புதிய ஜனநாயகம்

தீவிரவாத  பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் "தேசபக்த' இனப்படுகொலைகள் பற்றிய உண்மைகள், அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 38 இடங்களில் "அடையாளம் தெரியாதவர்கள்' என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரகசியமாக இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, காஷ்மீர் போலீசாரால் புதைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க …

தமிழகம் முழுவதும் 411 வாகனங்களைப் பல ஊர்களில் நிறுத்தி வைத்து, எதிர்பாராமல் நிகழும் சாலை விபத்துகள், மாரடைப்பு, தீக்காயங்கள் மற்றும் நோய்களுக்கு அவசர உதவிகளைச் செய்து, பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று காப்பாற்றும் பணியைச் செய்து வருகிறது, 108 ஆம்புலன்ஸ் சேவை. ஆனால், இதில் பணியாற்றும் ஊழியர்கள் நிர்வாகத்தால் கசக்கிப் பிழியப்படும் கொடுமையும், இச்சேவையைப் பயன்படுத்தி ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. (அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக்கழகம்  என்ற தனியார் நிறுவனம் அடிக்கும் கொள்ளையும் பலரும் அறியாதது.

நாளொன்றுக்கு 12 மணிநேரம் வீதம் இரண்டு ஷிப்டுகளில் பணிபுரியும் இதன் ஊழியர்கள், வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் ஓய்வறையோ, கழிவறையோ,குடிநீர் வசதிகூட இல்லாமல் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு சுரண்டப்படுகின்றனர். இதற்கு வட்டார, மாவட்ட மருத்துவத்துறை அரசு அதிகாரிகள் உடந்தையாக நின்று ஆதாயமடைகின்றனர்.  குறிப்பாக சிவகங்கை,  இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் அதிகாரியான (டி.எம்.) பால் ராபின் சன், தொழிலாளர்களைக் கேவலமாக வசைபாடுவதோடு, சட்டவிரோதமாக வேலை வாங்குவதும் மிரட்டுவதும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது.

இக்கொத்தடிமைத்தனத்துக்கு எதிராகக் குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு.வைத் தொடர்பு கொண்ட பிறகு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை விளக்கியும் தனியார்மயக் கொத்தடிமைத்தனத்தை அம்பலப்படுத்தியும் துண்டுப் பிரசுரம், சுவரொட்டிகள் வாயிலாகப் பிரச்சார இயக்கத்தை பு.ஜ.தொ.மு. மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, 18.8.2011 அன்று மாலை இராமநாதபுரம் அரண்மனை வாயிலருகே சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களின் பு.ஜ.தொ.மு. அமைப்பாளர் தோழர் நாகராசன் தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று 108இன் நிர்வாகம் மிரட்டியபோதிலும் அதனைத் துச்சமாக மதித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம், தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழகமெங்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அமைப்பாக்கிப் போராடஉந்துவிசையாக அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர், சிவகங்கை.

உலகின் மிக அமைதியான பகுதி என அறியப்படும் ஸ்கேன்டிநேவியாவில் உள்ளதொரு ஐரோப்பிய நாடு, நார்வே. ஈழம் உள்ளிட்டு உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில், ஏகாதிபத்திய உத்தியின்படி சமரசக் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் இந்நாடு பிரபலமானது. அகதிகளாகக் குடியேறுபவர்களுக்கு இந்நாட்டில் வழங்கப்படும் சலுகைகள் காரணமாக, "அகதிகளின் சொர்க்கம்' என இது அழைக்கப்படுகிறது. அது மட்டுமன்றி, நிம்மதியாக வாழத் தகுந்த நகரங்கள் உள்ள நாடுகளின் பட்டியலில், இது முதலிடத்தில் உள்ளது. இதனால், நார்வேயில் 1995  க்குப் பின்னர் புதிதாகக் குடியேறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நார்வேயில் மட்டும் நான்கரை லட்சம் பேர், புலம்பெயர்ந்தோர் ஆவர். அவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் இருந்தும் மேற்காசிய நாடுகளிலிருந்தும் வருபவர்கள். ஈழத் தமிழர்களும் 15 ஆயிரம் பேருக்கும் மேலாகஉள்ளனர். நார்வேயின் மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர் புதிதாகக் குடியேறியோரும், அவர்களின் வாரிசுகளுமே.

மேலும் படிக்க …

கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதியன்று, விழுப்புரத்திலுள்ள இ.சாமிக்கண்ணு என்ற கல்வி வியாபாபாரியின் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஏழுமலை பாலிடெக்னிக்கில் இரண்டாமாண்டு ஆட்டோமொபைல் படித்து வந்த மாணவரான பிரபாகரன், அந்நிறுவனத்தின் ஆசிரியரான குணசேகரன் என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்த பு.மா.இ.மு. தோழர்கள் அப்பாலிடெக்னிக் மாணவர்களை ஒருங்கிணைத்து "கொலைகார குணசேகரனுக்குப்பிணை வழங்காதே! உரிய விசாரணை நடத்தி கொல்லப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கு!' எனும் கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடியவர்கள் மீது தடியடித் தாக்குதல் நடத்திய போலீசு, பு.மா.இ.மு.வினர் 8 பேர் மீது ய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது.

கொல்லப்பட்ட மாணவர் பிரபாகரனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பு.மா.இ.மு.வினர், தொடரும் இப்படுகொலைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து இ.எஸ். கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களைத் திரட்டினர். அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசிடம் அனுமதிக்கு விண்ணப்பித்த போது, கல்வி வியாபாரிக்கு ஆதரவாக நின்ற விழுப்புரம் போலீசு ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்தது. தடையை மீறி நாங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று பு.மா.இ.மு.வினர் எச்சரித்த பின்னர், இறுதியில் போலீசு அனுமதி வழங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.மா.இ.மு. மற்றும் தோழமை அமைப்பினர் பெருந்திரளாகப் பங்கேற்ற போதிலும், இ.எஸ். கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்கக் கூடாது என்று அந்நிறுவனமும் போலீசும் மிரட்டியதால், அந்நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.

தனியார் கல்வி நிறுவனங்களின் பகற்கொள்ளையையும் கொலைகளையும் தோலுரித்துக் காட்டி, இ.எஸ். கல்வி நிறுவனத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி விண்ணதிரும் முழக்கங்களுடனும், பு.மா.இ.மு. மாநில அமைப்பாளர் தோழர் கணேசனின் சிறப்புரையுடனும் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் பகுதி வாழ் உழைக்கும் மக்களிடம் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராகப் போராட அறைகூவுவதாக அமைந்தது.

தகவல்:

புரட்சிகர மாணவர்  இளைஞர் முன்னணி,

விழுப்புரம்.

"உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு' என அமெரிக்காவைப் பற்றி உலகெங்கிலும் திணிக்கப்பட்டிருந்த பிம்பத்தை, அந்நாட்டின் கடன் நெருக்கடி மீண்டுமொரு முறை கலைத்துப் போட்டுவிட்டது. உலகிலேயே மிகப் பெரிய கடனாளி நாடு அமெரிக்காதான் என்பதை மட்டு மின்றி, வல்லரசு அமெரிக்கா மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டிய போண்டி அரசாக இருப்பதையும் இந்தக் கடன் நெருக்கடி அம்பலப்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க …

சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் எல்.பி. ரோட்டையும் அதில் அண்ணாவின் தமிழக ஆதரவாளர்கள் குழுமியிருக்கும் கட்டிடத்தையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. முகப்பிலேயே, "குழந்தைக்குத் தேவை தாய்ப்பால். மக்களுக்குத் தேவை ஜன் லோக்பால்' என்கிற அரசியல் முழக்கத்தை ப்ளக்ஸ் பேனரில் பிரம்மாண்டமாகக் கட்டி வைத்துப் பீதியூட்டியிருந்தனர். சாலையோர ப்ளக்ஸ்பேனர் களில் அண்ணா ஹசாரே, "இந்தியனே எழுந்து வா' என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க …

"நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை.  எங்கள் சானல் வழியா கத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம் கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன.

மேலும் படிக்க …

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே தனியார் பேருந்துகளும் லாரிகளும் ஒரு மாதத்துக்கு ஏறத்தாழ ரூ.3,000 செலுத்தி வந்த டோல் கேட் கட்டணம், இப்போது ரூ.38,000 முதல் ரூ.65,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகற் கொள்ளையை எதிர்த்தும், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்,டோல்கேட் அமைந்துள்ள மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகளுக்கு 50 சதவீத வரியை வசூலிக்க வேண்டும், காலியான வாகனங்களுக்கு 25 சதவீத வரியை வசூலிக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தனியார் பேருந்து, லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரிகள் ஓடாததால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டதோடு, காய்கறிகள்தானியங்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் பெருத்த பாதிப்புக்கு ஆளாகினர். கிருஷ்ணகிரி வட்டத்தின் அரசு போக்குவரத்துக் கழகம் மாதம் ரூ. 8 லட்சம் அளவுக்கு டோல்கேட் கட்டணம் செலுத்தி தொடர்ந்து நட்டப்பட்டு வருகிறது. இதைக் காரணம் காட்டி தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

டோல்கேட் பகற்கொள்ளை என்பது பேருந்து  லாரி உரிமையாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை என்பதை விளக்கி பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகள், அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே 19.8.2011 அன்று மாலை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பு.ஜ.தொ.மு. மாவட்டச் செயலர் தோழர் சங்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த தொழிலாளி தோழர் செல்வராஜ், பு.ஜ.தொ.மு. பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் இரவிச்சந்திரன், பு.ஜ.தொ.மு. மாவட்டத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் உரையாற்றினர். உள்ளூர் பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்கள் உழைக்கும் மக்களுடன் இணைந்து தனியார்மயக் கொள்ளைக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

பு.ஜ.செய்தியாளர், கிருஷ்ணகிரி.

கோவை மாவட்டம், உடுமலை வட்டாரத்திலுள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்துக்கும் குடிநீருக்கும் உயிராதாரமாக உள்ள அமராவதி ஆற்றின் பிரதான கிளை வாய்க்காலான ஐயர் வாய்க்காலின் அருகே, அமராவதி அணையை ஒட்டி காக்டஸ் என்ற தனியார் நிறுவனம், உரிய அனுமதியின்றி அரசு அதிகாரிகளின் துணையோடு கடந்த ஆறு மாத காலமாக நாளொன்றுக்குப் பத்து இலட்சம் லிட்டர் அளவுக்குத் தண்ணீரை உறிஞ்சிப் புட்டிகளில் அடைத்து வியாபாரம் செய்து வருகிறது.

மேலும் படிக்க …

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு 8 வாரங்கள் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம். இம்மூவரின் சார்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி, காலின் கன்சால்வேஸ், வைகை ஆகிய வழக்குரைஞர்கள் கருணை மனுவின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் நேர்ந்துள்ள 11 ஆண்டு காலத் தாமதத்தின் விளைவாக கைதிகள் மூவரும் அனுபவித்துவரும் துன்பம் மரண தண்டனையை விடக் கொடியது என்ற வாதத்தை முதன்மைப் படுத்தி, இம்மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். மனுவை ஏற்றுக்கொண்ட  உயர் நீதிமன்ற பெஞ்சு, 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசைக் கோரியுள்ளதுடன், செப்டம்பர் 9 ஆம் தேதியன்று நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை அதுவரை  நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க …

கடந்த ஆறு மாதங்களாக லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக நடத்தி வந்த போரில், ஏகாதிபத்திய விசுவாச கலகப்படை தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றியதும், அப்படையினரது இடைக்கட்ட அரசின் வெற்றியையும் கடாஃபி ஆட்சியின் வீழ்ச்சியையும் அமெரிக்காவும் நேடோ கூட்டணி நாடுகளும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளன. ஜனநாயகம், மனித உரிமை, போரில் சிக்கிய சிவிலியன்களைப் பாதுகாப்பது என்றெல்லாம் கூப்பாடு போடும் அமெரிக்காவின் கபடத்தனத்தை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டது, லிபியா மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More