Language Selection

பி.இரயாகரன் - சமர்

மனிதவிரோதத்துடன் கூடிய இனவாத யுத்தமானது, மனித அவலத்தை விதைத்து விட்டுச் சென்றுள்ளது. இந்த வாழ்வுடன் மல்லுக்கட்டி வாழ்கின்ற மக்கள், தங்கள் உறவுகளை நினைத்துக் கண்ணீர் விட்டு புலம்பும் நினைவுகள் வாழ்வாகி, அதுவே மனித அவலமாகி நிற்க – அதை வியாபாரமாக்குகின்றது இனவாதக் கூட்டம்.

இனவாதச் சிந்தனைமுறை உள்ளடக்க ரீதியாகவும், சாராம்சமாகவும் இனவொடுக்குமுறையை மறுதளிக்கின்றது. இதனால் இனவாதச் சிந்தனைமுறை ஒருநாளும் இனவொடுக்குமுறையை காணவும் - காட்டவும் முடியாது. இதுவே இன்றைய எதார்த்தம்.


2009 யுத்தத்தின் பின் தமிழரின் புட்டுக்கு பதில் "பீட்சாவை" உணவாக அறிமுகமாக்கி இருக்கின்றோம் என்று, "மாவீரர் தினம்" குறித்த பேரினவாதக் கண்ணோட்டத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தபோது பொலிசார் கூறினர்.

இன்று ஒடுக்கப்பட்ட தமிழ் இனம் எதை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கின்றதோ, அந்த சிந்தனைமுறையே இனவொடுக்குமுறையைக் காணமுடியாமல் செய்கின்றது. அந்த சிந்தனைமுறை என்ன என்பதை, எங்கள் நடத்தையில் இருந்து கண்டறிவோம்.

இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் திரள் போராட்டமே, ஆயுதப் போராட்டமாக மாறியதா எனின் இல்லை. இனவொடுக்குமுறைக்கு எதிரான மக்கள்திரள் போராட்டமே நடக்கவில்லை. தமிழ் இனவாதத்தை வாக்கு அரசியலுக்காக முன்வைக்க, இனவொடுக்குமுறை பயன்படுத்தப்பட்டதே வரலாறு.

இனவொடுக்குமுறையை விட்டுவிட்டு, தமிழனின் அதிகாரத்திற்கான போராட்டமாக இனவொடுக்குமுறையை குறுக்குவதும் - கோருவதுமே நடக்கின்றது. 1980 களில் தோன்றிய ஆயுதப் போராட்டமானது இறுதியில் புலியின் அதிகாரத்துக்கான போராட்டமாகவும் -  படிப்படியாக தனிநபர்களின் அதிகார போராட்டமாகவும் சீரழிந்தது தொடங்கி அதிகார பரவலைக் கோரும் முரண்பட்ட தேர்தல் அரசியல் வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான ஒடுக்குமுறையை இனம் கண்டு அதற்கு எதிராக போராடுவதை மறுதளித்ததும் - மறுதளிப்பதுமே தொடர்ந்து நடந்தேறி வருகின்றது.

 

"நான் சாதி பார்ப்பதில்லை!", "எங்கே சாதி இருக்கின்றது!!?" "யார் சாதி பார்க்கின்றனர்!!!" என்று இலங்கையில் நவீன வெள்ளாளியம் எப்படி தன்னை தகவமைக்கின்றதோ, அதேபோல் தான் கமல் எங்கே மனுதர்ம நூல் நடைமுறையில் இருக்கின்றது என்று கேட்கின்றார். பார்ப்பனியத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மறுவார்ப்புச் செய்வது தான், கமலின் பகுத்தறிவுவாதம்.

இலங்கையில் இன-மத ஒடுக்குமுறை எதார்த்தமாக இருக்க, அதை அரசியல்ரீதியாக முன்வைக்க முடியாது இருப்பது ஏன்? இன்று இதை அரசியல்ரீதியாக கேட்பது "துரோகமாக" கருதுமளவுக்கு, இனவொடுக்குமுறைக்கு மறைமுகமான ஆதரவை தமிழ் தேசியம் வழங்குகின்றது.

 

அமெரிக்கா இதுவரை காலமும் உலகுக்கு தன்னை முன்னிறுத்தி எதை ஜனநாயகம் என்று கூறிவந்ததோ, அது பொய்யானது, மோசடியானது, பித்தலாட்டமானது என்று - இன்னும் ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப் கூறுகின்றார்.

பிரான்சில்; வெளியான முகமது நபி குறித்த கேலிச் சித்திரத்துக்கு எதிராக, இஸ்லாமிய அடிப்படைவாதமானது தொடர் பயங்கரவாதத்தை ஏவிவருகின்றது. இந்த பின்னணியில் துருக்கி உள்ளிட்ட நாடுகள், சுதந்திரமான கருத்துரிமைக்கு சவால் விடுத்திருக்கின்றன.

இலங்கைக்கு என்று இறையாண்மை கிடையாது. எந்த நாட்டு மூலதனம் இலங்கையை கட்டுப்படுத்துகின்றதோ, அந்த நாட்டுக்கு இலங்கை அடிமை. இது பொதுவான அரசியல் உண்மை. இது சீன மூலதனத்தின் விதியல்ல, உலக மூலதனத்தின் பொது விதி. இதுவரையான உலகம் மேற்கு மூலதனத்தினால் கட்டுப்படுத்தபட்ட சூழல், இன்று மாறி வருகின்றது.


மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE