Language Selection

சமர் - 15 : 05 -1995
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் 8ஆவது தமிழாராய்ச்சி மாநாடு என்று அறிவித்து, தமிழ் மொழியின் பெயரால் கோடி கோடியாக கூத்தாடிகள் ஆடி மகிந்தனர். தமிழைப் பரப்புகின்றோம் என்று சில சீரழிவு எழுத்தாளர்களும், சினிமா கவர்ச்சி நடிகர்களும், சூதாடிகளும் கூடித்திரண்டு கூத்தாடி தமிழை இழிவு செய்ததுடன், தமிழ் மொழியின் வளர்ச்சிப் பாதையின் குரல்வளையை கடித்துக் குதறியும் வருகின்றனர்.

மலேசிய தனிநாயகம் அடிகளின் முன்முயற்சியால் முதலாவது மாநாடு, தமிழ் நாட்டில் அண்ணா காலத்தில் நடந்த 2ஆவது மாநாடும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தன்னால் இயன்றளவு செய்ய முடிந்தது. தமிழ் நாட்டில் நடந்த தமிழாராச்சி மாநாடுகளை விட ஏனைய எல்லா மாநாடுகளும் ஓரளவிற்கு தமிழ் மொழிக்கு சேவை செய்ய முன்னின்ற போதிலும், அண்ணாவுக்குப் பின் தமிழ் நாட்டில் நடந்த மாநாடுகள் அனைத்தும் அரசியற் கட்சி மாநாடுகளாகச் சீரழிந்து அரசியல், பதவி பந்தம் பிடிப்போ, அரை வேட்காட்டுக்காரர்கள், சீரழிவு விளம்பர எழுத்தாள்கள், சினிமா நடிகை நடிகர்களின் விபச்சார மதன மாளிகைகளாக மாறியதுடன் சீரழிந்தது.

1974ல் நடந்த யாழ் தமிழாராய்ச்சி மாநாட்டை இன்று ஆட்சியிலுள்ள இதே சுதந்திரக் கட்சி நடத்தவிடாது தடுத்ததுடன் சிலருக்கு விசா கொடுக்காது மாநாட்டில கலந்து கொள்ளத் தடைவிதித்தது. மாநாட்டின் மக்கள் கூட்டம் மீது தாக்குதலை நடத்தி, சிலரைக் கொன்று தீர்த்ததுடன் தமிழினத்தின் ஆயுத எழுச்சி போராட்மாக வெடித்தது.

இந்நிலையில் இத் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திய இந்திய அரசு, தனது தொங்குதசைகளாக இயக்கங்களை வளர்த்து களத்தில் இறக்கியது. இயக்க மோதல்கள் இந்திய சார்புக் குழுக்களை இல்லாதொழித்துவிட நேரடியாக இறங்கினர், இந்திய ஆட்சியாளர்கள் இந்திய இராணுவப் படுகொலை நிகழ்த்தியும், சித்திரவதைகளைச் செய்தும் பெண்களை கற்பழித்தும், கட்டிடங்களைத் தகர்த்தெறிந்தும் வெறியாட்டம் போட்டனர். இதன் மூலம் தமிழினத்தை அடக்கிவிட முடியவில்லை. வேற்றி பெறவும் முடியாமற் பேகவே பின்வாங்கித் திரும்பிப் போனார்கள். இதைத் தலைமை தாங்கி நடாத்திய அன்றைய பிரதமர் ராஜீவ்வை படுகொலை செய்ததன் மூலம் புலிகள் இதனை பழிவாங்கலாக இனம்காட்டினர்.

இந்நிலையின் பின்னர் மொத்தத் தமிழ் மக்களையும் தமிழ் நாட்டு பாஸிச ஜெயலலிதா அரசு புலிகளாகக் காட்டி கைதுகளையும், சித்திர வதைகளையும், செய்ததுடன் திறந்த வெளி சிறைக்கூடங்களில் அப்பாவி மக்களை அடைத்து வதைத்தனர். இந்நிலையில் 8ஆவது மிழாராச்சி மாநாடு அறிவித்தல் வெளிவந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் தமிழ் பிரமுகர்களுக்கான அழைப்புகள் நிராகரிக்கப்பட்டன. இலங்கை தமிழாராச்சி மாநாட்டுக் குழுவுடன் முரண்பட்ட நிலையில் அறிக்கைகள் வாயிலாக மாறிமாறித் தாக்கினர். இது நிகழ்ந்த அதேநேரம் தமிழ்நாட்டில் தமிழ் பற்றுள்ள, தமிழாராட்சியில் அதிகளவு ஈடுபாடுள்ள உண்மையான ஆராட்சியாளர்கள் இம்மாநாட்டை விமர்சித்து அதில் கலந்து கொள்ளாது உதறித்தள்ளினர்.

எங்கயடா என்று திரிகின்ற கூத்தாடிகளும், ஆல வட்டக் கோஷ்டிகளும் கூடி மாநாட்டை அறிவித்தனர். இலங்கைத் தமிழ்த் துரோகிகளான சூதாடிக் கும்பல் கலந்து கொள்வதற்கான வேண்டுகோள்கள், மற்றும் நேச அறிக்கைகளோடு அலைந்தனர். கூத்தாடிகளும், சூதாடிகளும் சேர்ந்து வடித்துக் கட்டி சிவத்தம்பி போன்றோரை அழைத்தனர். இந்தத் துரோகி சிவத்தம்பியும் விழுந்துகட்டிக் கொண்டு தொண்டமான் போன்ற சூதாட்ட அரசியல்வாதிகளுடன் கலந்துகொள்ள சென்னை சென்றனர். அங்கு தமிழ் நாட்டரசு  இவர்களை திருப்பியனுப்பி புறக்கணித்தது. அதேநேரம் இலங்கை அரசியல் சூதாடிகளுடன் மாநாட்டை நடாத்தி முடித்தது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இன்றை நிலையில் சிவத்தம்பி போன்றோர் கலந்து கொள்ளச் சென்றது தமிழ் இனத்துக்குச் செய்த துரோகமாகும். அன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்த போது துரோகக் கும்பல்கள் எப்படி இந்திய அரசில் தொங்கி துரோகத்தை இழைத்ததோ அதுபோன்ற ஒரு துரோகமே இதுவாகும். தமிழாராட்சி மாநாடு இதுவரை என்ன செய்தது என்று இந்தச் சிவத்தம்பியும் எதையும் கூற முடியாத இன்றைய நிiயில் முண்டியடித்துச் சென்றது ஓர் ஆச்சியமான விசயமேயல்ல. இத் தமிழ் ஆராட்சி மாநாட்டை விமர்சித்து போட்டி மாநாட்டை தமிழீழத்தில் நடத்திருக்க முடியும். தேசிய விடுதலைப் போராட்டம் நடக்கும் இன்றைய நிலையில், தமிழ் ஆராட்சிக்கும், அதன் வளர்ச்சிக்கும் தமிழீழம் பெரிய பங்களிப்பைச் செய்யமுடியும். புலிகளின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான சிவத்தம்பி தமிழ் மொழிக்கு ஏதாவது செய்ய வேண்டுமெனக் கருதியிருப்பின்; புலிகள் மூலமாக ஒரு மாநாட்டை, ஆராட்சியை முடக்கி விட்டிருக்க முடியும். இதைப் புலிகள் ஒருக்காலும் நிராகரித்திருக்கமாட்டார்கள்.

இதைச்செய்ய சிவத்தம்பிக்கு தமிழாராட்சி என்றால் என்னவென்று தெரியாததேயாகும். தமிழில் போட்டுக்களை போடுவது, வாழைமரம் வளைத்துக்கட்டுவது, தென்னை மரம் கட்டுவது, பெரிய அலங்கார ஊர்திகளைக் கொண்டு செல்வது போன்றவற்றுக்கு அப்பால் சிவத்தம்பிக்கோ, புலிகளுக்கோ தமிழ் வளர்ச்சி பற்றிய மேலதிக எண்ணம் எதுவும் கிடையாது. தமிழ் ஆராட்சி மீதான ஓர் உந்துதலை மக்கள் மத்தியில் எடுது;துச் செல்லின்  சிவத்தம்பிக்குப் பதிலாக பல தமிழ் பற்றுள்ள ஆராட்சியாளர்கள் வெளிக்கிளம்பி வருவர்.இன்று இந்தியா, இலங்கையில் தமிழ் மொழி என்ற பெயர் இருந்த போதும் ஆங்கில மோகமும், ஆங்கிலம் தெரியாதோர் புறக்கணிக்கப்படுவதும் சாதாரண நிகழ்வு கள். இதேநேரம் இதைச் செய்துவரும் அரசியல் சூதாடிகளோ தமிழாராட்சி மாநாட்டைக் கூட்டி, கூத்தாடி அழிக்கின்றனர். ஆங்கில மோகத்துடன் தமிழ் மொழி வளர்ச்சி என்ற பெயரால் இன்னொரு பக்கத்;தில் ஆங்கில எழுத்துக்களை – தமிழ் மொழி எழுத்துக்களின் பற்றாக்குறைக்கு பதிலாக புகுத்த முனைகின்றனர்.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு மிகமிக அவசியமானது பொருளாதார, அரசியல், அறிவியல்-பண்பாடடுத் துறையிலான தங்குதடையற்ற மாற்றங்கள்தான், அது  வர தமிழ் ஆராச்சியில் வளர்ச்சி சாத்தியமில்லை. சுpல சீர்திருத்தங்களையும், வெறும் பே;பர்களில் எழுதி வைப்பதற்கும் அப்பால் எதுவும் நடந்து விடாது. துமிழ் வள்ச்சி என்று கூறி சமய (மத) நிகழ்ச்சிகளை தமிழ் மொழியின்  வளர்ச்சியின் அம்சங்களாகத் திரித்து ஒரு சமய விழாவாக இன்னொரு கூட்டம் சீரழித்து கொச்சைப்படுத்துகிறது.

நாட்டுப்புற, கிராமிய மக்களின் இலக்கியங்களையும், தமிழ் பாரம்பரிய கிராமிய கேந்திர தொடர்ச்சிகளையும் புறக்கணித்து தமிழுக்கு புதிய விளக்கங்களை சமய மூலமாகவும் சூதாடிகளின் மூலமாகவும் ப+ச்சிட்டு, தமிழ் கொச்சைபப்படுத்தப்படுவது நிகழ்ந்து  வருகின்றது. இவ் ஆங்கில மோகவாதிகளான சூதாடிகளின் மாநாட்டை விமர்சித்து புரட்சிகரமான வழிமுறைகளில் பொருளாதார, அரசியல், அறிவியல், பண்பாட்டுத் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே தமிழ் மொழியை தங்குதடையற்ற வளர்ச்சிக்கு உட்படுத்த முடியும்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது