தமிழச்சி

1845- ஆம் வருட காலங்களில் ஐரோப்பா முழுவதும் பதட்டநிலையில் இருந்த காலங்கள். அதிலும் ஜெர்மன் நாட்டில் அதிக அளவு மக்கள் மீது அடக்குமுறை திணிக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தால் ´தீவிரவாதி´ என்று சிறையில் அடைக்கப்பட்டார்கள். அல்லது நாடு கடத்தப்பட்டார்கள். அப்படித்தான் மார்க்ஸ், ஏஞ்செல்ஸ் போன்றவர்களுக்கும் நடந்திருந்த நேரம்...
தமிழச்சி
08/02/2009

மேலும் படிக்க …

´வரலாற்று ஆய்வு´ (A Study of History) என்ற நூலை 65- வருடங்களுக்கு முன்பு வரலாற்றுப் பேராசிரியர் ´டாயின்பீ´ (Arnold Toynbee) எழுதியிருந்தார். 10-பாகங்களாகவும், ஒவ்வொரு பாகமும் குறைந்தது 1000-பக்கங்களுக்கும்  அதிகமாக உடையதாக இருந்தது.

மேலும் படிக்க …

FIRST INTERNATIONAL

1848-இல் ஐரோப்பா கண்டத்தில் முதல் முதலாக மக்கள் போராட்டம் நடந்து கிளர்ச்சிகள் மூர்க்கத்தனமாக அரசாங்கத்தினால் அடக்கப்பட்ட காலம். மக்கள் சோர்ந்து போய்விட்டார்கள். புரட்சி வார்த்தைகள், சிந்தனைகளை தேசத்துரோகமாக கருதி கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டதால் மக்களிடம் அரசாங்கத்திற்கு எதிராக பேசவும், சிந்தக்கவும் கூட பயந்தனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்த தொழிலாளர் வர்க்கங்கள் தொடர்ந்து செயலிழந்து இருக்க விரும்பவில்லை. தொழிலாளர் வர்க்கம் மட்டுமே தன் வாழ்வுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்தது. அதனால் தன்னை வலுப்படுத்திக் கொள்ள பல நாடுகளிலும் தங்களுக்கென்று தனித்தனியாக தொழிற்சங்கங்கங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தன.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் நாடுகள் தொழிலாளர் வர்க்கத்திற்கு முன்னோடியாக இருந்ததும் மற்ற நாட்டு தொழில் சங்கங்களுக்கு ஓர் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி இருந்தது. தொழிற்சங்கம் வளர்ச்சியினால் தான் தொழிலாளர்களுக்குள் ´வர்க்க ஞானம்´ உண்டாக காரணமாக இருந்தது என்பதும் மிகைப்படுத்தலான வார்த்தைகள் கிடையாது. தொழிலாளர் பிரச்சனைகள் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான பிரச்சனைகளையே சார்ந்திருந்தது. வாழ்க்கை நிலைமை சமூதாயத்தில் தொழிலாளர்களுக்கு  அந்தஸ்தும் தொழிலாளர்களை சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் நிலைமையும் நலனும் சுரண்டுபவனும் சுரண்டப்படுகிறவனுக்குள்ளும் நடக்கும் உரிமை போராட்டங்களாகவே இருந்தன.

சுரண்டப்படுகிற வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரமற்ற நிலையும் அடக்கி வைக்கப்படும் நிலையும், தங்கள் வாழ்வாங்கு உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையையும், தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளே எல்லா நாடுகளிலும் வர்க்கப்போராட்டங்களாகவும், தொழிலாளர் பாதுகாப்பு சங்கங்களாகவும் பெருகிக் கொண்டிருந்தது. பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் சங்கங்கள் தங்களுக்குள் தொடர்புகளையும், கலந்துரையாடல்களையும் ஏற்படுத்திக் கொள்ள முன்வந்தன. தங்கள் நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்ற தொழிலாளர் சங்கங்களுடன் பகிர்ந்து கொண்டன.

1848- இல் கிளர்ச்சி அடக்கப்பட்டதற்கு பின் இங்கிலாந்தை சேர்ந்த தொழிலாளர்களும் பிரான்ஸ் நாட்டு தொழிலாளர்களும் கலந்து பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தின. ருஷ்ய ஜார் மன்னன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போலந்து நாட்டில் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்ட போது மிகக் கொடுரமான முறையில் மக்கள் கிளர்ச்சியை அடக்கினான். ஏராளமான உயிர்சேதங்கள் ஏற்பட்டிருந்தன. அக்காலத்தில் தொழிற்சங்கங்கள் தங்கள் நலன்களை முன்வைத்தே போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தன. முதல் முதலாக இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ருஷ்ய ஜார் மன்னன் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தன. தங்கள் நாட்டு அரசாங்கம் ஜார் மன்னனைக் கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடத் தொடங்கியது. தொழிலாளர் போராட்டங்கள் முதல் முறையாக அரசியல் போராட்டமாக மாறியது ஜார் மன்னனின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடத் தொடங்கியதில் இருந்து தான்.

ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக தொழிற்சங்கங்கள் இருந்த போதும் எல்லா நாடுகளும் சேர்ந்து தலைமை ஸ்தாபனம் தொழிலாளர்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற அவசியத்தை உணரத் தொடங்கி இருந்தது. இத்தீர்மானத்திற்கு இங்கிலாந்து தொழிற்சங்கங்களும் பிரான்ஸ் தொழிற்சங்கங்களும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.


1864-இல் செப்டம்பர் 24-ஆம் தேதி மாட்டின்ஸ் ஹால் என்ற இடத்தில் முதல் முதலாக ஒரு கூட்டம் நடைப்பெற்றது. இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மன் இத்தாலி பெல்ஜியம் போலந்து நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஜெர்மன் தொழிலாளர்களின் பிரதிநீதியாகக் கார்ல் மார்க்ஸ் கலந்து கொண்டார். ´சர்வதேசத் தொழிலாளர் ஸ்தாபனத்தின் விதிமுறைகள்´ தயாரிப்பதற்காக 51- நபர்கள் கொண்ட கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டதும் அன்றுதான். அக்குழுவில் கார்ல் மார்க்ஸீம் இருந்தார். 51- நபர்கள் அடங்கிய குழுவில் 50- பேர்கள் தயாரித்த சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் விதிமுறைகளும், கார்ல் மார்க்ஸ் தனியாக தயாரித்த விதிமுறைகளும் பார்க்கப்பட்டு கார்ல் மார்க்ஸ் தயாரித்த விதிமுறைகளை கமிட்டி ஏற்றுக் கொண்டது.

கார்ல் மார்க்ஸ் அந்தளவு அக்கறையாக அனுபவத்தையும், சமூகச் சூழலையும் இணைத்து மிகத் தீவிரமாக தொழிலாளர் நலன்களுக்காக சிந்தித்தவர். முதலாவது சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் உருவாகி ஸ்பானத்தின் விதிமுறைகளும் அக்ககூட்டத்தில் உருவாக்கப்பட்டது. சர்வதேச தொழிலாளர் ஸ்தானத்தின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பலவகைத் தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்துவதும், எல்லா நாடுகளிலும் இருக்கும் தொழிலாளர்கள் நலன்களுக்காகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும், ஒவ்வொரு நாட்டு தொழிலாளர்களும் மற்ற நாட்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளவும், தொழிற்சங்கம் பின்தங்கிக் கிடக்கும் நாடுகளில் புத்துயிர் கொடுத்து ஆர்வத்துடன் செயல்பட வைக்கவும் பாடுபட்டது.


தமிழச்சி
12/02/2009

"நமது நாகரீகம் ஒரு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இது ஒவ்வொருவருக்கும் தெளிவாகவே தெரிகிறது. இன்று மிஞ்சி இருக்கும் நாகரிகத்தில் தொடர்ந்து வாழ்வதில் நமக்குப் பாதுகாப்பு இல்லை. எனினும், நாம் இருக்கும் நாகரீகத்தின் மீதிக்கட்டமும் குப்பை கூளத்தின் மீதுதான் கட்டப்பட்டுள்ளது. அவையும் அடுத்த நிலச்சரிவில் நிச்சயமாக விழுந்துவிடத்தான் போகின்றது."
தமிழச்சி
14/02/2009

மேலும் படிக்க …

பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க முக்கியத்துவத்தையும், சமூதாயத்தில் அதன் நிலையையும், அதன் வளர்ச்சிக் கட்டங்களையும் விஞ்ஞான பூர்வமாக உணர்ந்து அதன் போராட்டங்களில் மிகவும் முன்னேறிய பகுதியினராக இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.

மேலும் படிக்க …

டால்ஸ்டாய் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஞானி. டால்ஸ்டாய் சிந்தனைகள் அத்தனையும் ஏழை மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டது. உழைப்பாளி ஏழையாகவும், சோம்பேறி பணக்காரனாகவும் திரிந்ததை டால்ஸ்டாய் கண்கள் உற்று நோக்கியபடி இருந்தது.

மேலும் படிக்க …

"நடக்கும் அகராதி" என அழைக்கப்பட்ட மதிப்புக்குரிய மார்க்ஸ் முடங்கிப் போனது ஜென்னியின் மரணத்தில் தான். 1881- டிசம்பர் 2- இல் தன் மனைவி இறந்த போது மார்க்ஸீம் செத்துப் போய்விட்டார் என்கிறார் எங்கெல்ஸ். மார்க்ஸீன் நெருங்கிய தோழன் மார்க்ஸ் மரணத்தைப் பற்றி நம்முடன் பகிந்து கொள்கிறார் மேலும்...

மேலும் படிக்க …

‘பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது

மேலும் படிக்க …

ஆளும் வர்க்கத்தினருக்கும், பாட்டாளி வர்க்கத்தினருக்கும் இடையே நடந்துக் கொண்டிருந்த யுத்த காலம். ஐரோப்பா முழுவதுமே பதட்ட நிலையில் இருந்தன. எப்போது என்ன நடக்கும் என்று கூட யூகிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கம் கடுமையான சட்டங்களையும், அடக்குமுறைகளையும், கண்காணிப்புகளையும் பொது

மேலும் படிக்க …

சுதந்திரம் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி சமமாகப் பகிர்ந்தளிக்கப்படாததை ´சுதந்திரம்´ என்று சொல்ல முடியாது." * சிசெரோ

மேலும் படிக்க …

"மக்களை ஆளும் அரசாங்கம் நேர்மை தவறாதிருக்க வேண்டும். அரசாங்கத்தில் மக்களின் சார்பாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு கடுமையான சட்டத்திட்டங்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கென்று சொத்துக்கள் வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கக் கூடாது. சம்பளமும் கிடையாது. பொது உணவு நிலையங்களில் உணவும்,

மேலும் படிக்க …

"சுதந்திரத்திற்காக என்று சொல்லிக் கொண்டு பல்லை இளித்துக் கொண்டும், கெஞ்சிக் கொண்டும், தாழ்ந்து போவதும், மிருக பலத்தைக் கையாலுவதும், கீழ்தரமாக பணிந்து போவதும் மகா கேவலமானது. அரசாங்கம் என்னை ஆசிரியர் பொறுப்பினின்றும் விடுதலை அடையச் செய்துவிட்டது.

மேலும் படிக்க …

பழம்பெரும் ஞானிகள்
நம்மால்
புரிந்து கொள்ள
முடியாதவர்கள்
திகைப்பூட்டுபவர்கள்
ஆழமும், நுட்பமும் நிறைந்த
மேதைகள்.



* சீனத் தத்துவஞானி லாட்சு

மேலும் படிக்க …

"குழந்தை பிறந்த போது தொட்டில் இல்லை
இறந்தபோது சவப்பெட்டி இல்லை"

ஜென்னியின் கடிதத்தின் வாக்கியங்களைப் படித்தவுடன் கண்கள் கலங்கிவிடுகிறது. ஜென்னியின் வறுமைக்கு சவப்பெட்டி நிகழ்வு போதும். என்னாயிற்று குழந்தைக்கு? யார் இந்த ஜென்னி? இப்படியொரு கொடுமை பெற்றவளுக்கு இருந்தால் என்ன செய்வாள்?

மேலும் படிக்க …

யுத்த பூமியில்...
துப்பாக்கி குண்டுகளின்...
சத்தங்கள்...!
பதற்றமான குரல்களுக்கிடையில்...
பெரிய கொண்டாட்டம்...
நடக்கிறது அங்கே...!

மேலும் படிக்க …

எந்த குறிப்பும் இல்லாமல் ஓர் படம். தட்டில் கருப்பு இளைஞனின் தலை. சுற்றி சில மனிதர்கள் கண்கள் மட்டும் தெரியும்படி, நீண்ட வெள்ளை நிற அங்கியைப் போட்டுக் கொண்டு போஸ் கொடுப்பதைப் பார்த்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ஏதோ மேஜிக் காட்சியாக இருக்குமோ என்று நினைக்கத்தோன்றும்.

மேலும் படிக்க …

சாதாரணமாக எகிப்து என்றதும் நம் நினைவுக்கு ´பிரமிடு´ ஏனோ தானோ என்று வந்துவிட்டு போகும். படங்களிலும், ஒவியங்களிலும் ´பிரமிடு´ பற்றிய உருவகம் நம்மை ஒரு எல்லைக்குள் சிந்திக்க வைத்துவிடுகின்றது. அதனால் கொஞ்சம் பிரமிட் பற்றிய வர்ணனைகளுடனே எகிப்திய புராதன கலைகளை பார்ப்போம்.
´கிஸா´ (Gizeh) என்ற யெருடைய பிரமிட் கட்டுவதற்கு இரண்டு இலட்சத்து முப்பதினாயிரம் பாறைச் சதுரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு சதுரங்கப் பாறைகளின் எடை இரண்டரை டன் எடையுள்ளவை என்றால் அதன் பிரமாண்டத்தை என்னவென்பது? ´கிஸா´ பிரமிடின் உயரமோ 481- அடி. அடிப்படைச் சதுரங்கத்தின் பக்கம் 755- அடி. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வைத்து ´கிஸா பிரமிட்´ கட்டி முடிப்பதற்கு 20- ஆண்டுகள் ஆனது. பிரமிட் கலை என்பது மக்கள் வாழ்வோடு இணைந்தது இல்லை. மன்னர்களுக்காக மன்னர்களால் உயர்வாக மதிக்கப்பட்டும் தங்கள் தரத்தை பிரமிடுகள் கட்டி நிர்ணயிப்பதிலும் இருந்த விசித்திரமான வேத்தியல் கலையைச் சேர்ந்தது பிரமிட். 
பன்டைக்கால தொடக்கத்தில் எகிப்தியர்களிடம் செப்பு உலோகம் மட்டுமே பழக்கத்தில் இருந்திருக்கின்றது. இரும்போ மற்றும் வேறு உலோகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்காத நிலையில், பிரமாண்டமான பிரமிட்டுகளை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. பிரமிட்டுகளின் உச்சத்தில் இருக்கும் பாறைகளை செப்புக் கடப்பாரைகளாலும், கத்திகளாலும் உடைத்து செதுக்கி இருக்கின்றனர்.
பிரமிடுகளின் உட்புறங்களில் சுவர்களிலும் அன்றை எகிப்தியர்களின் வாழ்க்கைகளை காட்சிகளான ஒவியத்தில் வரைந்து வைத்திருக்கின்றனர். இந்த ஓவியங்களே பிற்காலத்தில் சமூக ஆய்வாளர்களின் எகிப்திய பண்பாடு குறித்த ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தன. ஐந்தாயிரம், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒவியங்கள் அவை. ஆனால், பிரமிட் உருவாக்கிய கலைஞர்களின் பெயர்களை பொறித்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. அரிதாக தெய்வ சிற்பங்களில் சில கலைஞர்களின் பெயர்கள் பொறித்து வைக்கப்பட்டிருக்கின்றன. 
அதேப்போல், சிற்பங்களிலும் அரசர்களும், அரசிகளும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் முறையை கவனித்தால் எல்லாப் பிரமிடுகளிலும் ஒரே தோற்றத்தில் சிற்பங்கள் இருப்பது போன்ற உணர்வை உருவாக்கி விடுவதால் பல பிரமிடுகளைப் பார்க்கும் போது பார்வையாளர்களிடம் சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. 
பிரமிடுகளுக்கு அருகில் இருக்கும் ஸ்பிங்க்ஸ் (Sphinx) எகிப்திய சிற்பக்கலையின் அபார சாதனைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. பிரமிடுகளுக்கு காவல் தெய்வமாக இவை கருதப்படுகின்றது. ஓர் பெண்ணின் தலை, உடல் சிங்கத்தின் கால்களை உள்ள உருவம் போன்று அமைக்கப்பட்டு கால்களை மடக்கி படுத்திருப்பது போல் உள்ள தோற்றங்களைக் கொண்டது ஸ்பிங்க்ஸ். தலையில் மன்னர்களுக்குரிய க்ரீடம் வைக்கப்பட்டிருக்கின்றது. பெரிய ஸ்பிங்ஸின் நீளம் 240- அடி. உலகப் புகழ்பெற்ற இப்பெரிய ஸ்பிங்ஸின் பாதங்களை பாலைவனத்தின் மணல்கள் மூடிவிடுவதும், அப்போதைக்கு அப்போது மலையாக குவியும் மணல்களை அகற்றும் வேலைகளில் இன்றும் எகிப்திய அரசு செய்துக் கொண்டிருக்கின்றது.
எகிப்திய கலைகளில் மக்களிடம் வழக்கத்தில் இருந்தவைகளை சொல்ல வேண்டுமானால் தொடக்க காலத்தில் அவர்களின் சித்திர எழுத்துமுறைகள் (Hieroglyph) சொல்லலாம். பிற்காலத்தில் 24- எழுத்துக்கள் கொண்ட நெடுங்கணக்கு வழக்கத்தில் இருந்திருக்கின்றது. எழுதுவதற்கு பேப்பர் சுருள்களை பயன்படுத்தினர். ´பெப்பைரஸ்´ செடியிலிருந்து தயாரிக்கப்பட்ட பேப்பரில் கணக்குகள், இலக்கியங்கள், அரசு நிர்வாக ஆணைகள், புராண வரலாறுகளையும் எழுதி பாதுகாப்பாக வைத்திருந்திருக்கின்றனர். 
எகிப்திய ஓவியக் கலையில் இயற்கையாக இருக்கின்றன. பிரமிடுகளில் காணப்படும் ´உர்´ரென்ற முகஜாடையும், முறைத்துக் கொண்டு பார்க்கும் கடின பார்வைகளும், விரைப்பான மிடுக்கும் ஓவியங்களில் இல்லை. பறவைகள், போர் காலச்சூழல்கள், மிருகங்கள் அதிகமாக ஒவியங்களில் இருக்கிறது. மனிதர்களை மிருக உருவங்களோடு உள்ள உறுப்புக்களுடனும் அதிகளவில் ஒவியங்களில் இருக்கின்றன. 
எகிப்தியர்களிடம் அக்காலத்தில் தங்கத்தில் நகைகள் அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. தட்டை தட்டையான மாடல்களில் சிற்பவேளைகள் செய்யப்பட்டும் அல்லது அபூர்வமான வேலைப்பாடுகளுடன் செதுக்கியும், வைத்திருந்தனர். நவரத்தினக் கற்களை தங்க நகைகளுடன் பொருத்தியும் வைத்திருந்தனர். ´துர்க்குவாஸ்´ என்ற நீலநிறக் கல்லும், பச்சை நிறக்கல்லும் அதிர்ஷ்ட கற்களையாக வழக்கத்தில் இருந்தது. சில நவரத்தின கற்றகளில் எழுத்துக்களையும் செதுக்கி வைத்தனர். பொற்கொல்லர் பணிக்கு தேவையான எல்லாத் தொழில் நுட்பங்களும் அக்காலத்திலேயே எகிப்தியர்களுக்கு தெரிந்திருந்தது. முத்து மாலைகளை எகிப்திய பெண்கள் விரும்பி அணிந்தனர். மோதிரம், வளையல்கள், காதில் மாட்டும் அணிகலன்கல், தலைக்கு, இடுப்புக்கு என அனைத்து இடங்களுக்கும் நகைகளை அணிந்து கொள்ளும் வழக்கம் இருந்திருக்கின்றது. 
கட்டடக் கலையை பார்த்தோமனால், பெரிய பெரிய பாறைத்துண்டங்களாலும், சுட்ட செங்கல்களிலும் பயன்படுத்தி இருக்கின்றனர். எகிப்தியர்களில் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை மிகுந்த ஆர்வத்துடனும், பல ஆண்டுகளாக எல்லையற்ற பொறுமையுடனும் இருந்து சாதிக்கும் திறனை பெற்றிருந்திருக்கின்றனர். ஒரு சமூகத்திற்கு தேவையான கட்டட கலை நிபுணர்கள் சிற்பிகள் பொற்கொல்லர் ஓவியர்கள் தச்சர்கள் என எகிப்திய சமூகத்தில் இருந்திருப்பது ஆச்சரியமான எகிப்திய நாகரீகம் தான்.
தமிழச்சி
23/12/2008 

மற்ற கட்டுரைகள் …

Load More