விசுவாசிகளின் புலம்பல்கள் : முறிந்தபனை நூல் யாருக்காக எழுதப்பட்டது?
முறிந்த பனை நூலின் சட்ட ரீதியான உரிமை, எனது தகவல் (எனக்கு ஆங்கில மொழி பேசவோ - எழுதோவோ தெரியாத குறைபாட்டால் இது ஏற்பட்டது. இந்தத் தவறு தெரிந்து கொள்ளாது மூலப்பிரதியை பிரசுரித்ததும் நானே) தவறானது. இந்த நூல் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதே சரியானது.
எனது இந்தத் தவறு எந்த விதத்திலும், அமெரிக்க அதிகார வர்க்க நலனுக்காகவே, நூல் வெளிவந்தது என்ற உண்மையை மறுதளித்துவிடவில்லை. வர்க்க அடிப்படையில், மத அடிப்படையில், ஏகாதிபத்திய நலன்கள் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியல் அடிப்படையில் ரஜனியை முன்னிறுத்திக் கொண்டாடும் விசுவாசிகளின் புலம்பலுக்கு எதிரானதே, கட்டுரையின் சாரம். சட்டரீதியான தவறுக்கு இலங்கை அமெரிக்கன் மிசனரியின் வழிபாட்டின் அங்கமான பாவமன்னிப்புககுரியதாக இருந்தாலும், இதன்பின் இருக்கின்ற ஏகாதிபத்திய கடவுள் பொய்யாகிவிடுவதில்லை.