யாரிடம் இப்போ கால்களில் விழுகிற

அழுவதும் விழுவதும்
அழித்தவர் காலடி மீளத் தொழுவதும்
வேண்டாம் நம் உறவுகாள்
போருக்கு கொடுந்துணை
வியூகம் வகுத்தளி(ழி)த்தவர் தானிங்கு
முகம்போர்த்தி இனியவராமென
வருகிறார் சொரிகிறார் கண்ணீர்.

அழுவதும் விழுவதும்
அழித்தவர் காலடி மீளத் தொழுவதும்
வேண்டாம் நம் உறவுகாள்
போருக்கு கொடுந்துணை
வியூகம் வகுத்தளி(ழி)த்தவர் தானிங்கு
முகம்போர்த்தி இனியவராமென
வருகிறார் சொரிகிறார் கண்ணீர்.

தேர்தல்கள், பாட்டாளி மக்களின் இரத்தத்தை விற்றுப்பிழைக்கும் வலதுசாரிகளுக்கு புள்ளடியிட வைக்கும் ஒரு அரசியல் ஏமாற்று வேலை. உழைப்பவன் மீது அதிகாரங்களையும் சுமைகளையும் அதிகரித்து, உழைப்பவர் கொண்டுள்ள அற்ப சொற்ப உரிமைகளை மேலும் மேலும் பிடுங்கி சுரண்டிக்கொழுக்கும் உழையா வர்க்கங்களின் கைகளில் அதிகாரத்தை குவிப்பதற்கான ஒரு "அரசியல் ஆயுத" ஒடுக்குமுறை வழி தான் அவர்கள் நடாத்துகின்ற தேர்தல்.
கூடங்குளம் அணுமின்னிலைய எதிர்ப்புப் போராட்டம் எமது கோடிப்புறத்திலேயே, நடந்துகொண்டிருக்கின்றது.

அணுகுண்டு வெடித்தால்த்தான் அழிவு...
அணுவுலை வெடிக்காமலே அழிவு...
கூடங்குள அணுமின் உலையை இழுத்து மூடு..!
போராடும் மக்களோடு கை கோரு...
இது நமது போர்.
மன்னார் வளைகுடா மற்றும் யாழ் தீபகற்பம் எனும் இலங்கையின் தலைமாட்டில் எப்போதும் மக்கள் தத்தம் தலையணைக்குள்ளேயே அணுக்குண்டொன்றினை வைத்து உறங்கும்படியான நிம்மதி கெட்ட இரவுகளை உருவாக்கி வைத்திருக்கின்றது கூடங்குளம் அணுமின்னிலைய நிர்மாணம்.
குறுக்குகட்டோட விறுக்கென்று
மணலில் எட்டி நடக்கின்ற மீன்காரப் பெண்டு
குனிந்து மீன்கூடை இறக்கி வைக்கையில்
மொய்க்கிற ஈயோடு அவளுடல் மேயும் உன் கண்கள்
குறுக்குகட்டோட விறுக்கென்று
மணலில் எட்டி நடக்கின்ற மீன்காரப் பெண்டு
குனிந்து மீன்கூடை இறக்கி வைக்கையில்
மொய்க்கிற ஈயோடு அவளுடல் மேயும் உன் கண்கள்
உனதன்னையைத் தங்கையை
காமவெறியினில் குதறியும் புணர்வாயோ?
உடலத்தைத் தின்றபின உயிரென மதியாய்
யோனி கிழித்துக் கொலைவெறி கொண்டவனே!
நீயோர் அன்னையின் வயிற்றினில் பிறந்தனை தான்
உன்னை வளர்த்தது நிச்சயம் அவள் இலை தான்!
யாரோ யாரெவரோ?

உனதன்னையைத் தங்கையை
காமவெறியினில் குதறியும் புணர்வாயோ?
உடலத்தைத் தின்றபின உயிரென மதியாய்
யோனி கிழித்துக் கொலைவெறி கொண்டவனே!
நீயோர் அன்னையின் வயிற்றினில் பிறந்தனை தான்
உன்னை வளர்த்தது நிச்சயம் அவள் இலை தான்!
யாரோ யாரெவரோ?
எங்கெங்கு திரும்பினும் பெண்களுக்கெதிராய்
நடக்கிற கொடுமைகளுக்களவிலையோ?
உனை வலியுடன் ஈன்று மகிழ்ந்த -தாயின்
பிரசவ வேதனை புரிகுவையோ?
நீயுன் தாய்க்கொரு சேய் தானோ ?
கொடூரமாய் இரும்புக்குழலினை நுழைத்து
அவள் யோனியைச் சிதைப்பாயோ?
என்னையும் நின்னையும்
பகைமூழவைத்து உயிர்
பறித்தவர் சரித்திரம்
இலங்கையில் உறங்கும்.
உழைக்கும் எம்கரங்கள்
இணைந்தே வீறுகொண்டோங்கும்.

என்னையும் நின்னையும்
பகைமூழவைத்து உயிர்
பறித்தவர் சரித்திரம்
இலங்கையில் உறங்கும்.
உழைக்கும் எம்கரங்கள்
இணைந்தே வீறுகொண்டோங்கும்.
இணைந்து நாம் எழுந்தோம்
இனியொரு இனவாத
மதவாதக் கூற்றனுக்
கிங்கென்ன வேலை
எடு வேலை
எய்தவனை வீழ்த்து.
உருண்டோடின கணங்கள்
புறத்திலிருந்து
அகத்துக்குள்
குளிர் அருவியாய்
பாய்ந்தோடின சொற்கள்

மக்களை மயக்க
வெட்டரிவாளையும் சுத்தியலையும்
காட்டேரி கூடக் கையில் எடுக்கிறது
மேதின வாழ்த்துக்கு முண்டியடிக்கிறது
பாட்டாளிக் கொடியை பற்றி வருகிறது.
வெற்றியல்லவா இது நமக்கு
பற்றிய தீயின் வேகம்
முற்றிவிடாமல் மக்கள் முன்
வேடம் கட்டி வலம்வரும் நிலைக்கு
சுரண்டும் கூட்டம்கூட மேதினக்
கொண்டாட்டம்.
நான் எந்த அதிகார வர்க்கத்திலிருந்தும்
ஊற்றுப் பெற்றவன் அல்ல நண்பரே
அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு ஓதுக்கப்பட்ட
சமூகத்திலிருந்து போராடிப் பெற்ற
அனுபவக் கல்வியின் ஆழத்திலிருந்து
கொதித்தெழுந்து வந்தவன்.
பசியில பஞ்சத்தில வாடிற வயித்துக்கு
கஞ்சியாகிலும் ஊத்திட,
காத்து மழயில கடும்கும்மிருட்டில,
கடலில மோதி விரட்டிற அலையில
தோணித்துரும்பில
வாழ்வை வெல்லும் எங்கட சாதி ஊர்மனை பக்கமா
அட ராசா நீ உன் காலில மணல் பட
நடந்தாயா?
வெட்டிச்சாய்க்கப்பட்ட உயிர்கள் எத்தனை. வீதிகளில் அனாதைப்பிணங்களாய் சுட்டுச் சரிக்கப்பட்டவர்கள் எத்தனை.
நேசித்த தேசத்தின் மக்களின் விடுதலைக்காய் போராடப் புறப்பட்டோர் புத்தி பேதலித்தவர்களால் புதைகுழிகளில் மண்ணோடு மண்ணாய் புதைக்கப்பட்டவர்கள் எத்தனை எத்தனை.