பி.இரயாகரன் - சமர்

950 களில் தமிழினவாத கண்ணோட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தைக் கோரிய காலத்தில், பாடசாலைகள் தனியார்மயமாக இருந்தது. அதேநேரம் அரச உதவி பெறுவனவாக இருந்தன. இந்தக் கல்விமுறையானது அனைவருக்குமான கல்வி மறுக்கப்பட்டு, வர்க்கம், மதம், சாதி, பால்.. சார்ந்த கல்வியாக குறுகியிருந்த காலம். குறிப்பாக யாழ்ப்;பாண வெள்ளாளிய சமூக அமைப்பில் "தீண்டத்தகாத" சாதிகளாகக் கருதப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, கல்வி கற்கும் உரிமையே கிடையாது. எப்படி "தீண்டத்தகாதவர்கள்" கோயில்களில் வழிபடும் உரிமை இருக்கவில்லையோ, அதேபோல் கல்வியும் கற்க முடியாது. இந்த வெள்ளாளிய சமூக மேலாதிக்க ஒடுக்குமுறையையே, தமிழினவாதிகள் தங்கள் இனவாதக் கொள்கையாக முன்வைத்தனர். 1949 இல் உருவான இலங்கைத் தமிழரசுக் கட்சி, இந்த சமூகப் பின்னணியில் இருந்தே உருவானது.

இந்த வெள்ளாளிய சமூக அரசியல் பின்னணியில் இருந்த தனியார் பாடசாலைகளை, 1960 இல் அரசு தேசியமயமாக்கிய போது தமிழினவாதிகள் எதிர்த்தனர். தமிழினவாதிகளின் இந்த இனவாத எதிர்ப்பை மீறி, இலங்கை அரசு, பாடசாலைகளை தேசியமயமாக்கியே, இலவச தாய்மொழிக் கல்வியை அனைவருக்கும் கட்டாயமாக்கியது. இந்த பின்னணியிலேயே பரந்துபட்டளவில் தமிழ் மொழிக் கல்வி, தமிழ் மக்களுக்கு கிடைத்தது. தாய்மொழியிலான தமிழில் அனைவருக்கும் இலவசக்கல்வி என்பது, தமிழினவாதிகளின் வெள்ளாளிய மேலாதிக்கத்துக்கு எதிரானதாகவே பார்க்கப்பட்டது. சமூகத்தில் எத்தகைய மாற்றமும், வெள்ளாளிய சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துவதாக இருந்தால், தமிழினவாதம் மூலம் அவை அனைத்தையும் தமிழினவாதிகள் எதிர்த்தனர். இது தான் தமிழினவாதத்தின் வரலாறு.

மேலும் படிக்க: தமிழ் பல்கலைக்கழகத்தை யாருக்காகக் கோரினர்? - யாழ் பல்கலைக்கழகப் போராட்டங்கள் - 13

ரீட்டா குறித்த சம்பவமானது கற்பனையானதாக இருந்தாலும் அல்லது உண்மைச் சம்பவமாக இருந்தாலும், இதை வெளியுலகுக்கு முன்வைத்தவர் ஜென்னி மட்டும் தான். அவரைத் தவிர வேறு யாரும் ரீட்டாவிடம், சம்பவம் குறித்த கதையைக் கேட்க அனுமதிக்கவில்லை. சம்பவம் நடந்த பின் அவரை அங்கிருந்து மன்னாருக்கும், இறுதியில் பிரான்சுக்கும் முன்னின்று அனுப்பி வைத்தவர் ஜென்னி. இதை நான் கூறவில்லை, இதை ஜென்னிதான் உலகறிய தேசம்நெற்றில் கூறி இருக்கின்றார். அதில் அவர் மட்டும் கேட்டுத் தெரிந்த விடையத்தை (ஜென்னியின் கூற்று) அசோக் தனது வழமையான அவதூறுகளுக்கு ஏற்ப திரித்துப் புரட்டி கூறியிருக்கும் பின்னணியில், புளட் அலுகோசுகளும் - கோயபல்ஸ்சுகளும் - கோமாளிகளும் மேடையேறி இருக்கின்றனர்.

இங்கு எதுவும் கற்பனையல்ல. அவதூறல்ல. புளட் அலுக்கோசுகள் கூறியவற்றில் இருந்து உண்மையைக் கண்டடைதலே.

மேலும் படிக்க: ரீட்டா விவகாரம் : புளட் அலுகோசுகளும் - கோயபல்ஸ்சுகளும் - கோமாளிகளும்

தமிழீழப் போராட்டம் ஆயுதம் தாங்கிய வடிவம் பெற்றபோதே, கொள்ளைகளைச் சார்ந்தே இயங்கத் தொடங்கியது. மக்கள் திரள் வடிவமல்லாத, மக்களிலிருந்து அன்னியப்பட்ட தனிநபர் பயங்கரவாதமானது, பொருளாதாரரீதியாக இவ்வாறான கொள்ளைகளிலேயே தங்கியிருந்தது. 1983 ம் ஆண்டுக்குப் பின்பும் இவ்வாறே தொடர்ந்து வங்கி மற்றும் தனிப்பட்ட வீட்டுக் கொள்ளைகளை நடத்தினர். அதேநேரம் அந்நிய சக்திகளிடமிருந்தும் மற்றும் இலங்கை மீதான அரசியல் - பொருளாதார நலன்களைப் பூர்த்தி செய்ததன் மூலமாகவும் நிதிகளைப் பெற்றும், அதே அந்நிய சக்திகளின் ஆயுதங்களில் தங்கியிருந்ததன் மூலமும், அரசியல் ரீதியாகவும் போராட்டம் சீரழிக்கப்பட்டது.

மேலும் படிக்க: தமிழீழ இயக்க வங்கிக் கொள்ளைகளும் கற்றன் நசனல் வங்கியும்

கட்சி வர்க்கத் தன்மையை இழந்துவிடுகின்ற போது, முதலாளித்துவக் கட்சிகளுக்குரிய எல்லா சீர்கேடுகளுடனும் புழுக்கத் தொடங்குகின்றது. வர்க்கச் சீர்கேட்டை மறைக்க வர்க்கக் கட்சிகளாக முன்னிறுத்திக் கொள்ளும் அதேநேரம், வர்க்க அணிகளுக்கு அதிகார வடிவங்கள் மூலமான கட்சி வடிவங்களையும் - அரசியலை வழிபாட்டு முறையில் ஒப்புவிக்க வைக்கின்றனர். ஜனநாயக மத்தியத்துவம், கற்றல், விவாதித்தல், விமர்சனம, சுயவிமர்சனம் .. முதல், கட்சியின் வர்க்கத் தன்மைக்குரிய வளர்ச்சிக் கூறுகளை ஒட்ட நறுக்கிவிடுகின்றனர்.

மேலும் படிக்க: புதிய ஜனநாயக கட்சி மயூரன் முதல் ம.க.இ.க வரை

வெவ்வேறு காலகட்டங்களில் அரசாலும் மற்றும் புலிகளாலும் பெருமளவில் மனிதர்கள் காணாமலாகப்பட்டது போல், தமிழினவாதிகள் உருவாக்கிய தமிழ் பல்கலைக்கழகமும் காணாமல் போயிருக்கின்றது. காணாமல் போனவர்கள் குறித்து அரசிற்;கு எதிராக மட்டும் குரல் கொடுப்பவர்கள், தமிழினவாதிகளால் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறைப்படுவதில்லை. இது போலவே தமிழினவாதிகள் காணாமல் போன தங்கள் தமிழ் பல்கலைக்கழகம் குறித்து பேசுவதில்லை.

தமிழினவாதிகள் தமிழ் பல்கலைக்கழகத்தை தமிழனின் தலைநகரம் திருகோணமலையிலேயே அமைப்போம் என்று கூறியே, 1960 களில் நிலத்தை விலைக்கு வாங்கினர். கட்டிடங்கள் அமைக்க அடிக்கல்லை நாட்டினர். கட்டிடங்களை அமைத்தனர். தொடர்ந்து நிதி சேகரிப்புகளைச் செய்தனர்.

மேலும் படிக்க: காணாமல் போன "தமிழ் பல்கலைக்கழகம்" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 12

மக்களைப் பிளக்கின்ற மதவாதங்களால், பகுத்தறிவோடு அனைத்தையும் கேள்வி கேட்கும் குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் மதவாத நச்சுகளைத் திணிக்கும் நிகழ்வுகள்தான், யூனியன் கல்லூரி மீதான அமெரிக்க மிசன் அரங்கேற்றிய வன்முறை. தென்னிந்திய திருச்சபையில் இருந்து பிரிந்த இந்த அமெரிக்க மிசன், இது போன்று மத ரீதியான வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

இது முழு கிறிஸ்துவ சமூகம் சார்ந்த வன்முறையல்ல. கத்தோலிக்க, புரட்டஸ்தான், தென்னிந்திய திருச்சபை மற்றும் வேறு சிறு கிறிஸ்துவ குழுக்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அமெரிக்க மிசனின் தொடர் வன்முறையானது, பல இடங்களில் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.

மேலும் படிக்க: யூனியன் கல்லூரியும் - கல்லூரியை மையப்படுத்தி மதவாதங்களும்

"வெருகலில்" பலி கொடுத்தவர்கள் தங்கள் பிழைப்புவாத - பிரிவினைவாத தேர்தல் வாக்கு அரசியலுக்காக, பலி எடுத்தவர்களை குற்றஞ் சாட்டுகின்றனர். இதன் மூலம் பலிகொடுத்த தங்கள் அரசியலை புனிதப்படுத்துகின்றனர்.

கிழக்கில் கொல்லப்பட்ட பல பத்தாயிரக்கணக்கானவர்களை, இந்த கிழக்கு மையவாதம் பிரிவினைவாதம் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக புலிகளின் அரசியலை விமர்சிப்பதில்லை. புலிகளின் அதே அரசியலையே கொண்டு, யாருடைய மேலாதிக்கம் என்பதை பிரிவினைவாதம் மூலம் முன்வைக்கின்றனர். அதாவது "யாழ்ப்பாணிக்கு" பதில் "கிழக்கான்" என்ற பிறப்பு சார்ந்த - இது சாதியக் கோட்பாட்டு அடிப்படையுமாகும். எந்த மண்ணில் பிறந்தனர் என்று, பிறப்பை முன்னிறுத்தி முரண்பாட்டையும் - பிரிவிiனையையும் முன்னிறுத்;தும் குறுக்கிய அரசியல்.

மேலும் படிக்க: "வெருகல்" படுகொலைக்கு பலிகொடுத்த கிழக்கு மையவாதம்

ஒடுக்கப்படும் இனங்களுக்கும், ஒடுக்கப்படும் சாதிகளுக்கும் சம்மந்தமில்லாத இன்றைய யாழ்ப்பாணத்து அரசியல் நிகழ்ச்சிநிரலானது, ஒடுக்கும் தரப்புக்காக ஒடுக்கப்பட்ட மக்களை பலியிடுகின்றது.

அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள - தமிழ் மக்களின் விடுதலைக்குப் பதில், பிளவுவாதமும் பிரிவினைவாதமும் தொடர்ந்து விதைக்கப்படுகின்றது. சாதியவாதங்கள், பிரதேசவாதங்கள், இனவாதங்கள், மதவாதங்கள்.. அனைத்தும், மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கான ஆயுதங்களே.

மேலும் படிக்க: மணிவண்ணனும் அருண் சித்தார்த்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே

பெண்ணினது பாலியல் சுதந்திரமே "பெண்ணியம்" என்று கூறக் கூடிய "பெண்ணியக்" கோட்பாடுகள் இருக்கின்றது. கட்டற்ற பாலியல் சுதந்திரம், காதல் செய்யும் சுதந்திரம். உட்பட அனைத்தையும், ஆணுக்கு நிகராக பெண் பெற்றுவிடுவதால் அது "பெண்ணியமாகி" விடாது. ஆணாதிக்கமானது ஆணுக்கு ஏற்றாற் போல் பெண்ணையும் தகவமைத்துக் கொண்டு இயங்கக் கூடியது. தனிச்சொத்துடமையிலான ஆணாதிக்கமானது, பெணணியப் பெயரிலும் நீடிக்கக் கூடியது.

மேலும் படிக்க: "பெண்ணியம்" கட்டற்ற பாலியல் சுதந்திரத்தையா முன்வைக்கின்றது!?

எந்தவொரு தனிப்பட்ட ஆண், பெண் உறவு குறித்தும், ஒழுக்கம் குறித்துமானதல்ல, "பெண்ணியத்தின்" பெயரிலான ஆணாதிக்க விவகாரம். அது "பெண்ணியத்தின்" பெயரிலான முதலாளித்துவ கோட்பாடு சார்ந்தது.

யாரும் தனிப்பட்ட ஒருவரின் பாலியல் "நடத்தையை" கேள்வி கேட்ட முடியாது. "ஒழுக்கம்" குறித்து பேசவும் முடியாது. இவை அனைத்தும் இந்தச் சமூகத்தில் இருப்பவையே. அதாவது ஆணாதிக்க குடும்ப அமைப்பில் தனிப்பட்ட ஆணின், பெண்ணின் "நடத்தையை" எப்படி கேள்வி கேட்கவும் விமர்சிக்கவும் முடியாதோ, அதே போல் தான் எல்லா வகையான மனித உறவுகளுக்கும் இது பொருந்தும்;. இங்கு கேள்வி கேட்பது தொடங்கி அதை பாதுகாப்பது வரை, இத்தகைய முதலாளித்துவ ஆணாதிக்க உறவுக் கோட்பாடுகளின் மீதேயொழிய, தனிப்பட்ட நபர்களின் நடத்தை மீதல்ல.

மேலும் படிக்க: "குரல் கொடுக்கும் பெண்களே குறிவைத்துத் தாக்கப்படுகிறார்களா"!?

2009 இற்குப் பின் அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டங்களுக்கும், போராட்டங்களில் முன்னின்றவர்களின் வீடுகளுக்கும் கழிவு ஓயில் ஊற்றப்பட்டது. இதையடுத்து திடீர் "கிறிஸ்" மனிதன் தோன்றி, குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. இதன்பின் காணாமல் போன கழிவு ஒயில் இன்று, இந்து வெள்ளாளியக் கலாச்சாரமாக நல்லூரில் காட்சி அளித்திருக்கின்றது.

குறிப்பாக நல்லூருக்கு வழிபட வரும் முதியவர்கள் தங்கள் உடல் இயலாமையால் அமருகின்ற, சாய்கின்ற இடங்களை குறிவைத்து, கழிவு ஒயில்களை ஊற்றி இருக்கின்றார்கள் கலாச்சாரக் காவலர்கள்.

மேலும் படிக்க: நல்லூர் கோயிலில் ஊற்றிய கழிவு ஒயிலும் - இந்துத்துவ வெள்ளாளிய மனப்பாங்கும்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More