியத்தைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்) பாசிசம் எனச் சொல்வதாக சொல்கிறார். அப்படியான கருத்துக்களை யார் முன்வைத்தார்களெனத் தெரியாமல் உள்ளது. பழைய தேடல் இதழ் அல்லது இது தொடர்பான கருத்துக்கள் கிடைப்பின் இவ் விவாதம் சிறப்பாக அமையும். அப்படி வெளிவந்த கருத்துக்கள் எதில் வந்ததென அறியத்தரின் விவாதத்தை தொடரமுடியும்.

 

 

தமிழ் ஈழப் போராட்டத்தின் பாய்ச்சல் இன்று சீரழிக்கப்பட்டுச் பாசிசமாக பரிணாமம் பெற்றுள்ளது. இந்நிலையில் பாசிசம் முழுமையாக எந்த நிபந்தனையுமின்றி அம்பலப்பட்டு வரும் இன்றைய நிலையில், எழுந்து வரப்போகும் போராட்டம் வேறொரு பாதையில் சீரழிந்து வருகிறது. எப்படிப் பாசிசம் மக்களின் விடுதலைக்கு எதிரானதோ அதற்கு எந்த விதத்திலும் திரிபுவாதமும், நவமார்க்சிசமும், வரட்டுவாதமும் குறைவானதல்ல.

 

திரிபுவாதமும், நவமார்க்சிசமும் வரட்டுவாதத்திற்கும் எதிராகப் போராடும் அதேநேரம் மார்க்சிசத்தை பொருள்முதல்வாத நோக்கில் ஆராய்வது அவசியமானது. நாம் அந்த வகையில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெலின், ஸ்டாலின், மாவோ போன்றோரின் அடிப்படைக் கோட்பாடுகளை மேற்கோள் காட்டுவது தவிர்க்க முடியாது. அவர்கள் சொந்த நாட்டின் குறிப்பான நிலைமைகளையொட்டி வரைந்த கருத்துக்கள் எம் பொருத்தமான நிலைமைகளுடன் பொருந்தமாலிருக்கலாம். ஆனால் பொதுவானவையும், அடிப்படை விதிகளும் என்றும் அடிப்படையானது. இதை மறுக்கும் சிலர் அடிப்படைக் கோட்பாடுகள் எந்த வகையில் தவறானது என்பதை ஆராய்வதை விடுத்து, தமது புதிய கருத்துக்களைத் திணிக்கும் வகையில் வகையில் அடிப்படை விதிகளைப் பழைமைவாதமென கூச்சலிடுகின்றனர். புதிய கருத்துக்களை நிராகரிக்கத் தவறுவதேன்? அப்படி நிராகரிக்காமல் பழைமைவாதம் என்ற ஒரு சொற்றொடரூடாக நிராகரிப்பதென்பது கற்பனாவாதமே. இன்றைய சோவியத், சீனா நிலைமைகளைக் கொண்டே புதியதென ஆராய்வதும், கடந்தகால தத்துவம் தவறெனின் அதை தெளிவாக முன்வைத்தே புதியதை நோக்கிச் சொல்ல வேண்டும். இதுவே மார்க்சிய அணுகுமுறையாகும்.

 

முரண்பாடுகளைக் கையாள்வது பற்றிய அடிப்படை விடயத்திலிருந்தே சமூகப் பிரச்சனைகளைக் கண்டறிய முடியும். இன்று ஜக்கிய இலங்கை, தமிழீழம் மற்றும் பல விடயங்களை ஆராய்வதெனின் முரண்பாடுகளின் செயற்பாட்டை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை முரண்பாட்டை கண்டறிய மாவோவினால் எழுதப்பட்ட முரண்பாடுகள் பற்றி... என்ற நூலிருந்து சில பகுதிகளைத் தொகுத்து முன்i வைக்கிறோம்.

 

அறிவதில் இரு போக்குகள் உள்ளன. ஒன்று குறிப்பிட்ட தனி இயங்கியலிலிருந்து பொதுவானதைப் பற்றி அறிவது. மற்றொன்று பொதுவானதிலிருந்து குறிப்பிட்ட தனி இயல்பு வாய்ந்ததை அறிந்து கொள்வது. இவ்வாறு அறிவு எப்போதுமே சூழல் வட்டங்களாக இயங்குகின்றது. அறிவியல் முறை நெறிபிறழாமல் கடைப்பிடிக்கப்படும் வரை ஒவ்வொரு சுற்று வட்டமும் மனித அறிவை மேலும் ஒருபடி உயர்த்தி அதை மேன்மேலும் ஆழமானதாக்குகின்றது. இப்பிரச்சனையில் நமது வறட்டு தத்துவவாதிகள் எங்கே தவறுகிறார்கள் தெரியுமா? ஒர் முரண்பாட்டின் எங்கும் நிறைந்த இயல்பையும் பொருட்களின் பொது உட்சாரத்தையும் ஆராய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மற்றோர் புறம் பொதுவான உட்சாரத்தையும் புரிந்து கொண்ட பிறகு, நாம் தொடர்ந்து சென்று, இதுவரை முற்றாக ஆராய்ந்தறியப்படாத அல்லது இப்போது புதிதாகத் தோன்றியுள்ள திட்டவட்டமான பொருட்களையெல்லாம் ஆராய வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டுள்ளாததிலும் தான் அவர்கள் தவறு இழைக்கின்றனர். நமது வறட்டுத் தத்துவவாதிகள் முழுச் சோம்பேறிகள். அவர்கள் திட்டவட்டமான விசயங்களை பற்றி ஆராய எவ்வித முயற்சியும் எடுக்க மறுக்கிறார்கள். பொது உண்மைகள் வெறும் மையத்திலிருந்து- சூனியத்திலிருந்து---- தோன்றுவதாக கருதுகின்றார்கள். அவர்கள் அவற்றைச் சிறிதும் புலனற்ற அருவமான ஆழங் காணமுடியாத ஒட்டை வாய்ப்பாடுகளாக ஆக்கி விடுகிறார்கள். அதாவது குறிப்பிட்டதிற்குமுள்ள, ஒன்றுக்கொன்றான தொடர்பைப் பற்றியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

 

பண்பால் வேறுபட்ட முரண்பாடுகளைப் பண்பால் வேறுபட்ட முறைகளாலேயே தீர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளிவர்க்கத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடு சோசலிசப் புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும். பரந்து பட்ட மக்களுக்கும், நிலவுடமை அமைப்புக்கிடையில் உள்ள முரண்பாடு ஜனநாயகப் புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும். குடியேற்ற நாடுகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்குமிடையில் உள்ள முரண்பாடு தேசிய புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும்.....

 

நமது வரட்டுவாதிகள் இக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை வெவ்வேறு வகையான புரட்சியில் அதன் நிலைமைகள் வேறுபடுகின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. எனவே வேறுபட்ட முரண்பாடுகளைத் தீர்க்க வேறுபட்ட வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. அதற்க்கு மாறாக தாம் கற்பனை செய்து கொண்ட மாற்ற முடியாத வாய்ப்பாடொன்றை எப்போதும் எல்லா இடங்களிலும் தம் மனம் போனபடி எதிலும் கையாளுகின்றனர். ஒரு பிரச்சனையை ஆராயும் போது அகநிலைப் போக்கு, ஒரு தலைப்பட்ட போக்கு, மேலோட்டமான போக்கு ஆகியவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.

 

ஒரு தலைப்பட்சப் போக்கு என்பது பிரச்சனைகளை முழுமையாகப் பார்க்கத் தவறுவதாகவும். எடுத்துக் காட்டாக ஜப்பானைப் புரிந்து கொள்ளாமல் பொதுவுடமைக் கட்சியை மட்டும் புரிந்து கொள்வது, கோமிடாங்கைப் புரிந்து கொள்ளாமல் பொதுவுடமைக் கட்சியை மட்டும் புரிந்து கொள்வது, முதலாளிய வர்க்கத்தைப் புரிந்து கொள்ளாமல் பாட்டாளிவர்க்கத்தை மட்டும் புரிந்து கொள்வது, பெரு நில உடமையாளர்களைப் புரிநது கொள்ளாமல் விவசாயிகளை மட்டும் புரிநது கொள்ளவது, முழுமையாக புரிந்து கொள்ளாமல் தனிப்பகுதியை மட்டும் புரிந்து கொள்வது----------

லெனின் கூறினார் ஒரு பொருளை உண்மையாக அறிய வேண்டுமானால் நாம் அப்பொருட்களின் அனைத்துப் பகுதியையும் எல்லாத் தொடர்புகளியும் இடைத்தொடர்புகளையும் தழுவிய வகையில் ஆராயவேண்டும்.

 

ஒருதலைப்பட்ச போக்கு, மேலோட்டப் போக்கும் கூட அகநிலை நோக்கு தான் காரணம். புற நிலையில் உள்ளவை அனைத்தும், உண்மையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, அவ்விதிகளின் நியதிக்குட்பட்டவை. ஆனால் ஒரு சிலரோ, உள்ளவை உண்மையில் எவ்வாறு உள்ளனவோ அவ்வாறே அவற்றைச் சிந்தனைக்கு உட்படுத்தும் கடமையைச் செய்வதற்குப் பதிலாக, அவற்றை ஒரு தலைப்பட்சமாகவும், மேலோட்டமாகவும் மட்டும் பார்க்கிறார்கள். அவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்புகளையோ, அவற்றின் அகவிதிகளையோ அறியாதிருக்கின்றனர். எனவே அவர்கள் முடிபு அகநிலைப் போக்காக உளளது.

 

ஒரு பொருளின் வளர்ச்சியிலுள்ள எதிரானவைகளின் இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கு முழுவதும் சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருக்கின்றது. இச் சிறப்புத்தன்மை, அவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பிலும், அவற்றின் ஒவ்வொரு கூறிலும் காணப்படுகிறது. அத்தோடு அவ் வளர்ச்சிப் போக்கிலுள்ள ஒவ்வொரு கட்டமும் அக் கட்டத்திற்கே உரிய சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளது.

 

ஒரு நீண்ட வளர்ச்சிப் பாதையிலுள்ள ஒவ்வொரு கட்டத்திலும் நிலைமைகள் வேறுபடுவது இயல்பு. ஏனெனில் ஒன்றின் வளர்ச்சிப் போக்கில் உள்ள அடிப்படை முரண்பாட்டின் தன்மையும் மாறாமல் இருந்த போதிலும், இந் நீண்ட போக்கில் ஒரு கட்டத்திலிருந்து அடுத்தக் கட்டத்திற்குச் செல்லும் போது அடிப்படை முரண்பாடானது மென் மேலும் கடுமையானதாகிறது. கூடவே அடிப்படை முரண்பாட்டால் நிர்ணயிக்கப்படுகிற அல்லது தாக்கப்படுகிற பல்வேறு பெரிய அல்லது சிறிய முரண்பாடுகள் சில கடுமையாகின்றன. சில தற்காலிகமாகவோ, அல்லது அரைகுறையாகவோ தீர்வு பெறுகின்றன. அத்துடன் சில புதிய முரண்பாடுகளும் தோன்றுகின்றன.

 

நாம் எவ் வகையிலும் அகநிலைப் போக்குடையவர்களாக இருக்கக் கூடாது. தன்னிச்சைப் போக்குடையவர்களாகவும் இருக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சியில் போக்குகளின் மெய்யான புறநிலை இயக்கத்தில் உள்ள திட்டவட்டமான பாருண்மையான நிலைகளிலிருந்து அவற்றின் திட்டவட்டமான முரண்பாடுகளைக் கண்டறிய வேண்டும். முரண்பாடுகள் ஒன்றுக்கொன்று கொண்டுள்;ள திட்டவட்ட உறவுகளையும் காணவேண்டும். அதாவது இயக்கம், பொருட்கள், நிகழ்ச்சிப் போக்குகள், சிந்தனை இவையெல்லாமே முரண்பாடுகள் தான் முரண்பாட்டை மறுப்பது என்பது அனைத்தையும் மறுப்பது ஆகும். இது எல்லாக் காலத்துக்கும் எல்லா நாட்களுக்குமுரிய, விதிவிலக-;--------; பொதுமை தழுவிய உண்மையாகும்.

 

ஒவ்வொரு முரண்பாடும் குறித்த தன்மை கொண்டிருப்பதாலேயே தனிப்பண்பு தோன்றுகின்றது. தனிப்பண்புகள் யாவும் நிலைமைக்குட்பட்டவையாகும், தற்காலிகமானவையாகவும் இருக்கின்றன. ஆகவே அவை சார்புடையவையாகவும் இருக்கின்றன.

 

சீனா போன்ற அரைக் காலனிய நாட்டில் முதன்மை முரண்பாட்டிற்கும் முதன்மையல்லாத முரண்பாடுகளுக்குமிடையே உள்ள உறவு ஒரு சிக்கலான கட்சியை நமக்கு வழங்குகின்றது.

 

இத்தகையதொரு நாட்டின் மீது ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கும் போது, ஒரு சில தேசத் துரோகிகளைத் தவிர, நாட்டின் பல்வேறு வர்க்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான தேசியப் போரொன்றில் தற்காலிகமாக ஜக்கியப்பட முடியும். அத்தகைய வேளையில் ஏகாதிபத்தியத்திற்கும் குறிப்பிட்ட நாடுகளிற்குமிடையேயுள்ள முரண்பாடு முதன்மை முரண்பாடாகிறது. நாட்டின் பல்வேறு வர்க்கங்களுக்குமிடையேயுள்ள முரண்பாடு முதன்மை முரண்பாடாகிறது. நாட்டின் பல்வேறு வர்க்கங்களுக்குமிடையேயுள்ள முரண்பாடுகள் அனைத்தும்(இவற்றில் முன்பு முதன்மை முரண்பாடாக இருந்ததே அதுவும் அடங்கும் அதாவது நிலவுடமை அமைப்பு முறைக்கும் பரந்துபட்ட மக்கள் திரளினருக்கும் இடையிலான முரண்பாடும் இவற்றில் அடங்கும்.) தற்காலிகமாக ஓர் இரண்டாம் தர கீழ்ப்பட்ட நிலைக்குத் தாழ்த்;தப்படுகின்றன எது நிகழ்ந்தபோதிலும், ஒவ்வொரு கட்டத்திலும் தலைமைப் பாத்திரம் வகிக்கும் முதன்மை முரண்பாடு ஒன்றே ஒன்று தான் இருக்கும் என்பதிலும் யாதொரு ஜயமுமில்லை.

 

ஆகவே எந்தவொரு வளர்ச்சிப்போக்கிலும், ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் இருக்குமேயானால், அவற்றில் ஒன்று தலைமைப் பங்கை, நிர்ணயம் செய்யும் பங்கை வகிக்கும் முதன்மை முரண்பாடாகவே இருக்கும். மற்றவை இரண்டாம் நிலையில், கீழ்ப்பட்ட நிலையிலிருக்கும். எனவே, இரண்டோ அல்லது இரண்டுக்கு மேற்பட்ட முரண்பாடுகளுடைய எந்த ஒரு சிக்கலான வளர்ச்சிப் போக்கையும் நாம் ஆராயும் போது அதன் முரண்பாட்டைக் காண நாம் அனைத்து வழிகளிலும் முயல வேண்டும். ஒரு முறை இம் முதன்மை முரண்பாட்டை இறுகப் பற்றியதும் எல்லாப் பிரச்சனைகளும் எளிதில் தீர்வு காண்கின்றன. இந்த முறையான முதாலாளியச் சமுதாயம் பற்றிய தமது ஆய்வில் மார்க்ஸ் நமக்கு கற்றுத் தந்துள்ள முறையாகும்.

 

ஒரு வளர்ச்சிப் போக்கிலுள்ள அனைத்து முரணபாடுகளையும் ஒன்றுக்கொன்று சமமானவையாகக் கருதக்கூடாது. முதன்மை முரண்பாட்டுக்கும் இரண்டாம் நிலை முரண்பாட்டிற்குமிடையிலுள்ள வேறுபாட்டைக் காண வேண்டும். முதன்மை முரண்பாட்டை இறுகப் பற்றுவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

 

முரண்பாடுக் கூற்றுக்களின் இரண்டில் ஒன்று முதன்மையானது. மற்றொன்று இரண்டாம் நிலையானது. முதன்மைக்கூற்றே முரண்பாட்டில் தலைமைப் பாத்திரம் வகிக்கிறது. ஒரு பொருளின் இயல்பை நிர்ணயிப்பதில் முதன்மைப் பங்கு வகிப்பது ஒரு முரண்பாட்டிலுள்ள முதன்மைக் கூறாகும். இது ஆதிக்க நிலையைப் பெற்றுள்ள கூறாகும்.

 

ஆனால் இந்நிலைமை நிலையானதன்று. முரண்பாட்டின் முதன்மைக் கூறும் முரண்பாட்டின் முதன்மையல்லாத கூறும் அவற்றின் எதிர் மறைகளாகத் தாமே மாறிவிடுகின்றன. இதற்கேற்பவே ஒரு பொருளின் இயல்பும் மாறுகிறது.

 

குறிப்பிட்ட கட்டத்தில் அ என்பது முதன்மைக் கூறாகவும் ஆ என்பது முதன்மையல்லாதக் கூறாகவும் இருக்கின்றன. மற்றொரு கட்டத்தில் அல்லது மற்றொரு வளர்ச்சிப் போக்கில் பாத்திரங்கள் இடம் மாறுகின்றன. ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கிலுள்ள இரண்டு கூறுக்குமுள்ள சக்தி எந்த அளவுக்குக் கூடுகிறதோ அல்லது குறைகின்றதோ அந்த அளவுக்கு இடமாற்றம் நிகழ்கின்றது.

 

 

NLFT யின் வரலாற்று தொடர்ச்சி...

 

குமரன்

 

1983இல் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யபட முன்பே இவர் பிரதேசக் கொமிட்டியில் இருந்தவர். இவர் தீவிர இயஙகு சக்தியாக செயல்பட்டவர். 1980-81 முதல் என்-எல்-எவ்-டியில் வேலை செய்தார்.

 

மார்க்;சிசத்தில் ஆழாமான அறிவைக் கொண்டிருக்காவிட்டாலும் அனைத்து விடயங்களிலும் தீவிர விமர்சகராக இருந்தவர். சில வேளைகளில் தன்னிச்சைப் போக்கை கடைப்பிடிப்பார் இவர் ஒரு ஸ்தாபகர் என்ற நிலையை விட்டு இவர் ஒரு ஊழியராக எப்போதும் செயற்பட்டவர். எந்தப் பிரச்சனை மீதும் உடனடியாக விமர்சனத்தை முன்வைப்பதுடன், அமைப்பில் நெருக்கடி ஏற்படும் போது உடனடியாக முடிவுகளை எடுக்கக் கூடியவர். அமைப்பின் நெருக்கடியின் போது போராட்டங்களில் முன்னிலை நின்று போராடுபவர், இவர் 1987 ஆரம்பகாலங்களில் இருந்து படிப்படியாக ஒதுங்கிக் கொண்டவர்.

 

.ஜோர்ஜ்

 

இவர் 1980-81 இற்கு முதலே என்-எல்-எவ்-டி யில் வேலை செய்தவர். இவர் 1983 இல் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்பட முன் பிரதேச கொமிட்டியில் இருந்தவர். இவர் மார்க்சியத்தில் ஆழமான அறிவை கொண்டிருக்காவிட்டாலும், ஒரு ஸ்தாபகர் என்ற நிலைக்கப்பால் ஒரு ஊழியராகவே கூடுதலாக செயற்பட முனைந்தவர். இவர் 1983 இல் மத்திய குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டவுடன் மத்திய குழு செயலாளாராக தெரிவு செய்யப்பட்டார். இதற்கான தகுதியில்லாமலேயே இத் தெரிவு நிகழ்த்தப்பட்டது. இதைச் செய்வதில் விசு, ராகவன் என்ன நோக்கு நிலையில் நின்று செய்தார்கள் என்பதை கட்டுரையின் தொடர்ச்சியில் ஆராய்வோம். இவர் எபபோதும் நெருக்கடியின் போது முடிவுகள் எடுப்பதில் தயககம் காட்டுவார். மத்திய குழு அல்லது மத்திய குழுவில் வேறொருவருரின் துணையுடனேயே எப்போதும் முடிவெடுப்பபவர். அவர் தனக்கு என்ற வேலையில் தீவிர இயங்கு சக்தியாக செயற்பட்டவர். இவர் 1987 இன் ஆரம்பத்திலிருந்து படிப்படியாக அமைப்பிலிருந்து விலகினார்.

 

சண்முகம்

 

இவர் 1984 இல் என்-எல்-எவ்-டி யின் மத்திய குழுவிக்குத் தெரிவு செய்யப்பட்டவர். இவர் 1984 இன் ஆரம்பத்தில் அமைப்பில் இணைந்து கொண்டவர். இவர் முன்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். அவ் வமைப்பின் ஆரம்பகால உறுப்பினர். இவர் இந்தியாவில் என்-எல்-எவ்-டியின் நிதி இராணுவப் பொறுப்பாளராக இருந்தவர். இவர் மார்க்சிச அறிவை பெரிதாக கொண்டிருக்காவிட்டாலும், தீவிர விமர்சகராக இருந்தவர். தீவிர இயங்கும் தன்மை கொண்டவர். ஊழியர்களின் பால் மிகுந்த அக்கறையுடைய இவர் அமைப்பை நிர்வகிக்கும் தன்மையைக் கொண்டிருந்தார்;. இவர் என்-எல்-எவ்-டியில் இணைந்த பின் ஈழத்தில் வேலை செய்யாதமையால் இவரின் அரசியல் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படு விட்டது. இவர் 1988 இல் அமைப்பிலிருந்து விலகினார்.

 

1983 இல் மேதினம் என்-எல்-எவ்-டி-யினால் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது இது கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக நடாத்தப்பட்டது. இக்கூட்டம் அன்று பொலிஸினால் சற்றி வளைக்கப்பட்டு கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.

 

1983 இல் முந்திய காலத்திலிருந்தே மாணவர் அமைப்பு, பெண்கள் அமைப்பு என்பன கட்டப்பட்டன. இவற்றை கட்டுவதில் என்-எல்-எவ்-டி நேரடியாகவே செயற்பட்டது. இவ் வமைப்புக்களை கட்டுவதில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. இப்படி திட்டம் இன்றி உருவான மாணவர் அமைப்பில் பலர் பின்னால் என்-எல்-எவ்-டி வேலை செய்தனர் தனியொரு பகுதியாக மாணவர் அமைப்பு இல்லாமையினால் அத் தொடர்புகள் படிப்படியாக அறுபட்டுப் போய்விட்டது. இன்னொரு பகுதியினர் பல்வேறு இயக்கங்களில் இணைந்தும் கொண்டனர். என்-எல்-எவ்-டியில் இணைந்த மாணவர்கள் பின் என்-எல்-எவ்-டி உருவாக்கிய புதிய ஜனநாயக மாணவரமைப்பில் வேலை செய்தனர். பாடசாலைகளை முடித்தவர்கள் என்-எல்-எவ்-டி யின் இளைஞரணியான முற்போக்கு இளைஞரணியில் இணைந்து செயற்பட்டனர். உருவாகிய பெண்கள் அமைப்பு பெண்விடுதலை தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. பெண்கள் கொண்ட அமைப்பு வடிவத்தை மட்டும் கொண்டு பெண்கள் இணைக்கப்பட்டனர். இப் பெண்கள் அமைப்பு அரசியல் அறிவெதையும் பெரிதாக கொண்டிராத நிலையில் அவ் அமைப்பை பிரபாவே கூடுதலாக வகுப்புக்களையும் மற்றும் நெறிப்படுத்தல்களையும் செய்தார். இதில் மூன்று நான்கு பெண்கள் ஓர் அளவு வளர்ச்சி நிலையையடைந்தனர். பின் இவர்களே யாழ் மாவட்டத்தின் பல பாகங்களில் பெண்கள் அமைப்புக்களை உருவாக்கினர். அதே நேரம்(சக்தி) ஒரு பெண்கள் சஞ்சிகை வெளியிடப்பட்டது. இது ஒரு இதழ் மட்டுமே வெளிவந்தது. இச்சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை ஆண்களாலேயே எழுதப்பட்டது. வடமராட்சியில் தெங்குபனம் பொருள் கூட்டுஸ்தாபனத்தில் வேலை செய்த பெண்கள் ஒரு பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ் அமைப்பில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அரசியல் கதைக்க முற்பட்டபோது கூக்குரலிட்டு தடுக்கப்பட்டது. இந் நிகழ்வைத் தொடர்ந்து பெண்கள் அமைப்பில் அரசியல் தரம் பற்றியும், திட்டம் தொடர்பாகவும் கேள்விகள் எழுந்தது. இப்படியான பெண்கள் அமைப்பின் அவசியமின்மையைச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அரசியலில் முன்னேறிய பெண்கள் மட்டும் தொடர்ந்தும் அமைப்புடன் இயங்கினர். உருவாகிய பெண்கள் அமைப்பு கைவிடப்பட்டது. அது இயல்பாக செயலிழந்து போனது. எஞ்சிய பெண்கள் (10ற்கு உட்பட்ட) தொடர்ந்து என்-எல்.-எவ்-டி யுடன் இணைந்து வேலை செய்தனர். பின்னால் இவர்கள் ஒரு பெண்களமைப்பை உருவாக்கவில்லை. என்-எல்-எவ்-டி- யும் உருவாக்கிக் கொடுக்கவில்லை. ஆனால் அமைப்பில் மத்திய குழுவில் இருந்த சிலர் தனியான பெண்களமைப்பின் தேவையை உணர்ந்தாலும் நாட்டில் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் தனியான பெண்களமைப்பின் உருவாக்கத்திற்கு தடையாகவும் இருநதது.

 

1983 இல் என்-எல்-எவ்-டி யின் உருவாக்கத்தின் முன்பே பகிரங்கமாக வெளிப்பட முடியாத கருத்துக்களைத் தாங்கிய ஒரு பத்திரிகை வெளிவந்தது. அப் பத்திரிகையின் பெயர் பயணம் ஆகும். அது என்-எல்-எவ்-டியால் வெளியிடப்பட்டது. இப் பத்திரிகை என்-எல்-எவ்-டி க்குள்ளும் வெளியிலும் முன்னேறிய சக்திகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இப் பத்திரிகை 4 இதழ்கள் மட்டும் வெளிவந்தது. 4ம் இதழ் வெளியிடப்படாமல் முற்றாக எரிக்கப்பட்டது. இவ் இதழில் (4ம் இதழ்) அமைப்பிற்கு வெளியிலிருந்த சேரனால் சேகுவோராவின் போராட்டத்தை ஆதரித்து கட்டுரை எழுதப்பட்டது. இவை தனிநபர் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. கியூபா புரட்சி தனிநபர் பயங்கரவாதத்தின் மூலம் பெற்றுக் கொண்டதை நியாயப்படுத்துவது, ஈழத்தில் தனிநபர் பயங்காரவாதத்தை, அது சார்ந்த குழுக்களை அங்கீகரிப்பதில் இட்டுச் செல்லும் என்ற விமர்சனத்தினூடாக பயணம் இதழ் எரிக்கப்பட்டது.

 

1983 இல் மாநாட்டைத் தொடர்ந்து ஒரு பத்திரிகை வெளியிடப்படுவதென முடிவெடுக்கப்பட்டதையடுத்து இலக்கு எனும் இதழ் இந்தியாவிலிருந்து வெளிவந்தது. இவ் விதழ்கள் 1986 இல் 6 இதழ்களும் 1988 இல் ஓரிதழும் வெளிவந்தது. இவ ;விதழ்களின் கட்டுரைகள் ஒரு சில இலங்கையில் எழுதப்பட்டாலும், பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து விசுவால் எழுதப்பட்டவையே. விசுவின் கட்டுரைகள் தொடர்பாக அமைப்புக்குள் முரண்பாடுகள் கூட இருந்தன. இலக்கு இதழ்கள் விற்பனைக்கு என்று தயாரிக்கப்பட்ட போதிலும் நடைமுறையில் இலவசமாவே விநியோகிக்கப்பட்டது. 1984 இல் இப் பத்திரிகைக்கப்பால் இலங்கையிலிருந்து செய்திகளைக் கூடுதலாகக் கொண்ட முன்னணிச் செய்தி என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது. இப் பத்திரிகையை அமைப்பினால் வெளியிடும் பொறுப்பை சிறீ என்பவர் கொண்டிருந்தார். இப் பத்திரிகை 7 இதழ்கள் வெளிவந்தன. இவ்விதழ்கள் றோனியோ செய்யப்பட்டே வெளியிடப்பட்டது. பின் 1986 இன் ஆரம்பத்தில் என்-எல்-எவ்-டி க்குள்ளிருந்த கட்சியினால் லெனினிசம் எனறொரு பத்திரிகை வெளியிடப்பட்டது. இப் பத்திரிகையில் முழுமையாக அரசியல் கட்டுரைகளையே தாங்கி ஒரேயொரு இதழ் மட்டுமே வெளிவந்தது.

 

1983 முடிந்தவுடன் விசு, சிறீ உட்பட நான்கு பேர் இந்தியா அனுப்பப்பட்டனர். மற்றைய இருவரும் இராணுவத்தைச் சேர்ந்தோர். அவர்கள் இருவரும் ஆயுதம் சேகரித்தல், பயிற்சி முகாம் தயாரித்தல்;;;;;....போன்ற வேலைகளுக்காக அனுப்பப்பட்டனர். சிறீ இந்தியாவில் பகிரங்க தொடர்புகளுக்கும், பகிரங்க வேலைக்கும் என அனுப்பப்பட்டார். இவர்கள் இந்தியா செல்வதற்கு முன்பே விசு அங்கு நீண்டகாலம் இருந்தவர். இவர்கள் நால்வரும் நெடுந்தீவிலிருந்து வள்ளம் மூலம் இந்தியா செல்ல நெடுந்தீவு சென்ற போது நால்வரும் செல்வதற்கு வள்ளம் கிடைக்காமையினால் விசும், சுரேனும் முதலில் இந்தியா சென்றனர். சிறீயும், ரமேசும் ஒரு வாரத்தின் பின்பே வள்ளம் மூலம் சென்றனர். இவர்கள் சென்ற வள்ளம் இடைநடுவில் பழுதுபட்டதனால் 4---5 மணிநேர தாமதத்தின் பின்பு இராமேஸ்வரம் கரையில் இறக்கப்பட்டனர். இவர்கள் உடமைகள் யாவும் அவ்வூரிலிருந்த சிலரால் வழிமறித்துப் பறிக்கப்பட்டன.

 

இந்தியாவில் விசுவுடன் இணைந்து கொண்ட இவர்கள் விசுவின் இந்திய நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினர். அவருடன் மேலும் இருவர் இருந்தனர். அந் நண்பரின் பொருளாதார நெருக்கடிக்குள் நாம் அவரைச் சார்ந்திருந்தோம். எம் கைகளிலும் பெரிதாகப் பணம் இருக்கவில்லை. நாம் சாப்பிடுவதற்குக் கூட பணமில்லாத நிலையில் அவர்கள் சமைப்பதில் இரவில் தரும் உணவுடன் ஒரு மாதம் ஒடியது. எமது அடுத்தகட்ட வேலைக்கு பணம் இலங்கையிலிருந்து (ஒருகொள்ளையினூடாகவே) எதிர்பார்க்கப்பட்டது. அதாவது குறித்த திகதிக்கு முன் பணம் அனுப்புவதாக கூறிய உத்திரவாதத்தை மட்டும் கொண்டு சில அடிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்தியாவில் இருந்தோர் பயிற்சி முகாம் போடுவதற்கென்று சில இடங்களைக் கூட சென்று பார்த்தனர். அங்கு செல்வதற்காக கையிலிருந்த அனைத்துப் பொருட்களும் விற்கப்பட்டன. ஊட்டி வரை சென்று சில காடுகன் தொடர்பாக ஆராயப்பட்டது. அங்கு விசுவுக்கு நண்பர்கள் இருந்தனர். இப்படி பார்க்கப்பட்ட காடு தொடர்பாக இராணுவம் சார்பாக வந்த ரமேஸ் இவ்வளவு தூரம் நடந்து சென்று பயிற்சி எடுக்க வேண்டுமா? கால் உளைகிறது என்று சொல்லி ஒரு கடினமான போராட்டத்துக்கு தயாரின்மையை நடைமுறையில் காட்டினார். இவர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமாவார். இவரின் இச் செயற்பாடு தொடர்பாக விசு,சிறீ, சுரேன் ஆகியோரால் விமர்சிக்கப்பட்டது.

 

மேலும் விசு நக்சல்பாரி குழுவான (மக்கள் யுத்தக் குழுவுடன்) தொடர்பு வைத்திருந்தார். அவர்கள் மூலம் ஒரு வீடு எடுக்கப்பட்டு நால்வரும் அவ் வீட்டில் தங்கினர். இக் காலத்தில் மக்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் என்-எல்-எவ்-டி யில் அடிக்கடி தொடர்பு கொண்டு விவாதித்தார். இந் நிலையில் முன்பு புலிகளிலிருந்த சண்முகம் என்பவருடனும் தொடர்ந்து விவாதித்தோம். அதை தொடர்ந்து அவர் என்-எல்-எவ்-டியுடன் இணைந்து வேலை செய்ய முன் வந்தார். அங்கு ஏற்பட்ட பண நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து பணம் வராமையால் விசு நாடு திரும்ப முடிவு செய்தார். பணம் நெருக்கடி ஏற்படின் சண்முகத்திடம் கோரும்படி கூறிச் சென்றார். விசு நாடு திரும்பும் போது சிறீயையும் கூட்டிசசென்றார். விசு, சிறீ நாடு திரும்பியபோதும் அங்கு எக் கொள்ளைகளும் செயற்பட்டு இருக்கவில்லை. அமைப்பு மொத்தத்தில் நிதி நெருக்கடிக்குள் மூழ்கியிருந்தது.

 

விசு சிறீ நாடு திரும்பியவுடன் கூட்டப்பட்ட மத்திய குழுக் கூட்டத்தில் மத்திய குழுவுக்கப்பால் ராகவனும் கலந்து கொண்டார். நிதி நெருக்கடியைத் தீர்க்க மிக விரைவில் கொள்ளைகளுடாகத் தீர்ப்பதாக கூறி உத்திரவாதம் அளித்தனர். மேலும் விசுவின் கருத்துக்களைத் தொடர்ந்து இந்தியாவுககு இராணுவப் பயிற்சி தொடங்கவென ஆட்களை இந்தியா அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. இராணுவப்பயிற்சி தொடர்பாக இந்தியாவிலிருந்து வந்த சிறீ அந்த கூட்டத்தில் பெரிதாக கருத்துச் சொல்லாமல் அங்கீகரித்தார். மேலும் அங்கிருந்த உணவுப் பிரச்சனை, இடப்பிரச்னை, மற்றும் நிதியின்மை போன்ற நெருக்கடிகள் தொடர்பாகவும் கருத்துச் சொல்ல தயங்கினார். சிறீ போன்றோர் விசு, ராகவன் போன்றோரின் வாதத் திறமைக்கெதிராக ஒரு கருத்தைக் கூட சொல்லி விடும் தகுதி அவர்களுக்கு இருக்கவில்லை. விசு இந்தியாவிலிருந்து ஒரு சில ஆயுதங்களை பணம் அனுப்பின் எடுத்துக் கொடுத்து விடுவதாக உத்திரவாதம் வழங்கினார். அதையடுத்து ரகு என்பவரை அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரகு மேலும் ஜவர் பயிற்சிக்காக புதிதாக சிறீயுடன் அனுப்பப்பட்டனர்.

 

இவர்கள் இந்தியா செல்வதற்கான வள்ளம் எமது அமைப்பிலிருந்த செல்வம் என்பவர் ஒழுங்கு செய்தார். இவர் சிறிய பிளாஸ்டிக் போட் ஒன்றை அவரின் நண்பரிடம் மீன் பிடிக்க செல்லவெனச் சொல்லி இரவல் வாங்கினார். அவ் வள்ளத்தின் இயந்திரம் வலு 15 குதிரைச் சக்தியை மட்டுமே கொண்டிருந்தது. இச் செயற்பாட்டிற்குப் பொறுப்பாக இராணுவக் குழுவே இருந்தது. குறித்த நடவடிக்கையில் முன் அனுபவமற்ற நிலையில் இதில் அனுப்பியிருந்த தவம், மோகன்,(இவர்கள் இராணுவப பிரிவில் இருந்தவர்கள்)ஆகியோரே வள்ளத்தை ஒழுங்கு செய்தனர். வள்ளத்தில் தவத்துடன் வேறொருவர் ஓட்டியாக வந்தார். சில புத்தகப் பார்சல்களுடன் (மாவோவின் நூல் திரட்டுக்கள். இவை பின் மக்கள் யுத்தக் குழுவிற்கு கொடுக்கப்பட்டது.) புறப்பட்ட வள்ளம் இடைநடுவில் இயந்திரம் பழுதாகி நடுக்கடலில் கடும் மழைக்கும் காற்றுக்கும் மத்தியில் நீண்டநேரம் தததளித்தது. நீண்ட நேரமுயற்சியின் பின் வள்ளம் மீண்டும் ஒடத்தொடங்கியது. வள்ளம் புறப்பட்டு இரு மணித்தியாலங்களின் பின் வள்ளம் இலங்கையை நோக்கி வருவதை காங்கேசன்துறை வெளிச்சக் கோபுரத்தைக் கொண்டு அறிய முடிந்தது. பின் மீண்டும் வள்ளம் திருப்ப்பபட்டு இந்தியா நோக்கி செலுத்தப்பட்டது. விடியற்காலை 5-6 மணியளவில் தெரிந்த வெளிச்சக் கோபுரத்தைக் கண்டு இலங்கையா, இந்தியாவா எனக் குழம்பினர். பின் மெதுவாக செலுத்தி சென்ற போது இந்தியா எனத் தெரிந்தது. அந்தளவுக்கு உயிர்களைப் பற்றிய எச்சரிக்கையின்றி அமைப்பு ஆரம்பிக்கத் தொடங்கியது. வள்ளத்தின் இயந்திரம் காலை ஒப்படைக்கப்பட வேண்டியிருந்தும் மறு நாள் காலையே கரை வந்து சேர்ந்தது. இயந்திரம் குறித்த நேரத்தில் ஒப்படைக்கப்படாமையால் இயந்திர உரிமையாளர் பொலிஸ்சில் புகார் செய்திருந்தார். இவைகளெல்லாம் அமைப்பின் மிக மோசமான நிலைமையைச் சுட்டிக்காட்டியது.

 

 

வழமைபோல கடந்த இதழுக்கும், இந்த இதழுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. இதற்கிடையில் எத்தனையோ நிகழ்வுகள், இந் நிகழ்வுகளுக்கு வெளியில் சமர் இயங்குவதாக ஒரு சாராரின் விமர்சனம். இது ஒரளவு உண்மையாக இருந்தாலும் முழுமையானதல்ல. சமர் மூன்றாம் பாதையை அமைத்திடும் போக்கில் செயற்பட முனைகிறது. அந்த வகையில் கடந்த கால, நிகழ்கால அரசியல் போக்குகளையொட்டி விமர்சனத்தை முன் வைக்கின்றது. கடந்த கால, நிகழ்காலத்தின் மீதான அரசியல் விமர்சனம் எதிர்காலத்தில் எழும் போராட்டத்தை வழிநடத்தும்.

நாம் கடந்த காலத்தின் மீது விமர்சனம் செய்யும் அதே நேரத்தில் மேலும் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டு வி;டுகிறார்கள். நாம் இக் கொலைகளுக்கு வெறும் எதிர்ப்பைக் காட்டுவதாலோ அல்லது கண்டிப்பதாலோ மட்டும் இக் கொலைகள் தடுக்கப்பட்டு விடாது. இக் கொலைகளை நிறுத்தும் வகையில் மூன்றாவது பாதைக்கான அமைப்பை உருவாக்க வேண்டும். எப்போழுது மூன்றாவது பாதை உருவாகிறதோ அப்போதிருந்தே தமிழ் மக்களின் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக மாற்றப்பட்டு விடும்.

இந்த வகையில் மூன்றாவது பாதை அமைத்திடும் நோக்கில் நாம் கொண்டிருந்த நிலைப்பாடு, சில சஞ்சிகைகளில் கதை, கவிதை மட்டும் கவனத்தில் எடுத்து செயற்படுவதை கண்டித்தோம். ஆனால் அதற்காக அவை சமூகத்திற்கு அவசியமற்றது என்று அர்த்தமல்ல. இவை இச் சமூகத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்த மூன்றாவது பாதையை உருவாக்கியிருக்க வேண்டும். மூன்றாவது பாதை உருவாகாமல் தடுப்பதில் இரு பிரதான விடயங்கள் பங்காற்றுகின்றன. இவை இரண்டிற்கும் எதிராக சமர் முழுமையாக போராட முற்படுகின்றது. இலங்கையரசு, புலிகள் என்ற தரகு முதலாளித்துவம் முதல் தடையாகும். திரிபுவாதமும், பிழைப்பு வாதமும் இரண்டாவது தடையாகும். இரண்டாவது தடை முற்போக்கு அலைகளுடன் வெளி வருகிறது. முதல் தடை எப்போதும் நேருக்கு நேராகவும், இரண்டாவது தடை முதுகுக்குப் பின்னாலும் செயற்படுகிறது.

இவ்விரண்டையும் உடைப்பது மூன்றாவது பாதையின் மிக அடிப்படையான விடையமாகும்.

இவ்விரண்டு விடயமும் மூன்றாவது பாதையை உருவாக விடாமல் தடுக்கும் இன்றைய நிலையில். தொடர்ந்து ஆயிரகணக்கில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பல தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்த நபர்களும், குழுக்களும் செயற்படுகின்றனர். இவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தவென புறப்பட்ட நோங்களில் புதிய புதிய இராணுவ நடவடிக்கைகளை முழுத்தமிழ் மக்கள் மீதும் நடத்தி முடித்து விடுகின்றனர். இந்தியா விடுதலைப்புலிகள் மீது தடையென்ற பெயரில் தமிழீழப் போராட்டத்தையே தடை செய்து, தமிழ் மக்களை கொன்று குவிக்க பச்சைக் கொடியும் காட்டியுள்ளது. இன்று தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக பாரிய தாக்குதல்களை ஸ்ரீலங்கா அரசு தனது இனவெறி இராணுவத்தை காட்டுமிராண்டித்தனமாக கட்டவிழ்த்து விட்டுள்ளது. தெரிவுக்குழு நீண்டகாலத்தை கடத்தி எந்த உருப்படியான தீர்வையும் முன்வைக்காமல், மீண்டும் மீண்டும் தெரிவுக்குழு தீர்வு எனச் சொல்லி இராணுவ நடவடிக்கைக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துகின்றனர். இலங்கையரசுடன் கைகோர்த்த தமிழ் துரோகக் குழுக்கள் தெரிவுக்குழுவை கூறியே காலத்தை கடத்துகின்றனர். அதே நேரம் புலிகள் மீதான இந்தியாவின் தடையை தமிழீழ போராட்டத்தில் புரட்சிகரமான நடவடிக்கையென, துரோக வாய்களால் ஒரு பாராட்டைக் கொடுத்து அண்டிப் பிழைக்க முயல்கின்றனர். புலிகளோ மேலும் பாசிசத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு, ஈழப்போராட்டத்தை முன்னேற்றுவதாக உண்மைக்கு மாறாக மிரட்டலுடன் கூறுகின்றனர். மறுத்துக் கூறுவோர் மீது கொலைப் பயமுறுத்தல், கடத்தல் மூலம் வாய்களை மூடி வைக்க முயல்கின்றனர்.

மக்களை நேசிக்கும் அனைவருக்கும் எதிர்காலத்தின் வெற்றிக்கு துரோகத்திற்க்கும், பொய்களுக்கும், உருட்டல், மிரட்டல்களுக்கும் எதிராக ஒன்றிணைந்த திரிபுகளையும், பிழைப்பு வாதத்தையும் எதிர்கொள்ள கைகோர்த்திட சமர் அழைக்கிறது.

 

சமரின் கருத்து தொடர்பாக தூண்டிலில் கருத்துக்கள் சொல்லப்படுகிறது. அது பற்றி அறிவது அவசியமாகிறது. மனிதம், சமர் இரண்டையும் ஒரு தட்டில் போட்டுப் பார்க்க முடியவில்லை. எனது நிலைப்பாடு சீனத் தலைமையும், மூன்று உலகக் கோட்பாடும் பிழை என்பதும், தமிழீழத்திலிருந்து முழு இலங்கைக்கான போராட்டம் பற்றிய விடயத்தில் சற்று தத்துவார்த்த ரீதியில் சிந்திக்க வேண்டும், அவசரம் கூடாது எனவும் எண்ணுகிறேன். எதற்கும் ஒரு இதழுடன் முடிவுக்கு வருவது முட்டாள்தனம்.

தூண்டிலில் சமரும் அழிவுக்காரர் என்று சொல்லும் பாணியானது, தீண்டாமை மட்டும் தேசியப் பிரச்சனை என்று கூறிய, மரபுவாதிகளில் நின்று சற்று முன்னேறி, ஒரு அடைப்பு வாதத்துக்குள் வீழ்ந்த சீன சார்பு இடதுகள் தமிழ்த் தேசியப் பிரச்சனையை தீண்டத்தகாத பிரச்சனை போல் கருதினார்கள். கூட்டணியும் சாதியப் பிரச்சனையை தீண்டத் தகாத பிரச்சனையைப் போல் கருதினார்கள். தமிழ்த்; தேசியப் போக்குக்குள் இருந்து தமது கருத்துக்களை வலியுறுத்த முடியாது. வெளியேறிய சமூகவிஞ்ஞானக் கண்ணோட்டம் கொண்டிருப்பவர்கள் கூட அழிவு யுத்தம் என்று கூறுவது ஒரு கேலித்தனம் சேர்ந்தே தொனிக்கிறது என்றே எனக்குப் படுகிறது.

கருத்துகள் கருத்துகளாக மதிக்கப்பட்டு ஆராயப்படுதல் தான் இயங்கியல் போக்குக்கான அழகும், கருத்துக்கு மதிப்பளித்தலுமாகும் என்று நான் கருதுகிறேன். கருத்துக்கள் எள்ளி நகையாடப்படுதல் ஒரு பத்திரிகைக்கான ஜனநாயகத்தன்மையை மறந்து வாசகர்களை சரியாக சிந்திக்க விடாது மயக்க நிலையில் சில பிழையான அர்த்தத்தை உண்டு பண்ணி, அந்த நிலையில் கருத்துச் சொல்பவர் பத்திரிகையினை பிழையாக விளங்கிக்கொள்ள தூண்டுதலாக அமைந்துவிடுகிறது. (இது கடந்தகால சீன தலைமைகள் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் எழுதும் போதும் நான் இது பற்றி சீன சார்பு க.கட்சி தலைவர்களுடன் பேசும் பொழுது முதலாளித்துவப் பத்திரிகைகள் அப்படித்தான் கூறும் என்று கூறியே தப்பித்துக்கொண்டனர். இது தவிர கட்சிக்கட்டுபாடு என்று கட்டியே போட்டு விடுவார்கள். இந்த மாதிரியான துரோகத்தனமான நடவடிக்கையினால் கிடைத்த அனுபவங்கள் எம்மை மேலும் சிந்திக்கத் தூண்டியது. அடைப்புவாத போக்கு தமிழ் இயக்க ஆயுதக்கவர்ச்சி என்பன அக்கட்சி அழிவதற்கு காரணமானாலும் புதிய |ஜனநாயக கட்சி செந்தில்--மணியம் போன்றவர்கள் கட்சி சீர்குலைவுக்கு காரணமாகியது.

தமிழ் பகுதியில்(யாழ்ப்பாணம்) 70 பதுகளில் பலமான கட்சி ஒன்று இருந்ததும், அதிலிருந்து பிரிந்த செந்தில், மணியம்(இவர் இறந்து விட்டார்)தற்போது புதிய ஜனநாயக் கட்சி அமைத்துள்ளனர். இவர்களுடன் உங்களுக்கு உடன்பாடு இல்லை என சமர்(3) மூலம் அறிந்து கொண்டமையால் சில விடயங்கள் சம்மந்தம் சம்மந்தமில்லாமல் எழுதியுள்ளேன். இனங்கண்டு கொள்ள முடியுமாயின் மகிழ்ச்சியடைவேன்.

நீங்கள் எழுதியுள்ளீர்கள் சீனத்தலைமையும் மூன்று உலகக்கோட்பாடும் பிழையென்று. இக்கருத்து தொடர்பாக சீனாவிலிருந்த மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், மூன்று உலகக் கோட்பாட்டையும் பிழை என்கிறீர்களா? அல்லது இன்றைய சீனத்தலைமையையும் இலங்கையிலுள்ள சீனா கம்யூனிஸ்ட் கட்சியையும் பிழை என்று கூறுகிறீர்களா என்பதை கடிதம் தெளிவாக சுட்டிக்காட்டவில்லை. இருந்தும் இது பற்றி விவாதிக்க முற்படுகிறோம். மாவோ தலைமையிலிருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அக்காலத்தில் தவறுகள் இருந்திருக்கலாம் அவை விமர்சனத்துக்குட்பட்டவை ஆனால் இன்று இருக்கும் சீனத்தலைமையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று சீனாவில் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் சீரழிந்த முதலாளித்துவ மீட்பாளர்களே. இவர்கள் இப்படியெனில் இலங்கையிலுள்ள சீன சார்பு கம்யுனிஸ்ட்டுகள் (புதிய ஜனநாயகக் கட்சிக்காரர்கள்) பிழைப்புவாதிகளாகவேயுள்ளனர். மற்றும் மூன்றுலகக் கோட்பாடு தொடர்பாக எம்மிடம் புத்தகமின்மையும், அது பற்றி நாம் ஒரு கருத்தையும் வந்தடையவில்லை இது தொடர்பாக பொதுவாக மூன்று உலக கோட்பாட்டை மாவோ வரையறை செய்தபோது, அக்காலத்தில் உலக நிலைமையோடு பொருந்;துவதாக உருவாக்கப்பட்டது. ஆனால் அதுவே பொதுவானது என இன்று பாவிக்க முற்படுவது, பிழைப்பு வாதத்தின் அடிப்படைக் குணாம்சமே.

தமிழீழத்திலிருந்து முழு இலங்கைக்கான போராட்டம் பற்றிய விடயத்தில் சற்று தத்துவார்த்த ரீதியில் சிந்திக்க வேண்டும்|| என்ற உங்கள் கருத்து தொடர்பாக சமுகத்தில் எழும் முரண்பாடுகளிலிருந்தே போராட்டம் வளர்த்து எடுக்கப்படுகிறது. அந்த வகையில் இனமுரண்பாடு 1983க்குபின் கூர்மையடைந்து. இம் முரண்பாட்டை எந்த மார்க்ஸிசவாதியும் கவனத்தில் எடுக்கதவறின் ஒரு புரட்சிக்கு தலைமை தாங்க முடியாது. குறிப்பிட்ட இம் முரண்பாடு இலங்கையில் தீவிரமடைந்து உள்ளது. இம் முரண்பாட்டை முன்னெடுத்தலுக்கூடாகவே தமிழீழம் அல்லது இலங்கைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். அந்த வகையில் எம் மக்கள் மத்தியில் உள்ள இம் முரண்பாட்டை முன்னெடுக்கும் போது தமிழீழம் தீர்வாக முன் வைக்கப்படுகிறது. இப் போராட்டத்தில் ஒரு கட்டத்தில் தமிழீழம் நோக்கி முன்னேறும் பொழுது, சிங்கள மக்கள் மத்தியில் எழும் ஒரு புரட்சிகர கட்சி நேசக்கரம் நீட்டுவதைப் பொறுத்தே ஜக்கிய இலங்கைக்கான மொத்தப்புரட்சியா என்பதை வழிகாட்டும். அப்படி சிங்கள புரட்சிகர கட்சி நேசக்கரம் நீட்டாமல் இருக்கும் வரை தமிழீழத்துக்கான போராட்டம் தடைப்பட்டுவிடாது. தொடரும் அதன் வெற்றி தமிழீழத்தை உருவாக்கும்.

தூண்டில், சமரும் அழிவு யுத்தத்திற்காக என்ற பாணியானது என்று நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் புலிகளின் யுத்தம் அழிவு யுத்ததிற்கானது என சமர் சொல்லவில்லை. இது பற்றி இன்னும் சமர் கருத்துச் சொல்லவில்லை. குறிப்பிட்ட விடயத்தில் தூண்டிலின் பார்வையில் தீண்டாமை மட்டுமே தேசியப் பிரச்சனை என்று கூறிய, மரபுவாதிகளில் நின்று சற்று முன்னேறிய ஒரு அடைப்பு வாதத்திற்குள் விழுந்த சீன சார்பு இடதுகள் தமிழ்தேசிய இனத்தின் பிரச்சனையை தீண்டத்தகாத பிரச்சனைபோல் கருதினர். தமிழ் தேசிய போக்குக்குள் இருந்து தமது கருத்துக்களை வலியுறுத்த முடியாது வெளியேறிய சமூகவிஞ்ஞான கண்ணோட்டம் கொண்டவர்களிடம் கூட அழிவு யுத்தம் என்று கூறுவது ஒரு நய்யாண்டிதனம் சேர்ந்தே தொனிக்கிறது என எனக்குபடுகிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள் தூண்டிலின் பார்வையை நீங்கள் குறித்த வரையறைக்குள் பார்ப்பது தவறு. தூண்டிலின் அழிவு யுத்தமா? தடுப்பு யுத்தமா? என விவாதிப்பது ஒர் ஆய்வின் தொடராகவே ஒழிய ஒரு வறட்டுதனமாகவல்ல. தமிழீழ போராட்டத்தை ஆதரிக்கும் அதே நேரம் அதற்கான போராட்டத் தலைமையை உருவாக்கவும் தூண்டில் முனைகிறது. அந்த வகையில் புலிகளின் யுத்தத்தை அழிவு யுத்தமா? தடுப்பு யுத்தமா? என விவாதிக்க முற்படுகின்றனர்.

கருத்துக்களை கருத்துக்களாக மதிக்கப்படவேண்டும் என்ற வாதத்தை சமர் பூரணமாக ஏற்றுக்கொள்கிறது. உங்கள் பார்வையை சிலர் தவறாகப்பயன்படுத்த கூறுகின்றனர். அதாவது கருத்தை விமர்சிக்கும் உரிமையை தடுக்கின்றனர். ஒரு கருத்தின் மீது மாற்றுக்கருத்தை முன் வைக்கப்படும் போது அக் கருத்து தொடர்பாகவுள்ள முக்கியத்துவத்தை ஒட்டி விமர்சனம் கடுமையானதாகவோ, மென்மையானதாகவோ அமையலாம். இவைக்குள் எள்ளி நகையாடப்படுவது கூட அமையலாம். இப்படியான விமர்சனம் மீது விமர்சனம் பிழை என வாதாட முற்படுபவர்கள், தங்களின் கருத்தின் மீதான பலவீலத்தை கொண்டே இப்படி வாதாடுகின்றனர்.

"கட்சி கட்டுப்பாடு என்று கட்டியே போட்டு விடுவர்" என்று நீங்கள் சொல்வதில் ஒரு வரையறைக்குள் பார்க்க முடியாது. கட்சிக் கட்டுப்பாடு ஒரு கட்சிக்குத் தேவையானது. ஓரு கட்சிக்குள் மாற்றுக்கருத்துக்கு |ஜனநாயகம் இருக்க வேண்டும். அக் கருத்தை வைக்கும் ஒழுங்கு கட்சிக்குள் இருக்க வேண்டும். இது இல்லாத பட்சத்தில் ஒரு கட்சி கட்சியாகவே இருக்காது. கட்சிக்கட்;டுப்பாடு என்று ஓரு கருத்;தை விவாதிக்கத் தடுப்பது பிழை. அதே நேரம் கட்சி தனக்கென ஒரு கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். கட்சி எப்பொழுதும்; ஜனநாயக மத்தியத்துவதத்தைக் கொண்டு செயற்பட வேண்டும்.

--ஆசிரியர்குழு---

 

 

 

"புலிகள் எந்த வர்க்கத்தினதும் பிரதிநிதிகள் அல்ல, அவர்களின் நலன்களுடன் தமிழ்மக்களின் நலங்களும் சில பின்னிப்பிணைந்துள்ளது". புலிகள் தாம் சார்ந்த வர்க்கத்திற்காக நிற்கின்றார்களா? அப்படியாயின் இந்தியாவிடம் ஆயுதம் வாங்கி அவர்களையே நம்பி ஆயுதம் ஒப்படைப்பதாகக் கூறியவர்கள் பின் தங்களின் நலன் பாதுகாக்கப்படாத போது அவர்களையே எதிர்த்தார்கள். இலங்கையரசை நம்பவில்லை என்றவர்கள் பின் பிரேமதாசா அரசுடன் பேச்சு நடத்தியது மட்டுமல்லாமல், ஆயுதமும் வாங்கி தற்போது அவர்களுடன் மோதுகின்றார்கள். ஏன்? இங்கு அவர்களின் நலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களின் நலன் பாதிக்கப்படும் என்றால் புலியினர் இஸ்ரேல் என்ன அமெரிக்காவுடனும் மோதத் தயார். அங்கு இருப்பவர்கள் சயனற்றை கழுத்தில் கட்டிய தொண்டர்கள். இந்த நிலையில் அவர்களை ஒரு வர்க்கத்திற்குள் வரையறுப்பது எப்படி?

இக் கருத்துக்கள் தொடர்பாக சமர் 1,2, தூண்டில், மனிதம், உயிர்ப்பு ஆகியவற்றில் விவாதங்கள் வெளிவந்தன, இவைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டே கருத்துக்களை விவாதிக்கிறோம். அக் கருத்துக்கள் தொடர்பாக இவ்விதழில் பிறிதொரு விவாதத்தை முன் வைக்கிறோம். தாங்கள் அவ் விவாதங்களையும் பார்க்கவும். உங்கள் கருத்தும், மனிதம் சஞ்சிகையில் வந்த கருத்துக்களையும் ஒன்றாகப்பார்க்க முடிகிறது. உங்கள் கருத்துக்கள் தொடர்பாக மனிதத்தின் கருத்துக்களை ஒட்டி வைத்த கருத்தையும் பார்க்க. இருந்தும் உங்களது கருத்துக்களையும் தனியான ஆராய முற்படுகிறோம்.

புலிகள் எந்த வர்க்கத்தினதும் பிரதிநிதிகள் இல்லை என வாதாட முற்படுபவர்கள் உலகில் நடுநிலைமை என்று ஒன்று உண்டு என வாதட முற்படுகின்றனர். எந்த நடவடிக்கைக்கும், எக்கருத்துக்கும் ஒரு வர்க்கத் தன்மையுள்ளது. இது தொடர்பாக இரண்டாம் அகிலத்துக்கும், லெலினுக்கும் இடையில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. புலிகளின் நலன்களுடன் தமிழ் மக்களின் நலன்கள் சில பிணைந்துள்ளது என்ற உங்கள் வாதத்தில் புலிகளின் நலன்களென்று நீங்கள் கூறுவது எதை? புலிகள் தாம் சார்ந்தோருக்கெனப் போராடும் குறிக்கோள்கள் அனைத்தும் தரகுமுதலாளித்துவம் சார்ந்ததே. சிறு குழுக்களாகவிருக்கும் இவர்கள் எப்போதும் தமது நலனுக்காவே போராடுவார்கள். இத் தன்மை தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான அம்சமும் கூட, இத் தரகுமுதலாளித்துவ கோரிக்கைகளுக்கு அப்பால் எந்தக் கோரிக்கையும் வர்க்கத்தன்மையற்றதென நீங்களோ, மனிதம் சஞ்சிகையோ சுட்டிக்காட்டவில்லை. ? இதை மேலும் விபரமாக மனிதம் தொடர்பான விமர்சனத்தில் பார்ப்போம். நீங்கள் சொல்லுவது போல் புலிகளுக்கு வர்க்கத்தன்மையில்லை எடுத்துக் கொள்வோம். அப்படியாயின் புலிகள் சுரண்டலை நடத்தவில்லை. இக் கருத்தை நாம் ஆராய முற்படும் பொழுது எவ்வளவு பலவீனமானது. தமிழ் மக்கள் மீது புலிகள் சுரண்டலை நடத்துவதில் இன்று முதலிடம் வகிக்கிறார்கள். சாதாரண |"ஜனநாயகத்தை" அடக்கி ஒடுக்கி தங்களின் வர்க்க இருப்புக்காக சுரண்டலைப் பிரதானமாக கொண்டு இன்று தம்மைப் பேணுகிறார்கள்.

இதே கருத்துடன் கிட்லர், சதாம் உசையின் பிரச்சனையை எடுப்போமாயின் இருவரின் குரல்களிலும் தேசியத்தன்மை (சொந்த மக்களின் கோரிக்கை) காணப்பட்டது. அதே நேரம் எதிரியைப் போன்று சொந்த மக்களை நசுக்கியபடி எல்லா வழிகளிலும் சுரண்டல்களை நடத்தினார்கள். அவர்களும் காலத்துக்கு காலம் நண்பர்களை மாற:றி தம்மைப் பாதுகாத்து கொள்ள முயன்றனர். அதற்காக இவர்களுக்கு வர்க்கத் தன்மையில்லை என்றோ, எந்த வர்க்கமென்று வரையறுப்து என்றோ கேள்வியெழுப்ப முடியாது. இவர்களின் வர்க்கத்தன்மை தெளிவானது.

புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களும் உருவாகிய பொழுது அவை ஒரு குட்டிபூர்சுவா இயக்கமாகவே இருந்தது. அது தனது வளர்ச்சியுடன் தனது தன்மையை மாற்றிக்கொண்டது. இந்த நிலையில் தான் இந்தியா தலையிட்டு தமிழீழப் போராட்டத்தில் தலையீடு நடத்தியது. ஆரம்பத்தில் பயிற்சி முகாம்களை உருவாக்கிய பொழுது ஒவ்வொரு இயக்கத்தையும் தனது வர்க்க நோக்கத்தின் அடிப்படையில் ஆராய முற்பட்டது. இதன் அடிப்படையில் தனது தரகு ஆகவும், நம்பகரமான சக்தியாக டெலோவையும், ஈ-பி-ஆர்-எல்-எவ் யும் கணித்தது. புளொட்டிலிருந்த குழப்பமான சக்திகளின் நடவடிக்கைகளை அடுத்து புளொட்டை அவதானத்துடன் கையாண்டது. புலியை அதன் பின்னணியைக் கொண்டு, புலிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காது புறக்கணித்தது. பயிற்சி கொடுத்த நபர்களின் எண்ணிக்கை, பயிற்சியின் தரம், கொடுத்த ஆயுதங்களின் தொகை ஒவ்வொரு இயக்கங்களுக்கும் மாறுபட்டதாக இருந்தது. இக் காலத்தில் என்-எல்--எவ்-டிக்கான பயிற்சி நிராகரிக்கப்பட்டதுடன் தீவிர கண்காணிப்பையும் இந்தியா செய்தது. இந்திய அரசு ஒவ்வொரு இயக்கத்தையும் அதன் வர்க்கத்தன்மையையும் மதிப்பிட்டது.

இதே போல் புலிகளும் ஒவ்வொரு இயக்கத்தையும் இந்தியாவையும் மதிப்பிட்டது. ஆரம்பம் முதலே இந்தியா தொடர்பாக புலிகள் காலத்துக்காலம் தேவைப்படும் போதும் இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுக்க முனைந்தனர். ஆனால் புலிகளில் இருந்த அரசியல் தெளிவின்மையும், பிறிதொரு ஏகாதிபத்தியத்தின் சார்பும், கீழ் மட்டத்திற்கு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக மேல்மட்டம் கொடுக்கத்தவறியதன் விளைவே. கீழ்மட்டம் இந்தியா இறங்கிய பொழுது வரவேற்றது.

புலிகள் இந்தியா தொடர்பாக அரசியல் ரீதியாக ஆராய்ந்ததன் குறைபாடும், இந்தியா தொடர்பாகவிருந்த பயம் அவர்களுக்குள் இருந்த நெருக்கடியும், தரகுத்தன்மையும் இந்தியா சார்பாக மாற்ற தயாராகவுமிருந்தனர். இதுவே ஆயுதத்தை வாங்கவும், கொடுக்கவும் முயன்றது. அதே நேரம் இந்தியா ஏமாற்றி விடும் என்ற பயமும் தான். ஒரு பகுதி ஆயுதத்தை மறைத்து வைத்ததும். இந்தியா மற்றைய இயக்கங்களை இறக்கிய பொழுது மோத முற்பட்டது. இதில் இந்தியா புலிகள் தொடர்பாக இருந்த நம்பிக்கையீனமும், தனக்கு நம்பகமானவர்களை நாட்டில் இறக்கியது. அதே நேரம் இலங்கையில் தொடர்ந்து இருக்க புலிகளுடன் மோதும் அவசியத்தையும் உணர்ந்தது. இதுவே புலிகள் தொடர்பாக இந்தியாவின் நிலையாகவிருந்தது.

இலங்கையில் இந்தியப்படையின் இருப்பை சிங்கள மக்கள் எதிர்த்த அதே நேரம் ஜே-வி-பியின் வளர்ச்சி இந்தியாவின் வருகையுடன் வேகங் கொண்டது. இந் நிலைமையைத் தொடர்ந்து இலங்கையரசு ஆட்டம் காணும் நிலைமை ஏற்பட்டது. இதை ஈடு கொடுக்கவே பிரேமதசா இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்ததுடன் இந்தியா வெளியேற வேண்டும் எனக் கோரினார். பிரேமதாசா அரசு மேற்கத்தைய தரகுத்தன்மையை கொண்டிருந்தமையும், புலிகளும் அதே தன்மையை கொண்டிருந்தமையும் இருவரும் ஏகாதிபத்தியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பிரேமதாசாவுடன் இணைந்து ஆயுதம் வாங்கியதும், இந்தியாவை வெளியேற்றியதுமாகும். இவ் வெளியேற்றம் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு அவசியமானது.

இவர்களுக்கிடையிலான மோதல்களை லெனின் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கு எதிரான தேசிய விடுதலைப்போராட்டத்தை இன்னுமொரு பெரிய வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கத்திற்காக குறிப்பிடத்தக்க சூழ்நிலையில் பயன்படுத்தி கொள்ளும். இக்கருத்து தொடர்பாக சமர் வெளியீடான அரசியல் அனாதைகளின் ஜனநாயகப்படுகொலை என்ற புத்தகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு புரட்சியை தடுக்க ஒரு புரட்சிகரமான சக்திகள் வளரவிடாமல் தடுக்க, தென்னாசியாவின் ஸ்திரதன்மையை உடைக்க, குழுக்களுக்கிடையிலான மோதல்களை ஏற்படுத்தியதும், இலங்கையுடன் மோதலை ஏற்படுத்தியதும் ஏகாதிபத்திய வழிமுறைகளே. இதே வகையில் இந்தியா பங்களாதேச விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்தியது. இது தொடர்பாக மேலும் விளக்கத்திற்கு மேற்குறிப்பிட்ட சமர் வெளியீட்டைப் பார்க்கவும்.

இஸ்ரேல், அமெரிக்காவுடன் தங்கள் நலன் பாதிக்கப்படும் போது மோதுவார்கள் என்ற விடயம் தொடர்பாகவும், முரண்பாடுகள் தொடர்பாகவும் ஆராய முற்படுவோம். ஒத்தவர்க்கத்திற்கிடையில் முரண்பாடுகள் உண்டு. அந்த வகையில் புலிகள் இஸ்ரேலுக்குமிடையில் முரண்பாடுகள் உண்டு. சுரண்டல் தொடர்பாகவிருக்கும் இம்முரண்பாடு நட்பு முரண்பாடாகவே இருக்கும். சிலவேளைகளில் இம் மோதல் ஏற்படலாம், ஏற்பட்டாலும் மீண்டும் ஜக்கியப்படுவார்கள். எப்போதும் சுரண்டலுக்கு ஆதரவாகவும் சுரண்டப்படுபவர்களுக்கு எதிராகவுமிருப்பார்கள். ஓடுக்கப்பட்டவர்கள் எழும்பொழுது ஜக்கியப்படுவார்கள். இன்று ஜப்பான், அமெரிக்கா, மேற்கு நாடுகளுக்கிடையில் உள்ள முரண்பாடுகள், பகை முரண்பாடாகத் தோன்றுவதும், சிலவேளை யுத்தம் கூட நடக்கலாம். ஆனால் எப்போதும் சுரண்டல் நடத்துவதில் ஜக்கியப்படுவார்கள். சதாம் ஹ{சையின் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது, பின் அமெரிக்காவுடன் மோதியதும் சுரண்டல் தொடர்பான முரண்பாடே. அதே நேரம் அமெரிக்கா சாதாம் ஹ{சையினை அகற்றி நீண்டகாலத்தில் ஏற்படும் முஸ்ஸிம் அரசு ஆபத்தானது என கருதியதுமே சாதாம் ஹீசையினை மீண்டும் ஆட்சியில் இருக்க அனுமதித்தது. சாதாம் இருப்பதால் இன்று இருக்கும் அமெரிக்கா எதிர்ப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்ற ஒரே காரணம் மட்டுமே. எனவே சதாமின் வர்க்கத்தன்மையை வரையறுக்க முடியாது என கூறமுடியாது. உலகில் எழும் யுத்தங்கள் அனைத்தும் சுரண்டல் தொடர்பானவையே. புலிகளுக்கு வர்க்கத் தன்மையுண்டு. அவர்கள் சுரண்டலை நடத்துவதில் தீவிரமாகவும் ஏகாதிபத்தியத்தின் பக்கம் சார்ந்தும் உள்ளனர்.

உங்கள் கடிதத்தில் புலிகளை ஒரு வர்க்கத்திற்குள் வரையறுப்பது எப்படி? என கேட்டுள்ளீர்கள். அப்படியாயின் புலிகளுக்கு வர்க்கத்தன்மை என்ன என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்கள். எனவே புலிகள் வர்க்கத்தன்மை என்ன என்பதே எம் முன் உள்ள கேள்வியாக இருக்க வேண்டும். அதை விடுத்து புலிகள் வர்க்கம் அற்றவர்கள் என ஏன் விவாதிக்க வேண்டும்? புலிகளின் வர்க்கத்தன்மை என்ன என்பதை அறிய தேசிய சக்திகள் தொடர்பான கட்டுரையைப் பார்க்கவும்.

 

 

 

சமர் இதழ் ஒன்றில் வெளிவந்த 3வது நிலைக்கான கோரிக்கை மிகவும் தேவையானதே. தற்போதைய போராட்ட சூழ்நிலையில், ஜனநாயக மறுப்புகளுக்கு மத்தியில், அமைப்பு ரீதியான இயக்கங்கள் தடைசெய்யப்பட்ட நிலையில் எம் மண்ணில் 3வது நிலை சாத்தியமற்றதே. எனவே புலம்பெயர்ந்தோர் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து, பொது அரசியல் வழிமுறை ஒன்றினை சரியான விவாதங்களுக்கூடாக கண்டுபிடித்தல் இன்றைய காலகட்டத்தின் முன் உள்ள முக்கியமான தேவையாகும். அத்துடன் இம் முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து ஓரு அமைப்பு ரீதியில் ஸ்தாபன மயப்படுத்தலுக்குரிய வேலைத்திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தலும் அவசியமாகிறது.

சரியான விவாதங்களுக்கூடாக நேச அணிகள், முற்போக்கு சக்திகள் எவை எவையென இனங் காணப்படும் அதே வேளை பிற்போக்கு சக்திகளை அம்பலப்படுத்துவதும் மிக முக்கியமானதாகிறது. இதன் பொழுது புலிகள் மீதான பார்வை தவிர்க்க இயலாததாகும்.

ஒரு சிலர் தனிய ஒரு சில நிகழ்வுகளை மாத்திரம் கருத்தில் கொண்டு (நின்று போராடுதல், தற்காப்பு யுத்தம் புரிதல் போன்ற சில நிகழ்வுகள்) புலியினர் ஒரு நேசவணி என்றும், அவர்கள் தேசியப்போட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் எனவும், அவர்கள் ஒரு தேசியசக்திகள் என்றும் முடிவுக்கு வருகிறார்கள், ஒரு சில நிகழ்வுகளை மாத்திரம் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவானது ஒரு ஆரோக்கியமான முடிவாக இருக்காது. முற்றுமுழுதான ஒரு பரந்துபட்ட விவாதத்தின் பின்னரே(சமூகப்பின்னணி, போராட்டத்தின் அரசியல் அடிப்படை, போராட்ட விளைவுகளும், அதனது தொலைநோக்கு பக்க விளைவுகளும் போன்ற அடிப்படையில் ஒரு பரந்துபட்ட முழுவிவாதத்தின் பின்னரே ஒரு ஆரோக்கியமான முடிவு கிட்டும் என்பது எனது அபிப்பிராயயமாகும்.

எனவே சமர் இது போன்ற ஒரு முழுமையான விவாதங்களுக்கு ஒரு மேடையாக அமையும் என்றும், புலம்பெயந்தோர் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளை அணிதிரட்டி ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்வைக்க தன்னை முழுமையாக ஈ;டுபடுத்தும் எனவும் எதிர்பார்க்கிறேன்.

 

 

 

சமர் சஞ்சிகை மக்களுக்கு வழிகாட்டும் வகையில் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றது. சமர் தான் சொன்ன கருத்துக்களை நடைமுறையில் தனது சொந்த வாழ்கையில் நடத்தப் போராடி வருகிறது. குறிப்பாக எம் மண்ணில் இன்று காணப்படும் முரண்பாட்டின் தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலைகளை எதிர்ப்பதில் சமர் முன்னிலை வகிக்கின்றது.

இந்த வகையில் நாவலன் ஆகிய(கெலன்) நீர் சமர் எடுத்துக்கொண்ட வேலைமுறைக்கு மாறாக சமூத்தில் உள்ள முரண்பாட்டை தீர்த்துக்கொள்ளும் முறையில் ஒரு கொலையை செய்துள்ளீர், இக்கொலையை தொடர்ந்து சமரிலிருந்து உம்மை வெளியேற்றுவது தவிர்க்க முடியாதகவுள்ளது. நீர் இது தொடர்பாக சமரின் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்க நீர் உட்பட்ட கூட்டத்தை கூட்டக் கோரினீர். அதுவும் நிராகரிக்கப்படுகின்றது. இவைகள் தொடர்பான விளக்கம் கீழ் உள்ளது.

உமக்கும் உமது மனைவிக்கும் இடையில் உருவான குழந்தையை நீர் உமது பொருளாதாரப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனைக்காக கொன்றுள்ளீர். குறிப்பிட்ட இப்பிரச்சனை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள பிரதான பிரச்சனை. இதை தீர்த்துக்கொள்ளும் வகையில் சமர் செயற்பட்டு வருகிறது. இக்குறிப்பிட்ட பிரச்சனை மூன்றாம் உலக நாடுகளில் 90 வீதமானோருக்கும், மேற்கத்தைய நாடுகளில் 60 வீதத்திற்க்கும் மேற்பட்டோருக்கும் உள்ள பிரச்சனை. இப்பிரச்சனைக்கு தீர்வாக குழந்தையை கொல்வதென்பது அடிப்படையில் புலிகள் தனக்கு எதிரானவர்களை கொல்வதற்கு ஒத்ததே. புலிகள் எதற்காக கொல்லுகிறார்கள் எனப் பார்ப்போமாயின், தனது வீடு வசதியான பொருளாதாரத்தை காப்பாற்றவே. இதே முடிவை நீரும் உமது வாழ்க்கையில் இன்று உள்ள நிலையைப பேண உமது குழந்தையை கொன்றுள்ளீர். உமது இன்றைய நிலையைக் காப்பாற்ற போராடுவது மட்டுமே சமர் எடுத்துக்கொண்ட முடிவு. இதற்கப்பால் கொலை செய்வதல்ல. இது தொடர்பாக விவாதத்தை நடத்திய பொழுது விதண்டாவாதமாகவும் சம்மந்தா சம்மந்தமில்லாத விடயங்களைக் கதைத்ததுடன் மட்டுமின்றி விவாதத்தின் ஊடாக ஒரு முடிவை வந்தடைய தயார் நிலையில் இருக்கவில்லை. இவ் விவாதம் தொடர்பாக உம்மை சந்தித்துக் கதைக்க வேண்டும் என தொலைபேசியில் கதைத்த பொழுது, நீர் கேட்டீர் சிவப்பு பெயின்டா அடித்தனி என்று இது எதைக்காட்டுகிறது. உமது மனைவியுடன் இரு முறை கதைக்க முயன்ற பொழுது நீர் சந்திக்க விடாமல் செய்ததுடன் நீ குழப்பிப்போடுவாய் என சொல்லி தட்டிக்கழித்தீர். நெருக்கடி முற்றிய பொழுது சந்திக்க ஏற்பாடு செய்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நீர் கூட்ட கோரிய சமர் குழுவில் உம்மை வைத்து விவாதிக்க முடியாது. போராட்டத்தில் துரோகம் செய்தோர், காட்டிக்கொடுத்தோர், கொலை செய்தோர்----- இவை போன்றோர் வந்து எம்மையும் கூட்டிவைத்து விவாதித்து பெரும்பான்மைப்படி செய்வோம் எனக் கோரமுடியாது. ஏனெனில் இந் நடவடிக்கை என்பது குறித்த சம்பவத்தை ஒரு கருத்து முரண்பாடக அங்கீகரித்து குறித்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்டதாகவே இருக்கும். உமது குழந்தையின் கொலை ஒரு கருத்து முரண்பாடு அல்ல. இது ஒரு கொலை. இக் கொலையை கருத்து முரண்பாடாகப் பார்த்தால் மட்டுமே விவாதம் என்ற வகையில் விவாதிக்க முடியும். இது நாம் எடுத்துக்கொண்ட குறித்த பணிக்கு எதிரான அப்பட்டமான கொலை. குறித்த கொலையை செய்யும் முன் நாம் உம்முடன் விவாதித்தோம். குறித்த கொலையை செய்வதா, வேண்டாமா என்று(அப்படி விவாதிப்பதே மோசமானது) சமரரைக் கூட்டி பெரும்பான்மைப்படி செய்திருக்கலாம் அல்லவா? நாம் தனித்தனியாக கதைத்தபோது செய்ய வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலிறுத்தினோம்.

உலகில் உருவாகும் பிரச்சனைகள் அனைத்தும் சமூகத்தில் உள்ள முரண்பாட்டின் தொடர்ச்சியே. இவை அனைத்தும் வர்க்கத்தன்மைக்க்கு உட்பட்டதே. இம் முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள வர்க்கப் போராட்டம் மட்டுமே தீர்வாகப்படலாமே ஒழிய, ஒரு கொலையை செய்வதன் ஊடாக அல்ல என்பதை சுட்டிக்காட்டுவதுடன் நீர் குறித்த முரண்பாட்டை வர்க்கப் போராட்டத்திற்கூடாக தீர்க்காமல் இடைப்பட்ட ஒரு தீர்வாக ஒரு கொலையை செய்து சமரசவாதியாகவும், சாதாரண மனிதனை விட மோசமான ஒரு நிலைக்கு சென்றதோடு சமரின் குறித்த பணியை நிராகரித்தமையாலும், சமரிலிருந்து உங்களை வெளியேற்றுகிறோம்.

ஆசிரியர் குழு

குறிப்பு: இது தொடர்பாக கருத்துக்களையும் விமர்சனங்களையும் சமர் வரவேற்கின்றது.

 

 

சென்ற இதழ் தொடர்ச்சி......

 

அடைந்த வெற்றிகள் ரசிய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ரசிய மக்கள் ஸ்டாலின் தலைமையின் கீழ் சாதித்த மாபெரும் சாதனைகளாகும் என்பது எல்லோரும் அறிந்ததே. ஏவுகணை உற்பத்திக்கான அஸ்திவாரங்கள் ஸ்டாலின் காலத்தில் போடப்பட்டவை. இந்த முக்கிய வரலாற்று உண்மைகளை எப்படி அழிக்க முடியும்? எல்லாப் பெருமைகளும் குருச்சேவுக்கே எப்படி சேரும்?

லெலினியம் காலாவதியாகிவிட்டது என்று கூறும் குருசேவ்வை மார்க்சிய-லெனிய அடிப்படைக் கோட்பாடுகளைத் திரித்துப் புரட்டிய குருசேவ்வை அவர்கள் மார்க்சிய-லெனியக் கொள்கையை ஆக்கபூர்வமாக வளர்த்துச் செழுமைபடுத்திய புத்திக்கூர்மையுள்ள முன்மாதிரி என்று புகழ்கிறார்கள்.

ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற போர்வையில் செய்வது யாவும், லெனின் மிகச் சரியாகச் சொன்னதைப் போல சாதாரண விசயங்களைப் பற்றி மிகச் சாதாரண கண்ணோட்டங்களைக் கொண்டிருந்த பழைய தலைவர்களுக்குப் பதிலாக, இயற்க்கைக்கு அப்பாற்பட்டு முட்டாள்தனமாகவும் குழப்பமாகவும் பேசுகின்ற புதிய தலைவர்களை முன்வைக்கின்ற செயலேயாகும்.

ரசிய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பகிரங்கக் கடிதம் மார்க்சிய லெனியத்தை பின்பற்றும் எங்கள் நிலைப்பாட்டின் மீது அவதூறு செய்கிறது. தனிநபர் வழிபாட்டுக் காலத்தில் திகழ்ந்து வந்த சித்தாந்தம் மற்றும் நெறிமுறைகள் தலைமைக்கான வடிவங்கள் மற்றும் முறைகள் ஆகிய, நடைமுறையில் இருந்தவற்றை பிற கட்சிகளின் மீது திணிக்க முயல்வதாக எங்கள் மீது அவதூறு கூறுகிறது. இந்தக் கூற்று தனிநபர் வழிபாட்டை எதிர்த்து போராடுவதன் முட்டாள் தனத்தை மீண்டும் அம்பலப்படுத்துகிறது.

ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களின் கூற்றுப்படி அக்டோபர் புரட்சி ரசியாவில் முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டிய பிறகு அங்கு ஒரு தனிநபர் வழிபாட்டுக்காலம் தொடங்கியது. அந்தக் காலத்தின் சமூக அமைப்பு முறையும் சித்தாந்தம் மற்றும் நெறிமுறைகளும் சோசலிசத்துக்கானவை அல்ல என்று தோன்றும். அந்த காலத்தில் ரசிய உழைக்கும் மக்கள் ஒரு கனத்த சுமையினால் அழுந்தப்பட்டு கிடந்தார்கள். அங்கே மக்களுடைய வாழ்க்கையை நச்சுப்படுத்திய நிச்சியமின்மையும், சந்தேகமும், அச்சம் நிறைந்த சூழலும் நிலவியது. இவை ரசிய சமுதாய வளர்ச்சியை தடைசெய்தன.

1963 ஜுலை 19-ல் ரசிய ஹங்கேரி நட்புறவு பேரணியில் குருச்சேவ் ஆற்றிய உரையில் ஸ்டாலின் ஒரு கோடரியை கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார் என்று கூறி ஸ்டாலினுடைய பயங்கர ஆட்சி பற்றிப் பேசினார். அந்த காலத்தில் சமூக நிலைமைகளை கீழ் கண்டவாறு வர்ணித்தார். அந்தகாலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் பற்றி நிச்சயமற்றிருந்தான்.

ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் வர்ணிப்புப்படி தனிநபர் வழிபாட்டுக்காலத்தில் சமுதாயம் நிலப்பிரபுத்துவம் அல்லது முதலாளித்துவக் காலத்திலிருந்ததை விட மிகவும் வெறுக்கத்தக்கதாகவும் காட்டுமிராண்டிதனமாகவும் இருந்தது.

ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் கூற்றுப்படி அக்டோபர் புரட்சியின் விளைவாக நிறுவப்பட்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும், சோசலிச அமைப்பு முறையும் உழைக்கும் மக்களின் மீதான ஒடுக்கு முறையை நீக்குவதற்கோ அல்லது ரசிய சமுதாயத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கோ பல பத்தாண்டுகளாகத் தவறிவிட்டன. ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது பேராயம் தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தை நிறைவேற்றிய பின்புதான் உழைக்கும் மக்களின் மீது இருந்த கனத்த சுமை அகற்றப்பட்டது. ரசிய சமுதாயத்தின் வளர்ச்சி திடீரென்று துரிதப்படுத்தப்பட்டது.

குருச்சேவ் சொன்னார் ஆ! ஸ்டாலின் மட்டும் பத்து வருடங்களுக்கு முன்பே செத்திருந்தால்! எல்லோருக்கும் தெரிந்தது போல் ஸ்டாலின் 1953-ல் இறந்தார். பத்து வருடங்களுக்கு முன்பு என்பது 1943 ஆக இருந்திருக்கும். அந்த ஆண்டுதான் ரசிய நாடு மாபெரும் தேசபக்த யுத்தத்தில் எதிராக தாக்குதல் தொடங்கியிருந்தது. அந்தக் காலத்தில் ஸ்டாலின் இறந்து போக வேண்டுமென்று விரும்புவது யார்? ஹிட்லர்!

சர்வதேச கம்யூனிச இயக்க வரலாற்றில் மார்க்கிய-லெனியத்தின் எதிரிகள் பாட்டாளி வர்க்க தலைவர்களைக் கொடியவர்களாகக் காட்டுவதும் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது போன்ற முழக்கங்களைப் பயன்படுத்தி பாட்டாளிவர்க்க இலட்சியத்ற்க்கு குழிபறிப்பதும் புதிய விசயமல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே மக்கள் கண்டு கொண்ட ஒரு அசிங்கமான தந்திரமே இது.

முதலாவது அகிலத்தின் காலகட்டத்தில் சதிகாரன் பக்கூனின் மார்க்சை வசைபாட இத்தகைய மொழியைத்தான் பயன் படுத்தினான். முதலில் மார்க்சின் நம்பிக்கையைப் பெறுவதற்கு புழுவைப் போல நெளிந்து நான் உங்கள் சீடன் அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று எழுதினான். பிறகு முதலாவது அகிலத்தில் தலைமையைக் கைப்பற்றுவதற்கான தனது சதியில் தோல்வியுற்ற அவன் மார்க்சை வசை பாடினான். ஒரு ஜெர்மனியனும் யூதனுமான அவன் அடியிருந்து முடிவரை ஒரு ஏதேச்சதிகாரி மற்றும் ஒரு சர்வாதிகாரி என்று சொன்னான்.

இரண்டாவது அகிலத்தின் காலகட்டத்தில் லெனினை வசைபாட ஓடுகாலி காவுஸ்கி இதே மாதிரி மொழியைத்தான் பயன்படுத்தினான். ஒரு அரசாங்க மதத்தின் தரத்துக்கு மட்டுமல்ல, மாறக ஒரு மத்தியக் கால அல்லது கிழக்கத்திய(மதத்தின்) மூடநம்பிக்கையின் தரத்திற்கு மார்க்சியத்தைக் குறுக்கி விட்டது ஏக கடவுள் கொள்கையினரின் கடவுள் என்று லெனினை பழித்துக் கூறினான்.

மூன்றாவது அகிலத்தின் காலக்கட்டத்தில் ஸ்டாலினை வசைபாட ஓடுகாலி டிராட்ஸ்கி இதே மாதிரி மொழியைதான் பயன்படுத்தினான். ஸ்டாலினை ஒரு கொடுங்கோலன் என்றும் ஸ்டாலினிய அதிகார வர்க்கம் தலைவர்களுக்கு தெய்வீக குணாம்சங்களைச் சூட்டும் ஒரு இழிவான தலைவர் வழிபாட்டை உருவாக்கிவிட்டது என்று கூறினான்.

நவீன திரிபுவாத டிட்டோ கும்பலும் ஸ்டாலினை வசைபாட இதே மொழியை பயன்படுத்துகிறது. ஸ்டாலின் முற்றுமுழுக்க தனிநபர் அதிகாரத்தைக் கொண்ட ஒரு அமைப்பு முறையில் சர்வாதிகாரியாக இருந்தார் என்று கூறுகிறது.

இவ்வாறு ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையினால் எழுப்பப்பட்டடுள்ள தனிநபர் வழிபாட்டை எதிர்க்கும் போக்கும் பாட்டாளி வர்க்க தலைவர்களை தாக்கவும், பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கத்துக்கு குழிபறிக்கவும் பக்கூனின், காவுஸ்கி, டிராஸ்கி மற்றும் டிட்டோ போன்ற அனைவரும் பயன்படுத்தியதுதான் என்பது தெனிவாகிறது.

சந்தர்ப்பவாதிகள் சர்வதேச கம்யூனிஸ்ச இயக்க வரலாற்றில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் அல்லது லெனினை வசைபாடுவதின் மூலம் அவர்களை மறுதலிக்க முடியவில்லை. குருச்சோவினாலும் வசைபாடுவதன் மூலம் ஸ்டாலினை மறுதலிக்க முடியவில்லை.

லெனின் சுட்டிக்காட்டியதைப் போல .உயர்ந்த பதவி இழிவுபடுத்தலின் வெற்றியை உறுதிபடுத்த முடியாது.

லெனின் அருங்காட்சியத்திலிருந்து ஸ்டாலினுடைய உடலை அப்புறப்படுத்த குருச்சேவ் தனது உயர்ந்த பதவியைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் அவர் எவ்வளவுதான் முயன்றாலும் உலகெங்குமுள்ள மக்கள் மனதிலிருந்தும் ஸ்டாலின் மீதான மாபெரும் பற்றுதலை நீக்குவதில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.

மார்க்சிய-லெனியத்தை ஒரு வழியிலோ அல்லது இன்னொரு வழியிலோ திரித்துப் புரட்டுவதற்கு குருச்சேவ் தன்னுடைய உயர்ந்த பதவியை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அவர் என்னதான் முயன்றாலும் உலகெங்குமுள்ள மார்க்சிய-லெனியயவாதிகளால் பாதுகாக்கப்பட்ட, ஸ்டாலினால் பாதுகாக்கப்பட்ட மார்க்சிய லெனினியத்தை தூக்கியெறிவதில் ஒரு போதும் வெற்றியடைய முடியாது.

நாங்கள் தோழர் குருச்சேவுக்கு அக்கறையுடன் ஒரு அறிவுரை கூற விரும்புகிறோம். நீங்கள் உங்கள் தவறுகளை உணர்ந்துகொண்டு தவறான பாதையிலிருந்து மார்க்சிய-லெனியப் பாதைக்கு திரும்பி வருவீர்கள் என்று நம்புகிறோம்.

மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரது மாபெரும் புரட்சிகர போதனைகள் வாழ்க

 

 

 

தேசவிடுதலைப் போராட்டத்தின் இன்றைய நிலைமை மீண்டும் மீண்டும் எம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. அதன் தொடர்ச்சியாக 3வது பாதை ஒன்றை அமைக்கும் தேவை எம்மெல்லோர் முன்னுள்ளது. இதன் தேவையுடன் எழுந்ததே தேசியசக்திகள் பற்றிய விவாதமும். இவ் விவாதத்தின் ஆரம்பத்தில் புலிகளின் வர்க்க மதிப்பீட்டை ஆராய முற்பட்டதுடன், அதன் தொடர்ச்சியாக இவ் விவாதம் 3வது பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் பல விடயங்களை தொட்டு நிற்கிறது. இவ் விவாதத்தின் தொடர்ச்சியும், ஆரோக்கியமான போக்கும் ஒரு போராட்டத்தின் முன் நிபந்தனையாகவுள்ளது.

 

தேசிய சக்திகள் தொடர்பான விவாதத்தில் மனிதம், தூண்டில், உயிர்ப்பு, சமர் என்பன தங்கள் கருத்துக்களை கூற முனைந்துள்ளனர். இக் கருத்து விவாதங்களை இருவகையாக பிரிக்கலாம்.

(1) சமர், தூண்டில், உயிர்ப்பு விவாதங்கள் ஆரோக்கியமான வகையில் இணைக்கப்போக்கை நோக்கிய வகையில் அமைந்துள்ளது.

(2) மனிதம் சஞ்சிகையின் விவாதம் இதற்கு எதிர்மறையாக அடிப்படையையே திரிபுவாதத்துக்குள் இட்டுச் செல்லும் வகையில் தம் விவாதத்தை முன்னெடுத்தனர்.

நாம் இச் சஞ்சிகைகளில் வெளிவந்த விவாதத்தின் தொடர்ச்சியாக விவாதிக்க முற்படுகிறோம். அவ் வகையில் மனிதம் இதழ் 15 இல் வெளிவந்த புலிகள் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகளுமல்ல என்ற கட்டுரையையும், மனிதம் இதழ் 16 இல் உயிர்ப்பு இதழ் பற்றிய விமர்சனத்தை முதலிலும், அதன் பின் தூண்டில் இதழ்கள் 41-48-49 இல் வெளிவந்த புலிகள் தேசிய சக்திகள் என்ற கட்டுரையை அடுத்ததாகவும், உயிர்ப்பு சஞ்சிகையில் தேசியசக்திகள் பற்றி சில பிரச்சனைகள் என்ற கட்டுரையை இறுதியாகவும் விமர்சனத்திற்குள்ளாக்குகின்றோம்.

மனிதம் 15 இல் தேசிய சக்திகள் தொடர்பான விவாதத்தின் மீது விமர்சனம்

"மனிதம் இதழ் 15 இல் விடுதலைப்புலிகள் தேசிய சக்திகளா? இல்லையா? என்பது பற்றி இப்போது புரட்சிகரமான சக்திகள் மத்தியில் ஒரு காரசாரமான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது? இந்த விவாதத்தின் மூலம் நாம் அடையப்போகும் பயன் என்ன? என்று விளங்கவில்லை. எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய உண்மைகளை கடினமாக சொற்பதங்களை பாவிப்பதன் மூலம் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி எந்த முடிவுக்கும் வராமல் தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெறுகின்றன. "

இப்படியாக மனிதம் சஞ்சிகை தனது கட்டுரையை தொடங்குகின்றது. இத் தொடக்கத்தில் புரட்சிகரமான சக்திகள் மத்தியில் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? ஒன்று இவர்கள் புரட்சிகரமானவர்கள் என்று ஏற்றுக் கொள்கிறார்களா? அப்படியாயின் பிந்திய மனிதத்தின் விவாதம் எதற்காக? அதாவது ஏன் இந்த விவாதம் நடைபெறுகிறது? என்ற கேள்வியிலிருந்து இவர்கள் புரட்சிகரமான சக்திகள் என்னும் பதத்தை வெறும் கேலியாக பயன்படுத்தியுள்ளதைப் பார்க்க முடியும். ஏன் இந்த விவாதம் நடைபெறுகிறது என்ற மனிதத்தின் கேள்வியிலிருந்து விவாதத்தின் தேவையை புரிந்து கொள்ளாமை புலனாகிறது. அப்படி புரிந்து கொள்ளாமலே மீண்டும் தங்கள் கருத்தை சொல்ல நினைப்பது விவாதத்திற்கு தயார் இல்லாமையே, தாங்கள் நினைப்பதை திணிப்பதற்காகவே. இதை உறுதி செய்யும் வகையில், இவ் விவாதத்தின் மூலம் நாம் அடைய இருக்கும் பயன் என்னவென்று விளங்கவில்லை எனச் சொல்லி தங்கள் மேதாவிலாசத்தை காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய உண்மைகளை கடினமான சொற்பதங்களைப் பாவிப்பதன் மூலம் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி எந்த முடிவுக்கும் வராமல் தொடர்ச்சியாக விவாதிக்க.... என்று குறிப்பிடும் கரிகாலன், இதழ் 16 இல் உயிர்ப்பு மீதான விமர்சனத்தில் கடினமான சொற்பதங்களை தானே பாவித்துள்ளார். அதை எளிமையாக சொல்ல முடியாமல் போய் விட்ட அவர், இதழ் 15 இல் கடுமை, இலகு பற்றி வாதிட முற்பட்டதேன்? கடுமையான சொற்பதங்களை பாவிப்பதன் மூலம் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி எந்த முடிவுக்கும் வராமல் என்பதில் கடினமான சொற்பதம் என்பது, ஒரு கட்டுரையுடன் தேவையோடு அமைந்ததே. கிராமப்புறத்தில் மக்களுடனும், நகர்ப்புறத்தில் மக்களுடனும் வேலை செய்யும் போது, எப்படி ஒரு கட்சிக்குள் விவாதிக்கும் தன்மையில் கருத்தை வைக்காமல், எளிமைப்படுத்தி, நகர்ப்புறத்துக்கும், கிராமப்புறத்துக்கும் வேறுபடுத்தி வைப்பது போன்றே கட்டுரைகளும். இன்று குறித்த இவ் விவாதம் 3-வது அமைப்பை உருவாக்கும் வகையில், வளர்ந்த சிந்திக்கின்றவர்கள் கூடுதலாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்ததே. இதற்கப்பால் எல்லாத்தரப்பட்ட மக்களின் வாசிப்புதிறனுக்கும் அமைய ஒரு கட்டுரையை வரையமுடியுமா? என்பது சந்தேகமே. ஓரு கட்டுரையை விரும்பின் இலகுவாக பலதரப்பட்ட மக்களுக்கு, பகுதி பகுதியாக விரிவுபடுத்த முடியும். தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி எந்த முடிவுக்கும் வராமல் என்று மனிதம் சொல்வதால் சஞ்சிகை வெளியிட்டவர்களையும், கட்டுரையாளர்களையும் குழப்பியுள்ளனர், என்று தாங்கள் சொல்ல வருவது புத்திஜீவித்தனத்தின் வெளிப்பாடே. அவர்கள் சொல்ல வருவதனூடாக தங்களை மேதாவிகளாகவும், இக் கருத்தை சொல்ல வந்தவர்கள், சமூகவியக்கத்தில் சாராத கற்பனைவாதிகளாக பார்க்கிறார்கள். ஒரு கருத்தை சொல்ல முனைந்தவர்கள், குழம்பிப்போயுள்ளார்கள் என சொல்ல எந்த ஆதாரத்தை முன் வைக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை எழுதுவதெனின் அதற்கு ஆதாரம் மிக அவசியம். அதுவும் சமூகவிஞ்ஞானத்துடன் பொருந்துவதாக இருக்க வேண்டும். மற்றவர்களையும் குழப்பி என்று சொல்வதனூடாக தாங்கள் குழம்பியுள்ளீர்களா? என சிந்திக்கவே தூண்டுகிறது. எந்த முடிவுக்கும் வராமல் என தாங்கள் கூறுவதனூடாக, தங்களினால் திணிக்கப்பட்ட கருத்து, தாமும் குழம்பியவர்களால் வெளியிட்ட கருத்து, மற்றவர்களை குழப்பியதனூடாக திணிக்கப்பட்ட கருத்து (தங்களது) கேள்விக்குள்ளாகிறது. இதை உங்கள் ஆரம்ப விவாதமே சுட்டிக் காட்டி நிற்கிறது.

"குறிப்பிட்ட பிரச்சனையை இயங்கியல் அடிப்படையில் ஆராய வேண்டும். மாறாக ஏற்கனவே இருக்கும் முடிவுக்கு அல்லது வழிக்கு பொருந்தி வருவதாக குறிப்பிட்டு காட்ட முனையக்கூடாது" என்ற தங்கள் கருத்தில் ஏற்கனவே இருக்கும் முடிவு அல்லது விதிக்கு பொருந்துவதாக இயங்கியல் அடிப்படைக்கு மாறுபட்டதாக சஞ்சிகைகள் ஆராய்ந்ததாக தாங்கள் சொல்வதை இயங்கியலுடன் தாங்கள் எங்கே இக் கட்டுரையில் ஆராய்ந்துள்ளீர்கள்? வர்க்கத்தன்மையற்ற புலிகள் குழு என்ற கருத்தை இயங்கியலுடன் எங்கே ஆராய்துள்ளீர்கள். முடிவு விதிகள் என தாங்கள் கூறுவது, அடிப்படை மார்க்சியத்தை பிழையென தங்களால் காட்ட முடியவில்லை. தங்கள் விவாதம் மூலம் தான் இயங்கியலுக்கு மாறாக ஒற்றைவரிகளில் எந்த ஆய்வு முறையையும், ஆதாரங்களையும் சொல்லாமல் வைத்துள்ளீர்கள்.

மார்க்ஸ் தொடக்கம் மாவோ வரையிலான மார்க்சிய அறிஞர்கள் சொன்ன கருத்து அல்லது முடிவை வைத்தே இப்பிரச்சனைக்கு முடிவு காண முற்பட்டதாக தாங்களே சொல்லி அவர்களது கருத்தை நிராகரித்துள்ளீர்கள். நாம் திட்டவட்டமாக சொல்கிறோம் மார்க்சிய அறிஞர்கள் வைத்த அடிப்படை மார்க்சியத்தில் இருந்தே நாம் சமூகத்தை ஆராய்கிறோம். அது ஒன்றே சமூகத்தை சமூக விஞ்ஞானமாக ஆராய்ந்துள்ளது. அதிலிருந்து மார்க்சிற்கு பின்னைய லெனின் (70ஆண்டுகளின் பின்) மார்க்சிய அடிப்படையை வைத்தே, மார்க்சியத்தை, புரட்சியை ரஷ்சியாவுக்கு ஏற்ற வகையிலும், 100 வருடங்களின் பின் சீனாவில் மாவோவும் மார்க்சிய அடிப்படையிலிருந்தே, மார்க்சியத்தை வளர்த்ததோடு புரட்சியையும் நடாத்தினர். இன்று 140 வருடங்களின் பின் கூட பல நாடுகளில் பல புரட்சி ஸ்தாபனங்கள் பல தளப்பிரதேசங்களை அமைத்து, மார்க்சிச அடிப்படையில் முன்னேறுகிறார்கள். இதற்கு மாறாக மனிதம் மார்க்சியத்தின் அடிப்படையை கேளிவிக்குள்ளாக்கியபடியே, இயங்கியலை மார்க்ஸ் முதல் மாவோ வரை தவறாக கையாண்டனர் என, இயங்கியலுக்கு மாறுபட்ட முறையில் விவாதிக்கின்றனர். தமது கருத்துக்குள்ளேயே முரண்படுகின்றனர். மார்க்சியத்தின் அடிப்படைகள் தவறு எனின் எங்கே? மனிதம் அவைகளை எல்லாம் விமர்சித்து உலகுக்கு வழிகாட்டும் புதிய தத்துவத்தை எடுத்தியம்ப வேண்டும். இப்படிச் செய்யாமல் சும்மா கூறுவது மார்க்சியத்தை திரித்துப் புரட்டுவது தான்.

"தேசிய சக்திகள் ஜக்கிய முன்னணித் தந்திரம் பற்றி மாவோவின் கருத்துக்களை மனத்தில் வைத்துகொண்டு, அவை பற்றி ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டு, புலிகளைப்பற்றி யாராவது மதிப்பிட முனைந்தால் அது தவறு. அது சலிப்பூட்டும் விவாதங்களை மட்டுமே உருவாக்கும்" என மீண்டும் விவாதத்தின் மீது சலிப்பூட்டுவதாக கூறி புலிகள் வர்க்கமற்றவர்கள் என்பதை ஆராய்வுக்கும், விவாதத்துக்கும் அப்பால் திணிப்பை நிகழ்த்த முயற்சிக்கிறார்கள். விவாதிப்பதற்கு தங்கள் கருத்தின் பலம் இன்மையும் விவாதிக்கத் தயார் இன்மையும் இருப்பதால் எதற்காக விவாதிக்கின்றார்கள் என்ற கேள்வி எழுவதுடன், தங்களால் திணிக்கப்பட்ட கருத்துக்கள் விவாதத்துக்கு முன் வருவதால், தங்கள் சக்திகளை கட்டிக்காக்க முடியாமல் போயுள்ள தன்மையையுமே காட்டுகிறது. தூண்டிலுக்கு பதிலளிக்க தேசிய சக்தி, ஜக்கிய முன்னணி பற்றி சொல்லும் மனிதம் கற்பனாவாதத்திற்குள் உட்படுகிறார்கள். புலிகள் பற்றிய மதிப்பீட்டில் ஜக்கிய முன்னணியை மனதில் வைத்துத்தான் தூண்டில் செயற்படுகிறது என சொல்லும் மனிதம் எந்த இயங்கியல் ஆய்வுமுறையை வைத்து முடிவுக்கு வந்தார்கள். தொடர்ச்சியாக தூண்டில் வெளியிட்ட கருத்துக்கள் ஜக்கிய முன்னணியை வைத்துத்தான் வெளியிடுகின்றார்களா? மாவோ கருத்துக்களை உடனடியாக ஒரு வசனத்திற்கு பொருத்துவது தாங்கள் சொல்லுவது போல் இருக்கும் முடிவுக்கு அல்லது விதிக்கு பொருந்தி வருவதாக அமைத்து தூண்டிலுக்கு பொருத்த முனைவதன் நோக்கம் தான் என்ன? யார் விதி அல்லது முடிவுகளை அப்படியே பயன்படுத்துகிறார்கள் என்பதை தாங்களே திரும்பிப் பார்ப்பது நன்று.

"நாம் புலிகளைப்பற்றி மதிப்பிட வேண்டியது அவசியமானதே" என்ற தங்கள் கருத்து "விடுதலைப்புலிகள் தேசிய சக்திகளா? இல்லையா? என்பது பற்றி இப்போது புரட்சிகரமான சக்திகள் மத்தியில் ஒரு காரசாரமான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கு விவாதத்தின் மூலம் நாம் அடையவிருக்கும் பயன் என்ன? என்பது விளங்கவில்லை" என்று தங்கள் கருத்துக்கு முற்றாக மாறுபட்டுள்ளது. குழப்பம் உங்களுடையதே ஒழிய எங்களுடையதல்ல என்பதை தாங்கள் தங்களுடைய கட்டுரைய+டாக சொல்ல வருகிறீர்களா? "கடந்த கால, நிகழ்கால நடவடிக்கையிலிருந்து ஆராய்ந்து சரியான ஒரு முடிவை நாம் முன்வைக்க வேண்டும். அடையப்பெறும் முடிவானது மார்க்சிய மூலவர்கள் கூறிய முடிவுகளுடன் அல்லது கருத்துக்களுடன் பொருந்தி வருகிறதா? இல்லையா? என்பது அல்ல பிரச்சனை" என்ற கருத்தில் தாங்கள் குழம்பியுள்ளீர்கள். மூலவர்களின் முடிவை வைத்தே கருத்தை சொல்வதாக சொல்லி முன்பே நிராகரிக்க முற்படுகிறீர்கள். தொடர்ச்சியாக எழுதும் போது மூலவர்கள் சொன்னது பொருந்தி வருகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். தாங்கள் முதலில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் மார்க்சியம் சரியா? பிழையா? என்பதை. பிழை எனின் ஏன் என்பதைக் கூற வேண்டும். அதை விடுத்து இரண்டையும் குழப்பமுயல்வது ஏன்?

"புலிகள் தரகு முதலாளித்துவ சக்திகளின் நலன்களுக்காக போராடுவதால் அவர்கள் தேசிய சக்திகள் இல்லை என்பது சமர் பத்திரிகையினதும், ஒரு சாராரினதும் வாதமாகும். இப் பிரச்சனைகள் சகலவற்றையும் வர்க்க கட்டமைப்பு வர்க்கப் பார்வை என்று கூறப்படுவதற்குள் உள்ளடக்கி விட்டால்...." என்ற தங்கள் கருத்து திரிபுவாதத்தின் மிகத்தெளிவான பக்கங்கள். உலகில் உருவாகும் அனைத்து பிரச்சனைகளும், கருத்துக்களும் வர்க்கத்தன்மைக்கு உட்பட்டதே. இது அடிப்படை மார்க்சிய விதியாகும். இவ்வடிப்படை மார்க்சியம் பிழையெனின் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ மற்றும் மார்க்சிசத்தின் அறிஞர்கள் வெளியிட்ட கருத்துக்களை மனிதம் எடுத்து விமர்சிப்பது தான் ஒரு விமர்சனத்தின் ஆரோக்கியமான அணுகுமுறையாகும். மனிதத்தின் கருத்துக்கு எதிராக பல வெளியீடுகள் உள்ளது. 2-ம் அகிலத்திற்கும், லெனினுக்கும் இடையில் இது தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது. இதைப்பற்றி ஒரு விமர்சனத்தை முன்வைக்காமல், வர்க்கத்தன்மையில்லை என ஒற்றை வரியில் சொல்வதென்பது, தமது கருத்துக்கே கருத்துப்பலம் இல்லாதது மட்டுமின்றி, இது கடைந்தெடுத்த அடிப்படைத் திரிபுவாதமுமாகும்.

"தெளிவாகவும் உறுதியாகவும் கூற முடியும் புலிகள் எந்த மக்கள் பிரிவினதும் பிரதிநிதிகளல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுமிடத்தில் குறைந்த பட்சம் முதலாளித்துவ ஜனநாயகமாவது இருக்க வேண்டும்" என்ற தங்கள் வாதத்தில் எந்த பிரிவினதும் பிரதிநிதிகளல்ல என்ற விடயத்தை உறுதிசெய்ய முதலாளித்துவ ஜனநாயகமின்மையை ஆதாரத்திற்கு முன்னெடுத்து ஒன்றையொன்று குழப்பியுள்ளீர்கள். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முதலாளித்துவ சக்திகளுக்கு மட்டுமானதே. அங்கே பாட்டாளிகளுக்கோ, முதலாளித்துவ சக்திகளுக்குட்பட்ட மற்ற வர்க்க சக்திகளுக்கோ எந்த ஜனநாயகமும் கிடையாது. இதே முதலாளித்துவம் சில வேளை தனது சக்திக்கே ஜனநாயகத்தை வழங்காது பாசிசத்தை கட்டவிழ்த்துவிடும். குறிப்பாக 3-ம் உலக நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயகம் தோன்றவோ ஆட்சிக்கு வரவோ ஏகாதிபத்தியம் அனுமதிக்காது. இங்கு முதலாளித்துவ சக்திகள் ஏகாதிபத்தியத்துடன் சமரசத்திற்கு செல்வதற்கூடாக, தரகு முதலாளிகளாக மாற்றப்பட்டு மக்களை ஒடுக்குபவர்கள், மற்றொரு பிரிவு பாட்டாளி வர்க்க போராட்ட எழுச்சியின் போது ஆதரிப்பார்கள். புலிகள் முதலாளித்துவ ஜனநாயகத்தை கொடுக்காததால் வர்க்கமில்லை, எந்த மக்களின் பிரதிநிதிகளுமில்லை என்ற வாதத்தினூடாக முதலாளித்துவ ஜனநாயகத்தை கொடுத்தால் மட்டுமே வர்க்கமுண்டு என்று கூறுகிறீர்கள். அப்படியாயின் முதலாளித்துவ ஜனநாயகத்தை கொடுக்காத ஸ்ரீலங்கா அரசு, இந்திய அரசு... போன்ற 3-ம் உலக நாடுகளின் எல்லா வல்லரசுக்களும் வர்க்கத்தன்மையற்றவையா? அப்படித்தான் தங்கள் கருத்து எனின் அது அப்பட்டமான திரிபு தான். அந்த நாட்டு அரசுக்களின் வர்க்கத்தன்மை தொடர்பான விடயம் பிறிதோர் விவாதத்தை நோக்கியது.

அனைத்து வர்க்கங்களும் சில புலிகளின் நலன்களை அடையும் வழிகளுடன் பிணைந்துள்ளது என்ற தங்கள் கருத்தில் புலிகளின் நலன்கள் என எதை குறிக்கின்றீர்கள். தங்கள் கட்டுரையில் எதிலும் புலிகளின் நலன்கள் என எதையும் சுட்டிக்காட்டவில்லை. ஏன்? குறித்த புலிகளின் நலன்கள் என அமையப்போகும் விடயங்கள் அனைத்தும் ஒரு குழுவை மையமாக வைத்தே. அக்குழு யர்ர்.? இங்கு அக்குழு என்பது மொத்த சனத்தொகையில் மிக குறைந்தோரால் பிரதிநிதித்துவம் செய்வதே. அவர்களின் நோக்கு சொத்துக்களை சேர்ப்பது, தமது வாழ்வைப் பாதுகாப்பதுமே. இவர்கள் அதற்காக மற்றவர்களை அடக்கி ஒடுக்கி, சுரண்டி வாழ்வார்கள். இதனால் எழும் போராட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள ஆயுதங்களுக்காகவும், நிதித் தேவைக்காகவும் ஏகாதிபத்தியத்தை சார்ந்திருப்பார்கள். தமது வாழ்வை மையப்படுத்தி ஏகாதிபத்தியத்திற்கு சந்தையை ஏற்படுத்தவும் பக்கத்தில் உள்ள நாடுகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஏகாதிபத்தியத்துடன் சாதகமாக செயற்படவும், இன்னொரு ஏகாதிபத்தியத்தை தனக்கு சாதகமான ஏகாதிபத்தியம் ஒடுக்க பயன்படும் வகையில், ஒரு புரட்சிகர சக்தி வளர்ந்து விடாமல் இருக்கவும் எப்பொழுதும் இக் குழு செயற்படும். இத்தன்மையை இக்கட்டுரையின் பிறிதோரிடத்தில் ஆராய முற்படுகிடுறோம். புலிகளின் நலன்கள் இதுவே . இத்தன்மை தரகு முதாலிளித்துவத்தின் மிகச்சிறந்த குணாம்சமாகும். இந்த வகையில் ஸ்ரீலங்கா அரசை(பிரேமாதாசாவை) சுற்றியும் ஒரு குழுவே இன்று(புலிகள் போல்) செயற்படுகிறது.

"புலிகள் தமது தனித்துவத்தை அங்கீகரிக்கச் சொல்வது 3-ம் உலக நாட்டின் முதலாளித்துவத்தின் போர்க்குணம் அல்ல. அது புலிகள் என்ற அமைப்பின் போர்க்குணத்தையும் ஒரு தேசியத்தின் போர்க்குணத்தையும் போட்டுக் குழப்பிக்கொள்கின்றார்கள்" என எழுதும் மனிதம் குழப்பிக்கொள்கின்றார்கள் என்ற வாதத்தில் ஒரு தேசியத்தின் போhக்குணம் என்பது சமரசத்தை நாடாது என வாதாடுகின்றார்கள். அதிலிருந்து கொண்டு புலிகள் சமரசத்தை (தங்களை அங்கீகரிப்பதனூடாகவே) நாடுவதால், புலிகள் போர்க்குணம்(வர்க்கமற்ற புலிகளை) என குறிப்பிடுகின்றனர். ஒரு தேசியத்தின் போர்க்குணாம்சம் கூட சமரசத்தை நாடும், இது யார் தலைமை தாங்குகின்றார்கள் என்பதைப் பொறுத்தே தங்கியுள்ளது. மனிதம் சஞ்சிகையினர் வர்க்கமற்ற உலகு பற்றிய கனவுகளில் இருந்து முடிவுக்கு வருகிறார்கள். முதலாளித்துவ தேசியத்தின் போர்க்குணமல்ல சமரசத்தை நாடுவது என சொல்ல வருவது முதலாளித்துவ வர்க்கம் ஊசலாட்:டமற்ற ஒரு போர்க்குணமான பிரிவு எனச் சொல்லுவதாகும். தாங்கள்(முதலாளித்துவ சக்திகள்) ஒரு புரட்சியை சமரசமின்றி கொண்டு செல்ல முடியும் என வாதாடுவதற்கே. இவ் விவாதத்தில், தூண்டில் முதலாளித்துவத்தின் சமரசத்தின் பக்கத்தில் புலிகளின் கோரிக்கை அமைவதாக இருந்ததாக வாதாட முற்படுவதில் நாம் முரண்படுகிறோம்.

இது தொடர்பாக விவாதத்தை தேசிய சக்தி பற்றிய தூண்டில் மீதான விமர்சனத்துடன் விவாதிக்கிறோம். தொடர்ச்சியாக மனிதம் சஞ்சிகை விவாதிப்பதை பார்ப்போம். "புலிகள் தமது எந்த இலக்குகளையும் அடையாது என்றும் இராணுவமுறையையே நம்பியிருக்கும் ஒரு அமைப்பாகும்" இக் கருத்து உண்மைக்கு மாறானது. புலிகள் இராணுவ முறையை கையாளுகின்றனர். அதேநேரம் அரசியல் ரீதியில் அதை அடைய முயல்கின்றனர். இது தொடர்பாக பல உதாரணங்களைப் பார்க்க முடியும். இந்திய, இலங்கை அரசுக்களுடனான பேச்சுவார்த்தை, தனிநபர் குழுக்களுடன் பேச்சுவார்த்தை, பத்திரிகைகளில் விடும் அறிக்கைகள், வெளிநாட்டில் செய்யும் பிரச்சாரம்.... இப்படிப் பல, இவை அனைத்தும் இராணுவமுறைக்கு அப்பால் அரசியல் ரீதியில் அணுகப்பட்டவை. இன்னுமொரு பக்கத்தில் இராணுவ வன்முறையை கையாளும், அதாவது அரசியலற்ற குழுக்கள் என மனிதம் கூறுவது போல் பார்ப்போமாயின்: இலங்கை இந்திய அரசுகளும் அனைத்து நடவடிக்கைகளையும் இராணுவ ரீதியில் கையாளுகின்றனர். இங்கு தேர்தல் வெறும் மோசடியே. இராணுவ ஆட்சி நடக்கும் 3-ம் உலக நாடுகளின் அரசுகளும் அப்படியே. அப்படியாயின் இவ்வரசுகளுக்கு அரசியல் இல்லையா? மனிதத்தின் இயங்கியல் போக்கற்ற ஆய்வின் வெளிப்பாடாக எழும், இவ்விவாதம் தாம் நினைப்பதை திணிப்பதற்காக கையாளப்படுகின்றது.

அப்படியாயின் இவர்களின் அரசியல் இலக்கு என்ன? என்ற மனிதத்தின் கேள்விக்கு அவர் பின் எழுதியுள்ளதையே பதிலாக வைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட நலன்களை அடையும் திசையில் நகர்வதை காணமுடியும். அவர்களது சிறந்த இராணுவ நடவடிக்கைகள் மூலம் அந்த இலக்கு யாதெனில் அந்த அமைப்பின் சொந்த நலன்களை அடையும் இலக்கேயாகும். அவர்களது நடவடிக்கையிலிருந்து இரு விடயங்கள் திட்டவட்டமாகத் தெரிகின்றன. தமிழ் மக்களை அடக்கியாளும் உரிமையை அவர்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்களது இராணுவக்கட்டமைப்பு தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். பிறிதோரிடத்தில் புலிகள் எந்த ஏகாதிபத்தியத்தினதோ அன்றி தரகு முதலாளிகளினதோ பிரதிநிதிகள் அல்ல. இதன் அர்த்தம் ஏகாதிபத்திய, முதலாளித்துவ எதிர்ப்பு போராளிகள் புலிகள் என்பதல்ல. புலிகள் ஏகாதிபத்தியத்திடமிருந்து உதவிகளை பெறுவார்கள். அவர்களின் நலன்களுக்கு எதிராகப் போகாமல் கண்டும் காணாதிருப்பார்கள். அவர்களது போராட்டத்தின் இறுதி விளைவு ஏகாதிபத்தியத்திடம் நாட்டை அடகு வைப்பதாக கூட இருக்க முடியும். ஆனால் அவர்கள் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளல்ல என்ற விவாதம் மனிதம் தமது கருத்துக்கு முரணாகவே வாதாடுகிறார்கள். இவ்விவாதத்தில் எங்கேயாவது இயங்கியலுடன் அணுகியுள்ளார்களா எனின் இல்லையென்றே அடித்துக் கூறமுடியும். குறிப்பிட்ட திசைநோக்கி என்பது ஒரு அரசியல், அதற்கென ஒரு இலக்குள்ளது. அதை பின் சுட்டிக்காட்டும் போது அவர்களின் சொந்த நலன்களை அடையவே. சொந்த நலன்கள் என்பது எவை? புலிகள் தம்மை சுற்றியுள்ளவர்களின் சொத்துக்களையும், வசதியான வாழ்க்கையையும்..... காப்பாற்றவே போராடுவதாக இவர்கள் சொல்கின்றனர். நாம் இக் கருத்துடன் உடன்படுகின்றோம். அதே நேரம் இவ்வுடன்பாட்டில் சுட்டிக்காட்ட விரும்புவது, இவ்வகையான தன்மை அடிப்படையில் சுரண்டலே. இத்தன்மை ஒரு குறித்த வர்க்கத்துக்குரிய சிறப்பம்சமாகும். ஒரு முதலாளியை பார்ப்போமாயின்(நிலப்பிரபு தரகு முதலாளி)தொழிலாளர்களை அடக்கியொடுக்கி தேவையேற்படின் கொன்று தானும் தமக்கு சார்ந்தோர்க்காகவும் திட்டமிட்ட ஒழுங்கமைப்பில் (இராணுவரீதியில்) செயற்படும் பண்பை, புலிகளுடன் ஒப்பிட்டு பார்ப்போமாயின் புலிகளுக்கு அரசியல் உண்டு எனப் பார்க்கலாம். மனிதம் கூறுகிறார்கள்: தமிழ்மக்களை அடக்கியாளும் உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இராணுகட்டமைப்பை தொடர்ச்சியாக பேணுவார்கள் என்ற வாதத்தில் இரு விடயமாக இதை பிரித்து பார்க்க முடியாது. அடக்கியாளுவதென்பதில் இராணுவமின்றி சாத்தியமில்லை. இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றானது. தமிழ்மக்களை அடக்கியாளும் உரிமை என்ற விவாதத்தில் ஏன் தமிழ்மக்களை அடக்கியாள வேண்டும்? புலிகளுக்கு என்ன இலாபம்? புலிகள் தாமும் தாம் சார்ந்தோரின் வாழ்வையும் பாதுகாக்கவே மக்களை அடக்கியாளுகின்றனர். தாமும் தாம் சார்ந்தோரின் வாழ்வும் என்பது பொருளாதாரத்தை வசதியான வாழ்க்கையை..... இது சுரண்டலை நடத்தும் எல்லாப் பிரிவினருக்கும் பொதுவானது. இது புலிகள் என்ற அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும், தரகு முதலாளித்துவத்தின் செயற்பாட்டால் ஏற்பட்ட விழைவே. புலிகளின் சிறந்த இராணுவ நடவடிக்கை எனப் பாராட்டுக் கொடுக்கும் மனிதம் இராணுவம் தொடர்பாக இயங்கியலுடன் ஆராய்ந்து அந்தப் பாராட்டைக் கொடுக்கவில்லை. புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் எம் தேசவிடுதலைப் போராட்டத்தில் எப்போதும் சிறப்பாக இருந்ததில்லை. எதிர்பாராத நேரத்திலும். எதிர்பாராத வகையிலும் திட்டமிடாத வகையிலும், குட்டிபூர்சுவா இயக்கமாக ஆரம்பத்திலிருந்தபோது செய்த நடவடிக்கைகளாலும் அதில் ஏற்பட்ட அனுபவரீதியான யுத்தத்தை விரிவாக்கி இன்று ஒரு ஏகாதிபத்திய வழிகாட்டலில், ஏகாதிபத்தியத்தின் நோக்கத்தை ஈடுசெய்யும் வகையில் யுத்தம் விரிவடைந்துள்ளது. இவர்களின் படுமோசமான யுத்தத் தோல்விகளை ஒரு சில நடவடிக்கைகளை கொண்டே பார்க்கலாம். ஆனையிறவு தாக்குதல், யாழ்கோட்டை தாக்குதல், முல்லைத்தீவு தாக்குதல் .....இப்படிப் பல.

புலிகள் எந்த ஏகாதிபத்தியத்தினதோ அன்றி, தரகு முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளோ அல்ல. அன்றி எனச்சொல்ல வருவதன் ஊடாக ஒரு வேறுபாடான விடயமாகப் பார்க்கின்றனர். இக் கருத்தை முதலில் வரையறுத்தது மாவோ. இவர்கள் எங்கே மாவோவின் இக்கருத்தை விமர்சித்து இரு வேறுபாடானது எனக்காட்டியுள்னர். ஏகாதிபத்தியத்தை சார்ந்தோர் தரகு முதலாளிகளே. மேற்குறிப்பிட்ட மனிதத்தின் வாதத்தின் தொடர்ச்சியாக இதன் அர்த்தம் ஏகாதிபத்திய தரகுமுதலாளித்துவ எதிர்ப்பு போராளிகள் புலிகள் என்றல்ல. எவ்வளவு முட்டாள்தனமாக மனிதம் விவாதிக்க முற்படுகின்றனர். இவர்கள் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் அல்ல. ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட மாட்டார்கள். இலங்கையில் ஏகாதிபத்தியம் தலையிடவில்லையா? தனது சுரண்டலை நடத்தவில்லையா? அப்படித்தான் மனிதம் சொல்வார்களானால் அது பிறிதொரு விவாதம்.

புலிகள் சுரண்டலை (மனிதம் கூறும்போது தனது குழு நலன் சார்ந்து என்று சொல்லுகிறார்கள்) நடத்துகிறது. புலிகளும், ஏகாதிபத்தியமும் சுரண்டலை நடத்தும்போது இருவருக்குமிடையில் சுரண்டல் தொடர்பாக எழும் முரண்பாட்டை இருவிதமாக மட்டுமே தீர்க்கமுடியும்.

(1) ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து இணைந்து சுரண்டலை நடத்துவது. (இன்று இந்தியா, இலங்கை..... போன்ற மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் செய்வது போல்)

(2) அப்படி சுரண்டலில் எழும் போட்டி மோதலாக (மனிதம் குறிப்பிடுவது போல் புலிகளின் நலன்களுக்கு எதிராக செயற்பட்டால்) வெடிக்கும். இதிலிருந்து இந்தியா இலங்கையுடன் புலிகள் மோதலைப் பார்க்கலாம்.

ஏகாதிபத்தியத்துடன் மோதல் ஏற்படாமல் இருக்கும் வரை அங்கு ஏகாதிபத்திய சுரண்டலை அனுமதிப்பது என்பது புலிகள் தரகு முதலாளித்துவ (ஏகாதிபத்திய கைக்கூலிகள்) பிரதிநிதிகளாகப் பார்க்கலாம். மோதல் ஏற்பட்டால் பிறிதொரு ஏகாதிபத்தியம் சார்ந்து நிற்கவும் அல்லது மீண்டும் ஏகாதிபத்தியத்துடன் ஜக்கியப்படவும் முடியும்.

மனிதத்தின் ஏகாதிபத்தியம் பற்றிய கற்பனாவாதப் பார்வையைப் பார்ப்போம். புலிகள் ஏகாதிபத்தியத்திடம் இருந்து உதவியை பெறுவார்கள். அவர்கள் நலன்களுக்கு எதிராகப் போகாமல் கண்டும் காணாமல் இருப்பார்கள். அவர்களது போராட்டத்தின் இறுதிவிளைவு ஏகாதிபத்தியத்திடம் நாட்டை அடைவு வைப்பதாகக் கூட இருக்கமுடியும். ஆனால் அவர்கள் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் அல்ல. ஒன்றுக்குப்பின் ஒன்றாக கருத்துக்கள் உழறிக்கொட்டப்பட்டுள்ளது.

ஏகாதிபத்தியத்திடமிருந்து உதவியைப் பெறுவார்கள். அவர்களின் நலன்களுக்கு எதிராகப் போகாமல் கண்டும் காணாமல் இருப்பார்கள். போராட்டத்தின் இறுதியில் ஏகாதிபத்தியத்திடம் நாட்டை அடகு வைப்பார்களெனின் இவர்கள் யார்? ஏகாதிபத்தியத்திடம் உள்ள உறவு என்ன? ஏகாதிபத்தியம் உதவி கொடுக்க என்ன காரணம்? ஏன் நாட்டை புலிகள் ஏகாதிபத்தியத்திடம் அடகு வைக்கிறார்கள்? மேலுள்ள காரணத்தில் இருந்தே மனிதம் ஒத்துக் கொள்கிறார்கள் தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான பிரதிநிதியாக புலிகள் இன்று உள்ளதாக. பின் ஆனால் போட்டு எழுதுகின்றனர். ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள் அல்ல என்று. மனிதம் முன் சொன்னதையே மறுக்கின்றனர். மனிதம் முன் சொன்னது போல்(மற்றவர்களையும் குழப்பி)என்பது மனிதத்தையே குழப்பி, அவர்களாகவே உளறத்தொடங்கியதை பார்க்க முடிகிறது. (தாமும் குழம்பி)சமர்-தூண்டில் உங்களை குழப்பி உளற வைத்ததற்கு, மனிதத்தின் தெளிவான முகத்தை அம்பலப்பட வைத்ததற்கும் மனிதம் வாசகர்கள் நன்றி கூற வேண்டும். குறிப்பிட்ட நலன்களை அடையும் திசையில் நகர்வை காணமுடியும் என வாதிடும் மனிதம் பிறிதோரிடத்தில் முன்னுக்கு பின் முரணாக தான் கூறியவற்றிற்கு முரணான நடவடிக்கையில் ஈடுபடுவது தவிர்க்க முடியாது. இது மத்தியதர வர்க்கத்தின் அல்லது முதலாளித்துவ வர்க்கத்தின் ஊசலாட்டப் பகுதி எனக் கொள்ளக்கூடாது. குறிப்பிட்ட நலன்களை அடையும் எனக் குறிப்பிட்டு, முன்னுக்குப்பின் முரணானது என சொல்வதில், புலிகளின் வர்க்க மதிப்பீடு பற்றிய மனிதத்தின் பார்வைக்குறைபாடு தான் இதை சொல்ல வைத்துள்ளது. முன்னுக்குப்பின் முரணாக கருத்து வைப்பது சுரண்டலை நடத்தும் அனைத்துப் பிரிவினருக்கும் உள்ள சிறப்பான அம்சமாகும்.

ஒரு பலம் வாய்ந்த இராணுவம் புலிகளிடம் உள்ளமையால் இந்திய, இலங்கை இராணுவங்கள் தோற்கடிக்க முடியவில்லை என்ற வாதம் இராணுவம் என்பது நிரந்தரமாகவும் அழிவுகள் இன்றி இருப்பதாவும், இயங்கியலுக்கு முரணாக மனிதம் விவாதிக்கின்றனர். இராணுவத்தின் இருப்பு எப்பொழுதும் மக்களின் ஆதரவுடன் மட்டுமே சாத்தியமாகும். ஒரு யுத்தத்தை நடத்தும் குறிப்பான இன்றைய நிலையில், இது மக்களின் நலனுடன் கூடுதலாக இணைக்கப்படுகிறது. இன்று தமிழ்மக்களின் கோரிக்கைகளை புலிகள் தம்முன் வைத்திருப்பதே, புலிகள் தொடர்ந்து நிலைத்திருக்க முடிகின்றது. குறித்த இப் போராட்டத்தை புலிகள் ஏகாதிபத்தியம் சார்பாக (மனிதம் முன் சொன்ன அடிப்படையில்) நின்று மக்கள் மீது வன்முறையை பாவித்தபடி போராடுகின்றனர்.

எந்த ஏகாதிபத்தியமும் புலிகளுடன் முரண்பட்டால் அதாவது புலிகளின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டால், எந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இராணுவ நடவடிக்கையில் இறங்க புலிகள் தயங்க மாட்டார்கள். இதை புரிந்து கொள்வதற்க்கு சதாம், நோரிக்கோ போன்றோர்கள் அமெரிக்காவின் அடிவருடிகளாக இருந்தபொழுது தமது சொந்த நலன்களுடன் அமெரிக்கா முரண்பட்டபொழுது யுத்தம் புரிய தயாரானதை கவனத்தில் எடுக்க வேண்டும் என்ற வாதத்தில் மனிதம் சிறப்பாக திரிப்பை முன்வைக்கின்றனர். புலிகளுடன் சாதாம், நோரிக்கோ... போன்றோரை ஒப்பிட்டு யுத்தம் புரிய தயாரானதாக கூறும் இவர்கள், சொந்த நலன்களுக்காக போராட முற்பட்டதாக கூறுவதன் ஊடாக, சொந்த நலன்கள் (என்பது மனிதத்தின் பார்வையில் வர்க்கமற்ற தன்மை) என மீண்டும் வாதாடுகின்றனர். அப்படியாயின் மூன்றாம் உலக அரசுக்கள் எல்லாம் சதாம், நோரிக்கோ...போன்றவையே. அப்படியாயின் அவ் அரசுகளும் வர்க்க அடிப்படையற்ற குழுக்களே. இது மனிதத்தின் கருத்து. இக்கருத்து மனிதத்தின் திரிபை அம்பலப்படுத்துகிறது. மனிதம் உளறிக் கொட்டியதில் வெளிப்பட்டுவிட்ட இவ்விடயம், மனிதம் இது தொடர்பாக என்ன கருத்தை கூறுகிறார்கள் எனப் பார்த்தே, மூன்றாம் உலக அரசுகளுக்கு வர்க்கம் உண்டு என விவாதிக்கலாம்.

சதாம், நோரிக்கோ..... போன்றார் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிறப்பான பிரதிநிதிகளாக அந்தந்த நாடுகளில் செயற்பட்டனர். இவர்களின் வர்க்கப் பாத்திரம் தரகுமுதலாளித்துவமே. இவர்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள மோதல் என்பது சுரண்டல் தொடர்பாக எழுந்தவை தான். அமெரிக்காவுக்கு சென்று கொண்டு இருந்த சுரண்டலை கண்டு, ஆத்திரமுற்ற இவர்கள் சுரண்டலை முழுமையாக பெற மக்களிடமிருந்து அமெரிக்க எதிர்ப்புணர்வை பயன்படுத்த முயன்றனர். இவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் இவர்கள் சுரண்டலை நடத்தியதும், மேலும் சுரண்டலை தான் முழுமையாக பெறும் வகையில் யுத்தத்தை அதற்கிசைவாக நடத்தியதும், ஏகாதிபத்தியம் பற்றிய ஊசலாட்டமுமே. இதுவே இவர்களின் எழுச்சியும் தோல்வியுமாகும். இது போன்றே புலிகளும் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்ததும், இந்தியாவும் அது சார்ந்த ஏகாதிபத்தியங்கள் புலிகளை அழிக்க முற்பட்டதும், மேற்கத்தைய தரகாக இருந்த புலிகளின் ஊசலாட்டப்போக்கும், இந்தியாவுடன் சமரசத்தை நாட முற்பட்டதும்: இந்தியா புலிகள் தமக்குள் கொண்டிருந்த நம்பிக்கையீனமும் ஒன்றையொன்று மோதும் வகையில் நகர்த்துவதில் மேற்கத்தைய ஏகாதிபத்தியங்கள் வெற்றி பெற்றது. இதன் வெளிப்பாடாகவே இலங்கை, புலிகள் இடையேயான பேச்சுவார்த்தையும், இரண்டும் ஒன்றாக இணைந்து இந்தியாவை வெளியேற்ற முயன்றது.

சதாம், நோரிக்கோ.... ஆகீயோருக்கு இருந்த வாய்ப்புக்களை விட புலிகளுக்கு நீண்டகால யுத்தத்துக்கு சாதகமான அம்சங்கள் அதிகமாகவே உள்ளது. அவர்கள் நகர்ப்புற கெரில்லா வடிவத்தில் பல படிப்பினைகளைப் பெற்ற, சயனைற்றை கழுத்தில் கட்டிய ஊழியர்கள. இங்கு நகர்ப்புற கெரில்லாவாக இருந்தால் மட்டும் ஒரு யுத்தத்தை நடத்தி விடமுடியாது. நகர்ப்புற கெரில்லா தொடர்ந்து இருக்க ஆதரவான மக்கள் சக்தி தேவை. அல்லது குழுநலன் சார்ந்தோரின் குறிப்பான ஆதரவு தேவை. குறிப்பான ஆதரவு என்பது ஏகாதிபத்தியம் சார்ந்த தரகு முதலாளித்துவத்தின் ஆதரவே. இவையில்லாத எந்த சக்தியும் ஒரு அரசியல் சக்தியாகவோ அது சார்ந்த இராணுவமாகவோ இயங்க முடியாது அழிந்து போகும்.

இவ் வெளிப்படையான தெளிவாகத் தெரியும் உண்மைகள் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதில் புலிகளைப் புரிந்து கொள்வதற்கு போதுமானவையே என்ற மனிதத்தின் இறுதிப் பந்தி மேலுள்ள விவாதத்தில் ஒன்றுக்குப்பின் ஒன்றாக விவாதித்துள்ளதன் மூலம், புலிகள் பற்றி இலகுவான முடிவுக்கு வந்தடையும் பார்வையை காட்டுகிறது. சமர் தூண்டில் ஆதாரமாக பல விடயங்களை வைத்து விவாதித்தன. அவைகளை ஒவ்வொன்றாக விமர்சனம் செய்யாது, தமது கருத்துக்கும் ஆதாரங்களை முன்வைக்காமல் சொன்னதுடன் மார்க்சியத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்கி, அது பற்றி விமர்சனரீதியாக எதுவும் முன்வைக்காமல் மார்க்சியம் பிழை எனக் கூறியும் உள்ளனர். ஒரு விமர்சகர் தமது கருத்தை முன்வைக்கும் பொழுது தொடர்ச்சியாக விவாதிப்பதற்க்கு தயாராக இருக்கவேண்டும். விவாதத்தை நடத்த தயாரின்மையை இரு சந்தர்ப்பத்தில் சொல்லி, தமது கருத்தை திணித்து விட முயலும் மனிதத்தின் போக்கு போராட்டத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அடிப்படைத் திரிபை பரப்பிவரும் மனிதம் மற்றைய சஞ்சிகைகளை (தாமும் குழம்பி) குழப்பக்காரர்கள் எனச் சொல்லி தமது மேதாவித்தனத்துடன் திரிபுகளைத் திணிக்க முயல்வது மிக மோசமான நடவடிக்கையாகும். இது புலிகள் எப்படி மாற்றுக்கருத்தை கொண்டிருப்பவர்களை கொன்று போராட்டத்தில் தடையாகவிருக்கிறார்களோ அதே போன்று மாற்றுச்சஞ்சிகைகளின் கருத்துக்களை விமர்சனத்திற்க்கு தயாரின்றி ஒற்றைவரியில் பதிலளித்து திரிபை புகுத்த முயல்வது போராட்டத்திற்கு இன்னுமொரு தடையாகும். மனிதம் மார்க்சிய மூலவர்களின் கோட்பாடுகளில் பிழையிருக்கிறது என்ற வாதம், மிகச்சிறப்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி(டெங் கும்பல்) 1984 -இல் கூறியதற்கு ஒத்ததே. மார்க்சின் சில கருத்துக்கள் இப்போதைய கால கட்டத்திற்கு ஏற்றவையல்ல. இப்போதைய நவீன காலத்தின் நிலைமைகள் பற்றி மார்க்சுக்கோ அல்லது ஏங்கல்ஸ்சுக்கோ அல்லது லெனினுக்கோ தெரியாது. (நன்றி இரசிய கரடியின் உண்மை முகம்) என்ற இக் கருத்தை சொல்லியே சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவத்தை மீட்டார்கள். அதே கருத்தை மனிதம் சொல்வதிலிருந்து, மனிதம் எதை செய்ய முயலுகின்றார்கள் என்பதை மனிதம் வாசகர்களே சிறப்பாக புரிந்து கொள்வார்கள்.

உயிர்ப்பு 1..பற்றிய மனிதத்தின் விமர்சனம் தொடர்பான எமது விமர்சனம்

இயற்கையும் சமூகமும் தனிப்பட்ட மனித மனத்திற்கு வெளியே இருந்து அவனது விருப்பு வெறுப்பை சாராது இயங்கிக் கொண்டிருப்பதாகும் என்ற கருத்து கட்டுரையில் கூறப்படுகிறது. ஆனால் அதன் பின் இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் நாம் தனிப்பட்ட நபர்களுக்கும் அவர்களுக்கும் அவர்களது குணநலன்களுக்கும் வரலாற்றில் எந்தப் பாத்திரமும் கிடையாது என கூறவில்லை என்று உயிர்ப்பில் கூறப்படுகின்றது. இயற்கையுடனும் சமூகத்துடனும் மனிதன் கொண்டுள்ள அவனது விருப்பு வெறுப்புக்களை கொண்டுள்ள இயங்கியலை முதல் கருத்து நிராகரிக்க அவனது வரலாற்றுப் பாத்திரத்தை இரண்டாவது கருத்து அங்கீகரிக்க குழப்பமே மீதியாகின்றது . ஒரு ஓட்டமான வாசிப்பில் இரண்டாவது கருத்து அடிபட்டு போகின்றது. கட்டுரையில் இயற்கைக்கும் சமூகத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு என்பது விளங்கப்படவில்லை என்று மனிதம் உயிர்ப்பு கூறியதை முன்னெடுத்து விமர்சிக்க முற்ப்பட்டனர். இருந்தும் மனிதம் கூட குறிப்பிட்ட விளக்கம் தரவில்லை என்ற விடயத்தை விளங்கப்படுத்தவில்லை. இது ஓரு புறமிருக்க உயிர்ப்பின் கருத்து தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளதை பார்க்க முடிகின்றது. மனிதம் சஞ்சிகை சமூகப்போக்கு தனிமனிதன் விரும்பியபடி இயங்குவதாக கூற முயலுகின்றனர். அது தான் ஓட்டமான வாசிப்பில் இரண்டாவது கருத்து அடிபட்டு போகின்றது என்ற வாதம் (இது எப்படி என புரியவில்லை?). சமூகத்துக்கும் மனிதர்க்கும் இடையிலான உறவில் தனிமனிதன் அல்லது குணநலன்கள் சமூகத்தின் மீது ஆற்றும் பங்கு, இவற்றுக்கிடையிலான உறவு பற்றியும் கூறி வருகின்றன. இதை உயிர்ப்பு சஞ்சிகை விரிவாகவும் ஆழமாகவும் பதிலளித்துள்ளனர். நாம் இதை மேலும் விளக்குகையில் ஒரு தனி மனிதன் விரும்பும் அனைத்தையும் சமூகம் செயற்படுத்தாது. ஒருவன் விரும்பலாம் கம்யூனிஸ்ட் சமூகத்தை ஆனால் சமூகம் அதை ஏற்க வேண்டுமென்றோ சமூகம் அதை இயக்கி கொண்டிருப்பதாகவோ அர்த்தமல்ல. சமூகம் அதை விரும்பின் மாத்திரமே சாத்தியம். புலிகளில் இணையும் ஒருவன் கொலை செய்யவென இணைவதில்லை. அவன் விரும்புவது தேசவிடுதலை போராட்டத்தை தான். அவன் விரும்புவதற்கு மாறாக கொலை செய்கிறான் எனின் புலிகளின் அரசியல் போக்குக்கு மாற்றப்படுகிறான். யார் எதிர்க்கின்றானோ அவன் தனிமனிதனாக வெளியேற அல்லது கொல்லப்படுகின்றான். இங்கு தான் தனிமனிதப் பாத்திரம் வெளிப்படுகின்றது. இது புலிகளின் போக்கையொற்றி இசைவாக நடப்பதில்லை. அதே போல் இக் கொலையை முன்னின்று நடத்துவதற்கூடாக தனிமனிதப் பாத்திரம் புலிகளின் போக்குடன் நிகழ்த்தப்படுகின்றது. இதற்கு சிறந்த உதாரணமாக பிரபாகரனைப் பார்க்கலாம். எனவே சமூகப் போக்கு என்பது தனிமனித விருப்பு வெறுப்புக்கு அப்பால் பட்டது. ஒரு மனிதன் விரும்பும் பட்சத்தில் எல்லாம் மாறிவிடாது.

"முன்னணிப் பாத்திரம் வகிக்கும் நபர்களுக்கூடாகவன்றி அவர்கள் எந்த சமூக சக்திகளை வர்க்கப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்| என குறிப்பிடப்படுகின்றது. இது மார்க்சியத்தின் சமூதாய ஆய்வுமுறையை மிகவும் எளிமையாக புரிந்து கொண்டதன் வெளிப்பாடே. ஒரு சமூக சக்தியையோ அன்றி வர்க்கங்களையோ பிரதிநிதித்துவப்படுத்தாமல் தமது குழுநலனை மையமாக வைத்து சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை தாமே கையிலெடுத்து அத்துடன் கவர்ச்சிவாதத்தையும் சேர்த்து பல குழுக்கள் கும்பல்கள் மக்களை அடக்கியாள்கிறது என்ற மனிதத்தின் வாதத்தில் உயிர்ப்பு குறிப்பிட்டு கூறிய சமூக சக்திகளை வர்க்கங்கள் பிரதிநிதித்துவபடுத்துவதாக சொன்னதை மனிதம் நிராகரிக்காமலேயே இதை இலகுபடுத்திய மார்க்சியம் எனச் சொல்லி, தமக்கு சாதகமாக எடுக்க முயன்ற மனிதம், அதற்குள் குழம்பி, சமூக சக்திகளையோ அன்றி வர்க்கங்களையோ பிரதிநிதித்துவப்படுத்தாத குழுக்களைப் பற்றி கூறியுள்ளனர். இது நான்கு வரிக்கு முன்னர் கூறியதை திரித்துப் புரட்ட முயல்வதை பார்க்க முடிகிறது. குழுவை மையமாக வைத்து கவர்ச்சியைக் காட்டி எனச் சொல்லும் இக் கருத்து தொடர்பாக முன்பே விமர்சித்துள்ளோம். மனிதத்தை கேட்க விரும்புகிறோம், இன்று உலகில் குழுநலனுக்கு அப்பால் கவர்ச்சி காட்டாத அரசு ஒன்றைக்காட்ட முடியுமா? இதில் இன்று புரட்சிகர அமைப்பை விடுத்தே கூறுகிறோம். எல்லாம் ஒரு குறித்த வட்டத்துக்குள் செயல்படும் அரசுக்களே.

புலிகளை தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஊசலாட்டம் காட்டுபவர்களாக காட்ட முனைவது தவறு என்று மனிதம் உயிர்ப்பு சஞ்சிகையை விமர்சிக்கின்றனர். அதே நேரம் இக்கருத்தை விரிவான ஆய்வில்லாமல் எடுத்ததாக சொல்லவரும் மனிதம் தன் விரிவான ஆய்வில் புலிகளை தேசவிடுதலைப் போராட்டத்தில் ஊசலாட்டம் அற்றவர்கள் எனச் சொல்லுகின்றனர் .புலிகளின் ஊசலாட்டம் தொடர்பாக சமா, தூண்டில், உயிர்ப்பில் பல ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் ஊசலாட்டம் தொடர்பாக மனிதம் வாசகர் அனுபவத்திலும், சம்பவங்களினூடாகவும் அறிவார்கள்.

பொருளாதார நிலைக்குப் பொருத்தமான சமூக உணர்வாக தேசிய இனங்கள் ஒன்று கலப்பது என்னும் நிகழ்வு தோன்றுகின்றது என்ற உயிர்ப்பின் கருத்தையொட்டி மனிதம் தேசிய இனங்கள் ஒன்று கலக்கும் நிகழ்வு என்ற பிரச்சனையில் பொருளாதாரநிலையின் பங்கு என்ன? என்பது பற்றி மேற்படி கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதில்லை. ஏனெனில் இது பொருளாதார நிலைக்கு மிகவும் கூடிய அழுத்தம் கொடுக்கிறது. தேசிய இனங்கள் ஒன்று கலப்பது என்பது, அதற்கு தேவையான அடிப்படையான பொருளாதார நிலையை கோருமென்பது புரிந்து கொள்ளக்கூடியதே. மாறாக தேசிய இனம் ஒன்று கலப்பது என்பது ஒரு கலாச்சாரப்புரட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை என்ற மனிதத்தின் வாதத்தில் ஒரு பக்கம் மட்டுமே உண்மை. ஒரு கலாச்சாரப்புரட்சி சோசலிச சமுதாயத்தில் மட்டுமே சாத்தியமானது அல்ல. முதலாளித்துவ கலாச்சாரப் புரட்சியும் நிகழுகின்றன. உயிர்ப்பின் விவாதம் முதலாளித்துவ தோற்றத்தில், முதலாளித்துவ முதிர்ச்சியில் தேசிய இனம் ஒன்று கலப்பது பற்றியே. முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து ஒரு கலாச்சாரப்புரட்சி நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக முதலாளித்துவ நாடுகளில் நடத்தப்பட்டது. இது தேசிய இனங்களை ஒன்றிணைக்கும் வகையில் தவிர்க்க முடியாது மையப்படுத்தபட்டது. இது தொடர்பாக சமர்-4 இல் பிரான்சில் இருந்த பல தேசிய இனம் இன்று இல்லாமல் போய், ஒரு மொழி ஆதிக்கத்துக்கு வந்தது தொடர்பான ஒரு கட்டுரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இங்கு அம்மொழிகள் அழிய அடக்கு முறை மற்றும் பல வழிகளுக்கூடாக இது நடத்தப்படுகிறது. ஆனால் இங்கு பெரிய எதிர்ப்பு ஏற்படாமலிருக்க முக்கிய காரணமாயிருந்தது பொருளாதார நிலையே. இந்நிலை மூன்றாம் உலக நாடுகளில் தோன்றாமைக்கு முக்கிய காரணம் அங்கு ஒரு முதலாளித்துவ அரசு இன்மையும், பொருளாதார நிலையின் பலமின்மையுமே. தேசிய இனங்கள் ஒன்று கலப்பது பொருளாதாரவாதத்தின் அடிப்படையிலேயே. இதற்கு மாறாக பொருளாதார இருப்பு இல்லாமல், ஒரு போதும் ஒரு கலாச்சாரப்புரட்சியில் மட்டும் தேசிய இனம் ஒன்று கலக்காது. கலாச்சாரப்புரட்சி பொருளாதார வாழ்வுள்ள இடத்தில் ஒரு ஊக்குவிக்கும் பண்பையும் மாற்றத்தையுமே செய்கிறது.

முதாளித்துவத்தின் ஆரம்பக் கட்டத்தில் தேசிய இனங்கள் விழிப்படைந்ததாகவும், முதலாளித்துவத்தின் முதிர்ந்த நிலையில் தேசிய இனங்கள் ஒன்று கலப்பது பற்றியும் என்று உயிர்ப்பு கூறிய கருத்தை மனிதம் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல முதலாளித்துவத்தின் ஆரம்ப கட்டத்தில் இல்லாத தேசிய இனங்கள் இன்றைய உலகில் விழிப்படைவதையும், முதலாளித்துவ முதிர்ச்சி, வளர்ச்சியடைந்த நிலையிருக்கும் நாடுகளில் தேசிய இனங்கள் ஒன்று கலக்க தயாராகவில்லாததையும் மேற்படி கருத்தானது விளக்கமாட்டாது என்ற மனிதத்தின் கருத்தில் முதலாளித்துவ நாடுகளையும், மூன்றாம் உலக நாடுகளையும் ஒன்றாகக் குழப்பி தேசிய இனப் பிரச்சனையை ஆராய முற்படுகின்றனர். முதலாளித்துவத்தின் ஆரம்ப கட்டத்தில் இல்லாத தேசிய இனங்கள் இன்றையவுலகில் விழிப்படைவதையும் என்ற வாதத்தில் ஒரு முதலாளித்துவ நாட்டில் புதிதாக ஒரு தேசிய இனம் உருவாகிறது. எந்த நாட்டில் நடந்தது? அடக்கப்பட்ட தேசிய இனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் ஆரம்பம் முதலே இருந்து வந்த தேசிய இனங்கள் இன்று போராட முற்படுகின்றனர். இது மூன்றாம் உலகநாடுகளுக்கு மிகப் பொருத்தமானது. ஏகாதிபத்தியத்தாலோ, முதலாளித்துவ நாட்டிலோ போராட்டமாக தேசிய இனப்போராட்டம் முன்வர வேண்டுமாயின், அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட வேண்டும். அத்துடன் அங்கு சரியான புரட்சிகர சக்தி இல்லாமல் இருக்க வேண்டும். மற்றும் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்திருக்கும் நாடுகளில் தேசிய இனங்கள் ஒன்று கலக்காததை சுட்டிக்காட்டும் மனிதம், நாடுகளின் அரசு பற்றிய மதிப்பீட்டை இழக்கின்றனர். இந் நாடுகள் தனித்தனியான அரசுகளாகவிருப்பதையும் இவை ஒன்றான நாட்டுக்குள் இல்லாமலிருப்பதையும் பார்க்கத் தவறி, கலப்பு பற்றி கூறி, தீர்ப்பைப் புகுத்திவிட சம்பந்தமில்லாவிடத்தில் பொருத்த முயலும் இப் போக்கு இயங்கியலுக்கு மாறானது.

பலமான முதலாளித்துவ வளர்ச்சி முற்போக்கான தேசியத்தையே தோற்றுவிக்கின்றது. பலவீனமான முதலாளித்துவ வளர்ச்சி பிற்போக்கான தேசியத்தை தோற்றுவிக்கின்றது. என்ற உயிர்ப்பின் கருத்தை மறுக்கும் மனிதம் இது தவறான கருத்தாகும். முதலாளித்துவம் இல்லாத போது புரட்சியாளார்களால் சரியான முற்போக்கான தேசியத்தை உருவாக்க முடியும் என்ற இவ்விவாதம் உயிர்ப்பின் முன்னைய கருத்தை மறுப்பது என்பது அடிப்படையில் என்னத்தை கூறுகின்றார்கள் எனப் புரியவில்லை? பலமான முதலாளித்துவ சக்திகள் இருப்பின், தனது நலனுக்காக தரகுமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக போராட முற்படுவதனால் முற்போக்கு தன்மையையே பிரதிபலிப்பார்கள்.

பலவீனமாதாகவிருக்கும் போது சமரசத்தை தரகுமுதலாளிகளுடன் செய்துகொள்வது அல்லது பாட்டாளிவர்க்கத்துடன் இணைந்து கொள்வது நிகழும். மனிதம் கூறிய புரட்சியாளர்கள் சரியான முற்போக்குத் தேசியத்தை உருவாக்க முடியும் என்பதை உயிர்ப்பு சஞ்சிகையும் சுட்டிக் காட்டியுள்ளது. அதை மனிதம் சஞ்சிகையின் பார்வைக்கு முன் வைக்கிறோம். தேசியமென்பதில் அந்தச் சமூகத்தில் பல்வேறு வர்க்கங்களின் நலன்களும் பிரதிபலிக்கச் செய்கின்றன. தேசியவெழுச்சியில் இணைந்து கொள்ளும் ஒவ்வொரு வர்க்கங்களும் தத்தமது நலங்களை மனதில் கொண்டே செயற்படுகின்றன. எந்த வர்க்கம் (மனிதத்தின் பார்வையில் புரட்சியாளர்கள்) தேசிய இயக்கத்தில் தலைமை தாங்குகின்றது என்பதை பொறுத்து தேசிய இயக்கத்தில் முற்போக்குத்தன்மை அமைகிறது. இக் கருத்து மனிதம் கூறிய 22-ம் பக்கத்தில் அடுத்த பந்தியிலிருந்தது. இது மனிதத்துக்கு புரியாத கடுமையான மார்க்ஸியமாகவிருந்ததோ என சந்தேகமாகவுள்ளது.

உயிர்ப்பு தரகு முதலாளித்துவத்தின் தொழிற்படும் முறை பற்றி கூறப்பட்டதை மனிதம் சஞ்சிகை கூறுகின்றார்கள். கோட்பாட்டளவில் பார்த்தால் தரகு முதலாளி வர்க்கம் இப்படியே தொழில்படும். ஆனால் இலங்கையில் தரகுமுதலாளிவர்க்கம் ஒரு இயங்குசக்தியென்று நாம் பார்க்க முடியுமா? தான் திட்டமிட்டு ஏனையவற்றை முன்னெடுக்கும் ஒரு சக்தியாக இலங்கையில் தரகு முதலாளித்துவ வர்க்கத்தைப் பார்க்க முடியுமா? குறிப்பாக தமிழ் தரகு முதலாளித்துவ வர்க்கம் இதை விட மோசமான நிலையிலேயேயுள்ளது. என்ற மனிதத்தின் விவாதம் முன்னைய விவாதத்தில் பதிலளிக்கப்பட்டாலும் மீண்டும் பாhப்போமாயின்: இலங்கையில் தரகு முதலாளித்துவ வர்க்கத்தையும் ஒரு இயங்குசக்தியாக பார்க்கமுடியுமா? என்ற கேள்வியிருந்து இலங்கையரசு உட்பட அனைத்தும் வர்க்கமற்ற தன்மையென கூறும் மனிதம் தனது திரிபை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகின்றனர். திட்டமிட்டு இலங்கையரசு (தரகு முதலாளிவர்க்கம்) செயற்பட முடிகின்றதா? இலங்கையில் ஆளும் வர்க்கம் தரகு முதலாளிகள் என்றில்லாமல் வெறும் குழுவாகவா செயற்படுகிறது? இக் குழு இலங்கையின் பொருளாதார அடிப்படையை முழுக்க முழுக்க ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக மாற்றி அண்டிப் பிழைக்கின்றனர். இவர்கள் இயங்குசக்தியாகவே இருக்கின்றனர். இவர்கள் இன்று பெரும் தோட்டங்களை கைமாற்றுவதும், அடிப்படை விவசாய உற்பத்திகளை ஏகாதிபத்தியம் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி மாற்றுவதும், சுதந்திரவர்த்தக வலயத்தை உருவாக்குவதும் இப்படிப் பல. இக் குழுவின் தன்மை தான் தரகு முதலாளித்துவம். இத்தன்மை தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான அம்சமும் கூட. கோட்பாட்டளவில் ஏற்றுக்கொள்ளும் மனிதம் தரகுமுதலாளித்துவத்தின் செயற்பாட்டை நடைமுறையில் ஏற்கவில்லையென கூற வருகின்றனர். சொந்த நாட்டை விற்கும் இவ்வரசுகள் தரகு முதலாளிகள் அல்லவென வாதிடுவது ஏன்? இது இவர்களுக்கே தான் வெளிச்சம். தமிழ் தரகுமுதலாளி வர்க்கம் இதை விட மோசமான நிலையில் உள்ளது. இது உண்மை தான். சிங்கள தரகுமுதலாளி வர்க்கத்திற்கும் தமிழ் தரகுமுதலாளி வர்க்கத்துக்கும், இடையில் சுரண்டல் தொடாபான முரண்பாடே இன்று தேசிய இனப் போராட்டத்தை, தமிழ் தரகுமுதலாளி வர்க்கம் தனது கையில் எடுத்து தலைமை தாங்கி போராட வைக்கின்றது.

'பணம் படைத்த வர்க்கங்களான முதலாளி, தரகுமுதலாளி போன்ற வர்க்கங்களுக்கு இன்று ஆயுதம் தாங்கிய மக்களை அடக்கியாளும் பாசிச குழுக்களுக்கிடையே உள்ள உறவு என்ன? என்பதே அக் கேள்வியாகும். இலங்கை போன்றவொரு நாட்டில் பாசிசக்குழுக்கள் மக்களை அடக்கியாள அதிகாரத்திற்கு போட்டி போடுகின்றன. பழைய மரபுத்தனமான வர்க்கப்பார்வை எனக் கூறப்படுவதில் விடைகாண முடியாது. அல்லது இது போன்ற குழுக்களில் வெறும் வர்க்கக்கருவியாக பார்க்க முயல்வது தவறு" மனிதத்தின் இவ் விவாதத்தில் பணம்படைத்த வர்க்கத்திற்கும், பாசிசகுழுக்களுக்கும் இடையே என்ன உறவு? இது பற்றி மௌனமாக கேள்வி கேட்பதில் விட்டுவிடுகிறார்கள். தரகுமுதலாளி வர்க்கத்திற்கும் இக் குழுக்களுடையேயுள்ள இவ்வுறவு என்பதை தரகுமுதலாளித்துவத்தை பாதுகாப்பதே என நாம் கூறியதை மரபுத் தனமான வர்க்கப் பார்வையென ஒற்றைவரிகளில் பதிலளிப்பதிலிருந்து எதையும் சொல்லாமல் விவாதிக்க கருத்தின்றி தனது திரிபுகளை திணிக்க முயல்கின்றனர். மீண்டும் கூறுகின்றோம்: இக்குழுக்கள், தரகுமுதலாளிகள் வேறுவேறு என்பதில்லை. மனிதம் முடிந்தால் இயங்கியல் ஆய்வுகளுடன் மரபு வழியான வர்க்கப்பார்வையை நிராகரிக்கட்டும். அதே போல் மரபுத்தனமான மார்க்சியத்தையும் நிராகரிக்கட்டும். பணம் படைத்தவர்களுக்கும் மனிதம் குறிப்பிடும் குழுவுக்கும் இடையேயான உறவைக் கூறட்டும். இவை மனிதம் சஞ்சிகைக்கு முடியாது. ஏனெனில் திரிபுகள் எப்பொழுதும் வெற்றிபெற முடியாதவை.

எமது மக்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய சரியான ஸ்தாபன வடிவமாக பாட்டாளி வர்க்க கட்சியென்ற ஸ்தாபன வடிவம் தான் சரியானதா? இக் கருத்து மனிதம் தன்னை இனம்காட்டுவதிலிருந்து மனிதத்தின் அரசியல் போக்கு முதலாளித்துவ போக்கே. பாட்டாளிகள் அல்லாத ஒரு பிரிவு முற்போக்கான போராட்டத்தில் இறுதிவரை தலைமை தாங்கமுடியுமாயின் யார்? முதலாளிகளா? குட்டிபூர்சுவா வர்க்கமா? அல்லது யார்? இதே நேரம் பின் குறிப்பிடுகிறார்கள். தற்போது மூன்றாம் உலகநாட்டுப் போராட்டங்கள் பல பாட்டாளிகள் என்போர் இல்லாமலேயே முற்போக்காக முன்னெடுப்பதை அவதானிக்கலாம். அப்படியாயின் எந்த நாட்டில்? தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். அவர்களின் தத்துவம் என்ன? முற்போக்காக (இறுதிவரை) முன்னெடுக்கப்படுகிறது என வாய் கூசாமல் பச்சைப் பொய் கூறும் மனிதம், எதையோ திணித்து விடும் போக்கே தொடர்ந்து காணப்படுகிறது. மூன்றாம் உலகப் போராட்டங்கள் பல பிற்போக்கான அனுபவங்கள் இருந்தபோதும் அதற்கான காரணம் பாட்டாளிகள் தலைமை தாங்கவில்லை என்பதல்ல. அப்படியாயின் எந்த வர்க்கம் தலைமை தாங்கியிருக்க வேண்டும். தொடர்ந்து கூறும் மனிதம் நடைமுறையில் அந்த பழைய தத்துவங்கள் இன்றைக்கு எந்த மூன்றாம் உலக நாட்டுக்கும் தீர்வல்ல என்பதில் எம் முன்னுள்ள கேள்வி பழையதத்துவம் இன்றைய காலத்திற்கு தவறானது எனின். எங்கே இயங்கியலுடன் விமர்சித்துள்ளீர்கள். சும்மா கிடைத்த சங்கு என்பதற்காக ஊதுவது ஏன்? பிற்போக்கான வகையில் போராட்டம் சென்ற நிலையில் அங்கு பாட்டாளித்தலைமை இருக்காததை ஒப்புக்கொள்ளும் மனிதம், அது தீர்க்காது என வாதிடுவது எந்த ஆதாரத்தை வைத்து. இன்று மரபுத்தனமான வர்க்கப்பார்வையை கைக்கொள்ளும் பிலிப்பபைன்ஸ், பெரு, எல்சல்வடோர், பர்மா,மலேசியா..... கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசவிடுதலைப் போராட்டத்தை பிற்போக்காகவா முன்னெடுக்கிறார்கள். பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கின் இப்போராட்டம் பிற்போக்காகவா இருக்கும்?

மார்க்சியத்தின் தோற்றம் பற்றி உயிர்ப்பின் கருத்தில் நாம் முரண்படுகிறோம். தூண்டில் கருத்துடன் உடன்படுகின்றோம். இது தொடர்பாக உயிர்ப்பின் விவாதத்தில் விவாதிக்க முற்படுகிறோம். பாட்டாளிவர்க்க சித்தாந்தம் என்ற ஒன்றை மட்டுமே மார்க்சியமாக குறுக்க முனைந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இக் கருத்தில் மார்க்சியம் என்பது உலகை பொருள்முதல்வாத நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தியதே. அதை ஏற்றுக்கொள்ளும் சக்தியாக பாட்டாளி வர்க்கம் இருப்பதால் அதை முழுமையாக நடைமுறைக்கு இட்டுச்செல்லும் ஒரு சக்தியாக இருக்கிறது. இதற்கு அப்பால் கருத்துமுதல்வாத நோக்கில் உலகை ஆய்வு செய்யும் யாரும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்வதில்லை. மார்க்சியம் என்பது உலகை உள்ளபடி ஆய்வுக்கு உள்ளாக்குகிறது. இதை நடைமுறையில் செய்வது பாட்டாளிவர்க்கம் மட்டுமே. மனிதம் இந்த மார்க்சியத்தையே பழைய வர்க்கப்பார்வை என கூறி நிராகரிக்கின்றனர். தேவையானதையும், தமக்கு சாதகமானதையும் எடுத்துகொள்ளும் மனிதம் நிராகரிப்பை விமர்சிக்க கருத்துப்பலமின்றி திணிக்க முயல்கின்றனர்.

மார்க்சியமென்பது கிழக்கு ஜரோப்பாவின் வீழ்ச்சியின் பின்பு அதிக வாழ்வைக் கொண்டிருக்கிறது என்பதனூடு மனிதத்தின் விவாதம் முன்னைய கருத்துடன் ஒன்றுக்கொன்று முரண்படும் வகையில் திரித்து புரட்டியுள்ளனர். மார்க்சிய வீழ்ச்சியை கூறியவர்கள் பின் வாழ்வைப் பற்றி கூறுகின்றனர். கிழக்கு ஜரோப்பாவின் வீழ்ச்சியென்பது மார்க்சியத்தின் அடிப்படையிலிருந்து விலகிச் சென்றமையால் தான். கிழக்கு ஜரோப்பாவில் வாழுகின்றது எனின்: இன்று அது உண்மையானதாகவும், சரியாகதாகவும் (மனிதம் கூறுவது போல் பழைய மரபுத்தனமான மார்க்கியமாகவல்ல) இருப்பதால் தான் மனிதம் சொல்லுவது போல்: அதன் இயங்கியல் அணுகுமுறையே ஏனெனில் மார்க்சியத்தின் விஞ்ஞானபூர்வ அணுகுமுறையையே இயங்கியல் இனம் காட்டுகின்றது. இதை கூறும் மனிதம் இதை மார்க்சியத்தின் மரபுத்தனமானது எனச் சொல்லி நிராகரிக்கின்றனா. .பாட்டாளிவர்க்க சித்தாந்தம் மட்டும் மார்க்சியம் என குறுக்க முனைந்தது எனச் சொல்லும் மனிதம், இன்று ஜரோப்பாவில் மார்க்சியம் உயிர்வாழ்வதை இனம் காட்டுவது பாட்டாளிவர்க்க கட்சி மட்டுமே. மனிதம் எதைச் சொல்லுகின்றார்கள் என்பதே மனிதத்திற்கு புரியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. அதையே கீழே உறுதி செய்கிறார்கள் மார்க்சினால் கூறப்பட்ட பாட்டாளிவர்க்க சித்தாந்தம் என்பது இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது எனின் ஜரோப்பாவில் உயிர்வாழும் மார்க்சியம் (இவை மார்க்சினால் உருவாக்கப்பட்டது) தவறானதா? இவையெல்லாம் மனிதத்தின் திரிபுகளும் புரட்டல்களுமே.

இதே கட்டுரையில் 35-ம் பக்கத்தில் எந்தவொரு வர்க்கத்தின் நலனும் மறைந்திராமல் ஒரு குழுவின் நலன்களே மறைந்திருக்க முடியும். பாரிய மூலதனம் கொண்ட குழு தனது நலன்களையோ அரசியல் கோரிக்கைகளையோ முன்வைக்க முடியும். கடந்தகால நடைமுறையிருந்து புலிகள் எந்தவொரு வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவும் தயாராகவில்லை. தமது குழு நலன்களை வைத்தே அவர்கள் செயற்படுகிறார்கள் என்ற வாதத்துக்கு முன்பே பல தடவை பதிலளித்துளளோம். தனது குழு நலன்கள் என்பது எதை? பாரிய மூலதனத்தை கொண்ட குழு தனது நலன் என்பது எதை? இங்கு சுரண்டல் நடத்தப்படவிலையா? சுரண்டும் தன்மை வர்க்கப் பார்வையில்லையா? எந்த வர்க்கத்தின் நலன்களையும் பிரதிபலிக்க புலிகள் தயராகவில்லை என யார் கூறியது? என்ன ஆதாரம்? குழுநலன் என்பது என்ன? இவர்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் என்ன உறவு. இதை மனிதத்திடம் கோருவதுடன் மனிதம் வாசகர்களுக்கு இதை விவாதிப்பதற்கு முன் வைக்கிறோம். அந்த சமூதாயத்தில் நிலவும் அமைப்புக்கள் என எந்த அமைப்புக்களைக் குறிப்பிடுகின்றீர்கள்? அதன் தத்துவம் என்ன? அரசியல் இலக்கு என்ன?

மேலும் பலர் ஒரு பிரச்சனையில் நேரெதிராக இரு முரண்பாடுகளே இருக்க முடியும் என கருதுகின்றார்கள். அது தவறு மாறாக ஒரு பிரச்சனையில் பல தரப்பட்ட முரண்பாடுகள் நிலவ முடியும் என்ற மனிதத்தின் இவ் விவாதம் அடிப்படையில் தவறானது. ஒரு பிரச்சனையில் எப்போதும் எதிரும் புதிருமான இரு கூறுகள் இருக்கின்றது. இதை மாவோ முரண்பாடுகள் பற்றி... என்ற நூலில் தெளிவாக கூறுகின்றார். மாவோ கூறுகின்றார் இயக்கப்போக்கில் உள்ள முரண்பாடுகள் ஒவ்வொன்றிலும் எதிரும் புதிருமான இரு கூறுகள் உள்ளன. இவற்றைக் குறிப்பான இயல்பை வெளிப்படுத்தும் போக்கில் உட்சாரத்தை கண்டறிவது இயலவே இயலாது. நமது ஆய்வில் மிகக் கூடுதலான கவனம் இதில் செலுத்த வேண்டும். பெரும் நிகழ்ச்சிப் போக்குகள் எதை எடுத்துக் கொண்டாலும் அதன் வளர்ச்சிப் பாதையில் பல முரண்பாடுகள் இருப்பதை காணலாம் இது தொடர்பாக லெனின் இயங்கியல் பிரச்சனை பற்றி என்ற கட்டுரையில் கணிதத்திலும்:- கூட்டுதல், கழித்தல்: நுண்ணெண்ணும், முழுவெண்ணும் எந்திரவியலில்: வினையும், எதிர்வினையும்: இயற்பியலில் நேர்மின்னாற்றலும், எதிர் மின்னாற்றலும்: வேதியியலில்: கருக்களின் சேர்க்கையும், பிரிவும் சமூக விஞ்ஞானத்தில்:-வர்க்கப்போராட்டமும் ஆகும். இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிகழ்ச்சிகள். ஒன்றின்றி மற்றது இருக்க முடியாது. எனவே ஒரு பொருளில் எப்பொழுதும் எதிரும் புதிருமான முரண்பாடுகளின் தன்மையிருக்கும். ஒரு பிரச்சனையில் பல தரப்பட்ட முரண்பாடுகள் மட்டும் இருக்க முடியும் என்பது ஒவ்வொரு வர்க்கதிற்கும் இடையேயான முரண்பாட்டை மனிதம் சுட்டிக் காட்டினர். இதுவும் சரியானது. இவை ஒவ்வொரு வர்க்கத்துக்கிடையிலான முரண்பாடுகள் ஆகும. இவை நேரெதிரான தன்மையில் செயற்பட முடியும். இதை மாவோ,லெனின் மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

மனிதம் நிராகரிப்பது ஒவ்வொரு பிரிவுக்குமிடையில் எழும் குறித்த முரண்பாடுகளின் நேரெதிர்த் தன்மையே. தொடர்ந்தும் உயிர்ப்பு கூறுவதை மனிதம் மக்களைப் பொறுத்த வரையில் சிங்களப் பேரினவாதத்துகும், தேசியத்திற்கும் இடையிலான முரண்பாடு பிரதான வடிவம் பெறுவதனால்... என்று கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது. முரண்பாடுகள் பற்றி இவ் அணுகுமுறை தவறானது. சமுதாயத்தில் நிலவும் முரண்பாடுகள் ஒன்று பிரதான இடம் வகிக்கின்றது என்ற கருத்தானது ஏனைய முரண்பாடுகள் சமூதாய வளர்சசியில் செலுத்தும் பங்கை மறைமுகமாக மறுப்பதுடன், ஏனைய முரண்பாடுகள் பிரதான முரண்பாட்டின் அடிப்படையிலேயே நிலவுகின்றன என்ற கருத்து உருவாக்கப்படுகின்றது என்ற மனிதத்தின் கருத்தில், உயிர்ப்பு மிகத் தெளிவாக கூறுகின்றது. சிங்களப் பேரினவாதத்துக்கும், தமிழ் தேசியத்துககும் இடையிலான முரண்பாடு பிரதான வடிவம் பெறுவதனால்... என்று கூறுவதிலுள்ள பிரதான வடிவம் என்பதற்கூடாக அவர்கள் சமுதாயத்தில் பல முரண்பாடுகள் நிலவுவதை அங்கீகரித்துள்ளனர். ஆனால் நீங்களோ அப்படி உயிர்ப்பு கூறவில்லையென பின்வருமாறு கூறுகின்றீர்கள். ஏனைய முரண்பாடுகள் சமுதாய வளர்ச்சிக்கு செலுத்தும் பங்கை மறைமுகமாக மறுப்பதுடன் கட்டுரையை புரியாத வகையில் உயிர்ப்பு எழுதியதாகப்படவில்லை. மிகத் தெளிவாக ஒரு முரண்பாட்டின் பிரதான அம்சத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் பல முரண்பாடுகள் பிரதான முரண்பாடுடன் செயல்படும் என்பதை ஏற்றுள்ளனர். மனிதம் முரண்பாடுகள் பற்றிய இந்த அணுகுமுறை தவறானது என்று உயிhப்பின் கருத்தை மறுத்து தொடங்கும் பொழுது அதில் இன்னுமொரு விடயமும் தொங்கி நிற்கின்றது. அதாவது பிரதான முரண்பாடாக ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் நிலவ முடியம் என்பதே, அத்துடன் ஏனைய முரண்பாடுகள் பிரதான முரண்பாட்டின் அடிப்படையியேயே நிலவுகின்றன என்ற கருத்து உருவாக்கப்படுகின்றது. இவையிரண்டும் அடிப்படையில் தவறானது. இதை மாவோ சிக்கலான வள்ர்ச்சிப் போக்கில் பல முரண்பாடுகளை காணலாம். இவற்றில் ஒன்று கட்டாயம் முதன்மை முரண்பாடாக காணலாம். இதன் வாழ்வும் வளர்ச்சியும் இருதர முரண்பாடுகளின் வாழ்வையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கின்றது. அல்லது அவைகளின் மீது செல்வாக்கு செலுத்துகின்ற முதன்மை முரண்பாடாகவேயுள்ளது. இதை மாவோ முரண்பாடுகள் என்ற நூலில் உதாரணத்தின் ஊடாக முதலாளிய சமுதாயத்தின் முரண்பாட்டில் உள்ள இரு சக்திகள் பாட்டாளிவர்க்கமும் முதலாளிவர்க்கமும் ஆகும். இவை இங்கு முதன்மை முரண்பாட்டை உருவாக்குகின்றன. இந்த முதன்மை முரண்பாட்டால் நிர்ணியிக்கப்படுகின்றது அல்லது இதன் செல்வாக்குக்கு உட்படுகின்ற இதர முரண்பாடுகள் எஞ்சியுள்ள நிலவுடமை வர்க்கத்திற்கும், முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள முரண்பாடு பாட்டாளிவர்க்கத்துக்கும், விவசாய சிறுமுதலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள முரண்பாடு.... என தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். மனிதம் இவையெல்லாம் தவறு எனின், முதலில் மாவோவின் முரண்பாட்டை விமர்சித்து புதிய தத்துவத்தை முன் வைக்க வேண்டும். இதற்கு அப்பால் இடையில் ஒரு வரிகளுக்கூடாக சொல்லுவது அவர்களின் கருத்துக்களுக்கே கருத்துப்பலம் இன்மையை காட்டுகின்றது.

மீண்டும் மனிதம் கூறுகிறது மேல்நிலையில் இருக்கும் முரண்பாடானது ஏனைய மேலாதிக்கத்துக்காக போட்டி போடும் முரண்பாடுகளின் மேல் காத்திரமான பங்காற்ற முடியாது. மனிதம் மேலும் தமிழ்மக்கள் மத்தியில் சிங்கள பேரினவாதத்திற்கும், தமிழ்தேசியத்துக்கும் இடையிலான முரண்பாட்டை பிரதானமான முரண்பாடாக காட்ட முனைவது தவறு என்ற கருத்தை முன் வைக்கின்றனர். இப்படி சுட்டிக் காட்டியுள்ளனர். இதில் இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான ஜக்கியத்திற்கும் ஜக்கியமின்மைக்கும் இடையிலான முரண்பாடு எனக் குறிபிட்டதற்கு மாறாக மேற் கூறியது அமைந்துள்ளது. இந்த விவாதத்தை ஏன் முன் வைக்கிறார்கள் எனின் ஜக்கிய இலங்கைப் போராட்டமே இன்று எமது இலக்கு என வாதிடவே. ஜக்கிய இலங்கை எனின் மனிதம் வைத்த கருத்துக்கு தூண்டில் அளித்த பதிலுக்கு இன்றுவரை கருத்தியல் ரீதியில் விமர்சனத்தை முன் வைக்காமல் இன்று மீண்டும் மறைமுகமாக தமது கருத்தை திணிக்க முயல்வது ஏன்? இது இயங்கியலுடனான விமர்சன முறையல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

இனி மனிதம் கூறிய முதன்மை முரண்பாடாக போட்டியிடும் மூன்று முரண்பாடுகளையும் ஆராய்வோம்.

(1) இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான ஜக்கியத்துக்கும் ஜக்கியமின்மைக்கும் இடையிலான முரண்பாடு.

(2) இலங்கையில் நிலவும் பாசிசத்துக்கும் ஜனநாயகத்துக்குமிடையிலான முரண்பாடு.

(3) இலங்கை மக்கள் மேல் ஆதிக்கத்தை நிறுவமுனையும், நிறுவியிருக்கும் ஏகாதிபத்தியத்துக்கிடையிலான முரண்பாடு.

இதில் மூன்றாம் முரண்பாடு முன்னைய மனிதத்தின் விவாதமான இலங்கையில் தரகு முதலாளிவர்க்கம் ஒரு இயங்குசக்தியென்று நாம் பார்க்கமுடியுமா? தான் திட்டமிட்டு ஏனையவற்றை முன்னெடுக்கும் ஒரு சக்தியாக இலங்கையில் தரகுமுதலாளித்துவத்தை பார்க்க முடியுமா? என்ற கருத்துக்கும் முற்றிலும் மாறுபட்டது. ஏன் மனிதத்திற்கு இந்தக் குழப்பம்? முன் சொன்னதற்கு மாறாக சில உண்மைகளை மீண்டும் சொல்லி விடுகின்றார்கள். இனி மூன்று முரண்பாட்டையும் பாhப்போமாயின்: முதலாவதாக மனிதம் குறித்த முரண்பாடு இன்று பிரதான முரண்பாடாக போராடுகின்றதா? நிச்சயமாகவில்லை. இன முரண்பாடு தீவிரமடைய முன் ஜக்கியத்திற்கும், ஜக்கியமின்மைக்கும் இடையிலான முரண்பாடு தமிழ்மக்களுக்கும், சிங்கள பேரினவாதத்திற்கும் இருந்த முரண்பாடுகள் ஒன்றையொன்று மிஞ்சி மேல் நிலையை அடைய போட்டியிட்டது. ஆரம்பத்தில் ஜக்கியம் ஜக்கியமின்மைக்கிடையிலான பிந்திய காலத்தில் தமிழ்மக்களுக்கும் சிங்கள பேரினவாதத்திற்குமிடையிலான இனமுரண்பாடு மேல் நிலைக்கு வந்ததை தொடர்ந்து, இம் முரண்பாடே பிரதான முரண்பாடாக மாறியுள்ளது. இக் கட்ரையில் அடுத்த பந்தியில் ஜக்கியம், ஜக்கியமின்மையின் பகுதி முரண்பாடாக இனமுரண்பாட்டை வரையறுக்க முயல்வது இன்றைய நிலையை, இயங்கியலுடன் ஆராயாது தமது முடிவுகளுடன் பொருத்த முனைவதாகும். நாம் தொடர்ந்து மனிதத்தில் கூறிய மூன்று பிரதான முரண்பாட்டில் முன்னணியில் உள்ளது என குறிப்பிட்டதில் நாம் முதலாம் முரண்பாட்டை தமிழ் மக்களுக்கும் சிங்கள பேரினவாதத்திற்குமானதென வரையறுத்துக் கொண்டே ஆராய்கின்றோம்.

இம் மூன்று முரண்பாடுகளும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டவையே. பிரதான முரண்பாடு இல்லாதபோது மற்றவை இருக்க முடியாது. இவற்றின் உருவாக்கம் எப்போதும் ஒன்றை மையமாக வைத்தே உருவானது. இலங்கையில் மக்களுக்கும் தரகு முதலாளித்துவத்துக்கும் (ஏகாதிபத்தியத்துக்கும்) நிலப்பிரபுத்துவத்துக்கும் இடையில் முரண்பாடாக இருந்த போதும் நீங்கள் குறிப்பிட்டவற்றில் இரு முரண்பாடுகள் அதற்குட்பட்டவையாக, பிரதான முரண்பாட்டுடன் வாழ்வையும், வளர்சியையும் கொண்டிருக்கின்றது. இப் பிரதான முரண்பாடு இன்று நீங்கள் குறிப்பிட்ட முதலாம் இரண்டாம் முரண்பாடாகவே உள்ளது. இம் முரண்பாடே சிங்களப் பேரினவாதத்திற்கும் தமிழ் இனத்துக்குமிடையிலான தேசியப் போராட்டமாக வளர்ந்துள்ளது. இதன் வளர்ச்சியில் இன்று பாசிசம் இல்லாமலோ, ஏகாதிபத்திய ஆதிக்கம் இல்லாமலோ இம் முரண்பாடு உயிர்வாழ முடியாது. இதில் தேசிய பிரதான முரண்பாடாக இன முரண்பாடு மாறிய பின் மற்றைய இரு முரண்பாடுகளும் வளர்ந்து மிக இறுக்கமாக இம் முரண்பாட்டுடன் இணைந்துள்ளது. இன முரண்பாட்டை வெற்றி கொள்வதனூடாக மற்றைய இரண்டும் வெற்றி கொள்ளப்பட முடியும்.

இதைத் தொடர்ந்து மனிதம் இன முரண்பாட்டை பகுதி முரண்பாடாக ஜக்கியம், ஜக்கியமின்மையில் உள்ளதெனச் சொல்லிய பின் சிங்களப் பேரினவாதத்துக்கும் தமிழ்மக்களுக்கும் இடையேயான முரண்பாடு பிரதான முரண்பாடாகவிருந்தால், தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டை எப்படி விளக்குவது எனக் கேட்டுள்ளனர். இதில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான முரண்பாடு வளர்ந்து வருகின்றது. இதன் வளர்ச்சியின் போக்கில் தமிழ் இனவாதிகளுக்கும் முஸ்லீம் மக்களுக்குமிடையிலான முரண்பாடு முன்னிலைக்கு போட்டி போட முடியும். இது சிலவேளை சிங்கள முஸ்லீம் மக்கள் இணைந்து தமிழ்மக்களுடன் ஒரு பிரதான முரண்பாடாக மாறலாம். இது முரண்பாடுகளைக் கையாளுவதிலுள்ள தன்மையைப் பொறுத்தது.

தொடர்ந்தும் மனிதம் அளவில் பெரிதாக தெளிவாகத்தெரிவதாக இருக்கும் இந்த முரண்பாட்டையே பிரதான முரண்பாடாக கருதுவது பிரச்சனையை தீர்க்க உதவாது என்ற வாதம் மேற்குறிப்பிட்ட மாவோ,லெனின் விவாதத்திற்கு மாறுபட்ட கருத்தாகும். திரிபுகளுக்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புவது முதலில் மார்க்சிய நூல்களை வரிக்கு வரியாக விமர்சியுங்கள். அதனூடாக புதிய தத்துவத்தை முழுமையாக வையுங்கள். இதற்கு மாறாக இயங்கியலை நிராகரித்து, ஒற்றைவரிகளில் வாசகர்களை திசைதிருப்புவதும், கருத்துக்களை திணிக்க முயல்வதும் விமர்சனம் ஆகாது. அத்துடன் ஒற்றவரிகளில் வைப்பதை(மார்க்சியத்தை தான் விமர்சிக்காவிட்டாலும் பரவாயில்லை) ஆதாரத்துடன் இயங்கியலுடன் முன்வையுங்கள்.

உயிர்ப்பு குறிப்பிட்ட பாசிசம் என்பது குறிப்பான பிரச்சனையாகவும் தமிழ்மக்களின் தேசவிடுதலையென்பது பொதுவான பிரச்சனையாகவும் கூறப்பட்டதை மனிதம் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறும் இக்கருத்தானது, பாசிசத்தை மட்டும் ஒழித்தால்: தேசிய இனப்பிரச்சனையை தீர்த்துவிடமுடியுமென வாதாடுகிறார்கள். பாசிசம் என்பது வேறு ஒரு பிரதான முரண்பாட்டின் இருப்புடன் ஒன்றானது. இது தேசிய இனமுரண்பாட்டின் வளர்ச்சியில் தன்னகத்தே பாசிசத்தையும் கொண்டிருக்கும். இலங்கையில் தீவிரமடைந்த தேசிய இனப்பிரச்சனையுடன் பாசிசம் வளர்ந்து ஒன்று கலக்கின்றது. மக்கள் தேசிய இன முரண்பாடடுக்கு எதிராக போராடும் பொழுது பாசிசம் மக்கள் மீது கட்டவிழ்து விடப்படுகின்றது. இம்முரண்பாட்டில் எழும் கோரிக்கை இல்லாத போது பாசிசம் இல்லாமல் போய்விடும்.

உயிர்ப்பு மேலும் சொன்ன புலிகள் பாசிசம் பற்றிய விமர்சனங்கள் எதுவும் தமிழ் தேசத்துக்குள் தோன்றியுளள்ள உள்முரண்பாடு என்ற எல்லைக்குள்ளாகவே முன்னெடுக்கப்பட வேண்டும. இதை மனிதம் ஒரு சமுதாயத்தில் நிலவும் உள்முரண்பாடு வெளிமுரண்பாடு என்று பார்க்கலாமா? இல்லை என்ற இக் கருத்து அடிப்படை மார்க்சியத்துக்கு விரோதமானது. இதை மாவோ முரண்பாடு பற்றி என்ற நூலில் பொருட்களின் வளர்ச்சியென்பதே அப் பொருட்களின் உள்ளியக்கம் அவற்றின் இன்றியமையா தன்னியக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும். அதே வேளையில் ஒவ்வொரு பொருளின் வளர்ச்சிக்கான அடிப்படைக்கு காரணம் பொருளுக்கு வெளியே இருப்பதன்று, அதற்குள்ளேயே இருப்பதாகும். இது அதற்குள் நிலவும் முரண்பாட்டில் பொறுத்துள்ளது. ஒவ்வொரு பொருளிலும் இந்த உள்முரண்பாடு(அகமுரண்பாடு) இயல்புள்ளது. இக் கருத்து உள்முரண்பாடு வெளிமுரண்பாடு என ஒரு சமுதாயத்தில் ஒரு போராட்டத்தில்... என அனைத்திலும் இருக்கும். எனவே மனிதம் ஏதோவொன்றை நிறுவும் போக்கில் இயங்கியலுக்கு மாறாக, அடிப்படை மார்க்சியத்தை திரித்தும், மறுத்தும் திணிக்கவே முயல்கின்றனர். இம் முறை மார்க்சிய அடிப்படை(மார்க்சிய அடிப்படை தவறு என கூறுகின்றனர்) விவாத முறைக்கே மாறுபட்டதாகும். இருந்தும், மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புவது உங்கள் கருத்துக்களை ஆதாரத்துடன் முன் வையுங்கள். அத்துடன் விவாதத்தை தொடர்ந்து நடத்தும் அணுகுமுறையை கைக்கொள்ளும்படியும் கோருகின்றோம்.

தேசிய சக்திகள் பற்றிய தூண்டில் மீதான விமர்சனம்

தூண்டில் 41-இல் சமர் கூறுவது போல் புலிகள் தரகுமுதலாளித்துவ போக்குள்ளவை தானா என்பது ஆய்வுக்குரியது. ஏன் என்றால் அப்படியடித்து கூறியிருக்கும் காரணங்களைப் போலவே இன்னும் சரியாக கூறுவதானால் அப்படியில்லையென அடித்து கூறவும் காரணங்கள் இருக்கின்றன. புலிகள் தமிழ் தரகுமுதலாளித்துவத்தின் போக்கை காட்டுபவர்கள் என்றால் ஏன் அவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணி போல இன்று விட்டுக்கொடுத்து சரணடையவில்லை? அவர்களுக்கு ஒரு தேசியவாதம் இருக்கிறது. இதன் பின் புலிகளிடம் இருக்கும் சிந்தனை முதலாளித்துவ தேசியவாதத்தில் எவ் வகைப்பட்டது என்று ஆராய்வது அது தரகுமுதலாளித்துவ வகைப்பட்டதா, தேசியமுதலாளித்துவ வகைப்பட்டதா என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை. நாம் இந்த இடத்தில் அவசரப்பட்டு தீர்வு சொல்லவிரும்பவில்லை|| பின்னால் தொடர்ச்சியாக புலிகளையும் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் ஒப்பிட்டு மதிப்பிடும் போது அரசியல் நீரோட்டத்தையிட்டு அவநம்பிக்கையுடன் அணுக வைக்கிறது. ஆயினும் இது அதுவாக முடியாது மாறமாட்டாது என அடித்து கூறமுடியாது|| தொடர்ந்தும் உந்த அபிப்பிராயத்திலே புலிகள் தரகுமுதலாளித்துவவாதிகள் அல்ல என்பது தெளிவுதானே? இன்னும் இல்லை அதாவது இன்றுவரை அவர்கள் அந்தப் பிடிக்குப் போகவில்லை. நாளை போகக் கூடும்|| என்ற தூண்டிலின் கருத்துக்களை பார்ப்போமாயின் "புலிகள் தரகுமுதலாளிகள் தானா என்பது ஆய்வுக்குரியது. புலிகள் முதலாளித்துவ தேசியத்தின் எந்த வகையென ஆராய்வது தமிழ் தரகுமுதலாளித்துவமா? தேசியமுதலாளித்துவமா? இது தொடர்பாக அவசரமாக தீர்வு சொல்ல விரும்பவில்லை. மாற மாட்டாது என அடித்துச் சொல்ல முடியாது. இன்னும் இல்லையென்ற" சொற்களுக்கூடாக தூண்டில் தரகு முதலாளிகள் என்பது ஆய்வுக்குட்பட்டதாகவும் இன்னும் நிராகரிக்காத தன்மையுடன் ஆய்வுடன் நிற்கின்றார்கள். மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தில் எந்தவகையென ஆராய்வதும், அது தரகுமுதலாளித்துவ வகைப்பட்டதா? தேசிய முதலாளித்துவ வகைப்பட்டதா? என்பதையும் சுட்டிக் காட்டியுமுள்ளனர். இக் கட்டுரையில் தூண்டில் புலிகள் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு உட்பட்ட ஒரு பிரிவென மட்டும் எனக் கூறி அவர்கள் தேசிய முதலாளித்துவ பிரதிநிதிகளா? அல்லது தரகுமுதலாளித்துவ பிரதிநிதிகளா? என்பதை விவாதத்துக்கு விட்டுவிடுகின்றனர்.

தூண்டில் 48-இல் முதலாளித்துவ தேசியவாதம் போன்ற பதங்களை புலிகள் குறித்து பாவிக்கின்றபோது அவர்கள்( சமர்) மறுத்துரைக்கின்ற வேகத்தைப் பார்த்தால் தேசியவாதம் தொடர்பாக அவர்களுக்கும் ஒரு வித தூய்மைவாத அபிப்பிராயம் இருப்பதாக படுகின்றது. இது தொடர்பாக சமருக்கு தூய்மைவாதம் கிடையாது. முதலாளித்துவ தேசியவாதத்தில் தனக்கே உரிய சுரண்டும் இயல்பை சமர் மறுத்துவிடவில்லை. முதலாளித்துவ தேசியவாதத்தில் நீங்கள் குறிப்பிட்ட இரு பிரிவுகளும் ஒன்றாக ஒரு பிரச்சனையை கையாள முடியாது. இதில் தனித்தனியாக ஒவ்வொன்றும் தேசியப் போராட்டத்தை தனது நோக்குநிலையில் நின்று போராட முற்படும் இரண்டும் தேசிய விடுதலைப் போராட்டத்தை தனக்கு சாதகமான பயன்படுத்த முனையும். அதிலிருந்து மக்கள் மீதான ஒடுக்குமுறையும் மாறுபடும் தன்மையிருக்கும். இதில் புலிகள் எந்தப் பிரிவு என்பதிலிருந்தே எமது விவாதம். அன்று பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் புரட்சி செய்த போது அதிலிருந்த முற்போக்கு அம்சங்கள் பின் அவசியமற்றனவாகி விட்டன என்ற கருத்து சரியானது. இதை மூன்றாம் உலகநாடுகளிற்கும் நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்காமல் இருக்கும் நாடுகளுடன் பொருத்துவது சரியானதா? இங்கு நிலபிரபுத்துவத்துக்கு எதிரான சக்திகள் முற்போக்கை ஏன் பிரதிபலிக்க முடியாது. இப்படி உருவாகும் தேசிய முதலாளித்துவ வாதிகள் ஒரு பாட்டாளிவர்க்கப் போராட்டத்தில் முற்போக்காக இருந்தாலன்றி இன்றைய நிலையில் சாத்தியமா? இது தொர்டபாக கீழே ஆராய்வோம.

பிற வர்க்கங்களின் ஜனநாயக கோரிக்கைகள், பாட்டாளி வர்க்கப் புரட்சி என்பவை பற்றிய அச்சம்|| இவை கூட முன்னையது போல் முதலாளித்துவ தேசிய சக்திகள் முற்போக்காக இருக்க முடியாது எனக் காட்ட முன்னெடுக்கப்பட்ட விவாதமே. இக் கருத்து சோவியத்தின் சோசலிச புரட்சிக்குப் பின் பல நாடுகளில் இருந்தும் முதலாளித்துவ சக்திகள் இணைந்து போராடியுள்னர். உதாரணம் சீனா, நிக்கரக்குவா, கம்பூச்சியா, பிலிப்பையின்ஸ், வியட்நாம்.... இப்படி பல நாடுகளை காணலாம். தூண்டிலின் விவாதம் முற்போக்கைப்பற்றி தீர்மானிக்க ஒரு பூரணமான முழுமையாகப் பார்க்க முடியாது. அன்றைய தேசியவாதத்தலைவர் சன்யாட் சென்னை முதலாளித்துவ தேசியவாதத்தின் பிரதிநிதியாக கருதுகின்றது. சன்யாட் சென் இன்று இருந்தால் கூட அன்று இருந்தது போல் இருந்திருக்க முடியாது||. இதை நாம் ஒரு நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்கிறோம். அதாவது ஒரு பாட்டாளிவர்க்கம் பலமான நிலையில், ஜக்கிய முன்னணிக்குள்ளோ, வேறு அமைப்பாகவோ சன்சாட்சென் போல ஒருவர் இருக்கமுடியும். சன்சாட்சென் இருந்த காலம் நிதிமூலதனத்தின் ஆதிக்கம் பெரிதாக ஏற்படாத, தரகுமுதலாளித்துவம் என்ற சக்தி ஆதிக்கம் பெரிதாக பெறாத காலம். இக் காலத்தில் முதலாளித்துவ தேசியவாதம் காலனியாதிக்கத்தையும் நிலப்பிரபுத்துத்தையும் எதிர்ப்பதாகவிருந்தது. இன்று தரகுமுதலாளித்துவ ஆதிக்கத்துக்குள் முழுமையாக உட்பட்ட நிலையில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் ஆதிக்கத்தை நிகழ்த்தும் அளவிற்கு பலம் பெற்றுள்ளது. தரகுமுதலாளித்துவதிற்கு எதிராக உறுதியாக கருத்தை வைத்து உருவாகாத எந்த சக்தியும் தரகுமுதலாளித்துவத்தின் நேரடி, மறைமுக ஆதிக்கத்துக்குள் செல்வார்கள். இந் நாடுகளில் தேசியமுதலாளித்துவ பிரிவு எப்போதும் உறுதியாக இருப்பதாயின், பாட்டாளிவர்க்கம் பலமான நிலையில் ஒரு ஸ்தாபனமாக மட்டும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். பாட்டாளி வர்க்கக் கட்சி பலமாகவில்லாத நிலையில் அங்கே தேசிய முதலாளித்துவம், தரகுமுதலாளித்துக்கு எதிராக குரல் கொடுக்க முடியாதவகையில் தரகுமுதலாளித்துவததிற்குள் உள்வாங்கப்பட்டு விடுவார்கள். இது எம் மண்ணில் உருவான அனைத்து இயக்கங்களையும் வைத்தே புரிந்து கொள்ள முடியும். தரகுமுதலாளித்துவத்துக்கு எதிராக குரல் கொடுத்த சிறு இயக்கங்களான என்-எல்-எவ்-டி- பி-எல்-எவ்-டி-தீப்பொறி சோரம் போகாமல் இருந்ததும், சில இயக்கங்கள் இந்திய சார்பாகவும் (சோவியத் சார்பாகவும்) மாறியதுடன் புலிகள் மேற்கத்தைய சார்பாகவும் செயற்பட்டு வருவதை பார்க்க முடியும். ஒரு சுதந்திரமான தேசிய சக்தியென ஒன்றுமே எம் மண்ணில் இல்லை. ஆகத் தனிநபர்களாக மட்டுமே உள்ளனர். புலிகள் இன்று போராடும் தன்மையை ஏகாதிபத்தியம் தனது நலன் நோக்கி கையாளுவதே இலங்கையிலுள்ள தேசிய இனமுரண்பாட்டில் எழும் போராட்டம் முற்போக்காக நகர்வை தடுக்கவும், ஒரு வர்க்கப்போராட்டம் உருவாகாமல் தடுக்கவும், இந்தியாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், தென்னாசியாவின் உறுதித்தன்மையை தடுக்கவும்... மேற்கத்தைய ஏகாதிபத்தியம் முயலுகின்றது. இதில் இன்று பயன்படும் சக்திகளில் புலிகளும் ஒன்று. இந்த நோக்கில் பயன்படுத்தப்படும் போது தமிழ் மக்களின் கோரிக்கையை கையில் எடுப்பது தவிர்க்க முடியாது. தமிழர் விடுதலைக்கூட்டணியினர் 1950 முதல் ஒரு மத்தியதர இயக்கமாக வளர்ந்து அதன் வளர்ச்சியில் ஏகாதிபத்தியம் சார்ந்து சென்றதையும் இன்று நாம் பார்க்கிறோம். இவர்களை அம்பலப்படுத்த 30வருடங்கள் சென்றன. இவர்கள் தமிழ் மக்களின் முழுக் கோரிக்கைகளையும்(ஏகாதிபத்தியத்தின் தரகுவாக இருந்து கொண்டே) வைத்து போராடுவது போல் செயற்பட்டனர். இதைப் போல் இன்று புலிகளின் செயற்பாடுகள் தேசியத்தின் மீது செயற்படுத்துகின்றனர். ஆனால் இவர்கள் ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளைகளாகவும் உள்ளனர். இதை அவர்களின் பல நடவடிக்கைகள் எமக்கு எடுத்துக் காட்டியதை முன்பு சுட்டிக் காட்டினோம்.

தூண்டில் தொடர்ந்து சமர் சொந்த நலன் குழுநலன் என்ற பதங்களைப் பாவிக்கின்றதே ஒழிய தரகுமுதலாளிய வர்க்க நலன் எவை? அதன் அரசியல் கோசங்கள் எவை? அவை எப்படி புலிகளுடன் கோசங்களுடன் பொருந்துகின்றன எனச் சுட்டிக் காட்டவில்லை|| என்ற கருத்து தொடர்பாக முன்பு ஒரளவுக்கு சொல்லியுள்ளோம். இக் கருத்தையொட்டி மீண்டும் ஆராய்வோமாயின் சொந்த நலன், குழுநலன் என சொல்வது குறித்தவொரு பகுதி மட்டும் தங்களை மையப்படுத்தி செயற்படும் தன்மையைத்தான். இத் தன்மை தரகு முதலாளித்துவப் பிரிவுக்கு ஒரு சிறப்பான அம்சம் கூட. இக் குழுநலன் தரகாக இருக்கும் குறித்த பிரிவினரை சிறப்பாக சுட்டிக்காட்ட பயன்படுத்தியதே. இச் சக்திகளின் நலன்கள் ஒரு நாட்டை முழுமையாக ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் வகையில் கையாள்வதே. தேசியப்போராட்டம் தீவிரமடையும் முன்பே, இலங்கை தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ நாடாக இருந்தும், தேசியவிடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த பின் எந்த மாற்றமும் தரகு முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தின் மீது நிகழவில்லை. தொடர்ந்தும் பேணப்படுவதுடன் மேலும் நாட்டை அடகு வைக்கவும் முயலுகின்றனர். தேசியவிடுதலைப் போராட்டம் தொடங்கிய பின், இருந்த சில தேசிய முதலாளித்துவ சொத்துக்கள், செயற்பாடுகள் முற்றாக அழிக்கப்பட்டது. தேசியவிடுதலைப் போராட்டத்தின் பின் அறிமுகம் செய்த சில உள்நாட்டு உற்பத்திகள் கூட இன்று அழிக்கப்பட்டு விட்டது. புலிகள் போராடப் பயன்படுத்தும் ஆயுதங்கள் முழுமையாக ஏகாதிபத்தியத்திடமிருந்தே பெறுகின்றனர். உள்ளுரில் சில வகையான ஆயுதங்களை தற்போது செய்த போதும் (அவை பெருமளவில் வெளியிலிருந்து கொண்டுவரும் நெருக்கடியினால் தான்) சில அடிப்படை ஆயுதங்களை சுயமாக செய்ய முனைந்தவர்களை(உள்ளுக்குள்)கொன்றுள்ளனர். ஏனெனில் சுய ஆயுதவுற்பத்தி சுயமான விடுதலைக்கு வித்திடும் என்பதாலேயே. புலிகள் பயிற்சி எடுத்த இடங்கள், இன்று சர்வதேச போதைவஸ்துக்களுடன் உள்ள தொடர்பு, மற்றும் யாழ் கடத்தல்காரர்களின் (அன்னியப் பொருட்களை சிங்கள தரகுமுதலாளித்துவத்துக்கு எதிராக கடத்தும் தமிழ் தரகுமுதலாளித்துவம்) ஆதிக்கம் புலிகள் எதைச் சார்ந்துள்ளனர் என்பதை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

இன்று சுயவுற்பத்தி கேள்வி தாள்களில் சுயவுற்பத்தியுடன் அமைந்த கேள்விகள், இவைகளை வைத்துக்கொண்டு தேசியத்தின் பற்றினால் தான் வருகிறது எனச் சொன்னால் தமிழர்விடுதலைக் கூட்டணி இப்படி எத்தனையோ கூறினார்கள். குறிப்பான இச் செயற்பாடுகள் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள பொருளாதார நெருக்கடியும் மக்கள் மீதான புலிகளின் பாசிச நடவடிக்கை ஏற்படுத்தும் எதிர்ப்பு உணர்வும், தங்கள் மீது பாயும் என்ற ஒரு அம்சம் காரணமாகவே சுய பொருளாதாரம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் (சிறைகள், நீதிமன்றங்கள், பொலீஸ் சேவை உருவாக்கி ஒரு சிலவற்றை (அரசியல் கைதிகள் அல்ல) விசாரித்து நாடகமாட முற்படுகின்றனர். இவைகளிலிருந்து தேசியம் பற்றி மதிப்பிட முடியாது. புலிகளின் கோசங்கள் அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி 1980க்கு முன் நடத்தியது போலவே உள்ளது. வெளியில் வைக்கும் கோசத்தை மட்டும் வைத்து (அமெரிக்க ஜனாதிபதியின் ஜனநாயகக் கோரிக்கைகள், சீரழிந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கோசங்கள் போன்று) நாம் தரகா தேசியமாவென மதிப்பிட முடியாது. அவர்களின் நடவடிக்கை தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. அந்த வகையில் புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் தேசியத்தின் பெயரால் ஏகாதிபத்தியத்திற்க்கு சிறப்பாக சேவை செய்கின்றது.

எமது சொந்த மக்கள் உயிர்வாழ பனம்பழத்தைச் சூப்பும் பொழுது, புலிகள் கொக்கோகோலாவும் சீஸ. இன்றியும் வாழ முடியாது உள்ளனர். சொந்த நாட்டின் உற்பத்தியில் தம்மைக் காத்துக்கொள்ள முடியாதவர்கள் சொந்த உற்பத்தி பற்றி அக்கறை காட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. தேசிய முதலாளித்துவம் எனின் தேசியத்தன்மை தெளிவானதாக இருக்க வேணடும். சொந்தத் தேசத்தில் தேசியம் கட்டியெழுப்பப்பட வேண்டும். தேசியம் கட்டியெழுப்ப ஒரு போராட்டத்தில் மிக சாதகமான(புலிகள் இன்று தளப்பிரதேசத்தை) தன்மையை கொண்டுள்ளனர். இன்று அன்னிய சக்திகளின் தயவில் சொந்த உற்பத்தியை தடுக்கும் வகையில் முழுமையாக செயற்பட்டு வருகின்றனர்.

"தமிழ் மக்களின் இன்றைய போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டம்|| இதில் சமருக்கு எந்த கருத்து முரண்பாடும் கிடையாது. இப்போராட்டத்தை ஒவ்வொரு சக்தியும் தனது நோக்கில் கையாளும. இதில் புலிகள் தனது நோக்கில் கையாளுகின்றது. புலிகள் என்னும் போது இவ் வியக்கம் ஆரம்பத்தில் குட்டிபூர்சுவா இயக்கமாக இருந்தது. தனது இருப்பையொட்டி தொடர்ந்து ஏகாதிபத்தியத்துடன் சரணடைந்தது. இவ்வியக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் மிகத் தெளிவாக இன்று வெளிவருகின்றது. அவர்கள் எந்தப் பின்தளத்தில் நிற்கிறார்கள் எங்கிருந்து உதவியைப் பெறுகின்றார்கள் இவைகள் தொடர்பாக முன்பு நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.

நிலவுகின்ற அரசியல் காலகட்டம் இதை எடுப்பின் இலங்கையில் இனமுரண்பாடு பிரதான முரண்பாடாக உள்ள நிலையில், தமிழ் தரகு முதலாளிவர்க்கம் சிங்கள தரகுமுதலாளித்துவத்தின் பாதிப்பால் இவ் இன முரண்பாட்டை சாதகமாக பயன்படுத்துவதில் முனைந்துள்ளது. இதற்கு இசைவாக சர்வதேச நிலைமையுள்ளது. ஏகாதிபத்தியத்தின் நிதி மூலதனத்தின் ஊடாக மூன்றாம் உலக நாடுகளை கட்டுப்படுத்துகின்றனர். இன்று ஏகாதிபத்தியம் அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ் வகையில் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது. இதை பல உதாரணங்கள் மூலம் பார்க்கலாம். பங்களாதேஷ், சூடான், எரித்திரியா, குர்தீஸ், ஆப்கானிஸ்தான்.... இப்படி எல்லாப் போராட்டத்தையும் முழுமையாக ஏகாதிபத்தியம் பயன்படும் வகையில் உள்ளுர் தரகுமுதலாளித்துவம் பயன்படுத்தப்படுகின்றது.

தேசிய முதலாளித்துவ சக்திகள் இருக்க முடியாது என்ற எடுகோளில் இருந்து கட்டியெழுப்பபடும் இந்த தர்க்கம் சமரை அறிpயாமலேயே நடக்கின்ற போராட்டம் தேசியப் போராட்டம் என அங்கீகரிப்பதில் சமரை கொண்டு போய்விட்டு விடுகிறது என்ற தூண்டிலின் வாதத்தில் தேசிய முதலாளித்துவம் இருக்கமுடியாது என்ற வாதம் எப்படி நடக்கும் போராட்டத்தை தேசிய விடுதலைப் போராட்டமா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்கின்றது? ஒரு வர்க்கம் இருக்கின்றதா, இல்லையா என்பதில் இருந்து போராட்டத்தை தேசிய போராட்டமாக வரையறுக்க முடியாது. சமர் இன்று தமிழ் மக்கள் முன்னுள்ள போராட்டத்தை தேசிய விடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கின்றது. அதிலிருந்தே நாம் விவாதத்தை நடத்துகிறோம். இப் போராட்டத்தை புலிகள் தம் நலன்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதே போல் எல்லா வர்க்கங்களும் தமது நோக்கில் பயன்படுத்த முயலும். மற்றும் தேசிய முதலாளித்துவ சக்திகள் இருக்கமுடியாது என்ற எமது வாதம், மூன்றாம் உலக நாடுகளில் இன்று ஏகாதிபத்தியத்தின் பிடி இறுகி வரும் இன்றைய நிலையில் ஒரு சுதந்திர முதலாளி உருவாக முடியாது. அவர்கள் தரகுமுதலாளியாகவே அன்றி மத்தியதர நிலைக்கோ மாற்றப்பட்டு வருகின்றனர். மத்தியதரத்துக்கு மாறும் இவர்கள் கூட போராட்டத்தில் உள்ள வெற்றியில் நம்பிக்கையிழந்து தரகு முதலாளித்துவத்துடன் இணைந்து கொள்கின்றார்கள். இதை எம் நாட்டில் உருவான இயக்கங்களைக் கொண்டே பார்க்க முடியும். இக் கருத்தையொட்டி மேலும் தூண்டில் தரகுமுதலாளிவர்க்கத்தின் அரசியல் கோரிக்கைகள் எப்படி அமையும் என்று அது குறித்து காட்டவில்லை|| இது தொடர்பாக நாம் விளக்கியுள்ளோம். தரகுமுதலாளித்துவம் அப்பட்டமாக தாம் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் என சொல்வதில்லை. அதே போல் அரசியல் கோரிக்கைகளை நேரடியாக வைப்பதில்லை. அதுவும் ஒரு விடுதலை அமைப்பு மேலும் இதை இரகசியமாக கையாண்டால் மட்டுமே உயிர் வாழ முடியும். எப்போதும் அரசியல் கோசங்களில் இருந்து ஓரு அமைப்பு பற்றிய முடிவுக்கு வருவதாயின், சரியான கட்சி ஒரு உண்மையான சோசலிச அரசில் மட்டுமே சாத்தியம். இதற்கு மாறாக சுரண்டல் அமைப்புக்களை சரியாக இனம் காண அவர்களின் நடவடிக்கைகள், யாரை சார்ந்துள்ளார்கள் என்பதைக் கொண்டே அறிய முடியும். இதில் புலிகளின் அரசுக்கு எதிரான செயற்பாட்டை நீங்கள் குறித்துக் காட்ட விரும்பலாம். இச்செயற்பாட்டை முன்பு விளக்கியிருந்தாலும் மீண்டும் ஆராய்வோமாயின் தேசியத்தை சொல்லும் அனைவரும் தேசியவாதியாக இருப்பதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக ஹிட்லர், சதாம்உசையின், பிரேமதாசா........ இப்படிப் பார்க்கலாம். மக்களின் தேசிய உணர்வை சிறப்பாக பயன்படுத்தும் இவர்கள் தரகுமுதலாளிகளே. இவர்கள் யாருடன் சிறப்பான உறவை கொண்டிருக்கிறார்கள் எனப் பார்ப்பின் அவர்களின் வர்க்க மூலத்தை பார்க்கலாம். இதை லெனின் ஒரு மனிதனை அவனது நண்பர்களைக் கொண்டு மதிப்பிடலாம். அவனது அரசியல் கூட்டாளிகள் அவனுக்காக வாக்களிப்பவர்கள் ஆகியோரை கொண்டு ஒரு மனிதனது அரசியல் வண்ணம் இன்னதென கூறிவிடலாம் (லெனின் தேர்வு நூல் தொகுதி-2 பக்கம்-240) இதிலிருந்து புலிகளின் நண்பர்கள் தேசியவிடுதலைப்போராட்டத்தை நேசிக்கும் மக்களல்ல ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளுமே.

தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் என்றவோர் வரையறை, யாருடைய பிரதிநிதியென சொல்ல முடியாது என்பதை தூண்டில் ஒத்துக்கொள்கிறது. புலிகளின் நண்பர்கள் இன்று தெளிவானது. யாருடைய பிரதிநிதியென சொல்ல முடியாது என்பதில் தூண்டில் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லவில்லை என்கிறார்களே. இது சிக்கலான கேள்விதான். சிக்கலுக்கான காரணம் தேசிய விடுதலைப்போராட்ட காலகட்டத்தில் இது இருப்பதே. உதாரணமாக ஜப்பானிய எதிர்ப்பு போராட்டமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போது கட்சி யாருடைய பிரதிநிதியாக செயற்பட்டது என்று சொல்லலாமா? இல்லை, அது முழு மக்களினதும் அனைத்து தேசியவர்க்கத்தினதும் நலன்களை கருத்தில் கொண்டது||. எனவே புலிகள் தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபடுவதை மட்டும் கொண்டு அதை மதிப்பிட முடியாது. யாரின் கூட்டாளியாக செயற்படுகிறது என்பதிலிருந்தே புலிகளைப் பார்க்க வேண்டும்.

அவர்களது போக்கு முதலாளித்துவ தேசியவாதம் என நாம் கூறுகின்றோம். அவர்களின் பின்னால் உள்ள சக்திகள் யார் என்றால் இந்தக் கோரிக்கைகளின் தேசியத்தன்மையின் காரணமாக முழுத்தேசிய வர்க்கங்களுமே நிற்கின்றனவெனக் கூறவேண்டும் என்ற இவ் விவாதம் தொடர்பாக முதலாளித்துவ தேசியவாதம் தொடர்பாக தூண்டிலின் பார்வையில், தரகுமுதலாளித்துவத்தையா அல்லது தேசிய முதலாளித்துவத்தையா பிரதி செய்கிறது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இவர்கள் பின் எல்லா வர்க்கமும் உள்ளது என அவர்களின் அரசியல் கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகின்றனர். அவர்களின் அரசியல் கோரிக்கைகளில் இருந்து அது அல்லது இது என சொல்லமுடியாது என்பதை முன்பே தூண்டில் ஒத்துக் கொள்ளுகிறது. எல்லா வர்க்கமும் அவர்களின் பின்னுள்ளது என்பது எவ்வளவுக்கு சரியானது என்ற கேள்விக்கப்பால் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஜப்பானுக்கு எதிராக போராடிய போது, எல்லா வர்க்கத்தையும் பிரதி செய்ததாக கூறிய தூண்டில், புலிகள் எல்லா வர்க்கத்தினதும் தேசிய கோரிக்கையின் பின் அணிதிரட்டியுள்ளதாக கூறி அதை முதலாளித்துவ தேசியவாதம் என எதை அடிப்படையாக வைத்து கூறுகின்றார்கள். முதலாளித்துவ தேசியவாதம் என அடித்து சொல்ல தூண்டில் என்ன அடிப்படையை முன்னெடுத்ததோ, அதே போன்று புலிகள் முதலாளித்துவ தேசியவாதத்தில் தரகுமுதலாளித்துவத்தை பிரதிநிதித்துவபடுத்துவதாக அடித்துச் சொல்ல அவர்கள் நண்பர்களில் இருந்தே முடிவுக்கு வரமுடியும்.

புலிகள் சொந்த நலன் குழுநலன் என்பவற்றிற்கு பின்னால் உள்ள கோரிக்கைகள் தமிழ் மக்களின் தேசிய நலங்களுடன் இணைந்த கோரிக்கைகளாக உள்ளன. ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் புலிகள் ஊசலாடுகின்றனர் என்பது மட்டுமே ஒருவர் இவற்றிலிருந்து வரக்கூடிய முடிவுகள் ஆகும்|| என்ற வாதத்தில் சொந்த நலன் குழுநலன் என்பது ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் தரகுமுதலாளித்துவத்தின் நலங்களே. புலிகள் தமிழ் மக்களின் தேசிய நலனுடன் இணைந்த கோரிக்கைகளுடன் போராடுவதை தூண்டில் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். புலிகள் போன்ற சக்திகளை தூண்டில் கூறுவது போல் குறிப்பிட்ட கட்சி எந்த வர்க்கத்தின் பிரதிநிதி என்பது பற்றிய கேள்விக்கு இது அல்லது அது என திட்டவட்டமாக அதுவும் இதுபோன்ற ஒரு போராட்ட சூழலில் அறுதியிட்டு சொல்வது சாத்தியமில்லை. ஆனால் தூண்டில் முதலாளித்துவ தேசியவாதத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என அறுதியிட்டு சொல்லுகின்றார்கள். இதை எப்படி சொல்லமுடிகின்றதோ அதேபோல் தரகுமுதலாளித்துவத்தை பிரதி செய்கின்றார் என்பதை அவர்களின் நலன்களை பிரதிசெய்யும் குழுநலன், சொந்தநலன் மற்றும் அவர்களின் கூட்டாளிகளும் உறுதி செய்கின்றனர்.

சமரின் கூற்றுபடி புலிகள் தமது நலன்களுக்காகவே தமிழ்மக்களின் நலனை விற்க துணிந்தார்கள். இது முதலாளித்துவ தேசியவாதத்தின் தன்மை அன்றி வேறொன்றும் இல்லை. இவ் விவாதத்தில் தமிழ் மக்களின் நலன்களை விற்க துணிந்தவர்கள் தேசிய முதலாளித்துவம் அல்ல. இதன் தன்மை தரகுமுதலாளித்துவத்தின் குணாம்சமே. நாட்டை ஏகாதிபத்தியத்துக்கு விற்க முனைவது என்பது தேசிய முதலாளிகள் செய்வதல்ல. இது தரகுமுதலாளிகளின் செயற்பாடாகும். ஏகாதிபத்தியம், இந்தியா, இலங்கையரசுடன் புலிகளின் உறவு தனித்துவத்தை அங்கீகரிக்கவே|| என்ற தூண்டில் வாதத்தில் தனித்துவம் என்ற உறவு என்ன? அங்கீகரிக்க முயலும் இச்சக்திகள், புலிகள் தரகாக மாறும் பட்சத்தில் மட்டுமே அங்கீகரிக்க முயலும். தனித்துவத்தை அங்கீகரிப்பது என்ற கோரிக்கை தனித்துவமான தரகு தொடர்பான அடிப்படையை கொண்டதே. இஸ்ரேல் பயிற்சி கொடுக்கவும், மேற்கு நாடுகள் ஆயுதம் கொடுக்கவும் தரகு முதலாளிகளாக அங்கீகரித்ததன் பின்பே யொழிய தேசியமுதலாளிகள் என்ற அடிப்படையில் அல்ல. புலிகளின் அரசியல் கோரிக்கைகள், தமிழர் விடுதலை கூட்டணியினுடையதை விட முன்னேறியவை. தமிழீழத்தை பெற இந்தியாவை தலையிடுமாறு தமிழர் விடுதலைக்கூட்டணி கேட்டது. புலிகள் இந்திய தலையீடு தமது தனித்துவத்தை அங்கீரிக்காததே|| என்ற தூண்டிலின் இவ் விவாதம் அரசியல் கோரிக்கைகளில் இருந்து முடிவுக்கு வரமுடியாது. அவர்களின் நடைமுறை செயற்பாட்டைக் கொண்டே முடிவுக்கு வரவேண்டும். இது தொடர்பாக மேல் விவாதித்துள்ளோம். தமிழர் விடுலைக் கூட்டணியின் தரகுத்தன்மையை அங்கீகரிக்கவே இந்தியாவைக் கோரியது. இதில் தமிழர்விடுலைக்கூட்டணி, மற்றவர்களுக்கும் பங்கு கொடுப்பதை புலிகள் எதிர்த்தனா. இதில் தனித்துவத்தை என்ற பதத்தை வர்க்கமற்ற தன்மை என்ற கோட்பாட்டுக்குள் (மனிதம் கூறுவது போல்) பார்க்கவில்லையென எடுக்கிறோம். இது போலவே குழுநலன், சொந்தநலன், தனித்துவம்....என்ற பதத்துக்கும் வர்க்கமூலம் உண்டு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். புலிகளின் தனித்துவ கோரிக்கை தரகுமுதலாளித்துவத்தின் நலன்களில் இருந்து எழுந்ததே.

தமிழர் விடுதலைக் கூட்டணியிடமிருந்த தரகுமுதலாளித்துவ சிந்தனை மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் புலிகளின் முதலாளித்துவ தேசியவாதக்கருத்து மக்களை சென்றடையவில்லை|| என்ற தூண்டில் வாதம், தூண்டில் முதலாளித்துவ தேசியவாதத்துக்குள் தேசிய முதலாளித்துவத்தையே சுட்டிக் காட்டுவதாகவுள்ளது. இன்னும் இது அல்லது அது என முடிவு எடுக்கவில்லைவென இதழ்-41-48- இல் சொல்லும் தூண்டில், தங்களை அறியாமலேயே புலிகள் தேசிய முதலாளிகளே என்பதை கட்டுரை முழுக்க வாதிடுகின்றனர். இது மேற்குறிப்பிட்ட வாதத்தில் தெளிவாக வெளிவந்துள்ளளது. மக்களிடம் தரகுமுதலாளித்துவ சிந்தனையுள்ளது எனின், தமிழ் மக்களின் தேசியவிடுதலைப்போராட்டம் தரகுமுதலாளித்துவ போராட்டமாகவா உள்ளது? அப்படியெனின் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப்போராட்டம் தேசியவிடுதலைப்போராட்டமே இல்லையா? புலிகள் முதலாளித்துவ தேசவிடுதலையை (தேசியமுதலாளித்துவ விடுதலையை) முன்னெடுக்கின்றார்கள் எனின், மக்களா எதிராகவுள்ளனர். மக்கள் ஏகாதிபத்தியதை சார்ந்தும் புலிகள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவுமாகவா உள்ளனர். தூண்டிலின் ஆய்வு முறையிலுள்ள தவறு, முன்கூட்டியே ஒரு முடிவும் இவ் விவாதத்தை நடத்தக் காரணமாக உள்ளது.

இராஜதந்திரம் எனக்கூறி பலதடவை படுகுழியில் விழுந்த போதும், தமிழ்ப்பகுதியின் அதிகாரத்தை பிறர் கையில் கொடுத்துவிட தயாராகவிருக்கவில்லை|| என்ற தூண்டிலின் விவாதத்தில் அதிகாரம் என்பது சுரண்டலை நடத்துவதே. இச் சுரண்டலின் பங்கு தொடர்பாக இராஜதந்திரம் (இது மக்களை ஏமாற்ற பயன்படுத்தும் ஒருசெயற்பாடு) என்று நடத்திய பேரங்கள்: தோல்வியையும், படுகுழியில் விழுந்ததாகவும் பார்க்க வேண்டும். இதை விடுத்து அவர்களின் அரசியலுக்கு முடியாதுள்ளது|| என்பது அடிப்படையில் தவறானது. சுரண்டலின் பங்கு தொடர்பாக எழுகின்ற பேரங்களில் தோல்வியே ஒழிய தேசியமுதலாளித்துவம் தொடர்பான அரசியல் அல்ல. தேசிய முதலாளித்துவம் எப்பொழுதும் ஏகாதிபத்தியத்துடன் உடன்பட்டு தீர்வு பெறமுடியாது. இந்தியாவிடம் மாதம் 50 கோடி ரூபா பெறவும், இஸ்ரேலிடம் பெற்ற பயிற்சி என்பன மிகச் சிறப்பாக, அவர்களின் பேரங்களை தெளிவாகவும், ஏகாதிபத்தியத்துக்கு துணை போவதையும் காட்டுகிறது.

புலிகளின் பின்னால் உள்ள சக்திகள் உற்பத்திமுறை காரணமாக தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினர் என குறிப்பிடாவிட்டாலும், உள்ளும் வெளியும் உள்ள அதன் திரண்ட ஆதரவு சக்திகளிடம் இருப்பது ஒரு வகைப் பண்டைய பிரபுத்துவ சாயல் கலந்த முதலாளித்துவ தேசியவாதமே. இனவெறியுடன் கலந்து இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமிருந்தும் புலிகளுக்கு வேண்டிய ஆதரவு செலுத்துகின்றது. இவ் விடயத்தில். புலிகளின் பின்னால் உள்ள உற்பத்தி முறை தேசியமுதலாளி வர்க்கம் இல்லையென ஏற்றுக் கொள்ளுகிறது. அப்படியாயின் புலிகளின் பின்னால் உள்ளது தேசிய முதலாளித்துவம் இல்லையெனில் தரகுமுதலாளித்துவமே. இதை தூண்டில் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். உள்ளும் வெளியும் திரண்ட சக்திகள்|| எப்பொழுதும் உற்பத்திமுறையை மீறி தம் போக்கில் எதையும் செய்ய முடியாது. உதாரணமாக நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவ புரட்சி நடைபெற்ற நாடுகளில், புரட்சியை முன்னெடுத்தோர் முதலாளித்துவ உற்பத்திமுறையை கொண்டிருந்த போதும் அதற்க்கும் உள்ளும் புறமும் பாட்டாளிவர்க்கம் செயலாற்றியது. இதிலிருந்து எது உற்பத்தி முறையை தலைமை தாங்குகின்றதோ அதுவே அதன் இலக்காகும். பண்டைய பிரபுத்துவ சாயம் கலந்த முதலாளித்துவ தேசியவாதமே|| இதில் பிரபுத்துவம் என்பது ஒரு தேசவிடுதலைப் போராட்டத்தின் எதிரியே. அதனுடன் கூட்டுச் சேர்ந்திருக்கக்கூடிய ஒரே வர்க்கம் தரகுமுதலாளித்துவமே. அதாவது இது மூன்றாம் உலக நாடுகளில் எல்லாவரசுகளிலும் காணப்படும் இயல்பே.

இந்திராவைக் கொன்ற சீக்கியரை மதவெறிப் படுகொலையாளர் என வர்ணித்த புலிகள் தான் ராஜீவையும் கொன்றார்கள் இது புலிகளின அரசியலுக்கும், அதன் நலன்களுக்கும் உகந்த விதத்தில் என்ற விவாதத்தில் புலிகள் இந்தியாவை பயன்படுத்தும் நோக்கில் 1984 இல் வெளியிட்ட கருத்தே. அதாவது புலிகள் ஏகாதிபத்தியத்திடம் முழுமையாக சரணடையாத நிலையில், இந்தியாவின் கால்களில் விழும் நிலையிலிருந்த காலகட்டத்தில் நடந்தவை. இராஜிவ்வின் கொலை என்பது வெறும் புலியின் பழிவாங்கல் என்ற நிலைக்கப்பால், மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் நிகழ்த்தப்பட்டது. மார்க்சின் மேற்கோளை முன்வைத்து அதன் அடிப்படையில் தனது அரசியல் கோரிக்கையை முன்வைப்பார் என்ற இவ் விவாதம் தொடர்பாக முன்பு விவாதித்துள்ளோம் .இங்கு மார்க்சின் கருத்து முதலாளித்துவ நாட்டில் உள்ள குட்டிபூர்சுவா வர்க்கமும் , அதன் நிலையையொட்டி வைக்கப்பட்டதே. அங்கு குட்டிபூர்சுவா வர்க்கம் தனது அரசியல் கோரிக்கைகளை (அன்று அக் கோரிக்கைகள் முற்போக்காக இருந்தது) நேரடியாக முன்வைத்தனர். மூன்றாம் உலக நாடுகளில் அதுவும் எமது போராட்டம் போன்ற தேசியவிடுதலைப்போராட்டத்தில் துர்ண்டில் கூறியது போல் அது அல்லது இதுவென திட்டவட்டமாக கூறமுடியாத ஒரு நிலையில், அரசியல் கோரிக்கைகளை கொண்டு அதன் வர்க்கமூலத்தை இனம் காண முடியாது. அரசியல் கோரிக்கைகளுக்கப்பால் அவர்களின் செயற்பாடுகளையும் நண்பர்களையும், உற்ப்பத்தியுறவுகளுடன் உள்ள தொடர்புகளையும் கொண்டே அவர்களின் வர்க்க மூலத்தை ஆராய வேண்டும். இன்று கம்யூனிஸ்டுக்கள் என சொல்லும் முதலாளித்துவவாதிகளின் அரசியல் கோரிக்கைகள், அமெரிக்க ஜனாதிபதியின் ஜனநாயக கோரிக்கைகள், இவைகளையெல்லாம் அரசியல் கோரிக்கைகளாக கொண்டு வர்க்க மூலத்தை ஆராய்ந்தால் அவர்கள ஒவ்வொருவரும் செய்யும் செயலுக்கு மாறுபட்ட வகையில் அடங்குவர். எனவே அரசியல் கோரிக்கைகளை ஆய்வுக்கு எடுப்பின், குறித்த சக்தி குறித்த போராட்டத்தில் முற்போக்கான நிலையில் இருந்தால் மட்டுமே அரசியல் கோரிக்கைகளிலிருந்து முடிவுக்கு வந்தடைய முடியும்.

புலிகள் தரகுமுதலாளித்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது என்றால் ஒடுக்கப்பட்ட தேசம் ஒன்றின் தரகுமுதலாளித்துவம் போகக்கூடிய உச்சவெல்லைக்கு அது போயிருக்க வேண்டும். இந்தியவரசை முற்றாக நம்பி ஆயுதங்களை ஒப்படைத்திருக்க வேண்டும். அல்லது இலங்கையரசின் ஒற்றையாட்சி அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கவேண்டும்|| தூண்டிலின் இவ் விவாதத்தை எடுப்பின் புலிகள் சமரசத்துக்கு போகமாட்டார்கள் என்பதை (எதிர்காலத்தில்) தூண்டில் மறுக்கமாட்டார்கள். அப்படி போனவுடன் அவர்களை தரகுமுதலாளிகள் என வரையறுக்க தூண்டில் உடன்படுகிறது. இப்பிரச்சனையில் இபNபாது புலிகள் என்னவென்பதே நாளை போவார்கள் எனின், இன்று அவர்கள் தரகுமுதலாளிகளே. இந்திய விடுதலைப்போராட்டத்தில் காந்தியின் செயற்பாடு தேசிய முதலாளித்துவமா? தரகுமுதலாளித்துவமா? காந்தி தரகுமுதலாளியாகவே செயற்பட்டவர். இதை காந்தி எழுதிய பல கடிதத்தில் ஒன்றை முன் வைக்கின்றோம். 1930-இல் வைசிஸ்ராஜ்வுக்கு எழுதிய கடிதத்தில் தமது இயக்கம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து துவங்கப்பட்டதில்லை என்றும், இந்தியப் புரட்சி இயக்கத்தை எதிர்த்தே என துவங்கப்பட்டது என எழுதியுள்ளார். இன்னுமொரு இடத்தில் காந்தி வர்க்க யுத்தத்தை தடுப்பதற்கு எனது செல்வாக்கின் முழுப்பலத்தையும் பயன்படுத்துவேன் என்பதை பற்றி நீங்கள் உறுதியாகவிருக்கலாம். உங்களிடமிருந்து (நிலப்பிரபுகள், தரகுமுதலாளிகள்) சொத்துக்களை பறிக்க அநீதியாக ஒரு முயற்சி நடந்தால் அப்போது உங்கள் பக்கம் சேர்ந்து கொண்டு இந்தக் காந்தி போராட்டம் நடத்துவதை நீங்கள் காணலாம் என காந்தி எழுதியுள்ளார். காந்தியின் போராட்டத்துக்கும் புலிகளின் போராட்டத்துக்கும் என்ன வேறுபாடு? ஆக அகிம்சை, ஆயுதப்போராட்டம் மட்டுமே. இதற்கப்பால் ஏகாதிபத்தியத்தின் சிறந்த பிரதிநிதிகளாக இருவரும் இருந்தனர். மேற்குறிப்பிட்ட காந்தி தொடர்பான விடயம் புதியஜனநாயக வெளியீடான காந்தி காங்கிரஸ் துரோக வரலாறு என்னும் புத்தகத்தில் தொகுக்கப்பட்டது. ஏகாதிபத்தியத்தை சார்ந்து எப்படி ஒரு விடுதலை அமைப்பு செயற்படுமென்பதற்கு பல விடயங்களை இப் புத்தகத்தில் பார்க்கலாம். இது ஒருபுறம் இருக்க இந்தியாவிடம் முற்றாக அடிபணிய மறுத்ததற்கும், புலிகள் மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இருந்ததும் இந்தியாவிடம் முற்றாக சரணடைய முடியாததற்கு முக்கிய காரணமாகும். தரகை மாற்றுவது தொடர்பாக இந்தியா தொடர்பாகவிருந்த அச்சம் கூட புலிகள் ஊசலாடியது. இலங்கை அரசுடன் ஆன உறவென்பது மேற்கத்தைய நாடுகளின் தேவையோடு அமைவதே. இன்று எழுந்துவரும் தேசிய விடுதலைப்போராட்டத்தை பயன்படுத்தி, தென்னாசியாவின் சமநிலையை உடைக்கவும், மேற்கத்தைய ஏகாதிபத்தியத்துக்கு மோதலை நடத்துவது தேவையாகவுள்ளது. ஒரு ஏகாதிபத்தியம் தனது தேவையுடன் முரண்பட்ட சக்திகளைப் பயன்படுத்தும். இதை தூண்டில் மறுக்காது என நினைக்கிறோம். அந்த வகையில் இன்று புலிகளின் மோதலைப் பார்க்க வேண்டும். ஆனால் நாளை தென்னாசியாவின் பலம் பலவீனத்துடன் சமரசம் ஏற்படும். மற்றும் புலிகள் சார்ந்த தமிழ்தரகுமுதலாளிக்கும் சுரண்டலில் பங்கு தொடர்பாக இந்தியா சார்ந்த தமிழ் தரகுமுதலாளிகளுக்கும் ஏற்பட்ட முரண்பாடு சமரசம் அடையமுடியவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணி (தமிழ் தரகுமுதலாளித்துவ வேறு ஏகாதிபத்திய பிரதிநிதிகள்) சிங்கள தரகுமுதலாளித்துவத்துடன் நீண்டகாலமாக மோதியதும் இதன் தொடர்ச்சியாக இனப்போராட்டத்தை நோக்கி விரிவுபட்டு இன்று இனமுரண்பாடாக மாறுபட்டுவிட்டது.

இந்தியப்படையை எதிர்ப்பது என்பது தரகுமுதலாளித்துவத்தின் எல்லை மீறிய அரசியல் நடவடிக்கைகள் அப்படியெனின்|| சதாம் உசையின், கடாபி, பனாமா அதிபர்.... இவர்கள் தேசிய முதலாளிகளா இங்கு ஒரு ஏகாதிபத்தியம் தனது தேவைக்காக புலிகள் போன்ற சக்திகளை பயன்படுத்தும். அந்த வகையில் இந்தியா என்ற பிராந்திய ஏகாதிபத்தியத்துக்கு ஏதிராக ஏகாதிபத்தியம் பயன்படுத்தியது. இதே போல் பிரேமதாசாவையும் பயன்படுத்தியது. பிரேமதாசாவின் இந்தியப் படையே வெளியேறு என்ற கோசம், தேசியமுதலாளித்துவத்தின் கோசமல்ல. இது தரகுமுதலாளித்துவத்தின் கோசமே. எனவே தரகுமுதலாளிகளிடையே மோதல்கள் நிகழும். இதைக் காண தூண்டில் தவறிவிடுகிறது. இறுதி முடிவில் தூண்டில் முதலாளித்துவ தேசிய வாதம் என்பதை அது அல்லது இது, அதாவது தரகு முதலாளித்துவமா? தேசிய முதலாளித்துவமா? என வரையறுக்காமால் விட்டுவிடுகின்றனர். இடைக்கிடை தரகுமுதலாளித்துவம் இல்லையென அடித்து வாதிட முற்படுகின்றனர். தூண்டில் இவ் விவாதத்தில் புலிகளின் போக்கை தரகுமுதலாளித்துவம் என ஒரு பக்கத்தில் ஏற்கத்தான் செய்கின்றனர். ஆனால் அதை மறுத்துவிடவும் செய்கின்றனர். ஆனால் மொத்தத்தில் கட்டுரை முழுமையாக தரகுமுதலாளித்துவத்தின் பக்கத்தை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

உயிர்ப்பில் வெளிவந்த தேசிய சக்திகள் பற்றிய என்ற கட்டுரை மீதான எமது விவாதம்.

இக் கட்டுரை தேசியமுதலாளித்துவத்தை பிரதிபலிக்கவில்லையென்பதை சொல்லி விடுவதால் அது பற்றி விவாதிக்க முற்படவில்லை. இங்கு தமிழ் தரகுமுதலாளித்துவம். உதிரி முதலாளித்துவம் என்ற கருத்து தொடர்பாகவே இவ் விமர்சனம் அமைகின்றது.

பக்கம் 22-இல் தமிழ் தேசியமானது சிங்களப்பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்திலேயே உண்மையில் தோற்றம் பெற்றது. சுதந்திரத்துக்குப் பின் அதிகாரத்துக்கு வந்த சிங்கள தரகுமுதலாளித்துவ இனவாதக் கண்ணோட்டத்தில் முன்னெடுத்த இனவொடுக்குமுறை இக் கருத்து சரியானதே. ஆனால் தரகுமுதலாளித்துவ வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் திடீரென தோன்றவில்லை. காலனிவாதிகளுடன் பேரளவில் (சிலவேளை) எதிர்ப்பை தெரிவித்தாலும் அவர்களுடன் இணைந்தே சுரண்டியவர்கள் காலனியாதிக்கம் இருந்த காலத்தில் முதலாளித்துவ சக்திகள் மட்டும் இருந்ததாக மட்டும் சுட்டிக்காட்டும் உயிர்ப்பு: பக்கம்-21-இல் காலனிநாடுகளில் பொருளாதாரத்தை தனது நாட்டின் முதலாளித்துவ உற்பத்திமுறையுடன் பலவந்தமாக பிணைத்து விடுகின்றனர். இப்படியாக ஆதிக்க நாடுகளின் நலன்களுக்கு கீழ்ப்பட்ட விதத்திலேயே உள்ளுர் முதலாளித்துவம் தோன்றவும் வளரவும், ஆதிக்க நாடுகள் அனுமதியளிக்கின்றன என்ற வாதம் முன்பு குறிப்பிட்ட சுதந்திரத்தின் பின் தரகுமுதலாளிகள் இருந்தது என்ற கருத்துக்கு முரணானது. வளரவும் தோன்றவும் முதலாளித்துவத்தையல்ல தரகுமுதலாளித்துவத்தை தான் அனுமதித்தது. பக்கம்-21-இல் மீண்டும் சாராய குத்தகைகளிலும், காரீய சுரங்கங்களிலும் மூலதனமிட்டவர்கள் பிரித்தானியருடன் மோதவில்லை. மாறாக தமிழ், முஸ்லீம் வர்த்தகருடனேயே மோதினார்கள்||| என்ற வாதத்தில் குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் தேசியமுதலாளிகள் என்பதைவிட பிரித்தானியா ஆட்சியாளர்களின் கையாட்களாகவே (தரகுமுதலாளிகள்) செயற்பட்டவர்கள் இதன் தொடர்ச்சியாகவே நீங்கள் கூறுவது போல் சுதந்திரம் பெற்ற பின் ஆட்சிக்கு வந்த தரகுமுதலாளிகள் இனவாதத்தை தொடர்ந்து பேணமுடிந்தது.

பக்கம் 24-இல் எந்தவொரு தேசிய இனப்பிரச்சனைக்கும் முதலாளித்துவத்தினுள் முரணற்ற ஜனநாயகத்தின் மூலம் தீர்வு காணலாம் என்ற விவாதம் முதலாளித்துவத்தினுள் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் எனச் சொல்லப்படுகின்றது. இங்கு பிரச்சனையாகவுள்ளது முரணான ஜனநாயகமும், முரணற்ற ஜனநாயகமுமே என உயிர்ப்பு சுட்டிக் காட்டுகின்றனர். முதலாளித்துவத்தில் ஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்குமானதல்ல, அது முதலாளிகளுக்கு மட்டுமே உரித்தான ஜனநாயகம். முதலாளித்துவத்துக்கு மட்டுமே உரித்தான ஜனநாயகம் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒருக்காலும் தீர்வுக்கு இட்டுச்செல்லாதது மட்டுமின்றி சுரண்டலை இனப்பிரச்சனையுடன் இணைத்தே மேலும் கூடுதலாக சுரண்டும்.

பக்கம் 24-இல் ஏகாதிபத்தியத்தின் நலன்களுடனும் இந்திய மேலாதிக்க நலன்களுடனும் இது ஏற்கனவே முரண்பட்டுள்ளமை இதன் முற்போக்கு பாத்திரத்தின் வெளிப்பாடாகும்|-| இவ் விவாதத்தில் புலிகள் பாத்திரத்தை இப்படி சொல்லுகிறார்கள். இது சரியானது அல்ல. மோதல்கள் இரண்டு விதமாக இருக்கமுடியும். உயிர்ப்பு குறிப்பிட்டது போல் நிகழும் அல்லது ஒரு ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இன்னுமொரு ஏகாதிபத்தியத்தியத்தின் வழிகாட்டலுடன் மோதல் நிகழும். இதில் புலிகளின் பாத்திரம் எந்தவகையானது எனின் ஏகாதிபத்தியத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலானது.

பக்கம் 25-இல்~~குறிப்பிட்ட வரலாற்று சக்தியின் உருவாக்கத்தின் பின்பே குறிப்பிட்ட கருத்துக்களும், தத்துவங்களும் உருவாகின்றன. மார்க்ஸியம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் தோற்றத்திற்கு முன்பே தோன்றியதல்ல என்பது தானே. இக் கருத்தில் தூண்டிலின் கருத்து சரியானதென நாம் பார்க்கிறோம். குறித்த சக்தி யதார்த்தத்தில் இருக்காமையிலேயே கருத்து இருக்கமுடியும். உதாரணமாக கம்யூனிசம் உருவாகாமலேயே கம்யூனிஸ்ட் தொடர்பான கருத்துக்கள் வெளிவந்துள்ளன. பாட்டாளிவர்க்க கட்சி இல்லாமைலேயே ஒரு நாட்டில் கட்சி குறித்து கருத்திருக்க முடியும். முதலாளித்துவம் தோன்ற முன்பே ( நிலப்பிரபுத்துவக்காலத்தில்) முதலாளித்துவக் கருத்துக்கள் இருந்தன. ஒருவன் முதலாளியாக இல்லாமலேயே அவன் முதலாளித்துவ சிந்தனையை கொண்டிருக்க முடியும். பாட்டாளியாக இல்லாமலேயே பாட்டாளி வர்க்க சிந்தனையிருக்க முடியும். குறித்த சக்தி இல்லாமேயே கருத்து உருவாக முடியும்.

பக்கம்-28-இல்~~ஜனநாயகம் இல்லாததால் தரகுமுதலாளித்துவத்தை பிரதிநிதித்துவபடுத்துவதாக கூறுவதோ|| பக்கம்-29-இல்~~ சமர் நாட்டில் தேசிய முதலாளிகள் இல்லாமல் இருப்பதும், புலிகள் முதலாளித்துவ சித்தாந்தத்தை கொண்டிருப்பதால் அவர்கள் தரகுமுதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாலும், புலிகளின் பாசிசமானது இதன் குறிப்பான குணம் குறி|| என உயிர்ப்பு குறிப்பிடுவது தலைகீழான அகநிலைக் கண்ணோட்டமே. ஏனெனில் சமர் புலிகள் மீதான ஆய்வின் மீது பல ஆதாரங்களை நீங்கள் குறிப்பிட்ட விடயத்துக்கு அப்பால் முன்வைத்துள்ளது. புலிகளின் இன்றைய சர்வதேச உறவுகள், ஏகாதிபத்தியத்திடம் பயிற்சிகள் பெற்றதும், முதலாளித்துவத்துக்குட்பட்ட அனைத்து பிரிவு மக்கள் மீதும் நடத்தும் சுரண்டல் இலங்கை இந்திய அரசுக்களுடன் நடத்திய பேரங்கள் (இவை தமிழ் மக்களின் பிரச்சனைகள் மீதல்ல........) இப்படி பல.

பக்கம்-31-இல் ~~எமது போராட்டத்தில் தோன்றிய பல்வேறு அரசியல் போக்குகளையும் இப்போது இனம் காண முயல்வோம். தமிழ்தேசத்தில் ஆரம்பமான பூர்சுவா ஜனநாயகப் போராட்ட வடிவங்களாக இருந்தன. பாராளுமன்றவாதம், அகிம்சைப் போராட்டங்கள், பேரம் பேசுதல், பேச்சுவார்த்தைகள், அரசுடன் இணக்கங் காணுதல், அரசு உறுதிமொழிகளை கைவிடுதல்|| என்ற இவ் விவாதத்தில் போராட்டவடிவங்கள் என குறிப்பிட்ட சம்பவங்கள் பூர்சுவாவுக்கு மட்டுமானதில்லை. இதிலிருந்து தவறான முடிவிற்கு வந்தடைகின்றனர். குறித்த போராட்டவடிவங்களை தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் கூட முன்னெடுக்க முடியும். ஆரம்ப போராட்டங்கள் தரகுமுதலாளித்துவ கோரிக்கையாகவேயிருந்தது. மேற்குறிப்பிட்ட போராட்டவடிவங்களை தமிழ்தரகுமுதலாளித்துவ வர்க்கம், சிங்கள தரகுமுதலாளித்துவ வர்க்கத்துடன் மேற்கூறிய வழிகளில் போராடினார்கள். இதை நீங்கள் பக்கம்-32-இல் ஏற்றுக்கொள்ளுகின்றீர்கள். ஆரம்பகால தேசியமானது தமிழ்தரகு முதலாளித்துவ வர்க்கங்களின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கிறது எனலாம். அரசுடன் சமரசம் செய்தல், சலுகைபெறுதல் போன்றவை ஏகாதிபத்திய சார்புநிலைகளே|| பக்கம்-33 இல் ~~ தமிழ் சமூகத்தில் பலம் பெற்று நிற்கும் வர்க்கங்கள் இவர்களை தனது சித்தாந்த செல்வாக்குள் கொண்டு வருவது கஸ்டமானதல்ல. தனித்துவமான சித்தாந்தம் என்றவொன்று புலிகளிடம் இல்லாத போது இது சிரமமானதில்லை|| இக்கருத்து புலிகளின் வர்க்க அடிப்படையை நிராகரிப்பதாகும். பின்பு பக்கம்-34-இல் புலிகளின் சித்தாந்தம் தொடர்பாக இவர்களின் வர்க்க மூலங்களின் ஒன்றான உதிரி முதலாளித்துவத்தின் தன்மையென்று இன்னுமொரு விளக்கமாகும். புலிகளுக்கு ஏதோவொரு சித்தாந்தம் இருக்கின்றது. அது இல்லையென வாதிட முற்படுபவர்கள் மார்க்ஸிச அடிப்படையையே நிராகரிப்பதற்கு இட்டுசெல்வார்கள்.

பக்கம் 29-இல் சில அமைப்புக்கள் வல்வெட்டித்துறையுடன் கொண்டுள்ள உறவுகளையும் கருத்தில் கொண்டால் கள்ளக்கடத்தலில் ஈடுபடும் உதிரிமுதலாளிகளின் பிரிவு ஒன்று சில அமைப்புக்களுடன் கொண்டுள்ள தொடர்பு. பக்கம்-31-இல் தமிழ்பிரதேசத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கள்ளக்கடத்தல் குறிப்பிட்ட தொழிலாகவே நடைபெற்று வந்தது. கடந்த காலத்தில் தழிழ் பிரதேசத்தில் பொருளாதார நடவடிக்கையில் இதன் பங்கு என்ன? இந்த உதிரிமுதலாளிகள் சமூகத்தில் வகிக்கும் இடமென்ன? பக்கம்-34-இல் சமூகநலன்களின் அக்கறையின்மை தரகுமுதலாளிகளுடன் கூட இணக்கம் காணமுடியாத தன்மை, போதைப்பொருட்கள் மற்றும் பலவிதமான சமூகவிரோத நடவடிக்கைகளுடனான தொடர்பு போன்ற அம்சங்கள் இவர்களது வர்க்கமூலங்களின் ஒன்றான, உதிரி முதலாளித்துவ வாக்கத்தின் தன்மைக்கு இன்னுமொரு விளக்கமாகும். மேற்குறிப்பிட்ட பிரதிநிதிகள் புலிகளென கூற முயல்கின்றனர். தரகுமுதலாளித்துவத்தின் பிரதிநிதிகள் இல்லையென சொல்லி முன்வைக்கும் இக்கருத்துக்கு மாறாகவே பலதடவை புலிகள் தரகுமுதலாளிகள் எனச் சொல்லியும் விடுகிறார்கள் . பக்கம்-34-இல் குட்டிமுதலாளித்துவ அமைப்பாக தோன்றிய புலிகள் வளர்ந்துவிட்ட தமது சமூகஅந்தஸ்து, அதிகாரம் காரணமாக பெருமளவு மூலதனத்தை திரட்டிக்கொண்டு தரகுமுதலாளிவர்க்கமாக வளர்ந்து வரும் ஒரு வளர்ச்சி கட்டத்திலிருக்கின்றார்கள். பக்கம்-32-இல் தமிழ்சமூகத்தில் பலம்பெற்று நிற்கும் வர்க்கங்கள் இவர்களை(புலிகளை) தமது சித்தாந்த செல்வாக்கிற்குள் கொண்டு வருவது கஸ்டமானதல்ல. பக்கம்-33-இல் புலிகள் ஏனைய அம்சங்கள் சுயசார்பு பொருளாதாரம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, பூர்சுவா ஜனநாயகம் போன்றவற்றில் தேசிய முதலாளித்துவத்தின் நலன்களுக்கும் பண்புகளுக்கும் எதிராகவேயுள்ளார்கள். .பக்கம்-33-இல் புலிகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் செயற்படும் சில சக்திகள் திட்டவட்டமாக அமெரிக்க ஏகாதிபத்திய சார்புடையவர்கள் என்பது கவனிக்கதக்கது. புலிகள் பலவிதத்திலும் முன்னெடுக்கும் தமது அரசியல் மூலம் வெளிப்படுத்தும் அந்த வர்க்கத்தின் உடையவை. பக்கம்-33-இல் திட்டவட்டமான, உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பு கிடையாது.(இதில் நாம் உறுதியான ஏகாதிபத்திய சார்பு உண்டு எனக் கருதுகின்றோம். இதில் ஏகாதிபத்தியத்தியத்திற்கு இடையிலான முரண்பாடுகளையும், அதன் முகவர்களையும் ஒன்றாக இருக்கமுடியாததையும் உயிர்ப்பு பார்க்க தவறுகின்றது.)

தமது குழுநலன்களுக்கு ஏற்ப இந்திய அரசையோ, இலங்கையரசையே இஸ்ரேல் போன்ற ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளையே காலத்துக்கு காலம் சார்ந்து நின்று பக்கம் 32-இல் சுயவுற்பத்தி போன்றவற்றில் எந்த அக்கறையும் காட்டாத இவர்கள் இறக்குமதியாகும் அல்லது தென்னிலங்கையிலிருந்.து கொண்டுவரும் பொருட்களுக்கு வரிவிதிப்பதையே. பக்கம்31 இல் தமக்கென (வறியவிவசாயிகள், வறிய மீனவர்கள்) ஒரு வர்க்க ஸ்தாபனத்தையோ தனியான அரசியல் கோரிக்கையோ முன்னெடுக்காது தரகுமுதலாளித்துவ சக்திகளையே பலப்படுத்தி வருகின்றனர். .பக்கம்-30-இல் பணக்கார விவசாயிகள் பணக்கார மீனவர்கள்(மீனவமுதலாளிகள், சம்மாட்டிகள்)போன்றோர்களும் நவீன உற்பத்தி முறைகள் காரணமாக ஏகாதிபத்திய பொருளாதார வலைப்பின்னலுடன் நெருக்கமாக பிணைந்துள்ளார்கள். இவர்கள் தரகுமுதலாளி வர்க்கத்துக்கு நெருக்கமானவர்கள்|-. பக்கம்-30 இல் சந்தையில் தமக்குரிய பங்கை சிங்கள முதலாளித்துவ வர்க்கமானது கொடுக்க மறுத்தனர். தமிழ்தரகுமுதலாளிவர்க்கமானது தேசியத்தை முன்னெடுக்க நேர்ந்துள்ளது.||. பக்கம்-30 இல் இன்னும் கூட தனது பிழைப்புக்காக (தரகுமுதலாளிகள்) பல தொடர்புகளை அரசுடன் கொண்டுள்ளது. அரசுடன் சமரசம் செய்து வைக்க முயலும் தொடர்பாளராக செயற்படும் கொழும்பிலுள்ள பிரமுகர்கள் குறிப்பாக இந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள். சிங்கள அரசை இவர்கள் எதிர்த்தாலும், ஏகாதிபத்தியத்தையே, அதன் சுரண்டல்களையே எதிர்க்கமாட்டார்கள். பக்கம்-28-இல் தரகுமுதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்திய(புலிகளை ஏகாதிபத்திய சார்பாளர்கள் என உயிர்ப்பு ஏற்றுகொள்கிறது.)சார்பாகவே முன்னெடுக்கின்றது||. பக்கம்-28-இல் பல்வேறு ஏகாதிபத்தியங்கள் முட்டிமோதிக்கொள்ளும் நிலையில் காலனி நாட்டிலுள்ள ஒரு ஏகாதிபத்தியங்களை சார்ந்த: (இது காலனி இல்லாத இலங்கை போன்ற நாடுகளுக்கும்) தரகுமுதலாளித்துவ வர்க்கமானது, இன்னொரு ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தேசியத்தை சார்ந்து நிற்கவோ அல்லது சில வேளைகளில் தேசிய இயக்கத்துக்கு தலைமை தாங்கவே செய்யலாம்.

மேற்குறிப்பிட்ட வாதங்கள் உயிர்ப்பு இக்குறியீட்டில் உள்ளவை நாம் உபயோகித்தவை, உதிரிமுதலாளிகள் என்ற கருத்துக்கு எதிரான தரகுமுதலாளித்துவமே என உயிர்ப்பு எழுதிய இக் கருத்துக்களையே, நாம் இனி தரகுமுதலாளித்துவ பிரதிநிதிகள் என உயிர்ப்புக்கு பதிலளிக்கும் வகையில் முன்வைக்கிறோம். இருந்தும் தொடர்ந்து விவாதிக்க விரும்புகிறோம்.

உதிரி முதலாளித்துவம் என்ற இப் பதம் சரியானதா? உதிரிப் பாட்டாளிகள் என்பது ஒரு நிறுவனமாகாத வகையில் உதிரியாக ஆங்காங்கே சிதறியிருப்போரை குறிப்பதாகும். இவர்கள் லும்பன் வாழ்வைக் கொண்டிருப்பார்கள். போராட்டத்தில் பாட்டாளிகளுக்கு சார்பாகவும் எதிர்ப்புரட்சிக்காலத்தில் எதிர்ப்புரட்சியாளர்களாகவும் இருப்பார்கள். ஆனால் உதிரிமுதலாளிகள் ஒரு வர்க்கமாக இருக்க முடியாது. தொழில் ரீதியாக பல்வேறு உற்பத்திகளைக் கொண்ட முதலாளிகள் எப்பொழுதும் உதிரியாக இருக்கும் இவர்கள் எப்பொழுதும் மையப்பட்ட அரசை சார்ந்திருக்கும் இவர்கள் முதலாளிகளே. இதில் உதிரி முதலாளித்துவம், முதலாளித்துவத்துத்துக்கு இடையில் எவ்வேறுபாடும் கிடையாது.

இனி நீங்கள் குறிப்பிடுவது போல் உதிரிமுதலாளிகள் என எடுப்போமாயின், கடத்தல்காரர்களை குறித்த வர்க்கத்தின் பிரதிநிதியாக காட்ட முற்பட்டுள்ளீர்கள். இக் கடத்தல்காரர்கள் எப்பொழுதும் ஏகாதிபத்தியத்தின் பொருட்களையே கடத்தியவர்கள். இவர்கள் சட்டபூர்வமாக சிங்கள தரகுமுதலாளித்துவத்துடன் போட்டிபோட்டு வெற்றிபெற முடியாமையினால் அதை சட்டவிரோதமாகவே கடத்தி வருகின்றனர். அந்நியப் பொருட்களின் சந்தையை உருவாக்கவும், ஊக்குவிக்கும் தன்மை தரகுமுதலாளித்துவத்தின் செயற்பாடே. இன்னொரு பக்கத்தில் உதிரிமுதலாளிகள் வர்க்கபிரதிநிதிகள் புலிகளெனின், உதிரிமுதலாளிகளின்(முதலாளிகள்)வளர்ச்சிக்கு புலிகள் தடைவிதிக்கின்றனர்.. கடத்தல் பொருட்களில் வரும் இலாபத்தில் அரைவாசியைக் கோருகின்றனர். எனவே புலிகள் உதிரி முதலாளித்துவத்துக்கு எதிரானவர்கள். நீங்கள் குறிப்பிட்டது போல் பணக்கார விவசாயிகள், பணககார மீனவர்கள் போன்றோரும் நவீன உற்பத்திமுறைகள் காரணமாக ஏகாதிபத்திய பொருளாதார வலைப்பின்னலுடன் நெருக்கமாக பிணைந்துள்ளனர். எனவே புலிகள் தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான பிரதிநிதியாக உள்ளனர்.

நாம் இவ் விவாதத்தில் தொடர்ச்சியாக புலிகள் வர்க்கமூலத்தை மேல் வைத்த தொகுப்புக்களில் இருந்து தரகுமுதலாளித்துவத்தை சார்ந்தே என்பதை தெளிவுபடுத்துகின்றது. புலிகளின் கோரிக்கைகளை பார்ப்பதை விட அக் கோரிக்கைகளின் பின மறைந்திருக்கும் வர்க்கநலன் என்ன என்பதை ஆராயவேண்டும். தமிழ் தரகுமுதலாளித்துவம், சிங்கள தரகுமுதலாளித்துவ சக்திகளிடமிருந்து சந்தைக்காக போட்டி போட்டு இன்று தேசவிடுதலைப்போராட்டத்தை (எல்லா வர்க்கங்களும் போராடுவது போல) தனது தலைமையில் முன்னெடுத்துள்ளது. மற்றும் ஏகாதிபத்தியத்துக்கிடையிலான முரண்பாடுகள் ஒரு நாட்டில் இருக்கக்கூடிய தரகுமுதலாளித்துவ பிரதிநிதிகள், போராட்டத்தை தலைமை தாங்குவதுடன் முரண்பட்ட ஏகாதிபத்தியத்துடன் மோதவும் முடியும். புலிகள் இன்று வறிய கூலி விவசாயிகள் முதல், கடத்தல்கார பெரும் முதலாளிகள் வரை சுரண்டலை நடத்துவதால், போராட்டத்துக்கு ஆதரவான சக்திகளை விட போராட்டத்திற்க்கு எதிரான சக்திகளை சார்ந்தே போராட முற்பட்டுள்ளனர். புலிகளுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிடையாது என்பதை தூண்டில், உயிர்ப்பு ஏற்றுக் கொள்ளுவதால் புலிகள் ஏகாதிபத்திய சார்பாளர்களாகவே உள்ளனர். இவர்கள் ஏகாதிபத்தியத்திடம் பெற்ற உதவி(ஏகாதிபத்தியங்கள் முட்டாள்கள் அல்ல)இவர்கள் ஏகாதிபத்தியம் சார்ந்தே உள்ளதை தெளிவாக்குகின்றது. இவர்கள் பகிரங்க அரசியல் கோரிக்கைகள் எப்போதும் இவர்களையே பாதித்தது கிடையாது . இவர்களின் இரகசிய அரசியல் கோரிக்கைகளை(தரகுசார்ந்த நலங்களை) இரகசியமாக பெற்றுக்கொள்ள முனைந்ததை கொண்டு இவர்களின் வர்க்கநலன் தரகுமுதலாளித்துவம் சார்ந்ததை, புலிகள் அடிக்கடி நடத்தும் பேரங்கள், அதில் ஏற்படும் தோல்வியும் இன்று இருக்கும் அரசு அமைப்புக்குள் (தரகுமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ அரசுக்குள்) சுரண்டல் தொடர்பான பங்குகளுக்காகவே. இது தரகுமுதலாளித்துவத்தின் வெளிப்பாடே. புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பாளர்கள் நேரடியாக ஏகாதிபத்தியத்தை சார்ந்தவர்களே. இதுவும் தரகுமுதலாளித்துவத்தை பிரதிபலிக்கிறது. இஸ்ரேல் இந்தியாவிடம் பெற்ற பயிற்சிகள் ஏகாதிபத்தியங்களிடம் பெற்ற இராணுவ உதவிகள் தரகுமுதலாளித்துவத்தின் பிரதிநிதிகளுக்கானது. சர்வதேச போதைவஸ்து தொடர்பு(உதிரி முதலாளித்துவத்தை வளர்ப்பதல்ல) இது தரகுமுதலாளித்துவமே.(இதை சில மூன்றாம் உலகநாடுகளின் அரசுகளே செய்கின்றன அல்லது மறைமுகமாக அங்கீகரிக்கின்றனர்)தேசிய விடுதலையை முன்னெடுக்கின்ற முதலாளிகள் (உதிரிமுதலாளிகள்) கூட ஒரளவு ஜனநாயகத்தையும் மற்றைய சிறுதேசிய இனத்துடன் இணக்கப்போக்கையும் கைக்கொள்ளும். ஆனால் புலிகள் முஸ்லீம் தேசிய இனத்தை ஒழிக்க முற்பட்டுள்ளனர். சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் பாசிசம் தரகுமுதலாளித்துவத்தின் செயற்பாடே. தமிழ் ஈழத்தில் தளப்பிரதேசத்தை கொண்டிருக்கும் புலிகள் தேசிய பொருளாதாரத்தின் மீது அக்கறையோ, தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கவோ இன்றி அந்நியப் பொருட்களைச் சார்ந்து செயற்படும் இப்போக்கு தரகுமுதலாளித்துவ செயற்பாடே. புலிகள் போராட்டத்துக்கு பாவிக்கும் ஆயுதங்களில் உற்பத்தி செய்யக்கூடிய பகுதிகளைக் கூட சொந்தத்தில் செய்யாமல் வெளிநாடுகளில் இருந்து (இன்று ஏற்பட்ட நெருக்கடியினால் சிலவற்றை செய்கின்றனர்) பெற்றுக்கொள்ளும் இப்போக்கு தரகுமுதலாளித்துவ செயற்பாடே. இவைகள் புலிகள் தரகுமுதலாளித்துவத்தின் சிறப்பான பிரதிநிதிகளாக செயற்படுவதைக் காட்டுகிறது. இவ் விமர்சனம் தொடர்பாக வாசகர்களிடமிருந்து விமர்சனங்களை கோருகின்றோம்.

 

 

 

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More