நாம் எப்போதும் எங்கும் எல்லாத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்க மறுக்கின்றோம்.
இந்த வகையில் தான் புலிகளின் தேசிய விடுதலைப் போரை எதிர்க்கின்றோம். அதே நேரம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வழங்கக்கோரி, தமிழ்மக்கள் மீதான அனைத்து அடக்குமுறையையும் எதிர்க்கின்றோம். அதே நேரம் புலிகளை அழிக்கவெனக் கைக்கொள்ளும் எல்லா பிற்போக்கு ஏகாதிபத்திய சக்திகளின் நடவடிக்கைகளையும் எதிர்க்கின்றோம். புலிகள் ஒரு முற்போக்கான ஒரு முதலாளித்துவ தேசியத்தைக் கூட முன்னெடுக்காது, பிற்போக்கான நிலப்பிரபுத்துவ தேசியத்தைக் கோருவதை எதிர்த்து, முற்போக்கான தேசியத்தை உயர்த்தக்கோரும் நாம் புலிகளின் தேசியத்தை எதிர்ப்பது சரியான அடிப்படையாகும். அதேநேரம் பாட்டாளி வர்க்கம் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அதாவது அது ஒரு அரசாக இருக்கும் கோரிக்கை தனியான விசேஷ சலுகை கோராத வகையில் கோரும் உரிமை முன்வைத்துப் போராட முனைகின்றது.
தேசங்கள் உருவானதும், உருவாகிக் கொண்டு இருந்த காலத்திலும் அதற்கு முன்னும் ஆக்கிரமிப்பு என்ற சொல்லை பொதுவானதாக பயன்படுத்துவது ஏற்புடையனதாகவும் இருப்பது இல்லை. குறு நில அரசுகள் முதல் மாபெரும் அரசுகள் ஈறாக அடிக்கடி மாறிய ஆட்சி அமைப்புகளில் மக்களும், தோற்றவர்களும், சொந்தத்திலும் அநேகமாக மற்றைய படையுடன் இணைந்தும் ஆட்சியைக் கைப்பற்றுவது வரலாறாக நின்று கிடக்கின்றது.
"சமீப காலத்தில் மார்க்சியத் தத்துவார்த்த இலக்கியத்தில் ஆராயப்பட்டுள்ள (ஸ்டாலின் கட்டுரை இங்கு பிரதான இடத்தைப் பெற்றுள்ளது ) ஆகவே இக்கட்டுரையில் முழுக்க முழுக்க கட்சிக் கண்ணோட்டத்திலிருந்து இப்பிரச்சனையை எடுத்துக் கூறுவோரும் --- -லெனின்-தே.இ.பி.பா.வ.ச. - பக்-7-
முதலாம் உலக சிறுதேசிய முதலாளிகள் தமது சந்தையைத் தக்க வைக்க போராடுவது நாளாந்த விளைவாகியுள்ளது. இது தேசியத்தை முன்வைக்கின்றது. சூறையாடலுக்கு எதிராக போராட்டத்தினை சர்வதேசிய வாதிகள் ஆதரிப்பதுடன், அதை முன்வைத்துப் போராடுவது யதார்த்தமாகி உள்ளது. ஏனெனில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஜனநாயகக் கோரிக்கையாக இவை உள்ளது. சுரண்டலுக்கு ஆதரவு இல்லை எனினும் வர்க்கப் போராட்டத் திசையில் இந்த ஜனநாயகக் கோரிக்கை முன்வைத்துப் போரிடுவது அவசியமாக முதலாம் உலக நாடுகளில் உள்ளது.
இந்த மர்க்சிய விரோத நிறப்பிரிகை வாதிடும் அடுத்த விடையத்தைப் பார்ப்போம். "..... நாம் ஒரு புதிய தமிழ் மரபை கற்பிதம் செய்தாக வேண்டி இருக்கிறது. அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவங்களையும், தலைமை வழிபாடல்லாத இயக்கச் செயல் பாடுகளையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது." என்று புலம்பும் தமிழ் தேசிய விரோத ஏகாதிபத்திய சார்பு நிலையைப் பார்ப்போம்.
அடுத்து நிறப்பிரிகை என்ற மார்க்சிய விரோதிகள் குழு கூறும் கூற்றைப் பார்ப்போம்.
"ஈழத்தமிழர்களின் மீதான ஒடுக்கு முறை என்பது சிங்களப் பேரினவாதம் என்கின்ற கட்டமைப்பின்- கற்பிதத்தின் விளைபொருள் இதற்கு எதிரான ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் தவிர்க்க இயலாதது. ....... பாசிசத்தில் போய் முடியக் கூடியது என்கின்ற கரிசனம் இருக்குமாயின் அதற்குரிய வகையில் நாம் தேசியத்தை கற்பிதம் செய்ய வேண்டும். ........ தேசியப் போராட்டங்கள் மூலமாகத்தான் தேசங்கள் கட்டப்படுகின்றன." என்று கூறுவதன் மூலம் இலங்கை தமிழ் இனம் ஒரு தேசமாக இருப்பதை அடிப்படையில் மறுக்கின்றனர்.
நாம் ஸ்ராலினின் வரையறையான நிலத்தொடர், பொதுப்பாண்பாடு, ஒருமொழி, பொதுவான பொருளாதாரம் என்பது ஒரு தேசம் தேசமாக இருக்க வேண்டின் மிக அடிப்படையாக தேவையானவை இதில் ஏதாவது ஒன்று இல்லாத தேசம் ஒன்றைக் கூடக் உலகில் காட்ட முடியாது, உருவாக்க முடியாது.
இனி நாம் ஸ்ராலின் வரையறுத்த பொதுவான பொருளாதாரம் என்பதைப் பார்ப்போம். ஒரு பொருளாதாரம் இன்றி தேசம் உருவாக முடியும் எனக் கூறுவது அடிப்படையில் கற்பனாவாதக் கருத்து முதல் வாதமாகும்.
இனி நாம் ஸ்ராலினின் வரையறையான பொதுப்பண்பாட்டை எடுப்போம். ஒரு தேசம் உருவாக வேண்டின் ஒரு குறித்த மக்கள் கூட்டம் ஒரு குறித்த பண்பாட்டை, கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டும். பல்வேறு பண்பாட்டை உடைய உதிரிகள் ஒருக்காலும் ஒரு தேசிய இனமாக மாறிவிட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பண்பாட்டை உடைய வௌவேறு மக்கள் கூட்டம் ஒரு பல்தேசிய இனமாகவோ அல்லது ஒரு தேசிய இனத்துடன் சேர்ந்தோ இருக்க முடியும். எந்தப் பண்பாடும் இல்லாத வெற்றிடத்தில் ஒரு தேசியம் உருவாக முடியாது. ஆகவே ஒரு கூட்டம் மக்களைக் கொண்டு குறைந்த பட்சம் ஒரு பண்பாடு இருக்க வேண்டும்.
அடுத்து ஸ்ராலினின் வரையறையான பொதுவான மொழி என்ற விடையத்தைப் பார்ப்போம். ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்க முடியுமா? அப்படி ஒரு தேசத்தையும் காட்ட முடியுமா? ஒரு தேசம் இருக்க வேண்டின் நிச்சயம் ஒரு மொழி இருக்க வேண்டும். மொழி தேவையில்லை என கோரின் ஒரு தேசிய இனப் போராட்டத்தை மறுப்பதேயாகும்.
இனி நாம் இதையும் ஸ்ராலினின் வரையறையையும் பார்ப்போம். ஒரு தேசம் தேசமாக இருக்க வேண்டின் ஒரு நிலப்பரப்பு இருக்க வேண்டும். நிலப்பரப்பு இல்லாத ஒரு தேசத்தை காட்டவே முடியாது. நிலப்பரப்பு இல்லாத தேசிய விடுதலையையும் காட்ட முடியாது. அ..மார்க்ஸ் அவரின் சீடர்கள் முன்னைய ரஷ்சியாவில் யூதர் உடைய தேசியசுயநிர்ணயத்தை மறுத்ததாக அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றார்.
TPL_INFINITY_MORE_ARTICLE