"எந்தச் சாதியில் பிறந்தவராக இருப்பினும் தகுதியும், பயிற்சியும் இருந்தால், இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களில் அர்ச்சகராகலாம்'' என்ற சட்டத்தை தி.மு.க. அரசு மீண்டும் இயற்றியுள்ளது. 1972இல் இதே சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்தபோது அதற்கெதிராக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்து அரசியல் சட்டம் தங்களுக்கு வழங்கியிருக்கும் பிறப்புரிமையை நிலைநாட்டிக் கொண்டார்கள் பார்ப்பனர்கள். ""நமது பிறவி இழிவை பூதக்கண்ணாடியால் பெருக்கிக் காட்டுவது போல வந்திருக்கிறது உச்சநீதி மன்றத் தீர்ப்பு'' என்று சாடினார் பெரியார்.