Language Selection

இறை நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

(“நான் தொடர் வண்டி நிலையத்திலேயே இருக்கவில்லை. நான் எனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தேன். ஆனால் காவல் துறை என்னை சாட்சிகளில் ஒருவனாக சேர்த்து கொண்டது” – முரளி மூல்சாண்டி)


பதட்டமும் தன்னிச்சையான முடிவுகளும்: கரசேவகர்களின் வாக்குமூலங்களும் அதன் நம்பகத்தன்மையும் எத்தகையது?


கலவரகாரர்கள் திரவ எரிபொருள்களைக் கொண்டு வந்ததைப் பார்த்தாக கூறும், S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்த கரசேவகர்களின் வாக்குமூலங்கள் வார்த்தைக்கு வார்த்தை ஒன்று போல உள்ளதால், சொல்லக் கூடிய விளக்கங்களின்(வாக்குமூலங்களின்) நம்பகத்தன்மை கேள்விக்குரியதோ என்னும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு, மேஹ்சனாவை சேர்ந்த நான்கு கரசேவகர்கள் – அம்ருத்பாய் பட்டேல், தினேஷ்பாய் பட்டேல், ராம்பாய் பட்டேல் மற்றும் நிதின்பாய் பட்டேல் ஆகியோர் ஒரே குழுவைச் சார்ந்தவர்கள் என்பது மட்டுமல்லாது, மேஹ்சனா மாவட்ட விஹெச்பி தலைவரோடு பயணம் செய்த இவர்களின் வாக்குமூலங்கள், சிறு புள்ளி கூட மாற்றம் இல்லாத மறுபிரதியாக இருப்பதாகும். இன்னும் இவர்களும் கூட, கலவரகாரர்கள் பெட்டியைத் தீயிட்டு கொளுத்தியதைத் தாங்கள் பார்த்ததாக கூறவில்லை. கலவரகாரர்கள் திரவ எரிபொருள்களை கொண்டுக் வந்ததைப் பார்த்ததாகவே கூறுகிறார்கள்.

 

எத்தகைய எரிபொருள்களைக் கரசேவகர்கள் பார்த்ததாக கூறுகிறார்கள்? பதில் குழப்பமாகவே வெவ்வேறு தன்மையுடையதாக உள்ளது. அ) அமில குடுவைகள், ஆ) பெட்ரோல் குடுவைகள், இ) பெட்ரோல் மற்றும் மண்ணென்ணை நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் டிரம்கள் ஈ) தீபந்தங்கள். கரசேவகர்கள் தங்களுடைய வாக்குமூலத்தில், S-6 பெட்டியில் தீ ஏற்பட்ட விதத்தை புரியும் விதத்திலேயே கூறியுள்ளார்கள்.


அவர்கள் கூற்றுப் படி, கலவரகாரர்கள் அ) அமில குடுவைகளையும் பெட்ரோல் குடுவைகளையும் பெட்டியின் உள்ளே வீசினார்கள், ஆ) பெட்டியின் வெளிபுறத்திலிருந்து பெட்ரோல் மற்றும் மண்ணென்ணையை தெளித்தார்கள், இ) உடைக்கப்பட்ட ஜன்னல்கள் வழியாக பெட்ரோல் மற்றும் மண்ணென்ணையை பெட்டியின் உள்ளே ஊற்றினார்கள், ஈ) எரியும் தீபந்தங்களை உடைக்கப்பட்ட ஜன்னல்கள் வழியாக வீசினார்கள்.


S-6, S-2, S-4 மற்றும் பொது பெட்டிகளில் பயணம் செய்த கரசேவகர்கள், மேலே கூறப்பட்ட அனைத்து சம்பவங்களையும் பார்த்தாக கூறினார்கள். தொலைவில் இருந்து பார்க்க கூடியவர்களால், வீசப்பட்ட பொருள்களின் தன்மை என்னவென்பதை அவ்வளவு எளிதாக விளக்க முடியாத நிலையில், இவர்கள் எப்படி அப்பொருள்களின் தன்மையை அறிய முடிந்தது?


மனசாட்சியோடு கரசேவகர்களிடமிருந்து இவ் வாக்குமூலங்கள் பெறப்பட்டதா? பதில் இல்லை என்பதேயாகும். S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்த கரசேவகர்களின் வாக்குமூலங்கள் பலவும் கீழே குறிப்பிடப்படும் காரணங்களால், ஒரு பக்க சார்புடையதாகவும் உண்மைக்கு புறம்பானதாகவும் உள்ளது.


(“ஒரு புகைப்படகாரரை என்னிடம் காட்டி, அவரை நான் அடையாளம் காட்ட வேண்டும் என சொல்லி, நோயல் சாப் என்னிடம் ஐம்பதாயிரம் பணம் கொடுத்தார்” - ரன்ஜித்சிங் பட்டேல்)

 

"S-6ல் பயணம் செய்த கரசேவகர்கள் மற்ற பெட்டிகளில் பயணம் செய்த கரசேவகர்களுடன் சேர்ந்து நடைமேடையில் வாக்குவாதங்களிலும் சச்சரவுகளிலும் ஈடுபட்டார்கள்" – இது இராணுவ வீரர் பாண்டேவாலும் இன்னும் காவல்துறையாலும் உறுதிபடுத்தபட்ட உண்மையாகும். இருந்தும் கூட, நடைமேடை வாக்குவாத சர்ச்சைகள் பற்றியோ அல்லது தூக்கி செல்லப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் பற்றியோ ஒரு கரசேவகர் கூட தங்களது வாக்குமூலத்தில் கூறவில்லை. அவர்கள் (தங்கள் வாக்குமூலத்தில்) நேரடியாக கல்வீச்சு சம்பவத்திற்கு சென்று விட்டனர். ஆனால் அதற்கு எது தூண்டியதோ, அதை மறைத்து விட்டனர்.

 

இன்னும் மோசமான விசயம் என்னவென்றால், வழக்கிற்குத் துணையாக அவ்வப்போது தங்களுடைய வாக்குமூலங்களை அநேகமான கரசேவகர்கள் உருவாக்கினார்கள். தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கொண்டு வரும் புதுப்புது கருத்துக்களை உறுதிப்படுத்த நாடிய போதெல்லாம், கரசேவகர்கள் அதற்கு ஏற்ப தங்களது வாக்குமூலங்களைக் கொடுத்தார்கள் -இதனால் அநேகருடைய வாக்குமூலங்கள் முதல் வாக்குமூலத்திலிருந்து முழுமையாக மாறி இருந்தது.

நடுநிலையான பார்வை: S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்தவர்களில், கரசேவகர் அல்லாத பொதுமக்களிலுள்ள நடுநிலையான பயணிகளில் எவரேனும் ஒருவர் தீ உருவானதற்கான காரணத்தைப் பார்த்தது உண்டா?

 

ஆம் என்ற பதில் உண்டு. 4 பேரை கொண்ட குடும்பம் அது –லாலன் பிரசாத் சவ்ராசியா, அவரது மனைவி ஜான்கி பென், இவர்களுடைய 13 வயது மகன் கியான் பிரகாஷ் மற்றும் குழந்தை ருஷ்ஹப் – இவர்களும் S-6 பெட்டியில் பயணம் செய்தவர்கள். இவர்கள் தங்களது சொந்த ஊரான அலஹாபாத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள். S-6 பெட்டியில், இவர்களுக்கு இருக்கை எண் 8 மற்றும் 72 முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

இருப்பினும், இருக்கை எண் 72ஐ கரசேவகர்கள் ஆக்கரமித்து இருந்ததால் இக்குடும்பம் முழுவதும் இருக்கை எண் 8ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டியதாயிற்று. பிறகு இவர்கள் இருக்கை எண் 6க்கு மாற்றப்பட்டார்கள். 4 மார்ச் 2002 அன்று கொடுத்த வாக்குமூலத்தில் 13 வயது கியான் பிரகாஷ் கூறும் போது, “கல்வீச்சின் காரணமாக, பெட்டியின் கதவுகளும் ஜன்னல்களையும் பெட்டியிலுள்ளவர்கள் மூடிவிட்டார்கள். இருப்பினும் எங்கள் பெட்டியின் மீது கல்வீச்சு தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இரும்பு ஜன்னல் கதவை கொண்டு அடைப்பதற்கு முன்பே, எரியும் ஏதோ ஒரு பொருள் உள்ளே வந்து விழுந்தது. உடனே பெட்டியின் உள்ளே கருப்பு புகை மண்டலம் உருவானது. இதை பார்த்த நான், அக்காள் மகள் ருஷ்ஹபையும் தூக்கி கொண்டு உடனே தொடர் வண்டியிலிருந்து வெளியேறுமாறு எனது தாயாரிடம் கூறினேன்.

 

அந்த நேரத்தில் நாங்கள் மேல் படுக்கையில் அமர்ந்திருந்தோம். புகையின் காரணத்தால் எதையும் பார்க்க முடியவில்லை. எங்களது உடமைகளை தொடர் வண்டியிலேயே விட்டுவிட்டு, எனது பெற்றோர்களும் நானும் கதவை திறந்து கொண்டு வெளியேறி விட்டோம். எனது தந்தை ருஷ்ஹபை தூக்கி கொண்டு இறங்கும் சமயத்தில் யாரோ ஒருவர் அவனை பறித்து சென்று விட்டதாக அவர் கூறினார். நானும் எனது தாயாரும் ருஷ்ஹபை தேடி அழைந்தோம். ஆனால் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.”

ஜன்னல் வழியாக எரியும் ஏதோ ஒரு பொருள் உள்ளே வந்து விழுந்ததாகவும், அதன் பிறகு கரும்புகை மண்டலம் பெட்டியின் உள்ளே உண்டானதாகவும் கியான் பிரகாஷின் பெற்றோர்களான லாலன் பிரசாத் சவ்ராசியாவும், ஜான்கி பென்னும் மேலே கூறிய தகவலை உறுதி செய்தனர். ஆனால், கலவரகாரர்கள் பெட்ரோல் அல்லது மண்ணென்ணை அல்லது எரிபொருள் நிரப்பப்பட்ட டின்களை தூக்கி வந்ததை பார்த்தாக இவர்களில் எவரும் கூறவில்லை.


(“எல்லா பெயர்களையும் காவல்துறையினர் தந்தனர். சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் சாட்சிகளில் ஒருவர் கூட தங்கள் வாக்குமூலங்களை அவர்களாக எழுதவில்லை. காவல்துறையே எழுதியது.” – ககுல் பதக்)


கலவரகாரர்கள் தீ வைத்ததை தான் பார்க்கவில்லை என்றாலும், எரியும் பெட்டியிலிருந்து தப்பித்து வெளியே வந்த பிறகு, கலவரகாரர்களில் சிலர், எரிந்து கொண்டிருக்கும் S-6 பெட்டி மேலும் நன்கு எரிவதற்காக புல்களையும், படுக்கை விரிப்புகளையும் பெட்டியின் கீழே போடுவதை பார்த்தாக லால்டாகுமார் ஜத்ஹவ் கூறினார். ஆனால், எரிபொருள்களையோ அல்லது பிளாஸ்டிக் டின்களையோ கலவரகாரர்கள் தூக்கி வந்ததாக தான் பார்க்கவில்லை என்று ஜத்ஹவும் கூறினார்.

 

விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி: முன்னரே நன்கு திட்டமிடப்பட்ட சதி செயலா? அல்லது திடீரென்று உருவான கலவரமா?

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது