Language Selection

புதிய ஜனநாயகம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

04_2005.jpgபிப்ரவரி புதிய ஜனநாயகம் இதழில் அல்லிவயல் கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணுவுக்கு சிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் புள்ளியும் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவருமான குணசேகரன் கும்பலால் இழைக்கப்பட்ட அநீதியை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரை வெளிவந்தது. இதைத் தொடர்ந்து அல்லிவயல் பிரச்சினையில் வி.வி.மு.வின் உறுதியான போராட்டத்தைக் கண்டு உத்வேகமடைந்த பல்வேறு சக்தியினர் குணசேகரன் கும்பலின் அடுக்கடுக்கான தில்லுமுல்லு மோசடிகளை ஆதாரபூர்வமாக அளித்த வண்ணமுள்ளனர். குறிப்பாக வலதுகளின் கோட்டையாகச் சித்தரிக்கப்படும் மறவமங்கலத்தில் குணசேகரன் கும்பலின் சவால்கள் அச்சுறுத்தல்களை மீறி எழுச்சியுடன்

 நடந்தேறிய வி.வி.மு.வின் தொடக்கவிழா நிகழ்ச்சியால் புதிய நம்பிக்கையைப் பெற்று வலதுகளின் கட்சிக்குள் "ஒதுங்கி' இருக்கும் சில முக்கிய புள்ளிகள்கூட வி.வி.மு. தோழர்களிடம் தகவல்களை அளித்து வருகின்றனர். இவற்றில் முக்கியமான ஒன்றுதான் குணசேகரன் கும்பலின் ""அகிலாண்டபுரத்தை அமுக்கிய புராணம்!''

 

சிவகங்கை நகராட்சிக்கு உள்பட்ட அகிலாண்டபுரம் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி. இதன் தெற்குப்புறமாக அரசு மருத்துவமனை உள்ளது. இதற்குக் கிழக்கே பல பத்து ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. இது ராஜவம்ச ஜமீன்களுக்குச் சொந்தமா னது எனச் சில ஆவணங்கள் இருந்தாலும் இந்து அறநிலையத் துறை கணக்குகளின்படி சுமார் 1 ஏக்கர் நிலப்பிரப்பில் கூனங்குண்டு எனும் ஊரணியும் சுமார் 0.30 செண்ட் பரப்பளவில் சுடுகாடும் மருத்துவமனையின் கிழக்குப் புற காம்பவுண்ட் சுவரை ஒட்டி தெற்கே உள்ள இந்திரா நகருக்குச் செல்ல ஒரு பொதுப்பாதையும் இருப்பது வரை படங்களில் தெளிவாக உள்ளது. இந்நிலப்பரப்பு சிவகங்கைக் காடுகள் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. ஊரணி பொதுப்பாதை சுடுகாடு இம்மூன்றும் அப்பகுதி மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ள நிலையில் 1991ஆம் ஆண்டு அங்கே வருகிறார் கதாநாயகன் குணசேகரன்.

 

சில போலிப் பத்திரங்களைப் பதிவு செய்துகொண்டு "காடுகள்' என வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும் நிலப்பரப்பை முதலில் ஆக்கிரமித்து பின்னர் மெதுவாக ஊரணி சுடுகாடு பொதுப்பாதை ஆகியவற்றிலும் குணசேகரன் கை வைத்தார். ஆரம்பத்தில் கண்டு கொள்ளாத அப்பகுதி மக்கள் பின்னர் தட்டிக் கேட்கத் தொடங்கினர். உடனே தனது வழக்கமான ""கட்டப் பஞ்சாயத்தை'' அப்போதைய சிவகங்கை மாவட்ட வலது கம்யூனிஸ்ட் செயலாளர் எஸ். மகாலிங்கம் தலைமையில் நடத்தி தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

 

அந்த இடத்தைப் பொருத்தவரை குணசேகரன் கொண்டு வந்த போலி பத்திரம் தான் ஒரே ஆவணமாக அப்போது காண்பிக்கப்பட்டு அரசு சர்வேயர் அல்லாமல் தனிநபர் சர்வேயரைக் கொண்டு இடத்தை அளக்க ஆரம்பித்த குணசேகரன் அதிலுள்ள 0.24 செண்ட் சுடுகாடு தவிர மீதமனைத்தும் தமக்கே என்கிற சதியை நிறைவேற்றிக் கொண்டார்.

 

ஒன்றும் புரியாமல் மிரண்டு போயிருந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம் தேனொழுகப் பேசி இந்தச் சுடுகாட்டு இடத்தில் சமுதாயக் கூடம் கட்டித் தருகிறேன் என அவர்கள் வாயில் கூனன் குண்டு ஊரணிக் களிமண்ணையே வைத்து அடைத்தார் "தலித் பாதுகாவலன்' குணசேகரன். பொதுப்பாதை அடைக்கப்பட்டுவிட்டது. கூனன் குண்டு ஊரணியோ புல்டோசரால் மண் நிரப்பப்பட்டு பிளாட்டுகளாக மாறி விற்பனையாகி வருகிறது. வீடுகளும் கட்டப்பட்டு விட்டன. இது நடந்து 14 ஆண்டுகளாகியும் சமுதாயக் கூடம் எழும்பாத சுடுகாட்டு இடமும் இப்போது கல் ஊன்றி பிளாட்டுகளாக மாறத் தயார் நிலையில் உள்ளது. இதுதான் அகிலாண்டபுரம் அமுக்கிய புராணச் சுருக்கம்.

 

பல்வேறு நேரங்களில் இதை எதிர்த்துப் பேசிய தாழ்த்தப்பட்ட மக்கள் மிரட்டப்பட்டுள்ளனர். சிலர் பணத்தால் விலைக்கு வாங்கப்பட்டனர். இப்போது வி.வி.மு.வின் துண்டறிக்கை வெளிவந்ததும் அப்பகுதி மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீண்டநாள் கழித்து நீதி கிடைக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சியில் வி.வி.மு.வை தொடர்பு கொண்டு வருகின்றனர். கம்யூனிஸ்டு என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து நடத்திக் கொண்டு செங்கொடியையும் சிவப்புத் துண்டையும் இழிவுபடுத்தி வரும் குணசேகரனோ போலி பத்திரத்தை ஒரிஜினலாக்க இப்போது இந்து அறநிலையத் துறை அலுவலகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

 

வி.வி.மு.வின் செயல்பாடுகளால் உற்சாகமடைந்துள்ள கம்யூனிச உணர்வுள்ள வலது கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் சிலர் காரைக்குடியில் நடந்த வலதுகளின் மாவட்ட மாநாட்டில் மாநிலத் தலைவரான நல்லகண்ணுவிடம் மேடையிலேயே பு.ஜ. இதழையும் வி.வி.மு. துண்டறிக்கையையும் கொடுத்துள்ளனர். அவரும் படித்துப் பார்ப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் படித்து முடித்த பின்னர் குணசேகரன் மாவட்டச் செயலாளராக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்புதான் வெளியாகியது. எவ்வித சுயபரிசீலனையுமின்றி உச்சி முதல் உள்ளங்கால் வரை வலது கம்யூனிஸ்ட் கட்சி சீரழிந்து கொண்டிருப்பதற்கு இது இன்னுமொரு நிரூபணம்.

 

··· பின் இணைப்பு:

 

படமாத்தூர் சக்தி சுகர்ஸ் கோகோ கோலா பேரம் (பம்பர் பரிசாக டாடா சுமோ); அரிசிக்கடை சிவசாமிநாடார் அந்தாதி; காளவாசல் நில அபகரிப்பு புராணம்; குடஞ்சாடி கண்மாய் மர ஏல மகாத்மியம்; மார நாடு விளத்தூர் கால்வாய் விவகாரம்; தீர்த்தாம்பேட்டை திருப்புகழ்; வசந்தம் தியேட்டரை "பலான' தியேட்டராக்கி மூடிய "கிளுகிளு' கதை; கட்சிக்குள்ளேயே தாழ்த்தப்பட்டோரைக் கட்டம் கட்டிய தொடர்கதை; அண்ணாமலை நகர் அடாவடி இப்படி குணசேகரன் கும்பலின் அட்டூழியங்கள் அத்துமீறல்கள் பற்றி அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் வி.வி.மு.விடம் வந்தவண்ணமுள்ளன. இவற்றைத் தொகுத்து போலி கம்யூனிச நாட்டாமை குணசேகரன் கும்பலை அம்பலப்படுத்தும் பணியில் வி.வி.மு. ஆயத்தமாகி வருகிறது. குணசேகரன் கும்பலின் "மகாத்மியங்கள்' விரைவில் வி.வி.மு. பிரசுரங்களில் வெளியிடப்படும்.

 

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி
சிவகங்கை.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது