மனித உணர்வுகள் பண்டமாக (பொருளாக) - நுகர்வாக குறுக்கப்பட்ட முதலாளித்துவ சட்டகத்துக்குள் சமூக அமைப்பு இயங்குகின்றது. இங்கிருந்தே சிந்தனைகளும் - தர்க்கவியல்களும் கட்டமைக்கப்படுவதுடன், இதற்குள்ளான அகமுரண்பாடுகளை முன்னிறுத்தி "சுயசிந்தனை, பகுத்தறிவு, முற்போக்கு…" என்று தமக்குள் கோடு பிரிக்கின்றனர்.
இந்த முதலாளித்துவ அகமுரண்பாட்டை முன்னிறுத்தி இயங்கும் தனியுடைமையிலான தன்முனைப்புவாதமானது, உயிரியலிலான சமூகத்தன்மையை மறுதளிக்கின்றது. தன்னை, தன் வர்க்கத்தை மய்யப்படுத்தி சமூகத்தை மறுதளிக்கும் சிந்தனைமுறையிலான பாலியல் கோட்பாடு என்பது, சுரண்டல் தான்.