Language Selection

புதிய ஜனநாயகம்

08_2005.jpgதமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைஅறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான். இவர்கள் தங்களின் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அரசிடம் போராடிப் பெற்ற சலுகைதான் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) ஆகும். அரசு அளிக்கும் இந்த உதவித் தொகை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட்டால்தான், அவர்களால் தமது கல்விச் செலவுகளை ஈடுசெய்ய முடியும். ஆனால், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சென்ற (200405) ஆண்டிற்கான உதவித் தொகை இந்த ஆண்டு ஜூலை வரை வழங்கப்படவில்லை.

07_2005.jpg- கண்டன ஆர்ப்பாட்டம் நவரத்தினரங்கள் என்றழைக்கப்படும் இந்தியாவின் மிகப் பெரிய அரசுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனத்தின் (""பெல்'') அரசுப் பங்குகளில் 10 சதவீதத்தைத் தனியாருக்கு விற்றுவிட அண்மையில் காங்கிரசு கூட்டணி அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று திருச்சி ""பெல்'' ஆலை வாயிலருகே பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைமையில் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தையும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் தெருமுனைக் கூட்டங்களையும் நடத்தின. பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச் செயலாளர் தோழர் நாராயணசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் காளியப்பன் (ம.க.இ.க.) சிறப்பரையாற்றினார்.

07_2005.jpgபோலீசு துறையைக் கலைக்கக் கோரும் மும்பை மக்களின் போராட்டம் மிகச் சரியானது. சென்னையில் வழிப்பறி கும்பலாக, கொள்ளைக் கூட்டமாக, பிளாச்சிமடா கோக் ஆலையின் காவல் நாயாக உள்ள போலீசு துறையைக் கலைத்து, மக்கள் தமது அதிகாரத்தை ஏந்திச் சுழற்றும் மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தளபதி சண்முகம், சென்னை.

07_2005.jpgமதுரையில் இயங்கிவரும் ""மக்கள் கண்காணிப்பகம்'' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமையில், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தமிழர் இயக்கம், சி.பி.ஐ., சி.பி.எம். மற்றும் தலித் மக்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறப்படுகின்ற தன்னார்வக் குழுக்கள் ஆகியவை இணைந்து, ""சித்திரவதைக்கு எதிரான பிரச்சாரம், தமிழ்நாடு'' என்ற ஒரு கூட்டமைப்பை கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்தி வருகின்றன.

07_2005.jpgதிருச்சி அருகே அமைந்துள்ள தரகு முதலாளித்துவ நிறுவனமான டால்மியாபுரம் சிமெண்ட் ஆலையில் 16 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியின்போது பலியானார்கள். மேலும், அதே இடத்தில் 18 கூலித் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். 28.5.05 அன்று மதியம் 12.50 மணிக்கு இக்குரூரம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.