நகர்ப்புற புத்தாக்கத் திட்டம்: ஏழைகளை விரட்டியடிக்கும் ஏகாதிபத்திய சதி!
அக்டோபர் நவம்பர் மாதங்களில் பெய்த பேய் மழை புயலால், தமிழகமே வெள்ளக் காடாக மாறித் தத்தளித்தது. தமிழகத்திற்கு முன்பாக, ஒரே ஒருநாள் கொட்டித் தீர்த்த அடைமழையால், மும்பய் மாநகரமே மூழ்கிப் போனது. இந்த மழை வெள்ளம் பங்களாவாசிகளைக் கூட விட்டு வைக்காததால், அப்பெருமக்கள் அனைவரும் நாட்டின் அடிக்கட்டுமான வசதி பற்றி அங்கலாய்த்து வருகிறார்கள்.