களவாட வந்தவன, கத்தியோட நின்றவன,
கையோட பிடிச்சுக்கட்டி நிலை கேட்க வந்தவரை - கள்ளர்
என கூறி கையெழுத்து போட்டதென்ன.
கர்ண மகராசா என்ர, கற்றறிந்த குணராசா,
கற்றல் தலைக்கேறி - நீ
கரை தாண்டிப் போனதென்ன.
அடம்பன்கொடியாட்டம், திரள முயல்கையிலே
தும்பு திரிச்சு நாங்க தேரிழுக்க போகயில - நீ
திரிச்ச கயிறுமேல தீவைக்க முயல்வதென்ன!
கட்டையில போவாரால் கடல் கொண்டு போவாரால்;
கடலும் கடற்கரையும்; நாங்க கால் பதிச்ச வயல் வரப்பும்;
செம்பரப்பாகியின்று சீர்கெட்டு போனதென்ன.
சீர்கெட்ட பூமி தனை, சீரமைக்க பார்க்கும்-எம்மை
சகுனிகள் என்பதென்ன சதிகாரர் என்பதென்ன?
கற்றதெல்லாம் சரியானால்;
உன் சிந்தனையும் சரியானால்- நீ
சொல்வதெல்லாம் சரிதானா சொல்லு - நீ
என் தோழா !
.
- தீவான்