தமிழினவாத வாக்குக் கோரி "தமிழ் பல்கலைக்கழகம்" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 11
தமிழ்ப் பல்கலைக்கழகம் இயங்குவதற்கு அரசு ஆதரவு வேண்டும், எனவே தமிழனின் ஆட்சியதிகாரமான "சுயாட்சிக்காக" தமிழன் வாக்குப் போட வேண்டும் என்றனர். சுயாட்சிக் கோரிக்கையை இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் பல்கலைக்கழகம் மூலமும், மக்கள் மத்தியில் கொண்டு சென்றது.
இப்படி இலங்கை தமிழரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்ட சுயாட்சிக் கோரிக்கை, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டதல்ல. மாறாக தமிழினவாதிகளின் தேர்தல் அரசியல் வெற்றிக்கான, தமிழினவாதக் கோரிக்கையாகவே முன்வைக்கப்பட்டது.
