1970களில் பலரால் வரவேற்ப்பட்ட வடகிழக்கத்தைய தேசிய இனங்களின் சுயநிர்ணய, சுயாட்சி உரிமைக்கான போராட்டங்கள் இன்று புரட்சிகர அரசியல் தலைமை இல்லாமல் சீரழிந்து குட்டிபூர்சுவா தலைமையிலான குறுந்தேசிய இனவெறிக்குள் மூழ்கி விட்டது. அன்று மணிப்பூர், நாகலாந்து, மீசோராம், அசாம், திரிபுரா என்று கொழுந்து விட்டெரிந்த தேசிய விடுதலைப்போராட்டங்கள் இன்று இனவெறி வன்முறையாளர்களாக சீரழிந்து போயுள்ளன.