கவிஞனே !
கோவணமும்,எழுதுகோலுமாய்- நீ
தேடிய செல்வத்தைக்,
கறையான் புற்றிற்குள்.......
தொலைத்தாயிற்று.
இன்று,
மிச்சமிருக்கிற வெள்ளைத்தாள்களைத் தேடி,
கறையான் புற்றைக் கிளறிக் கொண்டிருக்கிறேன்...
மரித்த மானிட மறைவிடம் மூட............
எதுகை,மோனை,யாப்பு,மரபு,சொற்றிறன்
போட்டுக் குழைத்து........
பாலியல் வன்மையை இனவாதம்,மதவாதம்
பூசாமல்........
மயிற்ப்பீலி கொண்டு மெல்லத்தடவி......
வார்த்தைகள் தேடி,வடித்தெடுத்த - உந்தன்
சமாதான வெள்ளைக் கவிதைககளத்,
தேடிக்கொண்டிருக்கிறேன்! -திக்கெட்டும்
சிதறிய பிணங்களின் மறைவிடம் மூட.......
அடா... தூங்கு மூஞ்சி மரத்தின் கீழ்....
துண்டுத் துணியும் மேலில் இல்லாமல்,
துடைத்து வழித்துத் துவம்சம் பண்ணி,
யோனி விரியலில் கந்தக முடிச்சை -இறுகச் செருகி
வெடிக்க வைத்த வெறியனை,
விரல் நீட்டிக் குற்றம் என்பதை,
இனவாதம் என்னும் இனிய கவிஞனே!
வாழ்க நீ ! வாழ்த்துக்கள் உனக்கு !
நீ, வட்டமாய் அமர்ந்து...
வசனம் பேசலாம்!
விமர்சனமென விளக்கமும் சொல்லலாம்!
விழுந்த பாட்டிற்கு,குறியும் சுடலாம்!
மூளைச்சலவை என்பதாய் இன்னமும்,
இயங்கியல் பேசி இறுமாப்புறலாம்!
ஒட்டுத்துணியில்லாதவனுக்குத் தானடா-ஒரு
கோவணத்தின் அருமை புரிந்து கொள்ளப் போகிறது।
கவிதை மீட்கும் தேசபக்தனே !
காலி வயிற்றுடன்,
கால்நடையாக.....
முறிகண்டி,மல்லாவி
முள்ளிவாய்க்கால் என
மாறி,மாறி உயிரை ஒளிக்க ஓடிய
மனித ஜடத்திற்கு - எதனை விடவும்
மூச்சுத் தங்கிடும் நிமிடமே.....
முக்கியம் என்பேன் !
என்னடா? இது.....
கண்முன்னாலேயே, கதறக் கதறச்....
செத்தொழிந்த அந்த எலும்புக் கூடுகளுக்காய்
இன்னமும் கூட - உன் இதயம்
கொதிக்காதிருந்தால்.......
போ... போய்.....
மிச்சமாய் இருக்கிற
யோனி விரியலில் - நீயும் அவனைப்போல்
வெடி வைத்து மகிழ் !!!!
போ... இனிய கவிஞனே!