Language Selection

பி.இரயாகரன் - சமர்

யாழ் பல்கலைக்கழக நிகழ்வில் கருத்துரைக்க வந்த சுவாஸ்திகாவுக்கு, கருத்துரைக்கும் ஜனநாயக உரிமையை மறுத்திருக்கின்றனர் தமிழ் தேசிய லும்பன்கள். 

புலிப் பாசிசமும் - பாசிச நடைமுறையும் சிந்தனையும் புலியுடன் அழிந்துவிடவில்லை, மாறாக இச் சமூகத்தில் நஞ்சாக மாறி புரையோடிக்கிடக்கின்றது. சமூகத்தில் இருந்து நாற்றமெடுக்கின்ற அதேநேரம், ஜனநாயகத்தின் துளிர்களையே கொத்திக் குதறுகின்றது.  

கடந்த வரலாற்றில் தமிழ் மக்களின் இருப்பையும் - வாழ்வையும் அழித்துவிட்ட புலிப் பாசிசமானது, தொடர்ந்தும் எஞ்சிய மானிடக் கூறுகளை வேட்டு வைக்கின்றது. 

சுவாஸ்திகா புலிகள் குறித்து முன்வைத்த கருத்து தவறானது என்று கருதும் ஒருவர், அதை மறுத்து விவாதிக்க முடியும். அதுதான் ஜனநாயகம். இது மட்டும் தான் பகுத்தறிவுடன் கூடிய, நேர்மையான செயலாக இருக்கமுடியும்.

கருத்தை எதிர்த்து விவாதிக்க முடியாத தற்குறிகள், சமூகத்தின் ஜனநாயகத்தை மறுப்பதுடன், கருத்துக் கூறும் மானிட உரிமையை கேலிசெய்து விடுகின்றனர். அடிப்படையில் ஜனநாயகத்துக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதன் மூலம், தங்கள் பாசிச நடத்தைகளை முன்னிறுத்துகின்றனர்.

தத்துவமும், கோட்பாடுகளுமின்றி எதையும் முத்திரை குத்தமுடியாது, வழிபடவும் முடியாது. தத்துவமும், கோட்பாடுகளுமின்றிய முன்முடிவுகள், அக விருப்புக்கும், சுயநலனுக்கும் உட்பட்டவையே. புலிகள் ஒரு பாசிச இயக்கம் என்று தத்துவமும், கோட்பாடுகளுமின்றி கூறும் போது, அவை மக்கள் விரோத அரசியலிலிருந்து கூறுகின்றனரே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்தல்ல. 

புலிகள் என்ற ஆயுதமேந்திய பாசிச சர்வாதிகார அதிகார அமைப்பு இன்று இல்லையென்ற போதும், அதன் கோட்பாடுகளே தமிழ் தேசியமாக தொடர்ந்து முன்தள்ளப்படுகின்றது. இப்படித் தமிழ் தேசியமாக உயர்த்தப்படுவது, தமிழ் தேசியமல்ல தமிழ் இனவாதமே. இந்த இனவாதமே, மதவாதமாகவும் திரிவுபடுகின்றது.

இந்த வரலாற்றுப் போக்கில் வளர்ச்சியுற்ற தமிழ் பாசிசத்தை மூடிமறைக்கின்றனர்;. இன்றைய சாதிய சமூக அமைப்பின் வெள்ளாளியச் சிந்தனையை எப்படி மூடிமறைக்கின்றனரோ, அதேபோல் புலிப் பாசிசத்தை மறுதளிக்கின்றனர். இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே. இதுவே ஒடுக்கும் இனவாத சாதிய அரசியலாக நீடிக்கின்றது.

இதை மூடிமறைக்க புலிகளை தேசிய இயக்கமாகக் காட்டுகின்ற பித்தலாட்டத்தை செய்கின்றனர்.  இதனை விரிவாக ஆராய்வது அவசியமாகின்றது.   

புலிகள் தேசிய இயக்கமா? 

தமிழ் இனவாதிகள் கூறுவது போல், புலிகள் தேசிய இயக்கமல்ல. புலிகள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தாத, அவர்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடாத எந்த இயக்கமும், தேசிய இயக்கமல்ல. இந்த வகையில் 1980களில் தோன்றிய தமிழ் தேசிய இயக்கங்களுக்கு இது பொருந்தும். 

தேசியம் என்பது சமூகப் – பொருளாதாரக் கோட்பாடுகளாலானது. தனிநபர் பயங்கரவாதத்தை நடத்துவதாலோ, இராணுவத் தாக்குதலை நடத்தி விடுவதாலோ அது தேசிய விடுதலை இயக்கமாகிவிடுவதில்லை. உரத்துக் குரல் கொடுத்துவிடுவதால் தேசியவாதியாகி விடுவதில்லை. 

முறிந்த பனை நூலின் சட்ட ரீதியான உரிமை, எனது தகவல் (எனக்கு ஆங்கில மொழி பேசவோ - எழுதோவோ தெரியாத குறைபாட்டால் இது ஏற்பட்டது. இந்தத் தவறு தெரிந்து கொள்ளாது மூலப்பிரதியை பிரசுரித்ததும் நானே) தவறானது. இந்த நூல் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதே சரியானது.

எனது இந்தத் தவறு எந்த விதத்திலும், அமெரிக்க அதிகார வர்க்க நலனுக்காகவே, நூல் வெளிவந்தது என்ற உண்மையை மறுதளித்துவிடவில்லை. வர்க்க அடிப்படையில், மத அடிப்படையில், ஏகாதிபத்திய நலன்கள் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியல் அடிப்படையில் ரஜனியை முன்னிறுத்திக் கொண்டாடும் விசுவாசிகளின் புலம்பலுக்கு எதிரானதே, கட்டுரையின் சாரம். சட்டரீதியான தவறுக்கு இலங்கை அமெரிக்கன் மிசனரியின் வழிபாட்டின் அங்கமான பாவமன்னிப்புககுரியதாக இருந்தாலும், இதன்பின் இருக்கின்ற ஏகாதிபத்திய கடவுள் பொய்யாகிவிடுவதில்லை.


1970 களில் தேர்தல் அரசியலில் எதிர்த்துப் போட்டியிட்டவர்களைச் சுட்டு கொன்றவர்களே, குண்டு வீசி கர்த்தால்களையும் நடத்தினர். இந்த தனிநபர் பயங்கரவாதத்துக்கு அஞ்சி ஒடுங்கிய மக்களை முன்னிறுத்தி ஹர்த்தால்களே, புலிக்கு பின்பாக தொடருகின்றது. தொடரும் அச்சமே, இன்றைய  ஹர்த்தால்கள். ஹர்த்தாலை அறிவிப்பவர்கள், முந்தைய பயங்கரவாதத்தை சார்ந்து முன்னிறுத்துகின்றனர்.

புலியை துதிபாடும் இந்த அரசியல் லும்பன்களின் கோமாளித்தனங்களுக்கு, மக்கள் உணர்ச்சியற்ற ஜடங்களாகி அடங்கிப் போகின்றனார். ஏன் எதற்கு சோலி என்று, ஒடுங்கி ஒதுங்கி விடுகின்றனர். பகுத்தறியும் சமூக நோக்கோ - அரசியல் உணர்வோ இன்றி, ஹர்த்தால்கள் வெற்றுச்சடங்காக, சம்பிரதாயமாகிவிடுகின்றது.

இதுதான் தமிழ்மக்களின் இன்றைய அவலநிலை. அரசியல் ஒரு பிழைப்பாக, மக்களை ஏமாற்றி விடுவதே, அரசியல் வியாபாரமாகி விடுகின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தை பெற்று சொகுசாக வாழ, நிகழ்ச்சிநிரல் தேவைப்படுகின்றது. 

1970 களில் தேர்தல் அரசியலில் எதிர்த்துப் போட்டியிட்டவர்களைச் சுட்டு கொன்றவர்களே, குண்டு வீசி கர்த்தால்களையும் நடத்தினர். இந்த தனிநபர் பயங்கரவாதத்துக்கு அஞ்சி ஒடுங்கிய மக்களை முன்னிறுத்தி ஹர்த்தால்களே, புலிக்கு பின்பாக தொடருகின்றது. தொடரும் அச்சமே, இன்றைய  ஹர்த்தால்கள். ஹர்த்தாலை அறிவிப்பவர்கள், முந்தைய பயங்கரவாதத்தை சார்ந்து முன்னிறுத்துகின்றனர்.

புலியை துதிபாடும் இந்த அரசியல் லும்பன்களின் கோமாளித்தனங்களுக்கு, மக்கள் உணர்ச்சியற்ற ஜடங்களாகி அடங்கிப் போகின்றனார். ஏன் எதற்கு சோலி என்று, ஒடுங்கி ஒதுங்கி விடுகின்றனர். பகுத்தறியும் சமூக நோக்கோ - அரசியல் உணர்வோ இன்றி, ஹர்த்தால்கள் வெற்றுச்சடங்காக, சம்பிரதாயமாகிவிடுகின்றது.

இதுதான் தமிழ்மக்களின் இன்றைய அவலநிலை. அரசியல் ஒரு பிழைப்பாக, மக்களை ஏமாற்றி விடுவதே, அரசியல் வியாபாரமாகி விடுகின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தை பெற்று சொகுசாக வாழ, நிகழ்ச்சிநிரல் தேவைப்படுகின்றது. 

ரஜனி திரணகமவை முன்னிறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் தொடரும் அரசியல்

புலிப் பாசிட்டுக்களால் கொல்லப்பட்ட ரஜனி திரணகமவை முன்னிறுத்தி செய்யப்படும் போலி முற்போக்கு அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. ஒடுக்கும் அரசியலை முன்னிறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கடந்தகால போராட்டங்களையும் தியாகங்களையும் தொடர்ந்து மறுதளிக்கின்றனர். 

தேசியத்துக்காக தாமே போராடியதாக புலிகள்  எப்படிக் கட்டமைத்தனரோ, அதேபோலவே இந்த ஜனநாயகம் -  மனிதவுரிமை குறித்த இவர்களது பித்தலாட்டங்களும். இதை ரஜனி திரணகம மூலம் மேடையேற்றுவதன் மூலம், மக்களுக்காக போராடிய அரசியலும், வரலாறுகளும், தியாகங்களும் காணாமலாக்கப்படுகின்றது.

மேற்கு ஏகாதிபத்தியங்களின் சட்டவிரோதமானதும், மாபியாத்தனமானதுமான பொருளாதாரத் தடைகளைச் சந்திக்கும் சின்னச் சிறிய நாடுகளான கியூபா, வடகொரியா, வெனிசுலா, ஈரான், சிரியா .. போன்ற நாடுகள், இன்னமும் உலகில் நீடித்து நிலைத்து இருக்க முடிகின்றது. இன்னும் இது போன்று பல நாடுகளும், பல உதாரணங்களும் உண்டு. இந்த வரிசையில் முள்ளாள் கம்யூனிச சோவியத்தும், சீனாவும் அடங்கும்.

யுக்ரேன் யுத்தம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தமாக மாறிவிட்டது. நேட்டோவுக்குள் பிளவுடன் கூடிய ஜரோப்பிய ஏகாதிபத்திய மேலாதிக்கம் தவிர்க்க முடியாதாகியிருக்கின்றது. இதுவரை காலம் அமெரிக்காவிடம் இருந்த உலக மேலாதிக்க முடிவுகளை அறிவிக்கும், ஒன்றிணைந்த ஐரோப்பிய ஏகாதிபத்திய முகாம் யுத்தத்தை நவீனமாக்கி - வீரியமாக்கி தன்னை முன்னிலைப்படுத்தி வருகின்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் nஐர்மனியானது, யுத்தத்தில் ஏற்படுத்திய தீவிர மாற்றத்தை அடுத்து, ருசிய ஆக்கிரமிப்பு படைகளின் பாரிய யுத்தப் பின்னடைவுக்கு காரணமாகி இருக்கின்றது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான மூலதனங்களுக்கு இடையிலான மறைமுகமான ஏகாதிபத்திய யுத்தங்கள், இன்று நேரடி யுத்தமாக மாறுகின்ற புதிய கட்டத்துக்குள் உலகம் சுருங்கி வருகின்றது.

யுக்ரேனில் தொடங்கி இருக்கும் யுத்தம் விரைவில் சீனக் கடலிலும் எதிர்பார்க்கலாம். தாய்வான் மீதான சீனா யுத்தத்தை தூண்டும் வண்ணம், அமெரிக்க தலைமையிலான நேட்டோ, யுத்தத்தைத் தூண்டி, பொது அமைதியைக் குலைத்து வருகின்றது.

இதுவரை நிலவிய அமைதியான நவகாலனிய மூலதனச் சுரண்டலுக்குப் பதில், கெடுபிடியான யுத்தங்கள் மூலம் - காலனிகளை உருவாக்கும் யுத்தத்தை நோக்கி ஏகாதிபத்தியங்கள் பயணிக்கின்றது.

யுக்ரேன் யுத்தத்தை தவிர்த்திருக்க முடியாதா!?

 

வர்க்கமற்ற பொதுவுடமைச் சமுதாயத்தை தன் இலக்காக்கிக் கொண்டு சிந்தித்தவன். உணர்ச்சியின் பிளம்பாக எப்போதும் கேள்விகளுடன் வாழ்ந்தவனே எங்கள் விஜயன், சாதியம், இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், நிறவாதம் .. என்று எல்லா மனித விரோத குறுகிய சமூக மனப்பாங்குகளுடனும், எப்போதும் முரண்பட்டு நின்றவன். அதற்காக நடைமுறையிலும் போராட முற்பட்டவன். போராடுவதற்காக அமைப்பைக் கட்ட வேண்டும் - ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்பதில், தோளோடு தோள் நின்றவன் - இன்று அவன் எம்மோடில்லை.

தூக்குமேடையில் தூக்கு போடும் அலுக்கோசுகள் போன்றே, பிழைப்புவாத ஈழ ஆதரவு தமிழக கும்பல்களின் செயற்பாடுகளும், சிந்தனைகளும் குறுகிய வழிபாட்டை ஊக்குவிக்கின்றனர். இதன் மூலம் புலிப் பாசிசத்தின் கீழ் உருவான ஈழத்து தற்குறிகளிடம் இருந்து பணத்தைக் கறக்கவும், அதேநேரம் சொந்த மக்களை ஏமாற்றிப் பிழைக்கவும் – தமிழகத்தில் புலி ஆதரவு கும்பல்கள் இயங்குகின்றது. "மேதகு" என்ற புரட்டு, இப்படித்தான் புளுத்து வெளிவந்திருக்கின்றது.

"திருப்பி அடித்தால்" அது விடுதலைப் போராட்டமாகிவிடும், "துரோகி"யாக்கி கொன்றால் மானிட விடுதலை கிடைத்துவிடுமா? இப்படி நம்புகின்ற, நம்பக் கோருகின்ற பகுத்தறிவற்ற அலுக்கோசுகளே, "மேதகு" மூலம், தம்மைத் தாம் முன்னிறுத்திக் கொள்கின்றனர்.

கடத்தல்காரர்கள், குற்றவாளிகளுடன் சேர்ந்து செய்த தனிநபர் பயங்கரவாதம் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை நடத்த முடியும் என்று, அலுக்கோசுகளால் மட்டுமே சொல்ல முடியும். அப்படி சொல்லப்பட்டது தான் "மேதகு". தோற்றுப் போன அரசியல் வழிமுறையை சரியென்று புனைய, சம்பவங்களையும் – வரலாறுகளையும் திரிக்கின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE