பி.இரயாகரன் - சமர்

பேரினவாத அரச ஒடுக்குமுறையாளர்களால் 1981 யூன் 1ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. மாவட்டசபையை ஏற்று தேர்தலில் பங்குகொண்டோரை தனிநபர் பயங்கரவாதம் மூலம் கொன்றதற்கு பதிலடியாக, அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அன்று எரிக்கப்பட்ட - உடைக்கப்பட்ட – கொல்லப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில், எரிந்த யாழ் நூலகமும் அடங்கும்.

இதில் யாழ் நூலகமானது இனவொடுக்குமுறையின் வரலாற்று அடையாளமாகிப் போனது. இச் சம்பவம் மூலம் ஓடுக்கப்பட்ட தமிழ் தேசமும், அதில் வாழும் தேசிய இனங்களும், தனிமனிதர்களும் எதைக் கற்றுக்கொண்டு, எதை மீள உருவாக்கினர்!?

சமூகம் சார்ந்த வரலாற்று அழிவை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பணியை - ஒடுக்கப்பட்டவர்கள் செய்யவில்லை. பதிலுக்கு யாழ் நூலகத்தை எரியூட்டியவனின் அதே இனவாத உணர்வுக்கு நிகராக - தமிழினவாதத்தை பேசுகின்றதைத் தாண்டி, எதையும் சமூகத்துக்காக உருவாக்கவில்லை, எதையும் கற்றுக்கொள்ளவுமில்லை.

1981 இல் எரிக்கப்பட்ட நூலகத்துக்கு மாற்றாக, இன்று எத்தனை நூலகங்களை உருவாக்கி இருக்கின்றனர். ஏத்தனை தனிநபர்கள் தங்கள் வீடுகளில் நூலகங்களை வைத்திருக்கின்றனர். வாசிப்பைத் தூண்டும் வண்ணம் எத்தனை சமூக ஊக்குவிப்புகளை சமூகம் வழங்குகின்றது? எதுவுமில்லை.

அன்று எம்மிடம் யாழ் நூலகம் மட்டும் இருக்கவில்லை. ஊருக்கு ஊர் பொது நூலகங்களும், நூல்களும் இருந்தன. வாசிக்கும் பழக்கமும், அதன் அடிப்படையில் மனித வாழ்க்கையை வளப்படுத்தும் அறிவு வளர்ச்சியும் இருந்தது. புதிய அறிவுத்தேடல் சமூக அசைவின் உயிர் நாடியாக இருந்தது. இன்று எதையும் காண முடியவில்லை. நூலகங்களை உருவாக்கும் சமூக நோக்கு கொண்ட சமூகப் பார்வை கூட, சமூகத்திடம் காணாமல் போய் இருக்கின்றது.

மேலும் படிக்க: யாழ் நூலக எரிப்பும் - இரு முகங்களும்

அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போராட்டம் வீறுகொண்டு எழுந்திருக்கின்றது. கொரோனாவால் வேலையிழந்த உழைக்கும் வர்க்கம், முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டமாக இதை ஒருங்கிணைத்துப் போராடுகின்றது. உதிரி வர்க்கங்களோ தமது வர்க்கக் கலகமாக - சூறையாடலாக நடத்துகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போராட்டத்தை பயங்கரவாதமாக அறிவித்ததுடன், இராணுவத்தையும் இறக்கியிருகின்றான். நாய்களை விட்டு கொல்லப்பட வேண்டிய  "பொறுக்கிகளே" போராடுவதாக கூறியதுடன், துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் கொக்கரித்துள்ளான்பொலிசாரால் கொல்லப்பட்ட ஃபளாய்ட் உயிர் வாழும் தனது இறுதிப் போராட்டத்தின் போது “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று கூறிய வார்த்தை, அமெரிக்காவின் முதலாளித்துவ  "ஜனநாயகத்தில்' வாழமுடியாத மக்களின் பொதுக் கோசமாக மாறியிருக்கின்றது. அமெரிக்க சொர்க்கத்தில் மனிதனாக வாழ்வதற்காக - சுவாசிக்கும் உரிமைக்காக போராடுவதன் அவசியத்துடன் - மக்கள் வீதிகளில் இறங்கி இருக்கின்றனர்.

அமெரிக்காவே முதலாளித்துவத்தின் சொர்க்கம்; என்று நம்பும் உலகின் பொதுப்புத்தி நாற்றங் கண்டு - அம்மணமாகி நிற்கின்றது. ஏகாதிபத்திய ஊடகங்களால் உலகச் சிந்தனைமுறையாக்கப்பட்ட, முதலாளித்துவ சொர்க்கத்தை - மக்கள் தங்கள் போராட்டங்கள் மூலம் தலைகீழாக மாற்றி காட்சியாக்கி இருக்கின்றனர்.

இந்த நவீன அமெரிக்காவில் வன்முறை நிறவெறிப் படுகொலைகள் முதல் மருத்துவமற்ற கொரோனாப் படுகொலைகள் வரை அரங்கேறுகின்றது.

அதிகாரம் கொண்டு கறுப்பின மனிதனை நிறவெறி கொலைவெறியுடன் கொல்லும் காட்சிகள், உலகெங்கும் அதிர்வாகியுள்ளது. அமெரிக்கா முழுக்கவே, இந்த நிறவெறிக்கு எதிரான போராட்டங்களும்;, ஆங்காங்கே கலகங்களும் வெடித்திருக்கின்றன.

மேலும் படிக்க: முதலாளித்துவ "சொர்க்கத்தில்" மனிதர்கள் வாழ முடியுமா!?

கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற்கை விதிக்குள் நிகழவில்லை. மாறாக மனிதனின் எதிர்வினைக்கு உட்பட்டு, நாட்டுக்கு நாடு வேறுபட்ட அளவில் நடந்தேறுகின்றது. கொரோனா விளைவுகளையும் - மரணங்களையும், நம்மை ஆளும் ஆட்சியாளர்களின் அரசியலே தீர்மானிக்கின்றது.

கொரோனாவுக்கு எதிரான பொது மருத்துவக் கொள்கைக்கு அமைவாக உலகமும் - மனிதனும் இயங்க முடியாத வண்ணம், அரசுகளின் தன்னிச்சையான முடிவுகளையே, உலகம் சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த அரசியல் பின்னணியில் தொடர்ச்சியாக நிகழும் மரண எண்ணிக்கைகளை, இரண்டு அடிப்படைக் காரணங்களே பொதுவாகத் தீர்மானிக்கின்றது.

1.ஆட்சியாளர்களின் அரசியல் எந்தளவுக்கு வலதுசாரித் தன்மை கொண்டதாக இருக்கின்றதோ -  அந்தளவுக்கு அந்தந்த நாடுகளில் மரண எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதேநேரம்  சாதி, வர்க்கம், இனம், நிறம், மதம் .. அடிப்படையிலும், கொரோனா கையாளப்படுகின்றது. அதாவது வேறுபட்ட அணுகுமுறை, ஒடுக்கப்பட்டவர்களிடையே அதிக மரணங்கள் நிகழக் காரணமாகின்றது.

2.முதலாளித்துவமே அனைத்துக்குமான சமூக இயங்குவிதியாக கருதுகின்ற ஆட்சியாளர்களின் முதலாளித்துவத் தூய்மைவாதமும் – வரட்டுவாதமும் - மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரமும் (பிரோகிராஸ்சி) எந்த நாடுகளில் மைய்யப்படுத்தப்பட்டுள்ளதோ – அந்த நாடுகளில் மரணங்கள் அதிகமாகி வருகின்றது.

மேலும் படிக்க: கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

"தமிழ் தேசியத்தைக் கைவிட்டால் நாங்கள் பூச்சியம்" என்று கூறுவதே, யாழ் மையவாதச் சிந்தனை முறை.  இப்படி "தமிழ் தேசியவாத ஆய்வாளராக" முன்னிறுத்தப்படும் ஜோதிலிங்கம் சுமந்திரனுக்கு எதிராக முன்வைக்கின்றார்.

சுமந்திரனுக்கு எதிரான "தமிழ்த் தேசியம்" இப்படித்தான், முனங்கி, முழங்குகின்றது. சுமந்திரனின் அரசியலென்பது "தமிழ் தேசியம்" நீக்கம் செய்யப்பட்ட, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டு அரசியல் அல்லது அதன் அங்கம். அது மேற்கு நாட்டு "லிபரல்" அரசியலாம். அதாவது யாழ் மைய்யவாத வெள்ளாளிய சிந்தனைக்கு பொருந்தாத ஜனநாயக  - விடுதலை அரசியலாம்.

இப்படி மேற்கு ஏகாதிபத்தியத்தின் மடியில் படுத்துக் கிடந்து கனவு காண்கின்ற "தமிழ் தேசியமானது", ஐக்கிய தேசிய கட்சி ஊடாக மேற்கு ஏகாதிபத்தியத்தை சுமந்திரன் அணுகுவதை துரோகம் என்கின்றனர். எதிர்ப்பு அரசியல் - இணக்க அரசியல் என்று, ஓடுக்கும் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி மோதுகின்ற பிழைப்புவாதம்.

1975 இல் "தந்தை" செல்வா முன்வைத்த "தமிழ் தேசியத்தை" சுமந்திரன் கைவிட்டுவிட்டார் என்று வரலாற்று ரீதியாக ஆய்ந்து கூறும் ஜோதிலிங்கம், தன் வரலாற்றில் தான் கைவிட்டு – காட்டிக் கொடுத்த வரலாற்று திரிபுகள் மீதேறி புலம்புகின்றார்.
1985 - 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் நாங்கள் முன்னின்று எடுத்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நீங்கள், வரலாற்றுக்கு முரணாக புலம்பவது எந்த அடிப்படையில்? யாருடைய நலனுக்காக?

1985 இல் புலிகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கி – மாணவர் சமூகத்தையே  ஒடுக்கிய போது - அதை எதிர்த்து நின்றவர்களில் நீங்களும் ஓருவர். மறந்து விட்டீர்களா!?  மாணவர்களை ஓடுக்கிய புலிகளுக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர் சங்கம் போராட மறுத்து, புலிப் பினாமியாக இயங்கிய சூழலில், மாணவர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய மாணவர் அமைப்பின் தலைவராக உங்களை நாங்கள் தெரிவு செய்தோம். நினைவு இருக்கின்றதா? ஆம், அன்று புலிக்கு எதிராக, புலி அரசியலை எதிர்த்து தலைமை ஏற்றீர்கள். அப்படித்தானே.

 

மேலும் படிக்க: சுமந்திரனின் "தமிழ் தேசியம்" குறித்து "ஆய்வாளர்" ஜோதிலிங்கத்தின் புலம்பல்

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, முதலாளித்துவம் பொருளாதாரத்தின் வளர்ச்சியாக கருதுகின்றது. அனைத்துச் செல்வத்துக்குமான மனித உழைப்பு நின்று போகும் போதும், உற்பத்தியில் இலாபம் குறையும் போது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொது நெருக்கடியாக மாறுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று உலக உற்பத்தியை நிறுத்தியதுடன், தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலையை உருவாக்கி இருக்கின்றது. கொரோனா முடிவுக்கு வராத (மே மாதம்) இன்றைய சூழலில் 8.8 ரில்லியன் டொலர் (8 800 000 000 000), அதாவது உலகப் பொருளாதாரத்தில் 5.8 – 8.8 சதவீதமான பொருளாதார இழப்பு குறித்து ஆசியன் வளர்ச்சி வங்கி எதிர்வு கூறியிருக்கின்றது.

இதன் பொருள் உலகம் பொருளாதார நெருக்கடியை நோக்கிப் பயணிக்;கின்றது. அது அரசியல் நெருக்கடியாக, வர்க்க முரண்பாடுகளாக எழும். கொந்தளிப்பான இந்த சூழலை முதலாளித்துவமானது

1.மக்களை இன – மத - சாதி - நிற ஒடுக்குமுறை மூலம் பிளந்து, வர்க்க மோதலை  தவிர்க்க முனையும்.

2.நிதி மூலதனத்தைக் கொண்டு இலாபத்துக்கான சந்தையை சரியவிடாது பாதுகாக்கும்.

3.அரசுடமைகளை தனியுடமையாக்குவதன் மூலம் முதலாளித்துவத்தின் இலாபத்தை தக்கவைக்கும் அதேநேரம், நிதிமூலதனத்தைத் திரட்டிக் கொண்டு தன்னை தகவமைக்க முனையும்.

இந்த வகையில் முதலாளித்துவம் ஒற்றைப் பரிணாமம் கொண்டதல்ல. இது தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள எல்லாவிதமான ஏற்றத்தாழ்வான – நெளிவுசுழிவான வழிமுறைகளைக் கையாளும்.

பாட்டாளி வர்க்கம் அரசியல்ரீதியாக இதை விளங்கிக் கொண்டு தன்னை தயார் செய்வதும் - அரசியல் நெருக்கடியின் போது அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு தயாராக - தன்னை அரசியல்ரீதியாக அமைப்பாக்கி இருக்கவேண்டும்.    இன்றைய உற்பத்திமுறையும், நுகர்வும் மனித தேவைகளை பூர்த்தி செய்வதற்காக    உருவானதல்ல. மாறாக செல்வந்தர்கள் மேலும் செல்வந்தராவதற்கானதாக இருக்கின்றது. இதனால் இது இயற்கை குறித்து அக்கறைப்படுவதில்லை. வாழ்வியல் சார்ந்த மனித உரிமைகள், தேவைகள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை.

மேலும் படிக்க: பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

அமெரிக்கா கூறுகின்றது கொரோனா வைரஸ்சை சீனாவுக்குள் முடக்கி - உலகெங்கும் பரவுவதை தடுத்திருக்க முடியும் என. இது அமெரிக்கா கூற்று மட்டுமல்ல, முதலாளித்துவ சிந்தனைமுறையில் சிந்திக்கின்ற, மனிதர்களின் பொதுக் கருத்தியலுமாகும்.

சீனாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ்சை தன் எல்லைக்குள் கட்டுப்படுத்தி இருக்கும் ஆற்றலையும், அது உலகெங்கும் பரவுவதை தடுக்கும் வல்லமையையும் கொண்டிருந்தது. சமூகத்தை முன்னிறுத்தி அறிவியல்ரீதியாக அணுகினால் சாத்தியமானாக இருந்த போதும், பொருளாதாரரீதியான சிந்தனையும் நடைமுறையும் அதை சாத்தியமற்றதாக்கியது.

சீனாவைக் கடந்து வைரஸ்சின் பரவலை சீனா கட்டுப்படுத்தத் தவறியது என்ற குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த கேள்விகளை ஆராய முன்பு – அனைத்து நாடுகளும் பதில் சொல்ல வேண்டிய இரு விடயங்கள் இருக்கின்றது

1.சீனாவை விட்டு வைரஸ் நாடு கடந்த பின் - சீனா போல் அல்லது உங்கள் வழியில் ஏன் உங்கள் நாட்டில் வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியவில்லை? எது தடுத்தது? அனைத்து நாடுகளும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

2.வைரஸ் பரவலைத் தடுக்க அரையும் குறையுமாக முடக்கி – மீளவும் செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்க இயல்பு வாழக்;கைக்கு திரும்பும் உங்கள் நடவடிக்கை - வைரஸ் தொற்றை மீள பரவலாக்கும் நடவடிக்கையாகும். இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இப்படி உங்கள் நடத்தைகள் ஒருபுரும் இருக்க மறுபக்கம் உங்களையே கட்டுப்படுத்த முடியாதபோது, சீனாவை குறிவைத்து அரசியல் நடத்துவது ஏன்? சீனா கட்டுப்படுத்தத் தவறிய விடையத்தைப் பார்ப்போம். சீனா வேண்டுமென்றே பரப்பியது என்ற குற்றச்சாட்டை, அறிவியல் அடிப்படையின்றி அமெரிக்கா அவதூறாகவே முன்வைத்து வருகின்றது. மேற்கு ஆதரவு முதலாளித்துவச் சிந்தனையாளர்களும் இந்தக் குற்றச்சாட்டையே மீள முன்வைக்கின்றனர். இப்படி அரசியலாகும் இந்தப் பின்னணியில் - என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

சீனா உலகெங்கும் பரப்பியது என்பது பொய். உலகெங்கும் திட்டமிட்டோ அல்லது சீன சுற்றுலாப் பயணிகள் மூலமே, கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் நிகழவில்லை. முhறாக சீனா அல்லாத அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்களே, சீனாவில் இருந்து கொரோனாவைக் காவி வந்தனர். இவர்கள் சீனா சென்ற சுற்றுலாப் பயணிகளுமல்ல.

அப்படியானால் கொரோனா வைரஸ்சை காவி வந்தவர்கள் யார்? இவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுகளுக்;கு (சீனாவுக்கு) இருந்ததா? இதை ஏன் இன்று வரை (சீனா உட்பட) யாரும் பேச மறுக்கின்றனர்?

மேலும் படிக்க: கொரோனா வைரஸ்சை சீனாவுக்குள்ளேயே முடக்கியிருக்க முடியுமா!?

அமெரிக்காவின் (முதலாளித்துவத்தின்) மருத்துவக் கொள்கையென்ன? "நோய் என்பது மனிதன் தனக்குத் தானே - தன் நடத்தைகள் மூலம் தேடிக் கொள்ளுவதே. இதற்கு அரசு – சமூகம் எந்தவகையிலும் பொறுப்பேற்க முடியாது" மருத்துவம் தேவையென்றால், பணத்தைக் கொடுத்து வாங்கு - மருத்துவ காப்;புறுதியை செய்து கொள். இதுவே அமெரிக்க அரசினதும் - ஆளும் வர்க்கங்களினதும் கொள்கையாகும். மருத்துவத்தில் அரசு தலையிட முடியாது. அதாவது மக்களின் உழைப்பிலிருந்து கிடைக்கும் வரியை - மருத்துவத்திற்கு செலவிட முடியாது.

இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட கொள்கையல்ல, அமெரிக்க அரசின் பொதுக் கொள்கை. ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் சிந்தனைமுறை. உலக முதலாளித்துவத்தின் பொது வழிமுறையுமாகும்.

இன்று அமரிக்காவில் நோயை எதிர்கொள்ளுவதும் - மருத்துவத்தைப் பெறுவதும் என்பது, தனிப்பட்ட அந்த நபரின் பொறுப்பாக இருக்கின்றது. அரசு அதற்கு உதவுவதில்லை. நோயாளி பணத்தைக் கொடுத்தால் மட்டுமே, நோயை எதிர்கொள்ளமுடியும். பணமில்லாதவன் நோயுடன் வாழ்வதும், செத்துப் போவதும் .. அவரவர் தேர்வாகவும், அதில் அரசு தலையிடுவதில்லை. இதற்கு அமைவாக சமூகம் இதற்கு பொறுப்பல்ல என்ற முதலாளித்துவச் சிந்தனை முறையில், சமூகத்தை சுயநலமாக சிந்திக்கவும் - செயற்படவும் வைத்திருக்கின்றது.

 

சமூகமாக மனிதன் வாழ்தல் என்பது தனியுடமை சமூகத்தில் இருக்க முடியாது. இதுதான் முதலாளித்துவ சிந்தனைமுறை. அதாவது பொருளை முதன்மையாகக் கொண்ட உலகத்தில் இயற்கை எப்படி இருக்க முடியாதோ, அதுபோல் சமூகம் என்பது தனியுடமைச் சமூகத்தில் இருக்க முடியாது. இயற்கை, சமூகம் தொடங்கி மனிதம், அறம் வரை அனைத்தும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவே - முதலாளித்துவம் கருதுகின்றது.

இங்கு அரசு என்பது சொத்துடமைச் சமூக அமைப்பைப் பாதுக்காகும் உறுப்பாக இருக்க முடியுமே ஒழிய, அதற்கு முரணாக செல்வத்தை பகிர்ந்தளிக்கும் உறுப்பாக இருக்க முடியாது என்கின்றது முதலாளித்துவம். கல்வி, மருத்துவம், உணவு, நீர், இருப்பிடம் .. என எதுவும், மக்களின் அடிப்படை மனித உரிமையில்லை, மாறாக இவை அனைத்துமே சந்தைக்குரிய முதலாளித்துவப் பொருள். முதலாளித்துவத்தில் மனிதவுரிமை என்பது செல்வந்தர்களின் செல்வக் குவிப்பிற்கு தடையான எதுவும் மனிதவுரிமையல்ல, மாறாக செல்வக் குவிப்பிற்கு உதவுவது மட்டும் தான் மனிதவுரிமை.

இந்த அடிப்படையில் தேர்தல் மூலம் வாக்கு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் அமெரிக்க ஜனநாயகவாதிகளின் மருத்துவக் கொள்கை என்பது, பணத்திற்கு விற்கும் - வாங்கும் பொருள். அமெரிக்காவில் இது வெளிப்படையாக வெளிப்பட்டாலும் - உலகெங்குமான உலக முதலாளித்துவத்தின் பொதுக் கொள்கையும், நடைமுறையும் இதை நோக்கித்தான் பயணிக்கின்றது.

 

மேலும் படிக்க: அமெரிக்காவின் மருத்துவமும் - கொரோனாவும்

அரசும் அதன் மீதான அதிகாரமே எல்லாம், வைரஸ் என்பது கால் தூசு. இது தான் இயற்கை மீதான முதலாளித்துவ அரசுகளின் கொள்கைகள். இப்படித் தான் கொரோனா வைரஸ் குறித்து முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் கருதியதுடன் - அதையே நடைமுறையாக்கினர்.

ஆனால் இயற்கையும், இயற்கை விதியும் இதைக் கடந்தது என்பதையும் - கொரோனா வைரஸ் தன் வழியில் மனிதனை கொல்லத் தொடங்கிய போது - மனிதனுக்கு புரியத் தொடங்கியது இயற்கை முதலாளித்துவ அதிகாரத்தையும் கடந்ததென்று. தங்கள் வர்க்க அரசியல் அதிகாரங்கள் மூலமும், நவீன தொழில்நுட்பம் மூலமும், வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொரோனா மரணங்கள் தங்கள் வர்க்க சர்வாதிகார தனியுடமை கட்டமைப்பையே தகர்த்துவிடும் என்ற பொது நெருக்கடியை அடுத்து, வைரஸ் தொற்றினை இயற்கை வடிவத்தில் முடக்கி கட்டுப்படுத்தும் நடவடிக்கையை, மெதுவாகவும் -  அரைகுறையுமாக தொடங்கினர்.

மூலதனத்தை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கும் முடிவுகளால் ஏற்பட்ட தயக்கம், தாமதம் கொரோனா மரணங்களாகவும் – மரண எண்ணிக்கை அதிகரிப்புமாகவும் பரிணமித்தது. மரணம் இன்று அரசியலாகியுள்ளது. இந்த அரசியலானது வர்க்க அரசியல் முரண்பாடாக மாறவில்லை. மாறாக ஆளும் வர்க்கத்தினுள்ளான முரண்பாடாக மட்டும் - குறுகி வெளிப்படுகின்றது. வர்க்கரீதியாக ஓடுக்கப்பட்ட வர்க்கமோ, வர்க்க அரசியலுக்கு பதில் பொருளாதாரவாத அரசியலுக்குள் முடங்கிக் கிடக்கின்றது. வர்க்க அரசியல் கோரிக்கைக்கும் - பொருளாதார கோரிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டை மார்க்சியம் மிகத் தெளிவாக கொண்டிருந்த போதும், பொருளாதார கோரிக்கைக்குள் அல்லது எதுவுமற்ற கொரோனா அரசியலாக சர்வதேசியம் குறுகிக் கிடக்கின்றது.

மேலும் படிக்க: அரசியலாகியுள்ள கொரோனா மரணங்கள்

2009 இறுதி யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளும் - அரசும் தத்தம் மக்களை ஒடுக்குகின்ற, தங்கள் சொந்த இன அதிகாரத்துக்காகவே நடத்தினர். யுத்த நிறுத்தம் - பேச்சுவார்த்தையிலிருந்து விலகிய  புலிகள், வலிந்து தொடங்கிய யுத்தத்தில் தோற்றுப்போக, பேரினவாத அரசு வெற்றி பெற்றது. இதன் மூலம் அரசு ஒடுக்கப்பட்ட மக்கள் மேலான முழு அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டது.

இந்தப் வரலாற்றுப் பின்னணியில் உருவான முள்ளிவாய்க்கால் நினைவுகள் என்பது
1.தங்கள் சொந்தப் பிழைப்புக்காக தமிழினவாதத்தை முன்னிறுத்துகின்றவர்கள்,  புலிகளுக்கான அஞ்சலியாக அரங்கேற்றுகின்றனர்.

2.ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உறவுகளை முன்னிறுத்தி, தங்கள் மனிதவுணர்வுகளை வெளிப்படுத்தும் சமூக அஞ்சலியாக செய்கின்றனர்.

இப்படி இரு வேறுபட்ட பின்னணியிலேயே, வருடாவருடம் முள்ளிவாய்க்கால் நினைவுகள் பல்வேறு இழுபறிகள் - முரண்பாடுகளுடன் நடக்கின்றது.  2009 இல் முள்ளிவாய்க்கால் வரை நடந்தேறிய இறுதி யுத்தமானது, புலிகள் பலி கொடுக்க பேரினவாத அரசு பலியெடுத்;தது. இதில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் பலியெடுக்கப்பட்டனர். இப்படி பலி கொல்லப்பட்டவர்களை இன்று நினைவுகொள்வதன் மூலம், பலிகொடுத்தவர்களுக்கும் - பலியெடுத்தவர்களுக்கும் எதிரான உணர்வு தான் - முள்ளிவாய்க்கால் அஞ்சலியின் பொதுச் சாரமாக இருக்க முடியும். இவை இரண்டையும் உள்ளடக்கி செய்யாத அஞ்சலிகள் போலியானது, எதாhர்த்தத்தில் சொந்த பிழைப்புக்கானதாகவே அரங்கேறுகின்றது.

 

மேலும் படிக்க: முள்ளிவாய்க்கால் அஞ்சலிகளும் - போலிகளின் புரட்டு அஞ்சலிகளும்

செல்வந்தர்களை உருவாக்கும் உற்பத்தி நின்று போவதென்பது, முதலாளித்துவத்தின் இதயமே நின்று போவதற்குச் சமமானது. உழைப்பு முடக்கமானது, உழைப்பிலான கூலியை நம்பி வாழும் மனிதர்கள் சந்திக்கின்ற பொது நெருக்கடியை விட, உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளித்துவத்தின் நெருக்கடிதான் - அரசுகளின் முடிவுகளாக இருக்;கின்றது.

உழைப்பினால் குவிந்த செல்வத்தை (உபரியை) பறிமுதல் செய்தோ அல்லது அதை அரச உடமையாக்கியோ, கூலியை நம்பி வாழும் மனிதர்களுக்கு பகிரவில்லை. உபரியை (குவிந்த செல்வத்தை)பறிமுதல் செய்யுமாறு பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை முன்வைத்து, பாட்டாளி வர்க்கம் உலகெங்கும் அதை அரசியலாக்கவுமில்லை. முதலாளித்துவம் எந்த வர்க்க அரசியல் நெருக்கடியுமின்றி இருக்க, அரசுகள் மனித உழைப்பினால் செல்வந்தர்களிடம் குவிந்துவிட்ட செல்வத்தின் ஒருபகுதியை வட்டிக்கு எடுத்து, அதையே நிவாரணமாக வழங்கியது. மறுபக்கம் அதையும் கொடுக்கவில்லை. உலக முதலாளித்துவம் ஏற்றத்தாழ்வான இரு பொது வழிமுறைகளை கையாண்டது.

அதாவது அரசுகளின் உத்தரவுக்கு ஒடுங்கி வாழ்தல் காலத்தில் ஏற்படும் பொருளாதாரத் தேவைகளை சில அரசுகள் பூர்த்தி செய்யும் வழிமுறைகளை முன்வைக்க - வேறு சில நாடுகள் பொருளாதார ரீதியாக மக்களுக்கு கைகொடுப்பதை மறுதளித்தது. உலக மக்களின் பொருளாதாரத் தேவைகளை கையாளும் அரசு வடிவங்கள் வேறுபட்டு, ஒருபுறம் பள்ளத்தை தோண்ட மறுபக்கமோ மலையாகக் காட்சியளிக்கின்றது.

இதனால் முதலாளித்துவம் கொந்தளிப்பற்ற வர்க்க அமைதியைப் பெற்ற போதும், செல்வத்தை தொடர்ந்து குவிக்க முடியாத முதலாளித்துவ சுய நெருக்கடியை எதிர் கொள்கின்றது. இதில் இருந்து மீள, நோயும் - மரணம் தொடர்கின்ற சூழலில் - மீண்டும் செல்வத்தை குவிக்கும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக் கோருகின்றது.

மேலும் படிக்க: கொரோனாவிலிருந்து மீள்வது குறித்து .. முதலாளித்துவ அறம்

தமிழ் தேசியத்தை முன்வைக்கும் முதலாளித்துவ நவதாராளவாதிகளிடையே சுமந்திரன் மட்டுமே - எதார்த்தம் சார்ந்து உண்மையைப் பேசுகின்றவராகவும், நேர்மையாகவும் இருக்க முனைகின்றார். இடதுசாரிகள் தவிர எவரும் அவர் முன்மொழியும் வழியையும் - தீர்வையும் மறுத்து, இதுதான் சரியான மாற்று வழி என்ற ஒன்றை முன்வைக்க முடிவதில்லை. அவதூறுகளும், சம்மந்தமில்லாமல் பேசுவதுமே எதிர்வினையாக இருக்கின்றது. இதுதான் சுமந்திரனுக்கு ஜனநாயகத்தை மறுக்கின்ற பொதுப் பின்னணியாகவும் - இதுவே புலி அரசியல் சாரமாகவும் உள்ளது.

சுமந்திரன் இலங்கையில் இரண்டு தேசங்கள் உண்டு என்றும், அதை அவர் சிங்கள – தமிழ் தேசம் என்றும் கூறுகின்றார். மிகச் சரியான கருத்து. இந்த தேசத்துக்கு சுயநிர்ணயம் உண்டு என்று கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும், இலங்கையின் எதார்த்தம் சார்ந்து சமஸ்டியை முன்வைப்பதாகக் கூறுகின்றார். இங்கு இனவொடுக்குமுறையை சந்திக்கும் மலையக, முஸ்லிம் மக்களையும், அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறுகின்றார். சிங்கள மக்களைச் சார்ந்து நிற்க வேண்டும் என்கின்றார். இங்கு அவர் மக்களாகக் கருதுவது ஒடுக்கப்பட்ட மக்களையல்ல, அந்த மக்களின் வாக்கு மூலம் வென்ற ஒடுக்கும் பாராளுமன்றவாதிகளையே.

அவரின் இந்தக் கோட்பாடுகள் - நடைமுறைகள் அனைத்து நவதாராளவாத தேர்தல் கட்சிகளைச் சார்ந்து, பேரம் பேசுவதன் மூலம் இனவொற்றுமையையும் – தீர்வு குறித்தும் பேசுகின்றார். அதிகாரத்தில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் பேச வேண்டும். தேர்தல் கட்சி வழிமுறைகளில் இருக்கக்கூடிய சாத்தியமான வழிமுறைகளை குறித்து பேசுகின்றார். இதை கடந்து தேர்தல் அரசியல் வழிமுறையில் வேறு மாற்று எதுவுமில்லை. இருக்கிறது என்பவர்கள் எதையும் முன்வைக்க முடியாது.

மேலும் படிக்க: சுமந்திரனும் - சருகுப் புலிகளும்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More