Language Selection

விருந்தினர்

சிறியரக ஆயுதங்களின் பரவலினால் உலகெங்கும் அதிகரித்திருக்கும் வன்முறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் ஜெனீவாவில் கூட்டப்பட்ட சர்வதேச மகா நாடொன்றில் வெளியிடப்பட்ட தகவல்களை நோக்கும் போது உண்மையான பேரழிவு ஆயுதங்கள் சிறியரக ஆயுதங்களே என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

 

1997ம் ஆண்டு. நான் சூரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம். திடீரென்று எனது 3 வயது குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்றேன். குழந்தையை பார்த்த மருத்துவர், தெருக்கோடியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பரிசோதனை கூடத்தில் (lab) சென்று குழந்தையின் இரத்தத்தை பரிசோதித்து கொண்டு வருமாறு கூறினார். நானும் அப்படியே சென்று அந்த ரிப்போர்ட்டை மருத்துவரிடம் கொடுத்தேன்.

 

யாழ் கொம்மில் வெளிவந்த இக்கதை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கின்றது.

 

"தேவதை..தேவன்....பிசாசு 
நிழலாடும் நினைவுகள். 
சாத்திரி ஒரு பேப்பர் 

இந்தியாவில் 90களில் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற மும்மூர்த்திகள் ஒருசேர பரம்பொருளாய் புதிய பொருளாதாரக் கொள்கையாய் படையெடுத்து வந்த போது இனி இந்தியாவிற்கு விடிவு காலம்தான் என்று வியந்தோதியவர் பலர். முதல்வன் படத்தில் ஒரு நாள் மட்டும் முதல்வராக இருந்து அர்ஜூன் அநீதிகளை அழித்ததைப் பார்த்து பரவசம் கண்டோரெல்லாம் தனியார் மயத்தை உளமாறப் போற்றினர்.

 

"எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டுவிடுங்கள். எதையும் மார்க்கெட் தீர்மானிக்கட்டும். எதிலும் அரசு மூக்கை நுழைக்க வேண்டாம்."

 

கடந்த 18 வருடங்களாக, இந்திய முதலாளிகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் உலக முதலாளிகளின் டேப் ரிக்கார்டர்களாக இங்கே ஒப்பித்துக் கொண்டிருக்கும் வாசகங்கள் இவை.

இந்தியாவில் சித்த மருத்துவத்துக்கும், ஆயுர்வேதத்துக்கும் ஆதார சுருதியாக இருப்பவை மூலிகைகள்தான். அந்த மூலிகைச் செல்வத்துக்கு ஒரு முடிவு கட்ட ஜோராக கிளம்பிவிட்டது ஓர் அமெரிக்க நிறுவனம். ஏற்கெனவே நம்மூர் பருத்தியையும், நெல்லையும் பாழாக்கிய அதே `மான்சான்டோ' நிறுவனம், இப்போது இந்திய மூலிகைகளிலும் மரபணு மாற்ற மாயாஜால வேலைகளை ஆரம்பித்து விட்டது.

 நன்றி : தமிழர் இணையம் AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் - Dr. புகழேந்தி (இந்தியா)


(மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். )

முஸ்லீம் மக்களை ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவித்த, இன்று வரை அதற்காக ஒரு சிறு மண்ணிப்பு கூட கேட்காத காட்டுமிராண்டி மோடி சென்னைக்கு வர இருக்கிறான், சிறுபாண்மை மக்கள் மீதான வெறுப்பையும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அருவெறுப்பையும் கொண்டிருக்கும் இந்த பாசிச கிரிமினல், மலமள்ளினால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று பார்ப்பனீய திமிர் வழிய பேசியவன், அதனை கண்டித்து சில நாட்களுக்கு முன்பு நாடெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.,

மிழ்த் தேசியவாதம் தமிழ்ச் சமூகத்தை எத்தகைய முட்டுச் சந்திற் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் ஆழச் சிந்திக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி வருகின்றன. ஆனாலும் நாம் அதைச் செய்யத் தவறுகிறோம். தேசியமே அடிப்படையானது, மற்ற முரண்பாடுகள் இரண்டாம் பட்சமானவை என்று சிலர் புதிய தத்துவங்களை முன்வைத்துப் பதினைந்தாண்டுகள் கடந்துவிட்டன. இப்போது தேசியவாதத்தைவிடப் பிரதேசவாதத்தையே முன்னிறுத்துகிற போக்குக்களுக்கு முகங்கொடுக்க

ஒருவரின் இழிசெயல்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தாலும், எதைப் பற்றியும் அவர் அவமானம் கொள்வதே இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. வினாயக் ராம் சவார்க்கரைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆவணமும் அவரது ஏமாற்றுத்தனத்தை, அவரது மனதின் நச்சுத்தன்மை மற்றும் கொலை செய்வதில் அவருக்கு இருந்த தணியாத தாகம் ஆகியவற்றையே வெளிப்படுத்துகின்றன.

 

முன் பள்ளி வகுப்பில் கல்வி கற்க நான் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. எந்தப் பஞ்சமர்களுடனும் நான் சேர்ந்து விடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கையாலும், வேறு சில குடும்ப பொருளாதார சூழ்நிலைகளாலும் அம்மா என்னை அங்கு சேர்க்கவில்லை. பனங்கிழங்குகளை கிண்டியபடி வேர்க்க விறுவிறுக்க அவள் சொல்லித்தந்த ஆனா ஆவன்னா தான் எனது முன்பள்ளிப் பாடங்கள். அம்மாவிடம் தன்னைக் கைவிட்டுச் சென்ற அய்யனுக்கெதிராக (அப்பாவுக்கு) என்னை வளர்த்து ஓர் பிராமணனாக-பத்ததி (சமஸ்கிருதத்திலும் குருகுலக் கல்வியிலும் உயர்தகுதி பெற்ற பிரம்மஸ்றீ பிராமணர்கள் மாத்திரம் சொல்லக்கூடிய பிரார்த்தனை) வாசிக்கிற பிராமணனாக-எடுத்துவிட வேண்டுமென்ற வெறி இருந்தது.

மது முற்போக்குவாதிகளும்  மார்க்சியர்களும் இப்படியொரு சம்பவத்தை மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இது 1918 யூலை 17இல் இடம்பெற்ற சம்பவம். ஆன்று சோவியத்  யூனியனில் உள்ள எக்காரெறின்பெரி என்னும் நகரில் உள்ள ஒரு  வீட்டில் இரவு வேளையில், பதினொருபேர் லெனினது உத்தரவின்  பேரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொடுங்கோலனாக கருதப்பட்ட  சார்மன்னன் இரண்டாம் நிக்களஸ், அவரது மனைவி  அலெக்சாந்திரா, பிள்ளைகளான அலெக்சேய்தாத்யானா, ஓல்கா, அனஸ்தாசியா, மரியர் அவர்களது வீட்டுப் பணியாளர்களான ஒரு  மருத்துவர், ஒரு சமையற்காரர், ஒரு வேலைக்காரன், ஒரு தாதி, ஆகியோரே அவ்வாறு கொல்லப்பட்டவர்கள்.  இதன்போது சாரின்  வீட்டு நாயும் கொல்லப்பட்டது.

அமெரிக்க அரசின் குறிப்பு 1: இந்த ஒப்பந்தம் அமெரிக்காவை எவ்வகையிலும் எரிபொருளை இந்தியாவுக்குத் தொடர்ந்து தருவதற்கு வற்புறுத்தாது.
ஆனால் மன்மோகன்சிங் தொடர்ந்து அமெரிக்கா எரிபொருளைத் தரும் என்று ஆகஸ்ட்13, 2007-ல் மக்களவையில் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசின் குறிப்பு 2: இந்தியா எக்காரணம் கொண்டும் எப்போதும் அணு சோதனைகளை நடத்தக் கூடாது.
ஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: நமது அணுசோதனகளுக்கு எவ்விதத் தடையுமில்லை.

சிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது என் வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக் போன்ற அமெரிக்க நாயகர்களின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவ்வாறு காமிக்ஸ்களை வாசிக்கும்போது தான் செவ்விந்தியர் என்ற ஒரு இனம் இருந்தது எனக்கு தெரியவந்தது.

 கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தஞ்சையில் பெரியாரின் போர்ப்படைத் தளபதி அய்யா ஆசிட் தியாகராஜன் அவர்களைச் சந்தித்த போது அவரது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்। அதில் முக்கியமான ஒரு நிகழ்வு।

நான் எனது சிறு அகவை முதல் விடுதலை இதழினை படித்து வருகிறேன். அப்பொழுதெல்லாம் அறிவுக்குத்தேவையான பெரியாரின் கருத்துக்கள் நிரம்ப வரும். 1996 காலகட்டத்தில் அதன் ஆசிரியர் பெரியார் பெயாரால் தான் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்ற பெரியாரின் கொள்கைகளை விட்டுவிட்டு பெரியாரியத்துக்கு எதிரான பார்ப்பன நடிகையின் அரசியல் குருவாக பொறுப்பேற்று விடுதலை இதழை பார்ப்பன நடிகைக்கு துதிபாடும் இதழாக மாற்றினார். அதன் பின்பு பெரியாரின் கருத்துக்கள் விடுதலை இதழில் வருவது குறைந்தது. விடுதலை என்ற பெயரில்(லேபிளில்) நமது எம்.ஜி.ஆர் இதழின் செய்திகள்தான் வந்தது.

ஒரு வார காலமாக இலங்கை வாழ் மலையக மக்கள் நடத்தும் அடிப்படைப் தேவைகளுக்கான போராட்டம் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவும் ஆச்சரியப்படவும் வைத்திருக்கிறது...


வார இறுதிப் பத்திரிகையில் மலையகச் சாரல் மற்றும் மலையகம் பற்றிய செய்திகளைப் பார்க்காத அல்லது என்னைப் போன்றவர்களைப் போல் இறுதியாகவே அவற்றை வாசிக்கும் பலர் இப்பவெல்லாம் எடுத்தவுடனேயே மலையக செய்திகளைப் படிப்பதைப் பாாக்க முடிகிறது..

இலங்கையின் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையில் தமிழர்கள் மீண்டும் அரசியல்வாதிகளின் சாட்டையடிக்கு மாடாய் மாறி மானம்போக்கும் அவலம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

சமூக விழிப்புணர்வு இதழ் சார்பாக மே 16, 2008 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடத்தப்பட்ட ‘வே.மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் சிறைப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கிய கழத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் அவர்கள் பேசிய பேச்சின் சுருக்கப்பட்ட வடிவம் இங்கு தரப்பட்டுள்ளது.

 அனைவருக்கும் வணக்கம்,

மதிமாறனைப் பற்றி நாங்கள் அறிய வந்ததெல்லாம் பாரதிய ஜனதா பார்ட்டி நூல் வழியாகத்தான். அந்த நூலுக்கு முன்பு அவரை யாரென்றே தெரியாது. சொல்லப் போனால் அது வெளிவந்த பின்பு பல பத்திரிகைகள் விமர்சனம் என்ற பெயரிலே மண்ணை வாரித்தூற்றின. அதற்குப் பிறகும் மதிமாறன் யாரென்று தெரியாத நிலையிலேயே இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டிக்க வேண்டும் என்பதற்காக பாரதி குறித்து எழுதத் துணிந்தோம். அது மதிமாறனுக்கு வக்காலத்து வாங்க §Åண்டும் என்பதற்காக அல்ல. மாறாக மதிமாறன் நூல் மீதான விமர்சனம் மார்க்சியப் பார்வையில் செய்யப்பட்டது என்ற முகாந்திரத்தில்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வான்வெளி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 அப்பாவி மக்களை கொன்றிருக்கிறது அமெரிக்கா. உலகத்தையே தீவிரவாதத்தின் பிடியிலிருந்து இரட்சிக்கப் போவதாக சின்னவர் (!) ஜார்ஜ் புஸ் கொக்கரித்து கிழம்பியது முதல் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இந்த கொலைப்பட்டியல் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என நீளுகிறது.