பஞ்சாப்: பிணக்காடாகும் கோதுமைக் களஞ்சியம்
தாராளமயத்தால் இந்தியா ஒளிர்வதாக ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் சித்தரித்துவரும் அதேவேளையில், அத்தாராளமயமாக்கம் இந்தியாவின் கிராமப்புறங்களில் அமைதியாக நரவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட "இந்தியர்'களின் எண்ணிக்கையை விட, சந்தை பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.