ஜப்பானில் பெரும் பணக்காரர்கள் ஆசிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வக்கிரத்தைத் தீர்த்த பின் கைவிடப்படுவது சாதாரணமாக உள்ளது. இந்தப் பாலியல் தரகில் ஈடுபடும் இரகசிய நிறுவனங்கள் மட்டும் 700 உள்ளன. இப்படி ஏமாற்றப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியா என்ற பெண் வழக்கு தொடர்ந்து போராடியதால் இது அம்பலமானது. (1.5.1991)6 பெண்ணை ஏமாற்றி, பாலியலை அனுபவிப்பது என்பது உலகம் தழுவிய போக்காக உள்ளது. இங்கு எப்போதும் பெண் தற்காப்பு நிலையிலும், ஆண் எப்போதும் தாக்குதல் நிலையிலுமே அணுகுகின்றனர். இது சில விதிவிலக்காக ஏகாதிபத்திய ஆணாதிக்கப் பண்பாட்டை வாழ்க்கையாகக் கொண்டவர்களிடையே பெண்ணும் தாக்குதல் கட்டத்துக்கு மாறிவிடுவது உண்டு.