Language Selection

புதிய ஜனநாயகம்

04_2005.jpg"மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ ஃ மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும் விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்'' என்ற அமெரிக்க சட்டத்தின்படி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த வர்த்தக ஃ சுற்றுலா விசாவினை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.

 

""மோடியின் அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம் அல்ல. அதனால் அவருக்கு அரசுமுறை விசாவும் வழங்க முடியாது' என மறுத்துவிட்டது அமெரிக்க அரசு.

04_2005.jpgதமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது சிந்தனைப் போக்கை (பார்ப்பன பாசிஸ்டுகளின் சிந்தனைப் போக்கை என்றும் கருதலாம்) மிகவும் தெளிவாகக் கடந்த மாதம் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். ""நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது காவல்துறை. வலிமையான நாடாக இந்தியா இருக்க வேண்டும்; அதில் வளமிக்க மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்ற லட்சியம் ஈடேற வேண்டுமென்றால் தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்க வேண்டும். எந்த வளர்ச்சிக்கும் முதல் தேவையாக இருப்பது அமைதியான சூழ்நிலைதான். அத்தகைய அமைதிச் சூழ்நிலையை உருவாக்குவதிலும் அதனைக் கட்டிக் காப்பதிலும் காவல்துறையின் பணி இன்றியமையாதது. இதன் அடிப்படையில்தான் காவல்துறையை நவீனப்படுத்தவும் காவல்பணியை மேம்படுத்தவும் காவலர்கள் நலன்பேணவும் பல்வேறு திட்டங்கள் சலுகைகள் உதவிகள் ஆகியவற்றை நான் அறிவித்தேன்.''

04_2005.jpg"எம் பேரு கண்ணன். எங்கப்பா செருப்பு தைக்கிறவரு. சீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி காலனியிலதான் எங்க வீடு இருக்கு. எங்கூடப் பொறந்தவங்க ஆறு பேரு. வீட்டுல ரொம்ப கஷ்டம். அதனால, ராஜஸ்தானுல கோட்டாங்கிற டவுனுல குமான்புரா தெருவுல இருக்குற சீவில்லிபுத்தூர்காரர் வெள்ளைச்சாமியோட கடலமிட்டாய் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். என்னோட எங்க காலனியில இருக்குற முனியாண்டியும் வீரய்யாவும் வேலைக்கு வந்தாங்க.

03_2005.jpgஏழை எளிய மக்கள் என்ன, வேண்டாத கழிவுப் பொருட்களா? நகருக்கு வெளியே கொண்டு போய்க் குவிக்கிறது, அரசு!

 

சிங்காரச் சென்னையில் ஏழை எளிய மக்களுக்கு வாழும் உரிமை இல்லையா? இரண்டாண்டுகளில் 20,000 குடும்பங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் 20 மைல்களுக்கு அப்பால் (துரைப்பாக்கத்தில்) குப்பையாகக் கொட்டியது, அரசு.

 

03_2005.jpgதிருச்சி நகரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயணச் சீட்டு பெயரளவில் வழங்கப்பட்டுள்ளதே தவிர, அதைப் பயன்படுத்தும் வகையில் பள்ளி நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பள்ளி நேரங்களில் வரும் பேருந்துகளெல்லாம் அளவுக்கு மீறிய பயணிகளோடு திணறிக் கொண்டு வருவதும், மாணவர்களை ஏற்றாமல் செல்வதும் தொடர்கிறது. இதனால் மாணவர்கள் ஜன்னல் கம்பியையும் ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக் கொண்டு படிகளில் தொங்கியபடியும் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்கின்றனர். கிராமப்புற பேருந்துகளில் மாணவர்கள் மேற்கூரையில்தான் பயணம் செய்ய முடிகிறது. நெரிசலில் முட்டி மோதி உள்ளே ஏறும் மாணவர்களை சில ஓட்டுநர்களும் நடத்துனர்களும் கொச்சையான வார்த்தைகளால் வசைபாடுவதும் தொடர்கிறது. சில