பி.இரயாகரன் - சமர்

அமெரிக்காவில் பால் அமாடோ என்ற பல்கலைக் கழகப் பேராசிரியர் விவாகரத்து தொடர்பாகச் செய்த ஆய்வில் சேர்ந்து வாழும் குடும்ப விவாகரத்தை விட, திருமணம் செய்த குடும்ப விவாகரத்து 300 சதவிகிதம் அதிகமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய பத்திரிக்கை சிட்னி மார்னிங் ஹொஸ்டு இது போன்ற ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளது. திருமணத்தில் உருவாகும் குடும்பத்தின் கடமை, உரிமை தொடர்பான கோரிக்கை அதிகமாக, தனிமனித வாதம் முதன்மை பெற்று சமூகக் கூட்டை மறுத்து பிரிவும், முரண்பாடுகளும் திருமணத்தின் பொதுப்பண்பாகின்றது. சேர்ந்து வாழும் குடும்பத்தில் கடமை, உரிமை பின்தள்ளப்பட்டுக் கூட்டுவாழ்வு முதன்மை பெறுவதால் நட்பும், சேர்ந்து வாழும் சமூகத்தன்மையும் அதிகரிக்கின்றது.

 

மேலும் படிக்க: விவாகரத்துகள்

இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் "மடிவது மானுடம் என்ற தலைப்பில் சேலம் மாவட்டத்திலுள்ள சில பகுதிகள் ஆய்வுக்குள்ளானது. 1,250 குடும்பங்களை ஆராய்ந்த போது 641 குடும்பங்கள் (51 சதவீதம்) பெண் சிசுக் கொலையைச் செய்துள்ளது தெரிய வந்தது. (6.10.1992)34 "தொடரும் தொட்டில் கொலைகள் என்ற தலைப்பில் சேலம் மாவட்டத்தின் பெண் பிறப்பு வீதத்தை ஆய்வு செய்த "மெட்ராஸ் ஸ்கூல் சோஷியல் வொர்க் அறிக்கையின் படி 1991-இல், 1,000 ஆண்களுக்குப் பெண்கள் எண்ணிக்கை 900 பேரில் இருந்து 952 பேர் வரை இருந்தது. அதே எண்ணிக்கை 1995-இல், 1,000 ஆண்களுக்குப் பெண்கள் எண்ணிக்கை 764 பேரில் இருந்து 575 ஆகப் பெண்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. (6.8.1995)34

மேலும் படிக்க: சிசுக் கொலைகள்

ஐக்கிய நாட்டு அறிக்கை ஒன்றின்படி வருடந்தோறும் 4.5 கோடி கருஅழிப்புகள் உலகளவில் நடத்தப்படுகின்றது. இவை எல்லாம் பெண் தனது உடல் சுதந்திரத்தைப் பேணும் பெண்ணியப் பிதற்றல்களில் இருந்தோ, ஆணாதிக்கத்தை ஒழிக்கும் வழியாகக் கூறும் பெண்ணியச் சீரழிவில் இருந்தோ பெண்ணை விடுவித்து விடவில்லை. மாறாக ஏகாதிபத்தியச் சீரழிவில் இருந்தும், ஆணாதிக்கக் காமத்தைப் பெண் பூர்த்தி செய்யும் அழகான உடல் தேவையில் இருந்தும், ஆணாதிக்க அமைப்பின் தேவைகள+டாகவும், சிதைவினூடாகவும் நடந்தவைதான்.

 

மேலும் படிக்க: கருஅழிப்புகள்

''நன்மை பிறக்குமா?" என்ற தலைப்பில் நார்ப்ளாண்ட்-1 என்ற கருத்தடை மருந்தை எதிர்த்துப் பெண்கள் போராடியதைச் சுட்டிக்காட்டியும், இதனால் புற்றுநோய், மனஅழுத்தம் போன்றன ஏற்படும் என்பதைப் போராடும் பெண்கள் எடுத்துக் கூறியதையும், உலகு எங்கும் மிக வறிய மக்களுக்குள் இவை பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவதையும் சுட்டிக் காட்டினர். (6.10.1994)34 பாரத இந்தியாவில் 1977-இல், அவசரக்காலச் சட்டத்தை இந்திராகாந்தி அமுல் செய்த போது, துப்பாக்கி முனையில் 65 இலட்சம் ஆண்கள் மலடு ஆக்கப்பட்டனர். இதே போன்று 1985-1990-இக்குள் 310 இலட்சம் பேரை மலடாக்கியும், 250 இலட்சம் பேரைக் கர்ப்பத்தடை செய்தும், 145 இலட்சம் பேரை வேறு வழியில் கருத்தடையும் செய்யப்பட்டனர். இதழ் 1994-3.246

 

மேலும் படிக்க: கர்ப்பத்தடைகள்

மாட்டுடன் உடல் உறவு கொண்ட பொலிஸ் பற்றியும், அவன் கைது பற்றியும் செய்தி இந்தியா டுடேயில் வெளியாகி உள்ளது. (30.12.1998)34


இந்தியாவில் தென்காசியைச் சேர்ந்த அச்சம் புதூர் கிராமத்தில் ''சீற்றம் மாற்றம் தரும்" என்ற தலைப்பில், பெண்ணைத் திருமணம் செய்து கணவன் சவுதி சென்ற நிலையில், வேறு ஓர் ஆணுடன் தொடர்பு எனக் கூறி, ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம் அரசியல் சமயப் பிரமுகர்கள் அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று மொட்டையடித்து, மரத்தில் கட்டி வைத்து கற்பழித்துள்ளனர் என்று எழுதப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க: பாலியல் நெருக்கடிகள்

பிரான்சில் ஒருவரின் ஒரு வருடக் கலவியை (புணர்ச்சியை) அட்டவணை - 20 மூலமாகப் பார்ப்போம்.61


அட்டவணை - 20


வகை கலவியில் ஈடுபடும் நாட்கள்


சேர்ந்து வாழ்தல்                                         146
திருமணம் செய்தோர்                              118
திருமணம் செய்யவில்லை.
ஆனால் காதலன், காதலி உண்டு.     114
திருமணமும் செய்யவில்லை.
காதலன், காதலியும் இல்லை.              69

மேலும் படிக்க: பாலியல் தெரிவுகளும் வாழ்க்கையும்

நேபாளத்தில், ''நேற்றைய குமாரிகள்" ''வாழ்வைத் தேடும் முன்னாள் தெய்வங்கள்" என்ற தலைப்புகளில் முதல் மாதவிடாய்க்குப் பின் அரண்மனைக்கு வெளியில் தூக்கி வீசப்படும் இவர்கள் பெருமளவில் விபச்சாரிகளாக அல்லது திருமணம் இன்றி வாழ்கின்றனர். (21.1.1997)34 நேபாளத்தில் குழந்தையிலேயே தெய்வத்துக்குக் காணிக்கையாக்கப்பட்ட பெண்கள் சிறுமியிலேயே அழகுமயப்படுத்தப்படுகின்றனர். இது இந்தியாவில் இந்துப் பண்பாட்டில் தேவதாசிகளை உருவாக்குவது போல் இங்கு அதற்காகவே பருவமடையும் முன் சிறுமி பயன்படுத்தப்படுகின்றாள். இப்பெண்கள் பருவமடைந்த பின் தூக்கி வீசப்படும் அதேநேரம் பகிரங்கமான விபச்சாரியாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றாள். பருவம் அடையும் வரையிலான வசதியான வாழ்க்கை. அதற்குப் பின்னால் பகிரங்கமான விபச்சாரி. இதுவே சாதாரண சாமத்தியச் (ப+ப்பெய்தும்) சடங்கிலும் பொதுப்பண்பாக உள்ளது.

மேலும் படிக்க: சாமத்தியச் சடங்கு ஊடான கலாச்சாரங்களும் விபச்சாரங்களும்

தேவதாசி முறையை விபச்சார நிலைக்கு இட்டுச் சென்ற பார்ப்பனியம் தமது ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்ள இதை ஊக்குவித்தனர். உடல் சேர்க்கை மூலம் மோட்சத்தை அடையமுடியும் என்ற மதக்கோட்பாட்டை முதன்மைப்படுத்தி, பெண்ணைப் பக்தியின் பின்னால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். தமிழில் ~தேவரடியாள்| (தேவ அடியாள்) என்ற சொல்லின் மொழி பெயர்ப்பே தேவதாசியானது. தேவதாசி முறை கி.பி. 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் இந்து மத ஆதிக்க வெற்றியின் விளைவாகியது. பார்ப்பன இரத்தத்தில் பிறப்பவர்கள் மட்டுமே அறிவையும், செல்வத்தையும் பெறுகின்ற இறைவன் அருள் கிடைக்கும் என்று கூறினர். அதைத் தாண்டி உருவான அறிவாளிகளைத் தமது உறவின் விளைவாகப் பிறந்தவர்கள் எனக் காட்டி, பெண்களைப் பாலியல் ரீதியில் சுரண்டினர். இன்று பாலியல் விடுதலையைச் சுதந்திரத்தின் அடிப்படை என்று எப்படிக் கூறுகின்றனரோ அப்படித்தான், பக்தியின் பின்னால் பார்ப்பனருடனான உடலுறவு பெண்ணின் மோட்சத்துக்கும், நிகழ் உலகச் செல்வத்துக்கும் திறவு கோள் என்று கூறி ஆணாதிக்கம் கொழுசாக வாழ்ந்தது. தஞ்சாவூரில் இருக்கும் பெரிய கோயிலில் ''400 தேவதாசிகள்"7 இருந்தனர்.

மேலும் படிக்க: ஆண்களின் பலதாரமணத்தைப் பூர்த்தி செய்ய உருவான விபச்சாரங்கள்

ஜப்பானில் பெரும் பணக்காரர்கள் ஆசிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வக்கிரத்தைத் தீர்த்த பின் கைவிடப்படுவது சாதாரணமாக உள்ளது. இந்தப் பாலியல் தரகில் ஈடுபடும் இரகசிய நிறுவனங்கள் மட்டும் 700 உள்ளன. இப்படி ஏமாற்றப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியா என்ற பெண் வழக்கு தொடர்ந்து போராடியதால் இது அம்பலமானது. (1.5.1991)6 பெண்ணை ஏமாற்றி, பாலியலை அனுபவிப்பது என்பது உலகம் தழுவிய போக்காக உள்ளது. இங்கு எப்போதும் பெண் தற்காப்பு நிலையிலும், ஆண் எப்போதும் தாக்குதல் நிலையிலுமே அணுகுகின்றனர். இது சில விதிவிலக்காக ஏகாதிபத்திய ஆணாதிக்கப் பண்பாட்டை வாழ்க்கையாகக் கொண்டவர்களிடையே பெண்ணும் தாக்குதல் கட்டத்துக்கு மாறிவிடுவது உண்டு.

 

மேலும் படிக்க: பெண்களின் கற்புரிமைகளை ஏமாற்றி நுகர்வது

சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம், தென்கொரியா உட்பட்ட ஐந்து நாடுகளிலும் 10 கோடி பெண்கள் பாலுறவுக்காகக் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளனர். இப்படி வருடா வருடம் பெண்களில் 5 கோடி பெண்கள் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு வருடமும் இரண்டு இலட்சம் பெண்கள் இறக்கின்றனர்.2 மேலும் ''எல்லை தாண்டும்; மிரட்டல்" என்ற தலைப்பில் வருடம் 7,000 நேபாளியப் பெண்கள் வறுமை காரணமாகப் பெற்றோரால் விற்கப்பட்டு, இந்தியாவின் விபச்சாரப் பகுதிகளுக்குக் கடத்தி வரப்படுகின்றனர். எயிட்ஸ் நோய்க்கு உள்ளாகிய பெண்கள் மீள நேபாளத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

மேலும் படிக்க: கடத்திச் செல்லப்படும் பெண்கள்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More