தண்ணீர் யாருக்குச் சொந்தம்? மக்களுக்கா உலக வங்கிக்கா?
தண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் வீறுகொண்டு ஏழத் தொடங்கிவிட்டன
நாடு முழுவதும் ஏன், உலகெங்கும் தண்ணீர் தனியார்மயமாவதையும் வியாபாரமாவதையும் எதிர்த்து போராட்டங்கள் பெருகி வருகின்றன. உயிருக்கே ஆதாரமான தண்ணீரைத் தனது கொள்ளை லாப வெறிக்காக சரக்காக்கிற "ஷைலக்'குகளான பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை ஒழித்துக் கட்டாத வரை இப்போராட்டங்கள் ஓயப் போவதுமில்லை.