புதிய ஜனநாயகம்

பெர்னி எக்லீஸ்டோன்  கடந்த மாதம் வட இந்திய ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட பெயர்  இதுதான். "பார்முலா1' கார் பந்தைய நிறுவனத்தின் தலைவர் என்ற காரணத்திற்காக,  இங்கிலாந்து நாட்டுத் தொழிலதிபரான எக்லீஸ்டோனை இந்திய ஊடகங்கள் தலையில் வைத்துக்  கொண்டாடின. இவரைத் தாஜா செய்து இந்தியாவில் பார்முலா1 பந்தையங்களை நடத்தியதன் மூலம், அனைத்துலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்ந் தோங்கிவிட்டதாக அவை கூறுகின்றன.

மேலும் படிக்க …

தமிழ்நாட்டில் 1970களிலிருந்து படிப்படியாக அதிகரித்து வந்த நகரமயமாக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிக வேகம் பிடித்தது. குறிப்பாக தலைநகர் சென்னைக்கு பிழைப்பு தேடி தினமும் வந்து குவியும் மக்களின் தொகையும், புதிதாக முளைக்கும் குடியிருப்புகளும், இதைச் சார்ந்து எழுப்பப்படும் உயரமான வணிக வளாகங்களும் சேர்ந்து சென்னையைத் திணறடித்து வருகின்றன.

மேலும் படிக்க …

தமிழகத்தில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்ட அனுபவத்தை தமிழகத் தொழிலாளர்களிடையே பதியவைத்து, முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கெதிராக அவர்களைப் போராட அறைகூவித் தமிழகமெங்கும் பிரசசார இயக்கங்களை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, "மாருதி சுசுகி கார்

மேலும் படிக்க …

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)இன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான கிஷன்ஜி என்றழைக்கப்படும் தோழர் மலோஜுலா கோடேஸ்வர ராவ், மத்திய ரிசர்வ் போலீசு படையினரால், 24.11.2011 வியாழனன்று படுகொலை செய்யப்பட்டு தியாகியானார். மேற்கு வங்க மாநிலம், மேற்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த புரிசோல் காட்டுப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக போலீசு தெரிவித்தது. துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படும் இடம்,  ஜம்போனி போலீசு நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், அரசு விவசாயப் பண்ணையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள ஆள் நடமாட்டமும் போலீசு நடமாட்டமும் அதிகமுள்ள இடமென்பதால், அங்கே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறுவதே சந்தேகத்திற்குரியது என்று கூறியிருக்கின்றன, சில பத்திரிகைகள்.

மேலும் படிக்க …

கூடங்குளம் போராட்டத்துக்கு எதிரான அவதூறுகள், டக்குமுறைகளை அரசு முடுக்கி விட்டிருக்கும் சூழலில் "பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான கூடங்குளம் அணு உலையை மூடுவோம்!' என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கன்னியாகுமரி மாவட்ட  கிளை சார்பாக 26.11.11 அன்று நாகர்கோயில் ஜெபமாலை திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கருத்தரங்கிற்கு முன், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும் தோழமை அமைப்புகளின் செயல்வீரர்களும் கடற்கரை கிராமங்களிலும் நாகர்கோயில் நகரிலும் அணுசக்திக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். நாகர்கோயில் நகரத்திலும், சுற்றுவட்டார நகரங்களிலும், மீனவ கிராமங்களிலும் சுமார் ஒரு வாரகாலம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க …

 

கூடங்குளம் அணு உலை தொடர்பான விவாதம், "அணுசக்தி பாதுகாப்பானதா, இல்லையா?' என்ற சட்டகத்துக்குள்ளேதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. கூடங்குளம் அணு உலையை நிறுவுவதாக இருக்கட்டும், அணு மின்சாரம்தான் ஒரே மாற்று என்று மன்மோகன் சிங்  தற்போது எழுப்பும் கூக்குரலாக இருக்கட்டும், இவை மறுகாலனியாக்க கொள்கைக்கும், பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கும் ஏற்ப நமது நாட்டின் மீதும் மக்களின் மீதும் திணிக்கப்பட்ட முடிவுகள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, தேசத்தின் மீதும் அறிவியலின் மீதும் உள்ள மாளாக் காதலின் காரணமாகத்தான் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதைப் போல அரசும் அதிகார வர்க்கமும் நடிக்கின்றன. இதனை அம்பலப்படுத்துவதுதான் இப்பிரச்சினையில் கேந்திரமானது.

"ஏன் கூடாது கூடங்குளம் அணுஉலை' என்ற தலைப்பில் சுவராத் ராஜு, எம்.வி.ரமணா என்ற இரு இயற்பியலாளர்கள் இந்து நாளேட்டில் (12, நவ.) ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றனர். அறிவியல் தொழில்நுட்ப ரீதியான கேள்விகளுக்குப் பின், அறிவியல் தெரியாத பாமர மக்களின் சார்பில் இறுதியாக அவர்கள் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி முக்கியமானது.  "கூடங்குளம் உலை அத்தனை பாதுகாப்பானதென்றால், "கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனைத் தயாரித்த ரசிய நிறுவனம் சல்லிக்காசு கூட இழப்பீடு தரவேண்டாம்' என்று இந்தியரசிய ஒப்பந்தத்தின் 13ஆவது ஷரத்து கூறுகிறதே, அது ஏன்?' என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க …

ரவுடிகளின் அராஜகத்தை எதிர்த்துப் போராடி, கடந்த அக்டோபர் 26ஆம் தேதியன்று ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட பு.ஜ.தொ.மு. தோழர் செந்திலின் தியாகத்தைப் போற்றியும்; அவரது உயரிய இலட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்றும் நவம்பர் 6ஆம் தேதியன்று மதுரை  ஒத்தக்கடையில் ம.க.இ.க் பு.ஜ.தொ.மு; ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து நினைவேந்தல் கூட்டத்தை நடத்தின.

ம.க.இ.க. மையக்கலைக்குழுவின் தோழர் கோவன், தியாகத் தோழர் செந்திலின் உருவப்படத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்திய இக்கூட்டத்தில், நாம் தமிழர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்ப்புலிகள், ஆதித்தமிழர் பேரவை, ம.தி.மு.க் இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சி, ஆனைமலை பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், ம.உ.பா.மையத்தின் மதுரைக்கிளை இணைச் செயலரான வழக்குரைஞர் வாஞ்சிநாதன், ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் ஆகியோரும் சிறப்புரையாற்றினர். தனியார்மய  தாராளமயத்தால் ரவுடியிசம் வளர்ந்து வருவதை விளக்கியும், பெருகிவரும் இந்த அபாயத்துக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராட அறைகூவியும், தோழர் செந்திலின் தியாகத்தைப் போற்றியும் நடந்த இந்தக் கூட்டம் தோழர் செந்திலின் நினைவை மக்கள் மனங்களில் ஆழமாக விதைப்பதாகவும், ரவுடியிசத்துக்கு எதிராகப் போராட மக்களை  அறைகூவுவதாகவும் அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர், மதுரை

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடந்து வரும் மக்கள் போராட்டத்தை ஆதரித்தும், பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்காக நாட்டு மக்களைப் பலியிடத் துடிக்கும் ஆட்சியாளர்களை எதிர்த்தும், தமிழகமெங்கும் மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, "3 சதவீத அணு மின்சாரத்திற்காக எதிர்காலச் சந்ததியினரைப் பலியிடாதே! பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்காக இந்தியக் கடற்கரை முழுவதும் 36 அணு உலைகளை நிறுவத் துடிக்கும் மன்மோகன் சிங் கும்பல் ஒழிக! வல்லரசுக் கனவுக்கு நாட்டு மக்களைப் பணயம் வைக்காதே! இந்திய அரசு, இந்துவெறி பா.ஜ.க., காங்கிரசு கும்பலின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்போம்! கூடங்குளம்  இடிந்தகரை மக்கள் போராட்டத்தில் ஒன்றிணைவோம்!' என முழக்கங்கள் எதிரொலிக்க  மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி 16.11.2011 அன்று காலை 10 மணியளவில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குணசேகர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் புஷ்பதேவன், செல்வகுமார், கதிர்வேல் பாலாஜி, செந்தாமரைக் கந்தன் ஆகியோரும் ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜுவும் சிறப்புரையாற்றினார்.

திருவண்ணாமலையில் துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட ம.உ.பா.மையம், அதன் தொடர்ச்சியாக 23.11.2011 அன்று மாலை காந்தி சிலை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வழக்குரைஞர் கண்ணன் தலைமையில், மாவட்டத் தலைவர் தோழர் பொன்.சுப்பிரமணியன், வழக்குரைஞர் சேகர், புவியன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள், அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஏகாதிபத்தியங்களின் அடியாட்களாக பொய்ப்பிரச்சாரம் நடத்திவருவதைத் திரைகிழித்துக் காட்டி உழைக்கும் மக்களைப் போராட அறைகூவியழைப்பதாக அமைந்தது.

. பு.ஜ. செய்தியாளர்கள்

பகற்கொள்ளையடிக்கும் பாசிச ஜெயாவின் பேயாட்சிக்கு எதிராகத் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் உழைக்கும் மக்களிடம் விரிவாகப் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டங்களையும்   மறியல் போராட்டங்களையும்  நடத்தி வருகின்றன.

மேலும் படிக்க …

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து உழைக்கும் மக்கள் தத்தளிக்கும் நிலையில், பால் விலை மற்றும் அரசுப் பேருந்து, மின்சாரக் கட்டணங்களைக் கிடுகிடுவென உயர்த்தி தமிழகத்தின் ஏழைஎளிய, நடுத்தர வர்க்க மக்கள் மீது பொருளாதார ரீதியிலான அதிரடி பயங்கரவாதத் தாக்குதலை பாசிச ஜெயலலிதா அரசு ஏவிவிட்டுள்ளது. இதுவரை கண்டிராதபடி, ஒரே நேரத்தில் சாதாரணப் பேருந்துக் கட்டணம் கி.மீ.க்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், ஆவின் பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 6.25 ஆகவும் உயர்த்தியுள்ள ஜெயா கும்பல், மின் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.  இந்தியாவில் எந்தவொரு முதலமைச்சரோ, மாநிலமோ செய்திராத இக்கொடிய தாக்குதலால் சாமானிய மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் வாட் வரி மூலம் ரூ.4000 கோடிக்கு மேலாக வரி விதித்த பாசிச ஜெயலலிதா அரசு, இப்போது விலையேற்றம்  கட்டண உயர்வின் மூலம் ரூ. 11,000 கோடிக்கு மக்கள் மீது பெருஞ் சுமையை ஏற்றியுள்ளது.

மேலும் படிக்க …

ஒரே வணிக முத்திரை கொண்ட பொருளை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 51 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிப்பதெனவும், பல்வேறு வணிக முத்திரைகள் கொண்ட பொருட்களை விற்கும் சில்லறை வியாபாரத்தில் 51 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது எனவும் மைய அமைச்சரவை முடிவெடுத்து அறிவித்திருக்கிறது.  இம்முடிவின் மூலம், இந்தியாவெங்கிலும் சில்லறை வர்த்தகத்தை நம்பி வாழ்ந்துவரும் பல இலட்சக்கணக்கான குடும்பங்களை அழிவின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது, மையஅரசு.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More