தரப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய ஆயுதப்போராட்டம் பிற்போக்கான திசை வழியில் இன்று வரை தொடருகின்றது. உண்மையில் இனவாதத் தரப்படுத்தலை எப்படி ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மாற்றி போராடியிருக்க வேண்டும் என்பதே எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும். இதுவே தமிழ் மக்களின் போராட்டத்தை சரியாக வழிநடத்தியிருக்கும். தரப்படுத்தலை எந்தவகையில் எதிர் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.