Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எம் மக்களின் பொது எதிரிக்கு எதிராக மரணித்துப் போன பல்வேறு வர்க்கங்களுக்கும், சமூகங்களுக்குமான இந்த அஞ்சலி அரசியல் ரீதியானவை. எம் மக்களின் பொது எதிரி, தன்னை தனிமைப்படுத்தி பலம்பெற்று நிற்கின்ற இன்றையநிலை. மக்களின் இரண்டாம் மூன்றாம் எதிரிகள் சிதைந்து சின்னாபின்னமாகி அழிந்து மரணிக்கும் இன்றைய நிலை. இந்த நிலையில் பிரதான எதிரிக்கு எதிராக மரணித்த அனைவருக்கும், நாம் அஞ்சலியை செலுத்தக் கோருகின்றோம்.

 

பொது எதிரிக்கு எதிராக, எம் வர்க்கத்தின் சார்பாக இதைக் கோருகின்றோம். பொது எதிரிக்கு எதிராக, இவர்கள் பெயரால் போராடக் கோருகின்றோம். இந்த யுத்தத்தில் இறந்த அனைத்து மக்களுக்கும் இதைக் காணிக்கையாக்கின்றோம்.

 

எதிரிக்கு எதிரான நட்பு சக்திகளை கடந்த காலத்தில் எதிரியாக்கி அழித்த தவறுகளை இனம் காண்பதும், அதேநேரம் எதிரிக்கு எதிரான சக்திகளிடம் விமர்சனம் சுயவிமர்சனத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்த மக்களுக்கான அரசியல் செயல்பாட்டைக் கோருகின்றோம்.

 

மண்ணில் போராடிய புலித்தலைமையை அழித்தன் மூலம் எதிரியும், புலித் தலைமையைக் காட்டிக் கொடுத்த புதிய புலித் துரோகிளுமே, இந்த யுத்தத்தை வென்றுள்ளனர்.

 

இவர்களால் எம்மக்கள் அரசியல் அனாதையாகியுள்ளனர். கடந்த காலத்தில் தமிழ்மக்களின் அனைத்து சமூக கூறுகளையும் அழித்தவர்களை, ஒரு துரோகம் மூலம் அழித்துள்ளனர். இதன் மூலம் மக்கள் அரசியல் அநாதையாக்கப்பட்டுவிட்டனர். எதிரியின் இனவழிப்பு விருப்பங்களும்  இதுதான்.

 

எம்மத்தியில் ஒரு வெறுமை. எதையோ இழந்து போன உணர்வு. புலிகளால் பாதிக்கப்பட்ட, புலி அரசியலுடன் என்றும் உடன்படமுடியாத எம்மத்தியில் கூட, இந்த வெறுமையை அரசியல் ரீதியாக உணர முடிகின்றது.

 

இது அடிப்படையில் தமிழ்மக்கள் அரசியல் அனாதையாக்கப்பட்டதனால் ஏற்படும்   விளைவாகும். மக்களின் எதிரி வென்றதை ஏற்றுக்கொள்ள முடியாத அங்கலாய்ப்பும், கோபமுமாகும். புலித் தலைமையை ஏமாற்றி, மோசடி செய்து, அவர்களின் கழுத்தையறுத்த நயவஞ்சகம் மீதான அரசியல் கோபம்.

 

இந்த இழிசெயலை செய்த பேரினவாதம் முதல், இந்த காட்டிக்கொடுக்கும் துரோகத்தை செய்த புலித் துரோகிகளும் தான், இன்றும் தமிழ் மக்களை இன்னமும் ஆட்டிப்படைக்கின்றனர். இதன் மீதான வெறுப்பு எமது கோபமாக, இதற்கு பலியானவர்களை பாதுகாக்கும் அரசியலாக மாறுகின்றது.

 

மரணித்துப் போன புலித்தலைமை கடந்தகால மக்கள் விரோதங்களை எல்லாம் மிஞ்சியது, இன்றைய புலித்தலைமையின் புதிய துரோகம், அதன் மனிதவிரோதமும். தான் வழிபட்ட தலைவனையே காட்டிக்கொடுத்த கும்பலுக்கு பின்னால், அதையறியாது தமிழ் மக்களை அனாதையாகி ஏமாற்றப்படுகின்ற காட்சிகள் எம்முன்.

 

இப்படி காட்டிக்கொடுத்தவர்கள் தான், தம் தலைவர் இன்னும் மரணிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். காட்டிக்கொடுத்தவன் இதைக் கூற, அதை தலையில் வைத்து ஆடுகின்ற மந்தைகளின் அவலம்.

 

காட்டிக் கொடுத்த நிலையில், விட்டில் பூச்சியாக மரணித்துப் போன பிரபாகரனின் அப்பாவித்தனம் எம்முன். தலைவனையே மோசடி செய்து கொன்ற புதிய அரசியல் நிலைமைகள். பிரபாகரனை தலைவனாக கொண்டு உருவாக்கிய அமைப்பு, தன் தலைவனுக்கே  அஞ்சலி செலுத்த முடியாத அவலநிலை. மண்ணில் போராடிய முழுத் தலைமையும் அழிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மரணித்துப் போன செய்திகளைக் கூட மக்கள் முன் சொல்ல மறுக்கின்ற மக்கள் விரோத துரோக அரசியல்;. அவர்கள் எந்த நிலையில்? எப்படி ஏன் கொல்லப்பட்டனர்? கொல்லப்படுகின்றனர் என்பதைக் கூட, தெரியாத வண்ணம் மூடிமறைக்கின்றனர். இதற்கு தாங்கள் எப்படி உதவினர் என்பதை, சொல்ல மறுக்கின்ற புதிய துரோகம்.

 

மக்கள் தம் தலைவனாக நம்பிய அந்த புலித்தலைவர்கள், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு புலித் துரோகம் மூலம் ஏமாற்றப்பட்டு கொல்லப்பட்டனர்.

 

அவர்கள் நாம் கோரியபடி, இறுதிவரை போராடி மடியவில்லைத்தான். நாங்கள் அஞ்சியபடி ஒரு சரணடைவுக்கு முன்வந்தவர்கள் தான். இருந்தபோதும், அது நயவஞ்சகமாக ஏமாற்றி சரணடைய வைத்தே கொல்லப்பட்டனர். அரசியல் ரீதியான இந்த சரணடைவை, மற்றொரு துரோகம் மேவித்தான், இந்த அவல நிலையை உருவாக்கியது. அந்தத் துரோகம் தான் செய்த இந்த காட்டிக்கொடுப்பபை மூடிமறைக்கவும், தமது துரோகத்தை மக்கள் முன் அம்பலமாகாது தக்கவைக்கவும் முனைகின்றது. இதனால் மக்கள் முன், களத்தில் போராடிய புலித்தலைமை இன்னமும் எஞ்சி உள்ளதாக காட்ட முனைகின்றது. இதன் மூலம் அவர்களுக்கு அஞ்சலியை செலுத்த மறுக்கின்றது. நாம் அவர்களுக்கு அஞ்சலியை செய்யக் கோருகின்றோம்.

 

இப்படிப்பட்ட அரசியல் மோசடிகளின் பின், துரோகிகள் தம் முன்னைய தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த மறுக்கின்றனர். நாங்கள் புலித் தலைவர்களை, இந்த துரோகிகளிடம் இருந்த காப்பாற்ற வேண்டியுள்ளது.

 

இவர்கள் கடந்த காலத்தில் தேசவிடுதலையின் பெயரில் ஆயிரக்கணக்கான தேச பக்தர்களையும், மக்களையும் படுகொலை செய்தவர்கள் தான். ஒரு இனத்தின் அழிவு வரை இட்டுச் சென்றதுடன், இன்று அந்த மக்களை நடுரோட்டில் அரசியல் அனாதையாக்கியவர்கள்; தான். இந்த நிலையிலும் கூட, ஒடுக்கப்பட்ட எம் வர்க்கத்தினதும் சமூகத்தினதும் எதிரியாக இருந்த போதும், தமிழ் தேசியத்தின் பெயரில் நின்று போராடியவர்கள். இதை நாம் விமர்சனத்துடன் மதிக்கின்றோம். இவர்கள் தம் வர்க்க நலன்களால் ஊசலாடிய போது, ஏமாற்றப்பட்டு மோசமான ஒரு நிலையில் மரணித்துப் போனார்கள். இந்த மோசடிக்கு எதிராக, இவர்களின் அப்பாவித்தனமான அவலத்துக்கு எதிராக, அதை கூடி காட்டிக் கொடுத்தவர்களுக்கு எதிராக கொதித்து போய் நிற்கின்றோம்.  

 

மறுபக்கத்தில் இவர்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் முதல், மக்களுக்காக போராடியதால் பலி எடுக்கப்பட்ட தேசபக்தர்களின் மரணங்களும் தியாகங்களும்;, புலித் தலைவர்களின் மரணத்தின் முன் உயர்வானவை. புலிகள் கொன்று குவித்த அப்பாவி முஸ்லீம், சிங்கள மற்றும் கிழக்கு மக்கள் மரணங்கள் மேலானவை. இதேபோல் பேரினவாத கொடுங்கோன்மைக்குள் பலியான மக்களின் மதிப்பில்லாத உயிர்கள், உயர்வானவைதான்;. தேசியத்தின் பெயரில், இதுதான் தமிழ்மக்களின் விடுதலை என்று நம்பிப் போராடி மரணித்த போராளிகளின் மரணங்கள் சுயநலமற்றவை, மக்களுக்கானவை. இவைகளின் பின் தான், ஏமாற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புலித்தலைவர்களின் மரணங்கள் கூட மதிப்புக்குரிய வகையில் உள்ளது.

 

இதற்கு எதிரில் இந்த மரணத்தை கொண்டாடும் எதிரி. அரசுடன் சேர்ந்து நின்று கொண்டாடும் துரோகக் குழுக்கள். அதேநேரம் இவர்களை காட்டிக்கொடுத்து படுகொலை  செய்ய உதவிய, இன்றைய வெளிநாட்டு புலித்தலையின் துரோகம். இவர்கள் எல்லோர் முன்னும், இவர்கள் முன்பு போற்றிய புலித்தலைமை அரசியல் ரீதியாக மதிப்புக்குரியனவாக உள்ளது. எம் வர்க்கத்தின் எதிரி என்ற போதும், எம் வர்க்கத்தின் எதிரிக்கே சிம்மசொப்பனமாக இருந்தவர்கள். இந்த வகையில் மதிக்கப்பட வேண்டியவர்கள். 

 

இன்று மக்கள், முன்பைவிட மோசமான துரோக அரசியலின் பின் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த யுத்தத்தின் அறியாமைக்குள் சிக்கி அப்பாவித்தனமாகவும், பாசிசத்தாலும் பலியான அனைவருக்கும், சிரம் தாழ்த்தி அஞ்சலி தெரிவிக்கும் அதேநேரம், எம் எதிரிகளுக்கு எதிராக உள்ள அனைவரையும் போராட அறை கூவுகின்றோம்.

 

பி.இரயாகரன்
23.05.2009

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது