பி.இரயாகரன் - சமர்

புகைத்தலையும் மதுபானம் அருந்துவதையும் குறைப்பதன் மூலம், மின்கட்டண உயர்வை மக்கள் ஈடுசெய்ய முடியும் என்று மேன்மைமிகு இலங்கை ஜனாதிபதி கூறுகின்றார். பாசிட்டுகள் இப்படித்தான் வக்கிரமாக மக்களைப் பார்த்து கூறமுடியும். குடும்ப ஆட்சியை நிறுவிக் கொண்டு, குடும்பச்சொத்தை பல பத்தாயிரம கோடியாக குவித்துக்கொண்டு, அதை பாதுகாக்க படைகளையும் அதற்கான செலவுகளையும் பல மடங்காக அதிகரிக்கும் நாட்டின் ஐனாதிபதியிடம், இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

இதை மூடிமறைக்க குறைந்த மின் பாவனையாளர்களைப் பாதிக்காத அதிகரிப்பையே செய்துள்ளதாக கூறுவதன் மூலம், மக்களை முட்டாளாக்க முனைகின்றனர். மக்கள் மேலான புதிய வாழ்க்கைச் சுமையை திரித்தும், ஏய்த்தும் அதை மூடிமறைக்க முனைகின்றனர்.

மேலும் படிக்க: 65 சதவீத மின்கட்டண உயர்வும், மக்களை ஒடுக்கும் படைக்கான செலவுகள் அதிகரிப்பும்

இன்று இலங்கையில் சர்வதேசக் கடன் மூலதனமும், போர்க்குற்ற மூலதனமும், ஓரே திசையில் ஒரு புள்ளியில் பயணிக்கின்றது. இந்த வகையில் தனிவுடைமையிலான இன்றைய இலங்கையில் சொத்துடமையை, மீளப் பங்கிடக் கோருகின்றது. இது வைத்திருக்கும் மையக் கோசம் தான் "அபிவிருத்தி". இன்று இலங்கை அரசியலின் மையமானதும், பிரதானதுமான கோசமாக "அபிவிருத்தி" அரசியல் மாறியிருக்கின்றது. தங்கள் நிதி மூலதனத்தையும் முதலிட முனைகின்ற திசையில் தான், யுத்தத்திற்கு பிந்திய சூழலாகும்;. இது மக்களின் சிறுவுடமைக்கு எதிரான, நீதி மூலதனத்தின் யுத்தமாகவுள்ளது.

யுத்தம் நடந்த பிரதேசத்தில் நடந்தேறும் மீள்கட்டுமானம் என்பது, வெறும் இனவாதம் மதவாதம் சார்ந்த கூறாக மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. மாறாக நிதி மூலதனத்தின் நலன்களே மையப்படுத்தப்பட்டு, அவை முதன்மைப்படுத்தப்பட்டு முன்தள்ளப்படுகின்றது. இதற்கு இனவாதம், மதவாதம் மூலம் கவசமிடப்படுகின்றது. யுத்தம் நடக்காத பிரதேசத்தில் கூட "அபிவிருத்தி" எனும் பெயரில் நடந்தேறுகின்ற அதே நேரம், முஸ்லிம் மதவாதம் பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் படிக்க: சர்வதேச நிதி மூலதனமும், போர்க்குற்றவாளிகளின் நிதி மூலதனமும்

பொதுபல சேனா வெறுமனே இனவாத மதவாத அமைப்பல்ல. இப்படி அது தன்னைக் காட்டிக் கொள்வதும், அதை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதும் குறுகிய அரசியலாகும். அதாவது பொதுபல சேனா அமைப்பின் வெளிப்படையான நடவடிக்கைகளைக் கொண்டு அணுகும் போக்கு, இதை தோற்றுவித்தவர்களின் நோக்குக்கு சமாந்தரமானது. சிறுபான்மை இனத்தையும் மதத்தையும் பெரும்பான்மையின் எதிரியாகக்காட்டி ஒடுக்குவதன் மூலம் பிரித்தாளுவது மட்டும் இதன் அரசியல் நோக்கமல்ல. யுத்தத்தின் பின்னான பொருளாதார நலன்கள் தான், இதன் குறிப்பான இதன் குவிவான செயற்பாட்டுக்கு அடிப்படையாக இருக்கின்றது. இந்த வகையில் போர்க்குற்றவாளிகளின் கையில் குவிந்துள்ள சொத்துடமை சார்ந்த பொருளாதார நலன்கள், பொதுபல சேனாவின் அரசியல் அடிப்படையாக இருக்கின்றது.

இந்த வகையில் இறுதி யுத்தமும், யுத்தத்திற்கு பிந்தைய பாரிய படுகொலை மூலமும் புதிய சொத்துடமை கொண்ட ஒரு ஆளும் வர்க்கம்; உருவாகி இருக்கின்றது. இந்த வர்க்கம் தன்னுடைய புதிய சொத்துடமையைக் கொண்டு சுரண்டவே பொதுபல சேனா போன்ற அமைப்புகளை உருவாக்குகின்றது. இந்த வகையில் புதிய ஆளும் வர்க்கத்தின் நோக்கம் மிகத் தெளிவானது.

மேலும் படிக்க: பொதுபல சேனாவும் போர்க்குற்றவாளிகளும்

யுத்தத்தின் பின்னான சூழல், யுத்தம் மூலம் கைப்பற்றிய மூலதனத்தை முதலீடுவதற்காக உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்றுவதற்கான போராட்டமாகும்.  உள்நாட்டுச் சந்தையை மீள மறுபங்கீடு செய்யக் கோருகின்றது. இதுவே ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடாக, இன மத சிறுபான்மையியினது மூலதனத்துக்கு எதிரானதாக மாறிவருகின்றது. அரசு முன்தள்ளும் அபிவிருத்தி அரசியலின் உள்ளடக்கம் இதுதான். இந்த வகையில் யுத்த மூலதனமும், சர்வதேச நிதி மூலதனமும் இணைந்து பயணிக்கின்றது. அது ஏற்கனவே இருந்த சொத்துடமை ஒழுங்கையும், சுரண்டல் வடிவத்தையும், நிலவும் ஜனநாயக வடிவம் மூலம் பூர்த்தி செய்யமுடியாது. இதனால் பாசிசம் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இந்தப் பாசிசம் வெறுமனே ஜனநாயக மேற்கட்டமைப்பை மட்டுமல்ல, பொருளாதாரக் கட்டமைப்பை தனக்கு ஏற்ப மறுபங்கீடு செய்து வருகின்றது.

இந்த அடிப்படையில் அரச பாசிசத்தை சமூகமயமாக்க முனைகின்றனர். அரசும், அதற்கு யுத்த மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தலைமைதாங்கும் குடும்ப ஆட்சியையும் தொடர்ந்து பாதுகாக்கவும், மூலதனத்தை விரிவாக்கவும் பாசிசத்தை தவிர வேறு வடிவம் அதனிடம் கிடையாது. புதிய யுத்த மூலதனத்தால் ஆளும் வர்க்கத்துக்குள்ளான முரண்பாடுகளும், வர்க்கரீதியாக சுரண்டும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு இடையேயான முரண்பாடும், இலங்கையில் கூர்மையாகி வருகின்றது. இதில் இருந்து தப்பிப்பிழைக்க பாசிசத்தை தேர்தெடுக்கும் அதேநேரம், இதை நிலவும் ஜனநாயக வடிவங்கள் ஊடாக ஜனநாயகப் போர்வையில் திணித்துவிட முனைகின்றது. இராணுவ ஆட்சியைக் கூட இயல்பான ஜனநாயகக் கட்டமைப்பாக்க முனைகின்றது.

மேலும் படிக்க: இணங்கிப் போகும் பாசிசமாக்காலும், இணங்க வைக்கும் வன்முறையும்

வர்க்க நடைமுறையற்ற சூழலில் "சுயநிர்ணயக்" கோரிக்கை என்பது தேசியவாதத்துக்கு உதவுவதே. மார்க்சியம் பேசிக்கொண்டு, வர்க்க நடைமுறையைக் கைக்கொள்ளாதவர்களின் அரசியல் இதைத்தான் செய்கின்றது. இதே அடிப்படையில் தான் மார்க்சியவாதிகள் அல்லாதவர்களும் "சுயநிர்ணயத்தைக்" கோருகின்றனர். மூடிமறைத்த தேசியவாத பிரிவினை அரசியலும், மார்க்சியத்துக்கு எதிரான அரசியலும், மூடிமறைத்த "சுயநிர்ணய" கோசத்துடன் அரங்கில் வருகின்றது. இதன் மூலம், இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான நடைமுறைப் போராட்டத்தை எதிர்க்கின்றனர். மார்க்சியவாதிகள் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று, மார்க்சியவாதிகள் அல்லாதவர்கள் முன்வைக்கும் கோரிக்கை படுபிற்போக்கானது. மார்க்சியத்தை வர்க்க நடைமுறையுடன் ஏற்றுக்கொண்டவர்கள், சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ள கோருவதில் இருந்து, இது முற்றிலும் வேறுபட்டது, நேரெதிரானது.

மேலும் படிக்க: "சுயநிர்ணயக்" கோரிக்கை முன்வைக்கும் சந்தர்ப்பவாதிகளும் காரியவாதிகளும் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 7)

இலங்கையில் சுயநிர்ணயம் பற்றிய அரசியற் புரிதல் என்பது எதிர்மறையானது. பாட்டாளி வர்க்க விரோதத்தன்மை கொண்ட எதிர்மறையான முதலாளித்துவ அரசியல் கூறாகத்தான் இன்று விளங்கிக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. சுயநிர்ணயத்தைப் பிரிவினையாகத்தான் ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட இனங்கள் சார்ந்து விளங்கிக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. இந்த வகையிலேயே தான் தான் சுயநிர்ணயத்தைக் கோருவதும், நிராகரிப்பதும் கூட பொதுவாகக் காணப்படுகின்றது.

கடந்தகாலத்தில் பாட்டாளி வர்க்கம் இன முரண்பாட்டின் மீது வர்க்கக் கண்ணோட்டத்தில் செயற்படாமை தான், இதற்கான முக்கிய காரணம். தேசிய இன முரண்பாட்டை பூர்சுவா வர்க்கத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரலாகக் குறுக்கி, அதில் தான் ஆற்றவேண்டிய வர்க்க கடமையை மறுதளித்தது. ஒரு முரண்பாட்டில் உள்ள முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையையும், அதற்காக போராட வேண்டிய வர்க்கக் கடமையையும் நிராகரித்து வந்தது கடந்தகால வரலாறு. எமக்கு வெளியில் இன்றுவரை சுயநிர்ணயத்தை மார்க்சிய உள்ளடக்கத்தில் முழுமையாக கொள்கையளவில் கூட எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சரியான உள்ளடக்கத்துக்கு அப்பால் "சுயநிர்ணயத்தை" இடது சார்ந்து ஏற்றுக் கொள்பவர்களை எடுத்தால்

மேலும் படிக்க: இலங்கையில் சுயநிர்ணயம் பற்றிய அரசியற் புரிதல் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 6)

காலங்காலமாக அரசியல் பிழைப்புவாதிகளை நம்பி வாக்குப் போட்டதன் விளைவுகள் தான், இலங்கையின் தொடரும் இன்றைய நிகழ்வுகள். இதைத் தடுத்து நிறுத்தக்கூடிய நிலையில் மக்கள் இல்லை. இதற்கு மாற்றும் இல்லை. தமிழ் மக்கள் விட்ட அதே அரசியல் தவறு. இன்று இனரீதியாக பிரிந்து கிடக்கும் மக்களின் நிலை இதுதான்.

முஸ்லீம் அரசியல்வாதிகளின் செயல்களை முஸ்லீம் மக்கள் இன்று அனுபவிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இலங்கையில் பேரினவாதத்துக்கு செங்கம்பளம் விரித்தவர்களில், முஸ்லீம் அரசியல்வாதிகளின் பங்கு தனித்துவமானது. பேரினவாதத்தைக் காட்டி முஸ்லீம் மக்களை இனரீதியாக மதரீதியாக பிரித்து வாக்குப் பெற்றவர்கள், இனவாதிகளுடன் சேர்ந்து அரசியல் நடத்துவது எப்படி சாத்தியமானது? இதன் மூலம் தங்கள் தனிப்பட்ட சொத்துகளை பெருக்குவதையே அரசியல் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டதும், செயல்படுவதும் மட்டும் தான் உண்மை. இதை வாக்குப்போடுவதன் மூலம் மாற்றிவிட முடியாது.

மேலும் படிக்க: இனவாதிகளுக்கு உதவிய, உதவுகின்ற முஸ்லீம் அரசியல்வாதிகள்

இலங்கையில் பேரினவாதம் புதிய பரிணாமம் பெற்று வருகின்றது. இதற்கு தமிழகத்தில் நடந்தேறும் இனவாத போராட்டங்கள் மேலும் உதவுகின்றது. தமிழகத்தில் நடந்தேறும் வன்முறைகள் மட்டுமல்ல, தமிழக மாணவர்களின் இனவாதமும் இதைத் தான் இன்று செய்கின்றது. இந்தவகையில் தமிழக அரசும், அதே அரசியல் அடிப்படையிலான மாணவர்களின் இனவாதப் போராட்டங்கள் வரை, மீண்டும் இலங்கையில் இனவழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது.

இன்று இவ்விரண்டு இனவாதமும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி செயற்படுகின்றது. இலங்கை வாழ் மக்களுக்கும், அங்கு ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கும் எதிரானதாக இந்த இனவாதம் செயற்படுகின்றது. தமிழகத்தில் மீண்டும் கட்டமைக்கும் இனவாதத்தை, இலங்கை வாழ் மக்களின் போராட்டமாக காட்டுகின்றனர். இதன் மூலம் மக்களை அவர்களின் சொந்தப் போராட்டத்தில் இருந்து அகற்றுகின்ற அரசியல் செயற்பாடு இந்தியாவில் நடந்தேறுகின்றது. 1983 இல் நடந்த அதே இனவாத அரசியல் செயற்பாடுகள். அன்று இந்த இனவாதப் போராட்டங்கள் மக்கள் போராட்டத்தை அழிக்கவும், ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. இன்று அதே அரசியல் பின்னணியில், மீண்டும் வேறு வடிவில் இன்று அரங்கேறுகின்றது.

மேலும் படிக்க: தமிழகம் தொடங்கி இலங்கை வரை கோலோச்சும் இனவாதம்

பெரும்பான்மை சார்ந்த பௌத்தமத அடிப்படைவாதத்தையும், இன அடிப்படைவாதத்தையும், நாம் வெறும் மதம் இனம் சார்ந்த ஒன்றாகக் குறுக்கி புரிந்து கொள்ளக்கூடாது. இது ஏன், எந்தக் காரணங்களில் இருந்து தோற்றம் பெறுகின்றது என்ற தெளிவும் புரிதலும் இன்றி, இதை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாது. இதை வெறும் மதம் இன சார்ந்த ஒன்றாகக் குறுக்கி புரிந்து கொள்வது, சிறுபான்மை சார்ந்த அதே அடிப்படைவாதம் தான்.

ஜெர்மனியில் நாசிகளையும், அது முன்தள்ளிய பாசிசத்தையும், வெறும் கிட்லரின் தனிப்பட்ட செயலாக, சர்வாதிகாரத்தின் ஆசையின் வெளிப்பாடாக புரிந்து கொள்கின்ற எல்லைக்குள் தான், மனித அறிவை முடமாக்கும் வண்ணம் கல்வி முதல் ஊடகங்கள் வரை செயலாற்றுகின்றன. இந்த அடிப்படையில் தான் இலங்கையில் மத மற்றும் இன அடிப்படைவாதங்களின் பின்னுள்ள, அதன் அரசியலை மூடிமறைக்கின்றனர். அதை மகிந்த மற்றும் கோத்தபாயவின் தனிப்பட்ட செயலாகக் குறுக்கி விடுகின்றனர். இதன் மூலம் இதன் பின்னுள்ள அரசியலை நீக்கி விடுகின்றனர்.

மேலும் படிக்க: இலங்கையில் கட்டமைக்கும் அடிப்படைவாத அரசியலைப் புரிந்து கொள்ளல்

வர்க்கப் போராட்டத்தைக் கோரும் மார்க்சியவாதிகள், சுயநிர்ணயம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டம் என்ன என்பதை விளக்கி, அதை அரசியல்ரீதியாக முதலில் முன்னிறுத்த வேண்டும். இதன்பின் இன்றைய சமூக அமைப்;பில் சுயநிர்ணயம் இலங்கைக்கும், உலகுக்கும் பொருந்தாது காலாவதியாகிவிட்டது என்றால், அதை அரசியல்ரீதியாக நிறுவி நிராகரிக்க வேண்டும். இதன் மூலம் தான் "சுயநிர்ணயம்" பற்றிய இன்றைய விவாதங்களையும், அரசியல் முன்னெடுப்புகளையும் சரியாக அணுக முடியும்.

இலங்கையில் இனமுரண்பாட்டை கடந்து செல்லும் வர்க்கப் போரட்டத்துக்கான பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் செயல்தந்திரம் என்ன? செயல்தந்திரமாக சுயநிர்ணயத்தை பாட்டாளி வர்க்கம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், இலங்கை முதலாளித்துவ பூர்சுவா ஜனநாயகப் புரட்சியே இன்னமும் அரசியல் கூறாக இருக்கவேண்டும். முதலாளித்துவ பூர்சுவா ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தை இலங்கை கடந்து விட்டதா இல்லையா என்பது தான், சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றது. அதேநேரம் இலங்கையில் உள்ள நவகாலனிய தரகுமுதலாளித்துவமும், தேசங்கடந்த பன்நாட்டு முதலாளித்துவமும், இலங்கையில் பூர்சுவா ஜனநாயக புரட்சியை நிறைவுசெய்து அதை இல்லாதாக்கிவிட்டதா என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.

மேலும் படிக்க: இலங்கையின் வர்க்கக் கூறுகள் சுயநிர்ணயத்தைக் கோருகின்றதா? மறுக்கின்றதா! (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 5)

இன்று இலங்கையில் நிலவும் இனமுரண்பாட்டை சுயநிர்ணயம் மூலமான வர்க்கப் போராட்டம் மூலம் கடக்க முடியுமா? அல்லது கடக்க முடியாதா? இன்று இதுதான் பாட்டாளி வர்க்க சக்திகளின் முன்னுள்ள கேள்வி. எந்த அரசியல் வழியில் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும் என்பதை, நாம் நிறுவியாக வேண்டும். இந்த வகையில்

1.மார்க்சியம் முன்வைக்கும் முரணற்ற ஜனநாயகமே, சுயநிர்ணய உரிமை. இதை அரசியல் ரீதியாக முரணற்ற வகையில் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்ணயம் முதலாளித்துவ தேசியவாதத்துக்கு எதிரானது என்பதையும், அது எந்த அடிப்படையில் அப்படி இருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்வதன் மூலமே, வர்க்கப் போராட்டத்தை நடத்த சுயநிர்ணயத்தைக் கையாள முடியும். இதை விளக்கியாக வேண்டும்.

2.தேசிய முதலாளித்துவ சமூகக்கட்டமைப்பை இலங்கை கடந்துவிடவில்லை என்பதை நிறுவியாக வேண்டும். இதை நிறுவுவதன் மூலம், சுயநிர்ணயம் மூலம் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியும் என்பதை தெளிவுபடுத்த முடியும்.

மேலும் படிக்க: முதலாளித்துவ தேசியவாதத்துக்கு எதிரானதே சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 4)

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More