பி.இரயாகரன் - சமர்

''வாடகைத் தாய்" ''அவன் - அவள் - அது" என்ற தலைப்புகளில் குழந்தையைப் பணத்துக்குப் பெற்றுக் கொடுத்தலைப் பற்றி எழுதுகின்றன பல பத்திரிக்கைகள். இதில் ஆணின் விந்தை வாடகைத் தாயின் கருவுடன் சேர்த்தல் அல்லது இருவரும் உடலுறவு கொள்ளல் மூலம் நடக்கின்றது. சிலவேளை வாடகைத் தாய் குழந்தையைக் கொடுக்க மறுத்து நீதி மன்றம் வரை செல்வதும் நிகழ்கின்றது. (21.7.1997)34

மேலும் படிக்க: சந்தைப் பொருள்களாகும் விந்துக்களும்- குழந்தைகளும்

சுஸ்மிதாசென் உலக அழகு ராணியாக தெரிவானதை ஒட்டி மொடல் உலகம் பற்றி பணம், புகழ்... பற்றி பெருமையாக விவரிக்கப்படுகின்றது இந்தியா டுடே. (21.10.1994)34 மேலும் ''அலிகள் அழகுப் போட்டி" ''மூன்றாம் அழகு" என்ற தலைப்புகளில் தன்னார்வ அமைப்புகள் எயிட்ஸ் விழிப்புணர்வை முன்வைத்து நடத்திய அழகுப் போட்டியைப் பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளது. (6.5.1997)34


அழகு என்பது வரையறைக்குள் உள்ளாக்க முடியாது என்பதை உலகமயமாதல் தலைகீழாக்கியுள்ளது. மனிதனுக்கு மனிதன் அவனின் வேறுபட்ட வாழ்க்கை சூழலை ஒட்டியும் பலவிதமான காரணத்தாலும் அழகு பற்றி வௌ;வேறு விதமான பார்வையை மனிதன் கொண்டிருந்தான். ஆனால் சந்தைத் தளம் இதைத் தலைகீழாக்கியுள்ளது.

 

மேலும் படிக்க: விபச்சாரங்களாகும் அழகுகள்

உலகமயமாதல் வேகம் பெற வக்கரித்த பாலியல் சுதந்திரம் உச்சத்துக்குப் போகின்றது. பாலியல் நோய்கள் என்றுமில்லாத வகையில் உலகைப் பிடித்தாட்டுகின்றது. உலக நாகரிகத்தின் தலைமையிடமாகக் கொண்டு கொண்டாடப்படும் அமெரிக்காவில் பாலியல் நோய் சமூகமயமாகிச் சமூகத்தையே நாசமாக்குகின்றது.


நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை 16 பேர் கொண்ட குழு செய்த ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு வருடமும் 1.2 கோடி அமெரிக்கர்கள் பாலியல் நோயில் சிக்கி விடுகின்றனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: நுகர்வுகளுக்காகத் தொடரும் சுதந்திரப் பாலியல் விற்பனைகள்

இந்தியாவில் ஆண்டுக்கு 5,000 முதல் 9,000 வரையிலான வரதட்சணைக் கொலைகள் நடக்கின்றன (15.4.1995)6 இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் 1989-ஆம் ஆண்டு பதிவான வரதட்சணைப் படுகொலை 4,821 ஆகும். இரு மணி நேரத்துக்கு ஒன்றாக நாள் ஒன்றுக்கு 13 வரதட்சணைக் கொலைகள் நடக்கின்றன. இது 1983-இல,; நாள் ஒன்றுக்கு மூன்று மட்டுமே. 1986-இல், ஆறாக இருந்தது. அதாவது 1983-இக்கும் 1989-இக்கும் இடையில் 400 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. (1.10.1990)6


டெல்லியில் 1985-இல், பதிவான வரதட்சணை படுகொலை 43-இல் இருந்து 1988-இல், 71ஆக அதிகரித்துள்ளது. இது 1989 ஜனவரி முதல் 1990 மார்ச் வரை 132 பேர் கொல்லப்பட்டுள்ளனர். (16.5.1990)6

மேலும் படிக்க: வியாபாரமாக நடக்கும் திருமணங்களில் வரதட்சணைக் கொலைகள்

இந்தியாவில், வீட்டில் பெண்கள் மீதான துன்புறுத்தல் 13.2 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. இந்தியாவில் குடும்பப் பெண்கள் ஒவ்வொரு நாளும் 53 பேர் தற்கொலை செய்கின்றனர் என என்.சி.ஆர்.பி. அறிக்கை தெரிவிக்கின்றது. நீதிமன்றத்தில் பெண்கள் மீதான துன்புறுத்தல் வழக்கு இழுத்து அடித்தே (தாமதப்படுத்துதல்) தாக்கல் ஆகின்றது. இப்படி தாக்குதலுக்கு உள்ளாகும் போது 40 சதவீதமான பெண்கள் இறந்து விடுகின்றனர். (9.12.1998)34

மேலும் படிக்க: பெண்கள் மீதான ஆணாதிக்க வன்முறைகள்

கற்பழிப்பு என்பது வரலாற்று வழியாகக் காலாகாலமாக ஆணாதிக்கச் சமுதாயத்தின் விளைவாக உள்ளது. ஆண் சமுதாயத்தின் சுதந்திரமான ஆணாதிக்கப் பிறவியாக இருந்தபடி, அதன் அதிகாரப்படி நிலையில் பெண் மீதான வன்முறையைக் கையாளுகின்றனர். இதன் போது சமுதாயம் எதிர்த்து நிற்கின்றது. இது வரலாற்றின் படி நிலையில் எங்குமே நீடித்துக் கிடக்கின்றது. இந்த வன்முறையின் போது எதிர்த்துப் போராடியவர்கள் கடவுளாக்கப்பட்டு வழிபாட்டுக்கு உரியவரானார்கள். இந்த வகையில் பணங்குடியில் வசித்த இஸ்லாமிய தையற்காரன் போராடி மடிந்த சம்பவத்தைப் பார்ப்போம்.


அந்த ஊரில் அழகான தயிர்க்காரி தினசரி காலையில் தயிரை ஊரிலிருந்து எடுத்துச் செல்வது வழக்கம். இந்தத் தயிர்க்காரியைக் கற்பழிக்க ஒருவன் முயன்ற போது, அவள் அந்தத் தையற்காரன் கடையில் அடைக்கலம் புகுகின்றாள். அந்த நிலையில் தையற்காரன் அப்பெண்ணைப் பாதுகாக்க முயல அவனைக் கொன்று விடுகின்றான் கற்பழிக்க வந்தவன். இதைத் தொடர்ந்து அந்தத் தையற்காரன் அந்த மக்களின் "வழிபாட்டுக்குரிய மாடனாக (இறைவனாக)''51 இன்றும் இருக்கின்றான். இந்தச் சம்பவம் ஆணாதிக்கத்துக்கு எதிரான மக்களின் பொதுத்தன்மையைக் காட்டுகின்றது. ஆனால் இந்தக் கொடுமை முன்பைவிட அதிகரித்துச் செல்வது மட்டும் உண்மையாகும். அதை நாம் ஆராய்வோம்.

மேலும் படிக்க: ஆணாதிக்க ஜனநாயகத்தில் கற்பழிப்புகள்

இன்று உலகின் தனிச் சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகம் மீதான நம்பிக்கைகள் இந்த அமைப்பின் அச்சாணியாக உள்ளது. இந்த ஜனநாயகம் மிக்க சிலருக்கு, பலர் உழைக்கும் சுரண்டலில் தன்னை நியாயப்படுத்துகின்றது. பெண்கள் இந்த அமைப்பில் போட்டி போடுவதன் மூலம், சலுகை பெறுவதன் மூலம், போராடி வெல்வதன் மூலம், ஆணுக்கு நிகராக விடுதலை பெற முடியும் என்ற கோட்பாடுகள் மீது உலகமயமாதல் முகத்தைப் பொத்தி அடிப்பதைப் பார்ப்போம். 1990-இல், 120 கோடி வறிய மக்கள் 130 கோடி டொலரை மட்டுமே வருவாயாகக் கொண்டுள்ளனர். 1998-இல், 120 கோடி டொலராக குறைந்து வறுமை சமூகமயமாகி அதிகரித்துள்ளது. இந்த வறுமையில் சிக்கியுள்ளோரில் பெரும் பகுதி பெண்கள் ஆவர். இவர்கள் நாள் ஒன்றுக்கு 70 டொலரை உற்பத்தி செய்வதுடன், உலக உற்பத்தியில் 78 சதவீதத்தைப் ப+ர்த்தி செய்கின்றனர். ஆனால் உலக வருமானத்தில் 6 சதவீதத்தையே பெறுகின்றனர். இதிலும் நேரடியாகப் பெறுவது 3 சதவீதத்தையே. அதாவது ஒரு டொலரைவிட குறைவாகும். (4.2000)42

மேலும் படிக்க: உலக ஆணாதிக்கக் கொடூரங்கள், விளைவுகள் - புள்ளிவிபரங்களுடன்

சரிநிகர்

 


நாட்டுப்புறப் பாடல்கள் ஒருபுறத்தில் பெண்ணின் அவலத்தைப் பிரதிபலிக்கும் போது, மறுதளத்தில் ஆணாதிக்க வக்கிரம் வெளிப்படுவது ஆணாதிக்கச் சமூக எதார்த்தமாக இருக்கின்றது. கிழக்கிலங்கையில் நடைமுறையில் இருக்கும் பல்வேறு நாட்டுப்புறப் பாடல் வகைகளில், கிராமியக் கவிகள் பெண் பற்றிய பலவிதமான தகவல்களைத் தருகின்றது. அதில் இருந்து பெண்ணை ஆராய்வோம்.

மேலும் படிக்க: கிழக்கு இலங்கை நாட்டுப்புறப் பாடல்களில் ஆணாதிக்கம்

book _6.jpg'வரலாற்று ரீதியான ஆணாதிக்கத்தையும், அதற்கு எதிரான போராட்டத்தையும், அத்துமீறிய வாழ்க்கையையும் மிக சுயேட்சையாக நாம் கண்டறிய வேண்டுமாயின், கிராமியப் பண்பாடுகள், நடத்தைகள், வழக்குகள் என அனைத்திலும் தேட வேண்டும். இங்குதான் அவை எந்தவிதமான போலித்தனமும் இன்றி எதார்த்தத்தைப் பிரதிபலித்த வண்ணம் சமுதாய இயக்கம் நேர்மையாக இயங்குகின்றது. இந்தவகையில் பெண்ணியத்தை ஆராய்வது என்பது அவசியமானதாகவும், நிபந்தனையானதாகவும் உள்ளது. ''தமிழக நாட்டுப் புறவியலில் பெண்கள்"36 என்ற தலைப்பில் எழுதியுள்ள நூல் அந்த மக்களைப் போல் இயற்கையாக உள்ளது.

மேலும் படிக்க: ஆணாதிக்கத்துக்கு எதிராகக் கிராமியப் பெண்கள்

book _6.jpgபெண்ணுரிமை, பாலியல் என இலக்கியங்கள் திடீரென புலம்பத் தொடங்கியுள்ளது. தங்கள் சொந்த வக்கிரங்களையும், அரிப்புகளையும் படைப்பாக்கத் தொடங்கியவர்கள் இன்று உலகமயமாதலில் பெண்ணுரிமை, பாலியல் எதுவோ அதையே எடுத்துப் பாதுகாக்கவும், முன்வைக்கவும் தொடங்கியுள்ளனர். ஏகாதிபத்தியக் கலாச்சாரம், பண்பாடு என எதுவும் இல்லை என மார்தட்டுமளவுக்கு இவர்களின் படைப்புகள் புற்றீசல் போல் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: பெண்கள் கோருவது வரைமுறையற்ற புணர்ச்சியை அல்ல! வாழும் உரிமை மீதான சுயநிர்ணயத்தையே!

book _6.jpgஆணாதிக்கம் மனித இனத்தைச் சிதைத்த போது பாலியல் பல வக்கிரங்களைக் கண்டது. இயற்கையின் பரிணாமத்தையும், இயற்கையின் அழிவையும் ஏற்படுத்தியே மூலதனத்தின் சுதந்திரம் பூத்துக் குலுங்கியது குலுங்குகின்றது. இந்தச் சிதைவுகளில் இருந்து அலங்கோலமான பாலியல் வடிவங்கள் வெடிக்கின்றன. இந்த எதார்த்தத்தில் இருந்து அங்கீகரிக்கக் கோரும் போராட்டமும், இதை ஜனநாயகத்தின் சுதந்திரமாக, தனிமனித உடல் சார்ந்த கூறாகவும் என பலவித விளக்கத்துடன் இன்று கோட்பாட்டு விளக்கங்கள் வருகின்றன. இதில் ஓரினச் சேர்க்கையும் ஒன்று. அதை ஆராய்வோம்.

மேலும் படிக்க: ஓரினச்; சேர்க்கை - பெண் விடுதலைத் தத்துவமா?

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More