”வாழ்க்கையில், எல்லா ஆசைகளும், நம்பிக்கைகளும் உடையவன் தான் நானும். ஆனால், தேவையான நேரத்தில், அவைகளை என்னால் உதறிவிட முடியும்; அதுதான் உண்மையான தியாகமாகும். மனிதனின் வாழ்க்கைப் பாதையில் அந்த விஷயங்களெல்லாம், ஒரு நாளும் குறுக்கே நிற்க முடியாது
- அவன் நிஜமாகவே மனிதனாக இருக்கும் பட்சத்தில்....” - இது 1929’ஏப்ரலில், டெல்லி சட்டசபையில் குண்டுவீசிக் கைதாகி தூக்குத்தண்டனை கிடைத்தாலும் துணிவோடு சந்திக்கவேண்டும் என்கிற முடிவெடுத்த பிறகு மாவீரன் பகத்சிங் சொன்னது.
தேசத்திற்காக உயிரைக்கொடுப்பதை அரிய வாய்ப்பாகக் கருதி பெருமிதத்தோடு ஏற்று நிற்கிற பக்குவம், வெறும் 23வயதான பகத்சிங்க்கு எப்படி வந்தது? தான் தூக்கிலிடப்படப்போகிறோம் என்பதனை அறிந்தும், அன்றைய பார்ப்பன-சனாதான-போலி அகிம்சைகளின் இருளில் சொக்கிக்கிடந்த இந்திய மக்களின்‘கேளாத செவிகள் கேட்கட்டும்’ என்று முழக்கமிட்டு (யாரையும் கொல்லாத வெற்று குண்டை வீசி) அனைவரது கவனத்தையும் ஈர்த்து, கைதாகி தூக்குக் கயிறைத் தொட்டுத்தழுவினான் அந்த வீரன்.
நம்முடைய சமகாலத்தில், சிங்களப் பேரினவாதத்தாலும் இந்திய மேலாதிக்கத்தாலும் மிகக் கொடூரமாக ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி சொல்லிமாளாத நிலை. 1983 ஜூலைப் படுகொலைகளுக்குப் பிறகு வீறு கொண்டெழுந்த தமிழ் விடுதலை இயக்கங்களை,போராளிக்குழுவாக இருந்த விடுதலைப் புலிகளை வெறும் கூலிப்படைகளாகச் சீரழித்தது பாசிச இந்திரா - எம்.ஜி.ஆர். கூட்டணி. அதிலிருந்து இன்று வரை, ஈழத் தமிழ்க் குழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள், வாலிபர்கள் என பல்வேறு அப்பாவித் தமிழர்கள் கொன்று வீசப்படுவதும். குண்டடிபட்டு செத்து விழுந்த பிறகும் அந்த பெண்ணுடல்களைப் புணரும் சிங்கள ராணுவத்தின் வக்கிற வெறியினையும் சிறிதும் பொருட்படுத்தாமல், கிரிக்கெட்டிலும், சினிமாவிலும், இன்னபிற கேளிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் மக்கள் கூட்டத்தின் கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்காகவே தனது உயிரைத் தீக்கிரையாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான் ஒரு சாதாரண தமிழ் இளைஞன் முத்துக்குமார்.
“என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்...” என்பதாக தனது மரண சாசனத்தில் சொல்லியிருக்கிறார் முத்துக்குமார். தனது மரணத்தின் மூலம் அற்ப அனுதாபத்தையோ வெற்றுக் கதறல்களையோ, சித்தாந்த வியாக்கியானங்களையோ மறுத்து நம்மிடமிருந்து போராட்டத்தை வேண்டுகிறார் முத்துக்குமார்.
அறிவாயுதம் ஏந்திப் போராடுபவர்களுக்கு மத்தியில் தன்னால் முடிந்த உயிராயுதம் ஏந்தியிருப்பதாக முத்துக்குமார் குற்ப்பிட்டுள்ளது, அவரது முடிவினை விமர்சிப்பவர்களுக்கு அவர் முன்னறிந்து சொல்லிச் சென்ற பதிலாக இருக்கிறது. சாகும் தருவாயில் அவர் இச்சமூகத்துக்கு கொடுத்துச் சென்ற உயில் மட்டுமல்ல அது; சாதாரண ‘தற்கொலை’யாக அவரது முடிவை எடுத்துக்கொள்ள முடியாமல் இலட்சக்கணக்கான மக்களைக் கதறியழச் செய்த அற்புதப் படைப்பு அது. கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சொற்ப எண்ணிக்கையிலான நபர்களே அவரை முன்னறிந்தவர்களாக இருந்திருப்பார்கள், இது உறுதி. மற்ற யாவரையும் அங்கே இழுத்துவந்தது அவரது அந்த இறுதிக் கடிதம் மட்டும்தான். கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் கூட்டத்தைத் தட்டி எழுப்புவதற்காக தனது உயிரையே கொடுக்கவேண்டியுள்ளதே என்று தனது கோபத்தை ஒட்டுமொத்தமாக மக்கள் மீது காட்டாமல், அவர்களுக்காக அனுதாபப்படுவதோடு, போலிப் பிரச்சினைகளோடு பிரிந்திருக்கும் எதிரிகளான இந்திய-தமிழக ஓட்டுப் பொறுக்கிகள் ஈழமக்களின் இன அழிப்பு நடவடிக்கையில் இணைந்திருப்பதை ஆழமாகச் சுட்டிக்காடி மக்களிடமிருந்து தனிமைப்படுத்திச் சாடியிருக்கிறார்; அவர். அவரது, அந்த சாடல்களை மெய்ப்பிக்கும் வகையில்தான் ஓட்டுப் பொறுக்கிகள் அனைவரும் நடந்து கொண்டனர். புலியாதரவு வேடம் போடும் வைக்கோ, திருமா, ராமதாசு போன்றோரும், புலியாதரவோடு பார்ப்பன பாசிசத்தைக் கலந்து ’போராடும்’ நெடுமாறன், (சசிகலா)நடராசன் போன்றோரும், எதற்காக இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதையும் எதற்காக முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறோம் என்பதையும் அறிந்திருக்காத சிபிஐ போலிகம்யூனிச தலைவர்களும் அங்கே ஆஜராகி, ‘எப்படியாவது இன்றைக்குள் முத்துக்குமாரை அடக்கம் செய்துவிட வேண்டும்...’ என்கிற ஆர்வத்தோடு தமது கைக்கூலித்தனத்தை வெளிக்காட்டி, அங்கு திரண்டிருந்த உணர்வாளர்களிடம் முறையாக வாங்கிக்கட்டிக் கொண்டார்கள். அங்கு வராமல், ஏது நடக்குமோ என்கிற உளைச்சலில் வயிற்றைப் பிசைந்து கொண்டு கிடந்த சத்தியமூர்த்தி பவனில் உள்ள பன்றிகளைப்பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. அவன் தெரிந்த எதிரி. தெரியாத துரோகிகளை என் செய்வது? “முத்துக்குமாரின் தியாகத்தை அரசியல் ஆக்காதீர்கள். அது நமது பன்பாடு அல்ல” என்று புலம்பிய கருணாநிதியைத்தான் தனது மரணசாசனத்தில் குற்றவாளிக் கூண்டில் முதன்மையானவராக நிறுத்திச் சென்றிருக்கிறான் முத்துக்குமார். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மற்றொரு போலி கம்யூனிச கூடாரமான சி.பி.எம். இவ்விடயத்தை எப்படிப் பார்த்தது என்பதை நாம் சொல்லியே ஆகவேண்டும். எங்கோ ஒரு சாலையோரத்தில் வாகனங்களில் அடிபட்டு செத்துக்கிடக்கும் சொறிநாயின் அளவுக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்கமுடியாத நாகேஷின் மரணத்தை பிரதானப்படுத்தி, இரண்டாவது நாளாக இன்றைக்கும் (01.02.09) படத்துடன் செய்திகள் வெளியிட்டு வரும் தீக்கதிர் நாளேடு மேற்படி போலிகள் நடத்துகின்ற ‘மக்கள்’ பத்திரிக்கை. முத்துக்குமார் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்ட மறுநாள் இந்த போலிக்கயவர் கூட்டம் தி.நகரில் நாடகவிழா நடத்திக் கொண்டிருந்தது. இரண்டு மாதத்திற்கு முன் திட்டமிடப்பட்ட அந்த நாடகவிழா மழையின் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டதாம். சாதாரண மழைக்கு ஒத்திவைக்கப்பட்ட அந்த கேலிக்கூத்தை, முத்துக்குமார் தமிழக மக்களிடத்தில் எற்படுத்திய உணர்ச்சிகரமான சூழலைப் பொருட்படுத்தாமல் நடத்திக் கொண்டிருந்தது. தமது அன்றாட அரசியல் பிழைப்புவாதத்தையே நாடகமாக நடத்திக்கொண்டுள்ளதால் மக்களால் காறி உமிழப்பட்டுக் கிடக்கும் இந்த கயவர்கள் கூட்டம் தனியாக நாடகவிழா நடத்திக் கொண்டிருந்தது வெறும் கேலிக்கூத்தன்றி வேறென்ன? அந்நிகழ்வில் கலந்து கொண்டு ‘வாழ்த்துக்களை’ வழங்கிச் சென்ற யோக்கியர்கள் பட்டியலில் முதலிடம் யாருக்குத் தெரியுமா? ஈழ மக்களின் போராட்டங்களையும் படுகொலைகளையும் கேலி செய்து செய்தி வெளியிடும் பார்பன-இந்துவெறியன் ‘ஹிந்து’ என்.ராம்.