டென்மார்க் கோஸ்ரப்பரோவில் சம உரிமை இயக்க அங்குராப்பண கூட்டமும் கலந்துரையாடலும் (27/3/2013) இன்று நடைபெற்றது. தோழர்கள் ஸ்ரீஹரன், முரளி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னிலை சோஷலிச கட்சியின் தலைமை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம் சிறப்புரை ஆற்றியதுடன் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.

கலந்துரையாடல் மிகவும் ஆரோக்கியமானதாகவும் அதில் பங்கு கொண்டவர்கள் சம உரிமை இயக்கத்தின் அவசியத்தினையும் அதன் இன்றைய தேவையினையும் விளங்கிக் கொள்ளும் வகையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய நாள் சாதாரண வேலை நாளாக இருந்த போதிலும் பலர் கலந்து கொண்டு சமூகம்  குறித்த தமது  அக்கறையினை   காட்டியமை வரவேற்கத்தக்கது.