பி.இரயாகரன் - சமர்

"தேசியம் ஒரு கற்பிதம் " (கவனிக்க - மாயை என்று நாம் சொல்லவில்லை. கற்பிதம் என்றுதான் சொல்கிறோம்) தேசியப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்கிகுகிறதே யொழிய, எற்கனவே "இயற்கையாகவே" உருப்பெற்ற தேசம் தேசியப் போராட்டத்தை உருவாக்குவதில்லை." என்ற மார்க்சிய விரோத, தேசிய விடுதலைக்கு எதிரான கருத்து முதல் வாதக் கோட்பாட்டை பார்ப்போம். "கற்பிதம் மாயை இல்லை" என்று கூறியபடி "கற்பிதம் என்று தான் கூறுகின்றோம்" எனக் கூறுவதில் என்ன விளக்கம் தான் மிஞ்சியுள்ளது? 'கற்பிதம்" என்றால் என்ன என்று அவர்களால் விளங்க முடியவில்லை.

மேலும் படிக்க: " தேசியம் ஒரு கற்பிதம் "தொடர்பான புரட்சிகர இயங்கியல் ஆய்வு

பாட்டாளி வர்க்கம் தனது சொந்த வர்க்கப்போராட்டத்தை நடத்த, முன்னெடுக்க, சமூகத்தில் உள்ள எல்லாப்பிரச்சனையையும் கவனத்தில் எடுக்கின்றது . ஒரு பிரச்சனையில் பாட்டாளி வர்க்கம் தலையிடுகிறது என்றால், அது வர்க்கப் புரட்சிக்காக மட்டுமே தான் என்பதை ஒரு நிமிடம் கூட மறந்துவிடக் கூடாது. இதை நாம் மறந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் தன்னெழுச்சியின் பின், சுரண்டும் வர்க்க கனவுகளின் பின் இழுபட்டு, பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் செய்பவர்களாக இருப்போம்.

மேலும் படிக்க: தேசியம் தொடர்பாக தத்துவார்த்த ரீதியில் ஆராய்வோம்.

book _8.jpgஅண்மைக்காலமாக மார்க்சியத்துக்கு எதிரான போக்குகள் தீவிரமடைந்துள்ளது. சோவியத்திலும், சீனாவிலும் அப்பட்டமான முதலாளித்துவ முன்னெடுப்புகள் தொடங்கியதுடன் மார்க்சியம் மீது முன்பை விட அதிகமாக சேறு வீசப்படுகின்றது. இன்று ஈழப் போராட்டம் இராணுவ வாதத்திற்குள் சிக்கி உள்ள நிலையில், குறைந்த பட்ச ஜனநாயக இயக்கத்தைக் கூட விட்டு வைக்காத இன்றைய நிலையில், கடந்த கால சமூக அக்கறைக்குரியவர்கள் உதிரியாகவும், சிறு குழுக்களாகவும் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தனர்.

மேலும் படிக்க: முன்னுரை : தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.

28.4.1987 அன்று உரிமை கோராத சதிகள் மூலம் கோழைத்தனமாக இரகசியமாக புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்ய முயன்ற நிலையில், 16.7.1987 அவர்களின் புனித இரகசிய பாசிச வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றேன்.

மேலும் படிக்க: வதைமுகாமில் இருந்து தப்பி தலைமறைவாக வாழ்ந்த வாழ்வை கைவிட்டு பகிரங்கமான 21.08.1987 அன்று பல்கலைகழகத்தில் ஆற்றிய உரை

book _5.jpgபழந்தமிழ் இலக்கியங்கள் பெண் வழிபாட்டின் பல்வேறு தகவல்களை விட்டுச் சென்றுள்ளது. பெண்ணே உலகத்தைப் படைத்தவள் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. ''மோடு" என்பது வயிறு என்று பொருள். எல்லோரையும் பெற்ற வயிறு என்ற பொருளில் தாய்த் தெய்வம் மோடி என்றழைக்கப்பட்டாள்31 (பெரும்பாணாற்றுப்படை நச்சினார்க்கினியர் உரை - 458), மேடடேந்தரிவை (இராவண காண்டம் - 106), பெருமோட்டுக்கிழதன் (தனிப்பாடல்), பெரு மோட்டாள் (தகடூர் யாத்திரை)22 என்ற பெண் தெய்வங்கள் ஆண் உறவின்றி கன்னியாகவே உலகத்தைப் படைத்தாள் என்ற கருத்து, பெண்தெய்வ வழிபாட்டின் மூலம், பெண்; தலைமையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றது. இதையே தாயுமானவர்,

மேலும் படிக்க: ஆணாதிக்க இந்து மதமும் பெண்ணும்

உட்பிரிவுகள்

Load More