புதிய ஜனநாயகம்

மான ஈனமற்ற அமெரிக்க அடிமைத்தனத்திற்குப் புதிய இலக்கணம் படைத்து வருகிறது, மன்மோகன் சிங் அரசு. மறுகாலனியாக்கக் கொள்கைகளை விசுவாசமாகவும் வெறியோடும் நடைமுறைப்படுத்தி வருவதோடு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தில் இந்தியாவை இறுகப் பிணைக்கும் நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபட்டு, இந்தியாவை அமெரிக்காவின் விசுவாச அடியாளாக வளர்த்தெடுப்பதிலும் புதிய "சாதனை'யைப் படைத்து வருகிறது.

மேலும் படிக்க …

அலைக்கற்றை ஊழல் என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழல் மட்டுல்ல் இது தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் கார்ப்பரேட் பகற்கொள்ளை. தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் இத்தகைய பகற்கொள்ளைகள் சட்டபூர்வமாகவே அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மையமான பிரச்சினை இலஞ்சஊழல் மோசடிகளைக் காட்டிலும் முதன்மையானதும், அவற்றில் பலவற்றுக்கு அடிப்படையானதும் இதுதான் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மேலும் படிக்க …

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 110 டாலர் விலை இருந்தபோது, அதையொட்டியே விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறிய மைய அரசு, தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 93 டாலராகக் குறைந்துள்ள போது விலையைக் குறைக்காமல், ஏற்றிய விலையிலேயே விற்றுக் கொள்ளையடிப்பதை எதிர்த்து கடந்த ஜூன் 29 அன்று தஞ்சை ரயிலடியில் ம.க.இ.க் பு.மா.இ.மு; வி.வி.மு., ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

மேலும் படிக்க …

சமச்சீர் கல்வி பொதுப் பாடத்திட்டத்தை முடக்கும் பாசிச ஜெயா அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போதே, சமச்சீர் கல்வி ஒழிப்பு நடவடிக்கையின் அரசியல் பின்புலத்தை மாணவர் களுக்கும் பெற்றோ ர் களுக்கும் விளக்கிப் புரிய வைக்கும் பிரச்சாரத்தையும் புரட்சிகர மாணவர் இளைஞர் அணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் படிக்க …

இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மூத்த நக்சல்பாரித் தோழர் கணபதி, கடந்தஜூலை 22ஆம் தேதியன்று தனது 75வது வயதில் மரணமடைந்துவிட்டார்.

மேலும் படிக்க …

"ஜெயாவின் ஆட்சி என்றாலே நிர்வாகத் திறமைமிக்க ஆட்சி; சட்டம்ஒழுங்கைக் கண்டிப்புடன் பேணக்கூடிய ஆட்சி. தி.மு.க.வின் ஆட்சியோ இதற்கு நேர்மாறானது' என்றொரு கருத்தைப் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டே நீண்டகாலமாகப் பரப்பி வருகின்றன.

மேலும் படிக்க …

தென்னிந்தியாவில் முதன்முறையாக கர்நாடகத்தில் அமைந்த பா.ஜ.க. ஆட்சி, பல்லாயிரம் கோடி சுரங்க ஊழல்  கொள்ளையில் சிக்கி நாடெங்கும் சந்தி சிரிக்கிறது. கட்டுப்பாடுமிக்க கட்சியாகவும் யோக்கிய சிகாமணிகளாகவும் ஊழல் எதிர்ப்பு சவடால் அடித்துவரும் பா.ஜ.க.வின் காவிகோவணமும் கிழிந்து அம்மணமாகி நிற்கிறது. ஊழல் கொள்ளையில் சிக்கிய முதல்வர் எடியூரப்பாவைப் பதவியிலிருந்து விலகச் சொல்லி பா.ஜ.க. தலைமை நிர்ப்பந்திக்க, அவர் ஏற்க மறுத்து கலகம் செய்த பிறகு, ஜெயலலிதாவுக்கு வாய்த்த பன்னீர்செல்வத்தைப் போல, எடியூரப்பாவின் விசுவாசியாக உள்ள ஒருவரை முதலமைச்சராக்க ஒப்புக் கொண்ட பிறகு, எடியூரப்பாவின் பதவி விலகல் நாடகம் நடந்துள்ளது.

மேலும் படிக்க …

சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் கடந்த மே மாத இறுதியிலிருந்து தாங்கள் செயல்படும் பகுதிகளில் ம.க.இ.க, வி.வி.மு, பு.ம.இ.மு;, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து தொடர் பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் தமிழகமெங்கும் பல பகுதிகளில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்த இவ்வமைப்புகள், அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை மாதத்தில் துண்டுப்பிரசுரங்களுடன் வீடுகளிலும் பள்ளிகளிலும் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பெற்றோர்கள்  மாணவர்களைத் திரட்டி உண்ணாநிலை போராட்டங்கள், சாலைமறியல்கள்,பாசிச ஜெயாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம், தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் பெற்றோரைத் திரட்டிப் போராட்டம் என போர்க்குணத்தோடு தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த ஜூலை 4ஆம் தேதியன்று காரைக்குடியிலும், 11ஆம் தேதியன்று போடியிலும், 12ஆம் தேதியன்று கரூரிலும், 13 ஆம் தேதியன்று மானாமதுரையிலும், 21ஆம் தேதியன்று சிவகங்கையிலும் ஆர்ப்பாட்டங்களை இவ்வமைப்புகள் நடத்தின.

மேலும் படிக்க …

திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் விளையும் நெல்லை விற்பனை செய்யப் போதுமான அளவிற்கு நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையங்கள் அம்மாவட்டங்களில் திறக்கப்படுவதில்லை.  இதனால், அம்மாவட்டங்களைச்  சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் வேறு வழியின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாகத்தான் நெல்லை விற்று வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல்லுக்குஅரசு நிர்ணயித்திருக்கும் கொள்முதல் விலை கிடைக்காது. வியாபாரிகள் கூட்டணி கட்டிக் கொண்டு தீர்மானித்துச் சொல்லும் விலையில்தான் நெல் மூட்டைகளை விற்க முடியும்.  சட்டபூர்வமாக நடந்துவரும் இந்தக் கொள்ளையை விவசாயிகள் தட்டிக் கேட்க முயன்றால், போலீசின் குண்டாந்தடியும் பொய் வழக்கும்தான் அவர்கள் மீது பாயும்.  இந்த அநியாயம்தான் கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி விழுப்புரத்திலும் நடந்தது.

மேலும் படிக்க …

"நலத்திட்டங்கள்' என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியாலும் தொடர்ந்து இந்நாள் முதன்மந்திரி ஜெயலலிதாவாலும் அழைக்கப்படும் திட்டங்கள், "இலவசங்கள்' என்று மேட்டுக்குடி, ஆதிக்க சாதி அறிவுஜீவிகளாலும் முதலாளிய ஊடகங்களாலும் கொச்சைப்படுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க …

இந்திய அரசின் தேசியப் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த ஜூன் 11 அன்று இலங்கைக்குச் சென்று, அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவையும் மற்ற பிற முக்கிய அதிகாரிகளையும் சந்தித்துவிட்டுத் திரும்பியது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதற்கான முன்தயாரிப்புகளைச் செய்வதற்கும், இலங்கை  இந்திய இராணுவ அதிகாரிகளிடையே நடந்துவரும் வருடாந்திர பேச்சுவார்த்தைகள் தொடர்பான தயாரிப்புகளைச் செய்வதற்கும்தான் இக்குழு இலங்கைக்குச் சென்று திரும்பியிருக்கிறது. இலங்கை சென்றுவிட்டுத் திரும்பிய சிவசங்கர் மேனன் பத்திரிகையாளர்களிடம் நடத்திய உரையாடலே, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தோ, ஈழத் தமிழர்களின் மறுவாழ்வு, அதிகாரப் பகிரவு குறித்தோ இக்குழு எவ்வித முக்கிய ஆலோசனையும் நடத்தவில்லை என்பதற்கான சான்றாக உள்ளது.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More