"சட்டி சுட்டதடா! கை விட்டதடா!!"
சென்ற பதிவில் சொல்ல விட்டுப் போன ஒரு முக்கியமான நிகழ்வைப் பற்றி சொல்லியபின் மேலே செல்லலாம்.
9, 10 பதிவுகளில் "பாலியல் வன்புணர்வுக் கொடுமை"யைப் பற்றி எழுதியிருந்தேன்.
அதற்கு மிகவும் பலியாகுபவர்கள் இந்த 13 முதல் 17 வயது பிள்ளைகளே!
ஹார்மோன்களின் சுருதி இன்னும் சரியாக சேராத, உடல் என்னும் ஹார்மோனியத்தில் எழுகின்ற அபஸ்வரங்களால் உந்தப்பட்டோ,[ஹரிஹரனுக்கு நன்றி!] செய்வதின் தீவிரம் புரியாமலோ, அல்லது, அதிகாரம், ஆளுமைக்கு உட்படுத்தப் பட்டோ, இவ்வயதுப் பிள்ளைகள் இந்த வன்புணர்வுக்கு கட்டாயப்படுத்த்ப் படுகிறார்கள்.
எனவே, பெற்றோர் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. அவர்கள் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வந்து, அந்த பதிவுகளில் சொல்லிய சில ஆலோசனைகளை மனதில் கொள்ளவும்.
மற்றொரு விஷயம்!
நண்பர் மா.சிவக்குமார் தனது இன்றையப் பதிவில் நான் பாலியல் பற்றி விவரித்துச் சொல்லாமல் "மிக அடக்கியே வாசிக்கிறேன்" என்ற ஒரு கருத்தினை வைத்திருக்கிறார்.
இந்தப் பதிவு ஒரு விழிப்புணர்வையும், ஆலோசனைகளையும் சொல்லும் நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட ஒன்று.
சொல்வதென்றால் ஒரு நூறு கதைகள் இருக்கின்றன.
இது போன்ற கதைகள் ஊடகமெங்கும் விரவிக் கிடக்கின்றன.
சராசரி தகப்பன் தாய் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களைப் பற்றி சொல்லவே எண்ணம்.
விழிப்புணர்வைத் தருகிறேன் என்று தொலைக்காட்சி தொடர்கள் போல அடுத்தவரை எப்படியெல்லாம் கெடுக்கலாம் என்பதை புதுப்புது வழிகளால் சொல்லித் தந்து இது பற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தை, எண்ணத்தை விதைக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
முன்னரே சொல்லியவண்ணம், பதிவின் இறுதியில் ஒரு சில உபயோகமான சுட்டிகள் தர நினைத்திருக்கிறேன்.
உங்கள் கருத்தை எனக்குத் தெரியப்படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.
போதும் முன்னுரை! பதிவைத் தொடர்வோம்! [நன்றி கோவி.கண்ணன் மற்றும் சிறில்]
ஒவ்வொரு நாட்களும் குழந்தை வளர்ப்பில் ஒரு சவால்தான்!
புதுப்புது வண்ணங்களில் அவை நம்மை எதிர் கொள்ளும்!
அப்பாடா! இந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டோம், இனிக் கவலையில்லை என ஓய்வெடுக்க முடியாத, ஆனால் ஒவ்வொரு கணமும் இன்பமும், துன்பமும் கலந்து வரும் ஒரு உணர்வுதான் குழந்தை வளர்ப்பென்பது!
இதுவரை நாம் பார்த்த 17 வயதுப் பிள்ளைகளை சமாளித்தது ஒரு வகையில் என்றால், இனி வருவதுதான் மிகவும் கடினமான ஒன்று.
ஏன் சொல்லுகிறேன் என்றால்,
இதுவரை அது உங்கள் பிள்ளை.
ஒவ்வொரு வகுப்பாய் நீங்கள்{!!} வெற்றியடைந்து வந்த போது இருந்த மகிழ்வு, இப்போது வராது.
பாஸோ, ஃபெயிலோ, இத்துடன் அது உங்களை விட்டு விலகப் போகிறது.
தானும் இந்த பூவுலகில் ஒரு அங்கம், தனக்கென ஒரு நிலை இனி எனப் பிரியும் நேரம்!
இதற்குத்தான் இவ்வளவு பாடுபட்டோம்?, வளர்த்து ஒரு ஆளாக வேண்டும் நம் பிள்ளையும் என்று நீங்கள் உழைத்த உழைப்பெல்லாம் ,
"இதற்கா இவ்வளவு உழைத்தோம்? நம்மை விட்டுப் போவதற்கா?" என நீங்களே எண்ணப் போகும் நேரம்!
அந்த அளவிற்கு உங்களை தள்ளுவார்கள் [push] அவர்கள்!
இது பலவேறு முனைகளில் உங்களைத் தாக்குமென்றாலும்,
பாலியல் வழியாக நீங்கள் என்னவெல்லாம் சந்திக்க நேரிடும்;
அதற்கு நீங்கள் எந்த அளவிற்குத் தயாராக இருக்க முயலலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
இதற்குள், உங்கள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமோ, வகுப்பறையிலோ பாலியல் பற்றி இதற்குள் அவர்கள் அறிந்திருப்பார்கள்.
ஆனால், எல்லாமும் முழுதுமாகத் தெரிந்து கொண்டிருக்க மட்டார்கள்.
வடிகட்டிய,அல்லது பொறுக்கிய அறிவு [filtered or selective knowledge] என்ற வகையில் தேவைக்கு குறைவாகவோ, அல்லது, மீறியோ பல தகவல்கள் அவர்களுக்குச் சொல்லப் பட்டிருக்கும் இப்போது!
அதனை எல்லாம் சரிபடுத்தி, வகைப்படுத்திச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது!
உடலுறவு ஒண்ணும் தப்பில்லடீ!
'கை அடிச்சா' 60 சொட்டு ரத்தம் வீணாகும்.
அப்பா அம்மால்லாம் பாய் ஃப்ரென்ட்ஸ் வெச்சுக்க எதிரிகள்.
காதல்னா நான் கேட்டதெல்லாம் அவ குடுக்கணும் எனக்கு. அப்பத்தான் அது உண்மையான காதல்.
இந்த வயசுல அந்த சுகம் அனுபவிச்சுப் பாக்கறதுல ஒண்ணும் தவறில்லை.
இது போல பல.
சரி, இதையெல்லாம் எப்படி நிவர்த்திப்பது நீங்கள்?
ஒரு நல்ல தருணம் வரட்டும்; அப்போது பேசிக்கலாம் என ஒத்திப் போட்டால்.... அந்தத் தருணம் வராமலேயே போயிடும்.
இதை ரொம்ப இயல்பா, நடைமுறை நிகழ்வுகள் மூலமாவே அவங்களுக்கு சொல்ல நாம முற்படணும்.
ஒரு விவாதத்திற்குரிய திரைப்படம்,[ உயிர், காதல், எம்[டன்] மகன் போன்ற திரைப்படங்கள்] ஒரு நல்ல ஆரம்பமாயிருக்கும். [அடிக்க வராதீங்க!]வரிசையா இது மாதிரிப் படங்களாவே பாருங்கன்னு சொல்ல வரலை.
ஆனால், இந்த விஷயம் பத்திப் பேச இது உதவும்னு சொல்றேன்.
இது எல்லாத்துலேயும் ஒரு கருத்து இருக்கு.
இதைப் பத்தி இதுக்குள்ளே கல்லூரியில் பேசியிருப்பாங்க இவங்க!
ஒரு சில ஆசீர்வதிக்கப்பட்ட வீடுகளில்,[Blessed homes] இது ஒரு இயல்பாக நிகழும்.
அப்படி நடந்துதான் நம்ம 'மதுரா' இப்படி ஒரு துணிச்சலான, வெளிப்படையான பொண்ணா வெளில வராங்கன்னு நினைக்கிறேன்! [நன்றி மதுரா!]
ஒரு திறந்த மனத்துடன் அணுக வேண்டிய நிகழ்வு [matter] இது.
இப்படி இல்லாத வீட்டில்.....,
இதைப்பத்தி பேசறதை கொஞ்சம் 'அடக்கியே வாசிங்க!' [மா. சிவகுமாருக்கு நன்றி!:)
வலிய இதைப் பத்தி பேச ஆரம்பிக்காதீங்க.
ஏதாவது ஒரு கேள்வி, ஒரு [கமெண்ட்]கருத்து, வந்ததுன்னா மட்டும் பேசுங்க.
இல்லை, ஒரு பொதுவான கருத்தைச் சொல்லி, அதற்கு ஏதாவது பாதிப்பு அல்லது எதிர்வினை [Reaction] இருக்கான்னு பாருங்க.
அப்படி ஏதாவது வந்தா, தனியா அது கிட்ட இதைப் பத்தி பேச்லாம்.
முதலில், அவர்கள் கருத்து என்னவெனப் புரிந்து கொண்டு, அதை ஒட்டி மட்டும் பேசுங்கள்.
காரில் போகும் போதோ, இரவில் சமையல் அறையைச் சுத்தம் செய்ய உதவ வரும் போதோ, இல்லை வாசப்படில ரெண்டு பேரும் தனியா உக்காந்து பேசும் போதோ, இது தொடங்கப் படலாம்.
அப்படிப் பேசறது ஒரு விவாதமா மாறிடாமப் பாத்துக்கோங்க!
அவங்க இதுல தீவிரமா உங்களை உசுப்பேத்துவாங்க!
நீங்கதான் நிதானமா இருக்கணும்!