செய்வது சுலபம். வெங்காயம் இல்லாமல் சாம்பார் செய்ய
என்னென்ன தேவையோ அந்த பொருட்களே போதும்.

குழம்பில் போடப்படும் காய்க்கு பதில் வெந்தயக்கீரை.

சரி செய்முறை எப்படின்னு பார்த்திடலாமே!


குழம்பு செய்யும் பாத்திரத்தில் 1 கரண்டி தண்ணீர்
விட்டு அது கொதித்ததும் சுத்தம் செய்து வெட்டி
வைத்துள்ள வெந்தயக்கீரையை போடவும்.

கீரை முக்கால் பாகம் வெந்ததும் புளிக்கரைசல்
ஊற்றி கொதிக்க விடவும்.

மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி
சேர்த்து கொதிக்க விடவும்.

பொடி வாசனை போனதும் வேக வைத்துள்ள
பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

நல்லெண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்போடு,
கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய் கீறி
தாளித்து கொதிக்கும் குழம்பில் கொட்டி
பரிமாறவும்.




நம் உடல் சூட்டை தடுக்கும் வெந்தயம்.

வெந்தயம் நம்மை வெந்து போகாமல் காக்கும் அருமருந்து.

 http://tamilmeal.blogspot.com/