பி.இரயாகரன் - சமர்

350வருட பல வீரம் செறிந்த கறுப்பின மக்களின் போராட்டத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். வெள்ளை நிறவெறியர்களின் அடக்குமுறைக்கு உள்ளான தென்னாபிரிக்க மக்கள் நீண்ட பல வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர். நிறப்பாகுபாட்டுக்கு ஊடாக தமது சொந்த மண்ணை இழந்த கறுப்பின மக்கள் இன்று பெயரளவில் ஒரு  சுதந்திரத்தை கறுப்பு தலைவர் ஊடாக பெற்று உள்ளனர். இலங்கை, இந்தியாவில் 1948இல் வெள்ளை ஆட்சியாளருக்கு பதில் கறுப்பு ஆட்சியாளர்கள் நிரப்பப்பட்டனர். ஆனால் வெள்ளையன் இருந்தபோதும், கறுப்பன் இருந்தபோதும் மக்கள் பெற்றது என்னவோ ஒன்று தான். அதே பொலிஸ் அதே அடக்குமுறை அதே சுரண்டல் எல்லாம் அப்படியே இருந்தது. ஒன்று மட்டும் மாறியிருந்தது.

மேலும் படிக்க: தென் ஆபிரிக்க கறுப்பு தோல் ஆட்சி

வியட்நாம் படைகளை வெளியேற்றவும் அமைதியைக் கொண்டு வரவும் என உறுதி கூறி ஜக்கிய நாட்டுப்படை கம்பூச்சியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவ கால் ஊன்றிக் கொண்டனர். அங்கு வியட்நாமுக்கு எதிராக போராடி வந்த முக்கிய மூன்று குழுக்கள் இருந்தன. அதில் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி. ஜக்கிய நாட்டுப் படையோ கம்யூனிஸ்ட் படையை அழிக்க தன்னால் இயன்றளவும் முயன்று மற்றவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். ஜக்கிய நாட்டுப் படையில் முக்கியமாக ஜப்பான் உள்ளது. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் வெளிநாட்டுக்குப் படையை அனுப்பியது இதுதான் முதல் தடவை. கம்பூச்சிய சுய பூர்த்தியை கொண்ட ஒரு நாடாகும். இங்கு உள்ள சுயபூர்த்தியான விவசாயத்தை அழிக்க ஜப்பான் பெரும் அளவில் தனது சந்தைக்கு தேவையான உற்பத்தியை முடுக்கி விட்டுள்ளது.

மேலும் படிக்க: கம்பூச்சிய மக்களின் வீரம் செறிந்த போராட்டம்.

யூக்கோஸ்லாவியாவின் இனமுரண்பாடுகள் இரண்டு வருடத்துக்கு மேலாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. முதலாவது உலக யுத்தம் தொடங்க காரணமாக இருந்த யூக்கோஸ்லாவியாவில் உள்நாட்டு இனகலவரங்களுடன் இரண்டாம் உலக யுத்தகாலத்;தில் சில இனங்கள் ஜெர்மன் நாசிகளுடன் ஜக்கியப்பட்டனர். இரண்டாம் உலக யுத்தத்தில் நாசிகளுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் கட்சி யூக்கோஸ்லாவியாவை ஜக்கியப்படுத்தி தேசிய சுயநிர்ணய உரிமையை வழங்கி ஜக்கியப்பட்ட நாடாக மாற்றியது. 1950 களில் தனது சோசலிச கொள்கைகளை கைவிட்டு திரிபுப்பாதைக்கு சென்றபோது பெயரளவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்ட ஒரு சீரழிந்த முதலாளித்துவ ஆட்சியை நிறுவிக்கொண்டனர்.

மேலும் படிக்க: தொடரும் செர்பிய அட்டூழியங்கள்

தன்சான்னியா பிராந்தியப் பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஒரே விமானத்தில் பயணம் செய்த ருவாண்டா நாட்டு ஜனாதிபதியும் புருன்டி ஜனாதிபதியும் ராக்கெட் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ருவாண்டா அரசாங்க ஆதரவுடன் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இன்று உத்தியோக புள்ளிவிபரப்படி இரண்டு லட்சம் டுட்ஸ் இனத்தவர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால் இத்தொகை அதிகமாகும். 85 வீதம் ஹிடு இனத்தவரும் வாழும் ருவாண்டா நாட்டில் சிறுபான்மை இன அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர்.

மேலும் படிக்க: ருவாண்டா நாட்டில் இரண்டு இலட்சம் பேர் படுகொலை

தொண்டமான், விஜேதுங்க ஊடல் அண்மையில் கூடல் ஊடாக சிறுபான்மை தேசிய இனம் மீண்டும் ஒரு முறை விற்பனையாகியுள்ளது. அண்மைக்காலமாக கௌரவ அவமதிப்புக்குள்ளாகிய தொண்டைமான் தேசிய சிறுபான்மை மீதான டிங்கிரியின் தாக்குதலுடன் மலையக மக்களின் கதாநாயகன் வேடத்தை தாங்கினார். இதனால் யூ.என்.பி தொண்டா உறவு கேள்விக்குள்ளாகியும் இருந்தது. இந்நிலையில் செல்லச்சாமியை விலைக்கு வாங்கிய பலர், எட்டு மாகாண சபை உறுப்பினர்களையும் சேர்த்து விலை பேசிக்கொண்டனர். ஆனால் அண்மையில் தென்மாகாண சபை தேர்தலின் தோல்வியைத் தொடர்ந்து தொண்டா யூ.என்.பி உறவை புதிப்பிக்க நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மேலும் படிக்க: செல்லச்சாமி மரணம் மெதுவாக நிகழ்கின்றது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யூ-என்-பியின் எந்த வேட்பாளருக்கு எதிராகவும் சந்திரிகா போட்டியிடின் நான்கு இலட்சம் வாக்குகள் அதிகம் பெறுவார் என என்-ஜ-பி அறிவித்துள்ளது. இக்கணிப்பீடு வடக்கு தவிர்ந்த ஒரு புள்ளிவிபரமே. 144 பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட இக் கணக்கெடுப்பு தொண்டமான் யூ.என்.பியுடன் இணைந்திருப்பின் என்ற அடிப்படையில் வைத்தே எடுக்கப்பட்டது. யூ.என்.பி தனது வெற்றியை உறுதி செய்து கொள்ள அனைத்து வழிகளையும் கையாளுகிறது.

மேலும் படிக்க: என்-ஜ-பி-(இலங்கை உளவுத்துறையின்) அறிக்கை!

திடீர் என சந்திரசேகர் விடுதலை செய்யப்பட்டது உண்மையை அறியாதவர்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கும். கூட்டுப்படை தலைமையக குண்டுவெடிப்பில் சந்தேக நபரான வரதனுக்கு பாதுகாப்பு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த சந்திரசேகரம், தருமலிங்கம், காதர் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மலையகத்தில் தொண்டமானின் தலைமைக்கு மாற்றுத் தலைமையாக வளர்ந்து வந்த மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்களின் கைது தொண்டைமானின் விருப்புடன் நிகழ்த்தப்பட்டது.

 

மேலும் படிக்க: சந்திரசேகரன் திடீரென விடுதலை செய்யப்பட்டார் ஏன்?

மக்களின் விருப்பு இன்றி சட்டவிரோத முறையில் இந்தியா தயவில் 1989 களில் பாராளுமன்றக் கதிரைகளை பெற்று சுகம் கண்டவர்கள் மீண்டும் அதைப் பெற புதிய தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். இந்தவகையில் கூட்டணி 1977க்கு பின் மீண்டும் தேர்தலில் தனியாக நிற்கவும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: பாராளுமன்ற தேர்தலை ஒட்டி!

கிழக்கை வடக்குடன் இணைப்பதை ஒரு வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முனையும் இனவாதிகள் அதன் ஒத்திகையாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினர். வடக்குடன் கிழக்கை இணைப்பதா என்பதை கிழக்கு மாகாண மக்களிடம் மட்டும் வாக்கெடுப்பை நடத்த முயல்வதன் ஊடாக வடக்கை இணைக்க யாரும் கோரவில்லை . ஏன் வடக்கிலும் வாக்கெடுப்பை கோரலாமே. வடக்கு அரசியல் ஆதிக்கம் கொண்டது என்று விடயங்கள் உள்ளனவே.

மேலும் படிக்க: கிழக்கு மாகாணத் தேர்தல்

நாசகார காட் ஒப்பந்தந்தத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான இந்திய மக்கள் ஆர்ப்பாட்டம் ஏப்ரல்-6 இந்தியாவை வல்லாதிக்க அரசுகளினதும் பன்னாட்டு பகாசுரக் கம்பனிகளினதும் காலனியாக மாற்ற வழி வகுக்கும் காட் மற்றும் டங்கல் ஒப்பந்தங்களில் நரசிம்மராவ் அரசு கையெழுத்திட வேண்டாமென இவ் ஒப்பந்தங்களுக்கெதிராக இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தன.

மேலும் படிக்க: மக்கள் யுத்த அரங்கில்.........

இலங்கை அரசாங்கம் இந்த வருடத்தை தேர்தல் ஆண்டாக அறிவித்ததுடன் எல்லாக் கட்சிகளும் கதிரைகளைக் கைப்பற்ற ஆலாய்ப் பறக்கின்றனர். இவ்வருடத்தில் கிழக்கு தேர்தலையும் தென்மாகாண சபை தேர்தலையும் நடத்தி முடித்துள்ள அரசு பாராளுமன்ற தேர்தலையும் நடத்தி முடிக்கவுள்ளனர். கிழக்கு தேர்தலில் யூ.என்.பி அரசு சகல தில்லுமுல்லுகளையும் நடத்தி கட்டாயப்படுத்திய வேட்ப்பாளர்களையும் நிறுத்தியும்,பொலிஸ்,இராணுவம் மூலம் கள்ள வோட்டுக்களை போட்டும் வெற்றிய பெற்று விடமுடியவில்லை.

மேலும் படிக்க: உங்களுடன் சமர்!

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More