Language Selection

புதிய ஜனநாயகம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

10_2005.jpg'இந்திய நீதிமன்றங்களின் வர்க்கச் சார்பு" குறித்து உரையாற்றிய வழக்குரைஞர் லஜபதிராய், இதற்கு ஆதாரமாக, 1970இல் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த மறைந்த தலைவர் ஈ.எம்.எஸ்., ஒரு நீதிமன்றத் தீர்ப்பை, வர்க்கச் சார்பு கொண்டது என விமர்சித்ததற்காகத் தண்டிக்கப்பட்டது தொடங்கி, இன்றுவரை உள்ள பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டினார்.

 

'நர்மதை நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்படுவதற்குத் தடை விதிக்கக் கோரி நர்மதை பாதுகாப்பு இயக்கம் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், நர்மதை நதி பழங்குடி

 மக்களுக்குச் சொந்தமானதா? இல்லை கரும்பு ஆலை முதலாளிகளுக்குச் சொந்தமானதா? என்பதற்குள் நாங்கள் நுழைய முடியாது எனக் கூறிய கையோடு, அணையைக் கட்டுவதற்கு அனுமதி தந்து, பழங்குடி மக்களுக்கு எதிராகத் தீர்ப்புக் கொடுத்தது."

 

'பழங்குடி மக்களின் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ. 1,000 நட்டஈடு தந்து, அவர்களை நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 'நீதிபதிகளுக்கு, அவர்களின் சம்பளத்திற்குப் பதிலாக ஒரு கூடை சாணியைக் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா?" என இத்தீர்ப்பை விமர்சித்து எழுதியதற்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. அவர் நீதிமன்றங்களுக்கு எதிராகக் கோஷம் போட்டார் என்ற "குற்றத்திற்காக', அவரை ஒருநாள் டெல்லி திகார் சிறையில் அடைத்துத் தண்டித்தது, உச்சநீதி மன்றம்."

 

'உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங் பாபர் மசூதியை அப்படியே பாதுகாப்பேன் என நீதிமன்றத்திற்கு வாக்குக் கொடுத்துவிட்டு, அம்மசூதியை இந்து மதவெறிக் கும்பல் இடித்துத் தள்ள துணை போனார். இதனையடுத்து நடந்த கலவரத்தில், ஆயிரக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நீதிமன்றம் கல்யாண் சிங்குக்கு அளித்த தண்டனை 'நீதிமன்றம் கலையும் வரை, குளுகுளு நீதிமன்ற அறையிலேயே, உட்கார்ந்து இருக்க வேண்டும்" என்பதுதான். அருந்ததி ராய்க்கும், கல்யாண் சிங்குக்கும் அளிக்கப்பட்ட தண்டனைகளை ஒப்பிட்டாலே, நீதிமன்றத்தின் வர்க்கச் சார்பை புரிந்து கொள்ள முடியும்" என்ற அவர், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுள் ஒருவர்கூட இதுவரை உச்சநீதி மன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதில்லை; 1950 தொடங்கி 2005 வரையில் இதுவரை நான்கு தாழ்த்தப்பட்டோர்தான் உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற அநீதியையும் சுட்டிக் காட்டினார்.

 

'உலகில், இந்தியாவைத் தவிர, வேறெந்த ஜனநாயக நாட்டிலும், குடிமக்களை விசாரணையின்றித் தண்டிக்கும் தடுப்புக் காவல் சட்டங்கள் கிடையாது. மிசா, தடா, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொடா ஆகிய அனைத்து கருப்புச் சட்டங்களுக்கும் அங்கீகாரம் அளித்து, மக்களின் உரிமைகளை நசுக்குவதில் நீதிமன்றங்கள் அரசுக்கு விசுவாசமாகவே நடந்து வந்துள்ளன" எனக் குறிப்பிட்டு, நீதிமன்றங்களின் ஜனநாயக முகமூடியைத் திரைகிழித்தார், அவர்.

 

'கல்வி பிரச்சினையை எடுத்துக் கொண்டால், தனியார் கல்லூரிகளில் ஏழைகளின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உச்சநீதி மன்றம், வெளிநாடுகளில் வாழும் பணக்கார இந்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடுகிறது."

 

'சிறுபான்மையினர் உரிமை பிரச்சினையை எடுத்துக் கொண்டால், பாபர் மசூதி இருந்த வளாகத்தைக் கையகப்படுத்தி, ஒருதலைப் பட்சமாக இந் துக்களுக்கு மட்டும் வழிபாட்டு உரிமையை உத்தரவாதம் செய்யும் மைய அரசின் சட்டத்தை, நீதிமன்றம் அங்கீகரிக்கிறது."

 

'இப்படி ஏராளமான வழக்குகளில் மக்கள் விரோதமாகத் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றங்கள், தேசிய கீதம் பாடுவது தொடர்பான வழக்கு உள்ளிட்டு, ஏதோ சில வழக்குகளில் நியாயமாகத் தீர்ப்பு வழங்கினால், அதை "நீதிமன்ற லாட்டரி பரிசு' என்றுதான் பார்க்க முடியும்."

 

'உதாரணமாக, கங்கையில் ஆலைக் கழிவுகளைக் கொட்டி அந்நதியை மாசுபடுத்தி வந்த 60,000 தொழிற்சாலைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், கழிவை சுத்திகரித்து வெளியேவிடும் ஆலைகள்தான் இயங்க முடியும் என்று நீதிபதி குல்தீப் சிங் தீர்ப்பளித்தார். ஆனால் இந்தத் தீர்ப்பு வந்த ஒரே மாதத்திற்குள், 60,000 ஆலைகளும், 'நாங்கள் கழிவைச் சுத்திகரித்துதான் வெளியே அனுப்புகிறோம்" என அரசாங்கத்திடம் ஒரு சான்றிதழை வாங்கி வைத்துக் கொண்டு, ஆலைகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். நீங்கள் கோக்கிற்கு எதிராக வழக்கு தொடுத்தால், இப்படிக்கூட நடக்கலாம்" என எச்சரித்து, நீதிமன்றங்களின் மக்கள் விரோதத் தன்மையை தொட்டுக் காட்டினார், வழக்குரைஞர் லஜபதிராய்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது