இதில் ஒருவர் தான் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இவர் மகிந்தவை சந்தித்து ஆசி பெற்றது முதல், இருண்டதெல்லாம் புலியாகத் தெரிய உருவாடுகின்றார். ஏதேதோ புலம்புகின்றார். கொலையையே அரசியலாக கொண்ட புலிப் பிள்ளையான், பேரினவாத மகிந்த அரசினால் ஒரு கூலிக் கும்பல் தலைவனாக திடீரென உயர்த்தப்பட்டவுடன், கிழக்கின் விடிவெள்ளி என்று உச்சிமோந்தவர் தான் இந்த இராஜேஸ் பாலா.
பி.இரயாகரன் - சமர்
பி.இரயாகரன் - சமர்
தேசத்தில் தஞ்சமடைந்துள்ள பொறுக்கிகள் யார்?
மக்கள் விடுதலையை மறுக்கின்றவர்களை பெரும்பான்மையாக கொண்ட, சமூக விரோதிகளாலானது. சொந்த நடத்தைகளாலும், கருத்தாலும் மனித இனத்தையே வேரோடு அழிக்கின்றவர்கள் தான் இவர்கள்.
தேசம்நெற் சொறியும் அரசியல் என்ன?
தேசம் தனக்கு எந்த அரசியலும் கிடையாது என்கின்றது. அரசியல் கிடையாது என்றால், அதன் அர்த்தம் நிலவுகின்ற பாசிசத்தை நடுநிலையுடன் ஆதரிப்பது தான். இதைத் தான் ஊடகவியல் என்று கூறுவதுடன், இதை நியாயப்படுத்தவே 'தொழில் நேர்மை" என்கின்றனர். இதுவல்லாத சமுதாய நலனா தேசத்திடம் உண்டு? சொல்லுங்கள்?
தேசம் பேசும் கருத்துச் சுதந்திரம் என்பது, மற்றவனை தூற்றுவதற்கான உரிமையைத்தான்
மக்களின் விடுதலைக்கான கருத்து சுதந்திரத்தையல்ல. அதை அது பேசுவதும் கிடையாது. சமூக நோக்கமற்ற கருத்துச் சுதந்திரம் என்பது, அரட்டையும், கொசிப்புமாக, அது காழ்ப்பாக தூற்றுவதுமாக மாறுகின்றது. இப்படித்தான் தேசம் நெற் புழுத்துக் கிடக்கின்றது. இப்படிச் செய்வதையே தேசம் தனது 'தொழில் நேர்மை" என்கின்றது.
சமூக நோக்கமற்ற 'தொழில் நேர்மை"
சமூக நோக்கமற்ற புலித் தேசியம். சமூக நோக்கமற்ற புலியெதிர்ப்பு ஜனநாயகம். சமூக நோக்கமற்ற 'தொழில் நேர்மை". இவைக்கு பின்னால், தெளிவான மக்கள் விரோத நோக்கங்கள் தெளிவாக உண்டு.
இங்கு சொந்த சுயநலம் உண்டு. அதுதான் சொந்த 'தொழில் நேர்மை" பற்றி பேச வைக்கின்றது. மக்களுக்கு எப்படி நேர்மையாக செயல்படுகின்றீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்;. மக்களுக்கு எதிரான இரண்டு பாசிசத்தையும், எப்படி நேர்மையாக எதிர்த்துப் போராடுகின்றீர்கள்? அதைச் சொல்லுங்கள். இதுவல்லாத ஊடகவியல் நேர்மை என்பது, பாசிசத்தை ஆதரித்து பூசிப்பது தான். இரண்டு பாசிசத்தை எதிர்த்து, அந்த வகையில் கருத்தாளரைக் கொண்டிராத தேச 'தொழில் நேர்மை"யைக், கொண்டு போய் குப்பையில் போடுங்கள். அது யாருக்குத் தான் தேவை. இது சொந்த சுயநலத்துக்கு வேஷம் போட்டுக் காட்ட உதவும் என்று, கனவு காணாதீர்கள்.
பாசிசத்தை எதிர்க்காத 'தொழில் நேர்மை"
மனித அவலத்தையே சமூகமாக்கிவிட்ட பாசிசத்தை, எதிர்க்காத ஒரு ஊடகவியலை 'தொழில் நேர்மை" என்ற பெயரில் நடத்துவதே பாசிசம் தான். பாசிசத்தை இப்படியும் அரங்கேற்ற முடியும் என்பது, பொறுக்கிகளினதும் கிரிமினல்களினதும் வக்கிரமாகும். புலி - புலியெதிர்ப்பு பாசிட்டுகளுடன் கூடி, நடத்துகின்ற அரசியல் விபச்சாரம் தான், அவரின் 'தொழில் நேர்மை" யாகின்றது.
பாசிசத்தின் கூடாரம் தான் தேசம் நெற்
புலி – அரச ஆதரவு பாசிட்டுகளும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளும், தங்கள் முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு கொசிக்கும் இடம் தான் தேசம் நெற். இதைத் தவிர இதனிடம் வேறு எந்த சமுதாய நோக்கமோ, சமூக விழுமியங்களுமோ கிடையாது. இதை வைத்து தேசம் நெற் ஆசிரியர், தொழில் என்ற பெயரில் வியபா(பச்சா)ரம் செய்கின்றார். 'தொழில் நேர்மை" என்ற பெயரில், சமூக அவலத்தை தொழில் மூலதனமாக்கும் ஒரு பொறுக்கியாக தேசம்நெற் ஊடாக உலா வருகின்றார்.
புலி என்றும் அரச கைக்கூலிகள் என்று, நாம் தூற்றப்படுகின்றோமே! ஏன்?
மத்தளத்தின் இரண்டு பக்கத்தில் இருந்தும் நாம் அடிக்கப்படுகின்றோம். தேசத் துரோகி என்றும், புலிப் பயங்கரவாதி என்று ஒரேதளத்தில் இரு முத்திரை குத்தப்;படுகிறது. எமது அரசியல் கருத்துக்களை, இருதரப்பும் எதிர்கொள்ள முடிவதில்லை என்பது உண்மையாகின்றது. இதனால் எம்மை தமது எதிர்தரப்பாக காட்டி தூற்றுகின்றோம். இது தான் அவர்களது எமக்கு எதிரான அரசியல்.
'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள்
"நடைமுறைச் சாத்தியமான" ஒன்றைக் கோருகின்ற அரசியல் நியாயவாதங்கள் அடிக்கடி பலராலும் முன்வைக்கப்படுகின்றது. தமது எதிர்வாதங்களின் போதும், புலி மற்றும் புலியெதிர்ப்புத் தளத்தில் இருந்து, இவை வைக்கப்படுகின்றது.
'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்று புலிகள், புலியை ஆதரிக்கக் கோருகின்றனர். தமிழீழத்தை அடைதலே சாத்தியமான ஒரே தீர்வு என்கின்றனர். புலியெதிர்ப்போ அரசை ஆதரிப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" 'ஜனநாயக" தீர்வு என்கின்றனர். அதாவது புலியை ஒழித்தல் தான் சாத்தியமான தீர்வு என்கின்றனர். இவர்கள் இப்படிக் கோருவது இதுவல்ல என்று, மாற்றை யாரும் இதற்கு எதிராக வைக்க முடியாது.
முன்னுரை : இந்து மதப் பார்ப்பனிய தத்துவ சாரம் தான் சாதியம்
எதுவெல்லாம் இந்துத்துவமோ, அதுவெல்லாம் சாதியாக இருக்கின்றது. எதுவெல்லாம் சாதியோ, அதுவெல்லாம் இந்துத்துவமாக இருக்கின்றது. எதுவெல்லாம் மனிதர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்றதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இருக்கின்றது. எவையெல்லாம் மனித விரோதத் தன்மை கொண்டதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இயங்குகின்றது.
இப்படி ஒரு இந்துத்துவ சமூக அமைப்பு என்பது, சாதிய சமூக அமைப்பாகவே உள்ளது. இது தனது சமூக அமைப்பின் அனைத்து மனித விரோதத் தன்மையையும், தனக்குள் உள்வாங்கி பிரதிபலிக்கின்றது. எதுவெல்லாம் சமூகத்துக்கு எதிரான கொடூரங்களாகவும், கொடுமைகளாகவும், சமூக விரோத செயலாகவும் உள்ளதோ, அவையெல்லாம் இந்துத்துவ சாதி வடிவில் நீடிக்கின்றது.
மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்
1949ம் ஆண்டுக்கு பின் திட்டமிட்ட வகையில் மலையக தமிழ் பாடசாலைகளின் எண்ணிக்கை குறைந்தே வந்துள்ளது. அவை சிங்கள பாடசாலையாக மாற்றப்பட்டன. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது போன்று, அவர்களின் கல்வி வளங்கள் சூறையாடப்பட்டன. இதற்கு தமிழ் தேசிய தலைவர்கள் தூணாக துணையாக நின்றனர், நிற்கின்றனர்.