போராட்டமாக டேப்பை எடுத்துக்கொண்டு ஓடியது குற்றமா அல்லது பேட்டாவே கொடுக்காமல் தொழிலாளர்களைத் “தோழர்கள்” ஏமாற்றியது குற்றமா? - “தோழர்கள்” ஷோபா சக்தியும் லீனாவும் : தீபக்
செங்கடல் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு முடிந்த பின்னர் இப்போது லீனாவும் ஷோபா சக்தியும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வினவு இணையதளம் லீனா எழுதிய கவிதையில் காட்டமாகி எழுதிய பதிவிற்கு பதில் பதிவாக லீனா எழுதிய கட்டுரையில்’’டேப்பை எடுத்துக் கொண்டு ஓடியது குற்றம்’’ என்று எழுதியிருந்தார்.