தமிழ் மக்களின் மீதான தொடர்ச்சியான இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் போராடிய மக்கள், போராடும் உரிமையை சொந்த வலதுசாரி குறுந் தேசியவாதிகளான பாசிச புலிகளிடம் இழந்த பரிதாபம், போராட்டத்தினையே அர்த்தமற்றதாக்கி விட்டது. அண்ணளவாக 25000 பேர், அதாவது நேரடியாக இராணுவத்துக்கு எதிரான போராட்டத்திலும் உள் இயக்க ஜனநாயக போராட்டத்திலும் மாற்றியக்கப் படுகொலைகள் (துரோகத்துக்கு முன்பாக) என்று, நேரடியான போராட்ட நடவடிக்கையில் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். 150000 முதல் 250000 மக்கள் இராணுவ அழித்தொழிப்பு, மற்றும் இயக்கப் படுகொலைகள், இனப் படுகொலைகள் என்ற எல்லைக்குள் தம் உயிரை இழந்துள்ளனர்.