Language Selection

புதிய ஜனநாயகம்

07_2005.jpg நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கடற்கரையை ஒட்டியிருக்கும் ஜி.எச்.சி.எல். ஆலையின் நச்சுக் கழிவால், ""40 கி.மீ. வட்டச் சுற்றுக்குள் உள்ள பகுதிகள் பாலைவனமாய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்'' என்று அவ்வாலையினால் ஏற்பட்ட கேடுகளை பட்டியலிட்டு எச்சரித்ததோடு உடனடியாக, ஜி.எச்.சி.எல். நச்சு ஆலையின் ""மின் இணைப்பைத் துண்டிக்கவும்'', ""ஆலையின் உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்தி வைக்கவும்'' வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆணை நிறைவேற்றி, அதை அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உடனடியாக அமல்படுத்தக் கோரியது.

07_2005.jpg சமூகம் கல்வி, அரசியல்பொருளாதாரம் ஆகிய பலவகைகளிலும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள், தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களை நடத்தவேண்டிய களம் தேர்தல்களோ, நாடாளுமன்றம் சட்டமன்றங்களோ, நீதிமன்றங்களோ அல்ல. அவற்றுக்கு வெளியே எழுச்சிக் களங்களை உருவாக்க வேண்டும். இந்த உண்மையை தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வு ரத்தை செல்லாது என்று தீர்ப்புக் கூறியதன் மூலம் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. பொதுவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் ஆகிய விவகாரங்கள் தொழிற்

07_2005.jpgதிருச்சி, சிறீரங்கம் வட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம், உத்தமர் சீலி. கடந்த 18.5.05 தேதியன்று இரவு 9 மணி அளவில் திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து, கல்லணைக்குப் போகும் தனியார் பேருந்தில் உத்தமர் சீலி கிராமத்தைச் சேர்ந்த முத்தரையர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலரும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இருவரும் வந்தனர். இந்த இளைஞர்கள் அவர்களுடைய "அரிசன தெரு பஸ் ஸ்டாப்'பில் இறங்கத் தயாரான போது, முத்தரையர் சாதியினர் வேண்டுமென்றே படியில் நின்று கொண்டு வழியை மறித்தனர். அப்போது தாழ்த்தப்பட்ட இளைஞர் கையிலிருந்த "பிளம்பர்' தொழில் செய்யும் கருவி முத்தரையர் மீது உரசியது. "பள்ளப்பயலுக்கு என்னடா இவ்வளவு திமிரு' என்று

06_2005.jpg"விடுதலை'', ""ஜனநாயகம்'' என்பதற்கு அமெரிக்க மேலாதிக்கவாதிகளின் அகராதியில் உள்ள பொருள் என்ன என்பதை ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு நிரூபித்துக் காட்டிவிட்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் கொடூரத்தையும் ஈராக்கிய மக்களின் வாழ்க்கை எப்படி உருக்குலைந்து கிடக்கிறது என்பதையும், பாக்தாத் நகரைச் சேர்ந்த பொறியாளர் காஸ்வான் அல் முக்தார், அமெரிக்க அதிபர் புஷ்ஷûக்கு எழுதியுள்ள இப்பகிரங்கக் கடிதம் படம் பிடித்துக் காட்டுகிறது. குமுறிக் கொண்டிருக்கும் ஈராக்கிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இக்கடிதம் ""மூன்றாம் உலக மறுமலர்ச்சி'' என்ற ஆங்கில இதழில் வெளிவந்தது. அக்கடிதத்தைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளோம். — ஆசிரியர் குழு.

 

06_2005.jpgகரண்ட் பில் கட்டாத சாமானிய மக்களின் வீடுகளில் ப்யூஸைப் பிடுங்கும் ஆட்சியாளர்கள், மக்கள் வரிப்பணத்திலிருந்து என்ரானின் 5,250 கோடி ரூபாய் கடனை அடைக்கக் கிளம்பியுள்ள நிலையில், இம்மக்கள் விரோதிகளை எதைக் கொண்டு அடிப்பது? இவர்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருக்கும் போலி கம்யூனிசத் துரோகிகளை எதைக் கொண்டு அடிப்பது?
பிரியதர்ஷிணி, சென்னை.