பி.இரயாகரன் - சமர்

வர்க்கமற்ற பொதுவுடமைச் சமுதாயத்தை தன் இலக்காக்கிக் கொண்டு சிந்தித்தவன். உணர்ச்சியின் பிளம்பாக எப்போதும் கேள்விகளுடன் வாழ்ந்தவனே எங்கள் விஜயன், சாதியம், இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், நிறவாதம் .. என்று எல்லா மனித விரோத குறுகிய சமூக மனப்பாங்குகளுடனும், எப்போதும் முரண்பட்டு நின்றவன். அதற்காக நடைமுறையிலும் போராட முற்பட்டவன். போராடுவதற்காக அமைப்பைக் கட்ட வேண்டும் - ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்பதில், தோளோடு தோள் நின்றவன் - இன்று அவன் எம்மோடில்லை.

மேலும் படிக்க: ஒடுக்கப்பட்டவர்களுக்காக வாழத் துடித்தவன் எங்கள் விஜயன்

தூக்குமேடையில் தூக்கு போடும் அலுக்கோசுகள் போன்றே, பிழைப்புவாத ஈழ ஆதரவு தமிழக கும்பல்களின் செயற்பாடுகளும், சிந்தனைகளும் குறுகிய வழிபாட்டை ஊக்குவிக்கின்றனர். இதன் மூலம் புலிப் பாசிசத்தின் கீழ் உருவான ஈழத்து தற்குறிகளிடம் இருந்து பணத்தைக் கறக்கவும், அதேநேரம் சொந்த மக்களை ஏமாற்றிப் பிழைக்கவும் – தமிழகத்தில் புலி ஆதரவு கும்பல்கள் இயங்குகின்றது. "மேதகு" என்ற புரட்டு, இப்படித்தான் புளுத்து வெளிவந்திருக்கின்றது.

"திருப்பி அடித்தால்" அது விடுதலைப் போராட்டமாகிவிடும், "துரோகி"யாக்கி கொன்றால் மானிட விடுதலை கிடைத்துவிடுமா? இப்படி நம்புகின்ற, நம்பக் கோருகின்ற பகுத்தறிவற்ற அலுக்கோசுகளே, "மேதகு" மூலம், தம்மைத் தாம் முன்னிறுத்திக் கொள்கின்றனர்.

கடத்தல்காரர்கள், குற்றவாளிகளுடன் சேர்ந்து செய்த தனிநபர் பயங்கரவாதம் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை நடத்த முடியும் என்று, அலுக்கோசுகளால் மட்டுமே சொல்ல முடியும். அப்படி சொல்லப்பட்டது தான் "மேதகு". தோற்றுப் போன அரசியல் வழிமுறையை சரியென்று புனைய, சம்பவங்களையும் – வரலாறுகளையும் திரிக்கின்றனர்.

மேலும் படிக்க: அலுக்கோசுகளின் சினிமா தான் "மேதகு"

 தமிழினவாத அரசியல் வரலாறே புரட்டலானது. 1948 களில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிப்பானது வர்க்க ரீதியானதல்ல, இனரீதியானதே என்று தமிழினவாதம் மூலம் திரித்து உருவாக்கிய கட்சியே தமிழரசுகட்சி. தேர்தல் மூலம் இடதுசாரிகளின் ஆட்சியதிகாரம் இலங்கையில் ஏற்பட்டு விடும் என்ற சுரண்டும் வர்க்கத்தின் அச்சமே, மலையக மக்களின் பிரஜாவுரிமையைப் பறிக்க காரணமாகியது. இந்த வர்க்க அரசியலை மூடிமறைத்து வர்க்க அரசைப் பாதுகாக்கவே, தமிழ் சுரண்டும் வர்க்கம் தமிழினவாதத்தை முன்வைத்தது. இதன் மூலம் தமிழினவாதத்தை வடகிழக்கில் விதைத்தனர்.

இப்படி தமிழினவாதத்தை உருவாக்கியவர்கள், தமிழ் மக்களை எப்போதும் சிங்கள மக்களுக்கு எதிரானவராக வைத்திருப்பதையே கொள்கையாகவும், நடைமுறையாகவும் கொண்ட அரசியலையே முன்வைத்தனர். தேர்தல் அரசியலில் வெற்றி பெற, இனவாதம் தவிர்ந்த வேறு கொள்கை எதுவும் இவர்களிடம் இருக்கவில்லை.

மேலும் படிக்க: வெள்ளாளியக் கல்வியைப் பாதுகாக்க முனைந்த தமிழினவாதம் - யாழ் பல்கலைக்கழகப் போராட்டங்கள் - 14

கடந்த காலத்தில் போட்டுத் தள்ளியவர்கள் முன்வைத்த அரசியல் அவதூறுகளான பிரச்சார அரசியல். அன்று அவதூறுகள் மூலம் யாரை, ஏன், எதற்காக போட்டுத் தள்ளினர் என்பதை ஆராய்ந்தால், இன்றைய அவதூறு அரசியலை இனம் கண்டு கொள்ளமுடியும்.

முன்வைக்கும் அவதூறுகளுக்கு ஆதாரம் கோட்டால், ஒருநாளும் பதில் இருக்காது. கிட்லரின் பிரச்சார மந்திரி கோயபல்ஸ் கூறியது போல், ஒரு பொய்யை மீள மீளக் கூறுவதன் மூலம் பொய்யை உண்மையாக்குவது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு இப்படித்தான் மக்களை தயார்ப்படுத்தினார்கள். ஜெர்மனிய பாராளுமன்றத்தை எரித்த நாசிகள், அதை பிறர் மீது குற்றம் சாட்டி ஒடுக்கினர்;. இது வரலாறு.

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கியபடி அன்னிய சக்திகளின் கைப்பொம்மையாக இயங்கிய இயக்கங்கள், தாம் அல்லாத மற்றைய இயக்கங்கள் பற்றியும், தம் இயக்கத்திற்குள் கேள்வியை எழுப்புபவர்களுக்கு எதிராக, பிரச்சார அரசியலாக செய்தது அவதூறுகளே. அதில் ஊறித் திளைத்தவர்கள், இன்றும் அதையே அரசியலாக கட்டமைக்கின்றனர்.

தமிழ் தேர்தல் அரசியலில் "துரோகி" என்று, தாம் அல்லாத மாற்று அரசியலை அவதூறு மூலம் முத்திரை குத்திய அரசியலே, இன்று வரை காணப்படுகின்றது. இது எமது சமூகத்தில் ஜனநாயக மறுப்பிற்கான அரசியல் சிந்தனைமுறையாக காணப்படுகின்றது. அன்று தமிழ் தேசிய தேர்தல் அரசியலில் தமது போட்டியாளரை ஒழித்துக்கட்ட கையாண்ட அரசியல் "துரோகி" என்ற, அவதூறு அடையாளம். இதுதான் பின்னால் இயக்க அரசியலிலும் கையாளப்பட்டது. இன்றுவரை தமிழ் அரசியலை வழிநடத்துவதும், இந்த அரசியல் தான். தமிழ் ஊடகவியல் கூட இப்படித்தான் புளுத்துக் கிடக்கின்றது.

மேலும் படிக்க: அவதூறுவாதிகளின் அரசியலும் - அவதூறும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே

950 களில் தமிழினவாத கண்ணோட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தைக் கோரிய காலத்தில், பாடசாலைகள் தனியார்மயமாக இருந்தது. அதேநேரம் அரச உதவி பெறுவனவாக இருந்தன. இந்தக் கல்விமுறையானது அனைவருக்குமான கல்வி மறுக்கப்பட்டு, வர்க்கம், மதம், சாதி, பால்.. சார்ந்த கல்வியாக குறுகியிருந்த காலம். குறிப்பாக யாழ்ப்;பாண வெள்ளாளிய சமூக அமைப்பில் "தீண்டத்தகாத" சாதிகளாகக் கருதப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, கல்வி கற்கும் உரிமையே கிடையாது. எப்படி "தீண்டத்தகாதவர்கள்" கோயில்களில் வழிபடும் உரிமை இருக்கவில்லையோ, அதேபோல் கல்வியும் கற்க முடியாது. இந்த வெள்ளாளிய சமூக மேலாதிக்க ஒடுக்குமுறையையே, தமிழினவாதிகள் தங்கள் இனவாதக் கொள்கையாக முன்வைத்தனர். 1949 இல் உருவான இலங்கைத் தமிழரசுக் கட்சி, இந்த சமூகப் பின்னணியில் இருந்தே உருவானது.

இந்த வெள்ளாளிய சமூக அரசியல் பின்னணியில் இருந்த தனியார் பாடசாலைகளை, 1960 இல் அரசு தேசியமயமாக்கிய போது தமிழினவாதிகள் எதிர்த்தனர். தமிழினவாதிகளின் இந்த இனவாத எதிர்ப்பை மீறி, இலங்கை அரசு, பாடசாலைகளை தேசியமயமாக்கியே, இலவச தாய்மொழிக் கல்வியை அனைவருக்கும் கட்டாயமாக்கியது. இந்த பின்னணியிலேயே பரந்துபட்டளவில் தமிழ் மொழிக் கல்வி, தமிழ் மக்களுக்கு கிடைத்தது. தாய்மொழியிலான தமிழில் அனைவருக்கும் இலவசக்கல்வி என்பது, தமிழினவாதிகளின் வெள்ளாளிய மேலாதிக்கத்துக்கு எதிரானதாகவே பார்க்கப்பட்டது. சமூகத்தில் எத்தகைய மாற்றமும், வெள்ளாளிய சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துவதாக இருந்தால், தமிழினவாதம் மூலம் அவை அனைத்தையும் தமிழினவாதிகள் எதிர்த்தனர். இது தான் தமிழினவாதத்தின் வரலாறு.

மேலும் படிக்க: தமிழ் பல்கலைக்கழகத்தை யாருக்காகக் கோரினர்? - யாழ் பல்கலைக்கழகப் போராட்டங்கள் - 13

ரீட்டா குறித்த சம்பவமானது கற்பனையானதாக இருந்தாலும் அல்லது உண்மைச் சம்பவமாக இருந்தாலும், இதை வெளியுலகுக்கு முன்வைத்தவர் ஜென்னி மட்டும் தான். அவரைத் தவிர வேறு யாரும் ரீட்டாவிடம், சம்பவம் குறித்த கதையைக் கேட்க அனுமதிக்கவில்லை. சம்பவம் நடந்த பின் அவரை அங்கிருந்து மன்னாருக்கும், இறுதியில் பிரான்சுக்கும் முன்னின்று அனுப்பி வைத்தவர் ஜென்னி. இதை நான் கூறவில்லை, இதை ஜென்னிதான் உலகறிய தேசம்நெற்றில் கூறி இருக்கின்றார். அதில் அவர் மட்டும் கேட்டுத் தெரிந்த விடையத்தை (ஜென்னியின் கூற்று) அசோக் தனது வழமையான அவதூறுகளுக்கு ஏற்ப திரித்துப் புரட்டி கூறியிருக்கும் பின்னணியில், புளட் அலுகோசுகளும் - கோயபல்ஸ்சுகளும் - கோமாளிகளும் மேடையேறி இருக்கின்றனர்.

இங்கு எதுவும் கற்பனையல்ல. அவதூறல்ல. புளட் அலுக்கோசுகள் கூறியவற்றில் இருந்து உண்மையைக் கண்டடைதலே.

மேலும் படிக்க: ரீட்டா விவகாரம் : புளட் அலுகோசுகளும் - கோயபல்ஸ்சுகளும் - கோமாளிகளும்

தமிழீழப் போராட்டம் ஆயுதம் தாங்கிய வடிவம் பெற்றபோதே, கொள்ளைகளைச் சார்ந்தே இயங்கத் தொடங்கியது. மக்கள் திரள் வடிவமல்லாத, மக்களிலிருந்து அன்னியப்பட்ட தனிநபர் பயங்கரவாதமானது, பொருளாதாரரீதியாக இவ்வாறான கொள்ளைகளிலேயே தங்கியிருந்தது. 1983 ம் ஆண்டுக்குப் பின்பும் இவ்வாறே தொடர்ந்து வங்கி மற்றும் தனிப்பட்ட வீட்டுக் கொள்ளைகளை நடத்தினர். அதேநேரம் அந்நிய சக்திகளிடமிருந்தும் மற்றும் இலங்கை மீதான அரசியல் - பொருளாதார நலன்களைப் பூர்த்தி செய்ததன் மூலமாகவும் நிதிகளைப் பெற்றும், அதே அந்நிய சக்திகளின் ஆயுதங்களில் தங்கியிருந்ததன் மூலமும், அரசியல் ரீதியாகவும் போராட்டம் சீரழிக்கப்பட்டது.

மேலும் படிக்க: தமிழீழ இயக்க வங்கிக் கொள்ளைகளும் கற்றன் நசனல் வங்கியும்

கட்சி வர்க்கத் தன்மையை இழந்துவிடுகின்ற போது, முதலாளித்துவக் கட்சிகளுக்குரிய எல்லா சீர்கேடுகளுடனும் புழுக்கத் தொடங்குகின்றது. வர்க்கச் சீர்கேட்டை மறைக்க வர்க்கக் கட்சிகளாக முன்னிறுத்திக் கொள்ளும் அதேநேரம், வர்க்க அணிகளுக்கு அதிகார வடிவங்கள் மூலமான கட்சி வடிவங்களையும் - அரசியலை வழிபாட்டு முறையில் ஒப்புவிக்க வைக்கின்றனர். ஜனநாயக மத்தியத்துவம், கற்றல், விவாதித்தல், விமர்சனம, சுயவிமர்சனம் .. முதல், கட்சியின் வர்க்கத் தன்மைக்குரிய வளர்ச்சிக் கூறுகளை ஒட்ட நறுக்கிவிடுகின்றனர்.

மேலும் படிக்க: புதிய ஜனநாயக கட்சி மயூரன் முதல் ம.க.இ.க வரை

வெவ்வேறு காலகட்டங்களில் அரசாலும் மற்றும் புலிகளாலும் பெருமளவில் மனிதர்கள் காணாமலாகப்பட்டது போல், தமிழினவாதிகள் உருவாக்கிய தமிழ் பல்கலைக்கழகமும் காணாமல் போயிருக்கின்றது. காணாமல் போனவர்கள் குறித்து அரசிற்;கு எதிராக மட்டும் குரல் கொடுப்பவர்கள், தமிழினவாதிகளால் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறைப்படுவதில்லை. இது போலவே தமிழினவாதிகள் காணாமல் போன தங்கள் தமிழ் பல்கலைக்கழகம் குறித்து பேசுவதில்லை.

தமிழினவாதிகள் தமிழ் பல்கலைக்கழகத்தை தமிழனின் தலைநகரம் திருகோணமலையிலேயே அமைப்போம் என்று கூறியே, 1960 களில் நிலத்தை விலைக்கு வாங்கினர். கட்டிடங்கள் அமைக்க அடிக்கல்லை நாட்டினர். கட்டிடங்களை அமைத்தனர். தொடர்ந்து நிதி சேகரிப்புகளைச் செய்தனர்.

மேலும் படிக்க: காணாமல் போன "தமிழ் பல்கலைக்கழகம்" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 12

மக்களைப் பிளக்கின்ற மதவாதங்களால், பகுத்தறிவோடு அனைத்தையும் கேள்வி கேட்கும் குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் மதவாத நச்சுகளைத் திணிக்கும் நிகழ்வுகள்தான், யூனியன் கல்லூரி மீதான அமெரிக்க மிசன் அரங்கேற்றிய வன்முறை. தென்னிந்திய திருச்சபையில் இருந்து பிரிந்த இந்த அமெரிக்க மிசன், இது போன்று மத ரீதியான வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

இது முழு கிறிஸ்துவ சமூகம் சார்ந்த வன்முறையல்ல. கத்தோலிக்க, புரட்டஸ்தான், தென்னிந்திய திருச்சபை மற்றும் வேறு சிறு கிறிஸ்துவ குழுக்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அமெரிக்க மிசனின் தொடர் வன்முறையானது, பல இடங்களில் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.

மேலும் படிக்க: யூனியன் கல்லூரியும் - கல்லூரியை மையப்படுத்தி மதவாதங்களும்

"வெருகலில்" பலி கொடுத்தவர்கள் தங்கள் பிழைப்புவாத - பிரிவினைவாத தேர்தல் வாக்கு அரசியலுக்காக, பலி எடுத்தவர்களை குற்றஞ் சாட்டுகின்றனர். இதன் மூலம் பலிகொடுத்த தங்கள் அரசியலை புனிதப்படுத்துகின்றனர்.

கிழக்கில் கொல்லப்பட்ட பல பத்தாயிரக்கணக்கானவர்களை, இந்த கிழக்கு மையவாதம் பிரிவினைவாதம் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக புலிகளின் அரசியலை விமர்சிப்பதில்லை. புலிகளின் அதே அரசியலையே கொண்டு, யாருடைய மேலாதிக்கம் என்பதை பிரிவினைவாதம் மூலம் முன்வைக்கின்றனர். அதாவது "யாழ்ப்பாணிக்கு" பதில் "கிழக்கான்" என்ற பிறப்பு சார்ந்த - இது சாதியக் கோட்பாட்டு அடிப்படையுமாகும். எந்த மண்ணில் பிறந்தனர் என்று, பிறப்பை முன்னிறுத்தி முரண்பாட்டையும் - பிரிவிiனையையும் முன்னிறுத்;தும் குறுக்கிய அரசியல்.

மேலும் படிக்க: "வெருகல்" படுகொலைக்கு பலிகொடுத்த கிழக்கு மையவாதம்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More