Language Selection

புதிய ஜனநாயகம்

04_2005.jpg· மைய அரசின் புதிய வரிவிதிப்புகளின் பின்னே மறைந்துள்ள உண்மையான நோக்கங்களை தலையங்கக் கட்டுரை எடுப்பாக உணர்த்தியது. மறைந்த ஓவியர் உதயனின் தூரிகையில் உருவான அற்புதமான அட்டைப்படக் கேலிச் சித்திரம் அவரது நினைவை என்றென்றும் நமது மனங்களில் நிறுத்தும். தன்னார்வக் குழுக்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நோக்கங்கள் பற்றி தெளிவில்லாமல் இருந்த எனக்கு ""வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள்'' என்ற கட்டுரை பேருதவியாக அமைந்தது.
புரட்சிக் கவிநேசன் தேரெழுந்தூர்

04_2005.jpgகடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தின் மக்களுடைய போக்குவரத்துக்கு இதயமாக இருந்த மணிமுத்தாறு பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெய்த பெரும் மழையின் வெள்ளப் பெருக்கில் சிதைந்து தன்னுடைய 125 ஆண்டுகாலச் சேவையை முடித்துக் கொண்டது. அது முதல் இந்நகர மக்கள் போக்குவரத்துக்குப் படும் அவதி சொல்லி மாளாது!

 

"அவசரத்திற்கு' என்று இரு சக்கர வாகனங்களில்கூடச் செல்ல முடியாத மரப்பாலம் ஒன்றைக் கட்டிய ஆளும் கும்பல் "செலவு 7 லட்சம் ரூபாய்'

04_2005.jpgஇந்தியாவின் காடுகளிலுள்ள சிங்கம் புலி நரி ராஜநாகம் முதலான விலங்கினங்கள் படிப்படியாக அழிந்து வருவதாக ""அவுட்லுக்'' என்ற ஆங்கில வார ஏடு அண்மையில் ஒரு அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது. காடுகளிலுள்ள அரிய விலங்கினங்கள் மட்டுமல்ல; நாட்டிலுள்ள கால்நடைச் செல்வங்களும் படிப்படியாக அழிந்து வருவதோடு இனி இந்திய ஆடுமாடுகளை மிருகக்காட்சி சாலையில்தான் பார்க்க முடியும் என்ற பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

04_2005.jpgஓட்டுக்கட்சி ரவுடிகளால் சாதி மத வெறியர்களால் ஆளும் வர்க்கக் கும்பலால் உழைக்கும் மக்கள் மீது அன்றாடம் நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் ஏவிவிடப்படுகின்றன. இவற்றுள் ஏதோ ஒன்றிரண்டு தாக்குதல்கள்தான் நாடெங்கிலும் அம்பலமாகி மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இப்படி அம்பலமான தாக்குதல்களில் கூட குற்வாளிகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

04_2005.jpgபோலி கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.எம். தனது 18வது அகில இந்திய மாநாட்டை ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ளது. இதற்கு முன்னதாக அக்கட்சி செயல்படும் மாநிலங்களில் மாநில மாநாடுகளை நடத்தி வருகிறது. கேரள மாநில மாநாட்டில் வழக்கம் போலவே குழுச் சண்டைகள் பகிரங்கமான நாய்ச் சண்டையாகி சந்தி சிரித்தது. இக்குழுச் சண்டைகள் பதவிக்கான சண்டையாக மட்டுமின்றி கட்சி சொத்துக்களை அனுபவிப்பதற்கான அதிகாரச் சண்டையாகவும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.